கல்லாதவன் என
பக்கத்து வீட்டுப் பரமசிவத்தை
அவன் அப்பா திட்டுவார்..
தண்டச்சோறு
உருப்படாவெட்டி
இன்னும் ப்ல அடைமொழிகள்..
காலப்போக்கில்
ஏதோ வேலையில் சேர்ந்து
அதை விட்டு
கொஞ்ச்ம வியாபாரம் பண்ணி
வாழ்ந்து காட்டியதும்
அவருக்குப்பெருமை..
படிக்காட்டி என்ன
ஜெயிச்சுட்டான்ல...
கல்லாதவர்கள்
கற்கவில்லை அல்லது
கற்க மறுத்திருந்தாலும்
கற்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
வாழ்க்கைப் பாடம்..
Bookmarks