-
19th November 2011, 07:33 PM
#11
Moderator
Diamond Hubber
குடும்பமா? மனைவியா? -தடுமாறும் கோபி!
திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 7.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாதஸ்வரம் தொடர், விறுவிறுப்பும் பரபரப்புமாய் ஊகிக்க முடியாத காட்சிகளுடன் விரைகிறது.
கோபி - மலர் திருமணத்திற்குப் பிறகு எதிர்பாராத திருப்புமுனை காட்சிகளோடு பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது `நாதஸ்வரம்' தொடர். நடிப்பில் பட்டை கிளப்பும் புதுமுக நடிகர்கள் ஒருபுறம். அனுபவமிக்க பிறவிக் கலைஞர்களான மவுலி, பூவிலங்கு மோகன், ரங்கதுரை ஆகியோர் மறுபுறம். இரு தரப்பாரும் கதாபாத்திரங்களாகவே மாறி தொடருக்கு மெருகேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
கோபி-மலரின் திருமணத்தால் காமு-பரமுவின் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்ற பயம் மயில்- தெய்வானை தம்பதிகளுக்கு. அதனால் அவர்கள் கோபியின் மீது கோபத்தில் இருக்க, சொக்கு குடும்பத்தோடு கோபி - மலர் சேர முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
சொக்கு, கோபி-மலரை ஏற்றுக்கொண்டால் மயில் குடும்பம் அண்ணன் குடும்பத்தை விட்டு பிரியும் சூழ்நிலை வருமா? அல்லது குடும்பத்துக்காக கோபி, மலரை விட்டு பிரியும் சூழ்நிலை நேருமா? இதுதான் இப்போதைய முக்கிய கட்டம்.
மகா தன்னைக் கெடுத்த பாண்டிக்கு தண்டனை கொடுக்க, அவன் வீட்டிலேயே அவனோடு வாழ்கிறாள். தன் வாழ்க்கையை கெடுத்த கோபி-மலரை பழிவாங்க அவள் எடுக்கும் முடிவு அடுத்தகட்ட திருப்பம்.
மலரால் சொத்து, தொழில் என அனைத்தும் இழந்த கோகுல், தந்திரமாக ரோகிணியை திருமணம் செய்வதற்கு ஒத்துக்கொள்வது போல நாடகமாடுகிறான் இதற்காக அவன் செய்யும் ஒரு செயல் எதிர்பாராத விதமாக கோபி-மலர் வாழ்க்கையை பாதிக்கிறது.
பரமு திருமணத்தை நிறுத்த நீலாவதியும், மூர்த்தியும் போராட... நெல்லியும், காமுவும் பரமுவின் திருமணத்தை நடத்த... இதற்கிடையே சம்பந்தம் தனது திருமணத்திற்காக செய்யும் ஆர்ப்பாட்டம் இன்னொரு பக்கம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வைக்கிறது.
இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல கோபி-மலர் தேனிலவு செல்லும் சந்தர்ப்பம் ஏற்பட, அங்கு நடக்கும் எதிபாராத சம்பவம் நாதஸ்வரம் தொடரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. பரபரப்பான அந்த நிகழ்வுகள் எந்த மாதிரியானவை என்பது சஸ்பென்ஸ் என்கிறார், தொடரின் இயக்குனர் திருமுருகன்.
நன்றி: தினதந்தி
-
19th November 2011 07:33 PM
# ADS
Circuit advertisement
Bookmarks