-
4th June 2011, 06:27 PM
#11
Moderator
Diamond Hubber
சின்னத்திரையில் சித்தி* கொடுமை!
--------------------------------------------------------------------------------
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் செண்பகம். சந்தோஷமாய் வாழ்க்கை நடத்திவரும் ராமச்சந்திரன் தம்பதிகளுக்கு ஒரு பெண், 2 ஆண் பிள்ளைகள் பிறக்கிறார்கள். மகிழ்ச்சியாய் பயணித்த அவர்கள் வாழ்க்கையில் ஒரு பெரும்புயல். எதிர்பாராமல் மனைவி இறந்து போக, சூறாவளியில் சிக்கிய படகாய் தடுமாறிப்போகிறது ராமச்சந்திரனின் குடும்பம். காலம் சில காயங்களை மாற்றும். ஆற்றும். `குழந்தைகளை பார்த்துக்கொள்ளவாவது இன்னொரு பெண்ணை மணந்துகொள் என்று வற்புறத்திய உறவினர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கிறார் ராமச்சந்திரன். இரண்டாவது மனைவியாக வடிவு வருகிறாள். மூத்தாளின் பிள்ளைகளை கரித்துக் கொட்டுகிறாள். சித்தி கொடுமை தாங்காத பிள்ளைகள் மூவரும் வீட்டை விட்டே ஒடிப்போகிறார்கள்.
வளர்ப்புத் தாயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மனநிலையை படம் பிடித்துக் காட்டும் தொடர் இது. தனது இரு தம்பிகளுடன் வீட்டை விட்டு வெளியேறும் செண்பகம், நல்ல உள்ளம் கொண்ட ஒரு செல்வந்தரால், தத்து எடுக்கப்படுகிறாள். அவளது எதிர்காலம், அவளது சகோதரர்களின் எதிர்காலம் இரண்டையும் காலம் கருணையுடன் கணிக்க, வசதிவாய்ப்புகளுடன் செல்வந்தர்களாகிறார்கள். ஊரில் சித்திக்கும் மூன்று பெண் பிள்ளைகள். இப்போது முதல் தாரத்து பிள்ளைகள் சித்தி குடும்பத்தை சந்திக்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்புறம் என்னாகிறது என்பது தொடரின் விறுவிறுப்பு பகுதிகள். ராமச்சந்திரனாக வின்சென்ட் ராய் நடிக்க, வடிவாக நடிப்பவர் வடிவுக்கரசி. செண்பகமாக நடிப்பவர் புஷ்பலதா. தொடரின் மற்ற நட்சத்திரங்கள்: பரத், ராஜ்குமார், சத்யா, காவேரி, ஸ்வப்னா, யோகினி, ரேவதிப்பிரியா, திரிஷா, ஷோபனா, ரொசாரியோ, ஜோக்கர் துளசி. வசனம்: ராஜேந்திர செல்லையா. ஒளிப்பதிவு: கே.எஸ்.சங்கர். கதை, திரைக்கதை, இயக்கம்: தன்ராஜ். தயாரிப்பு வேதாத்திரி கலைக்கூடம் சார்பில் எஸ்.கே.எம்.சம்பத்ராசா, மு.ஜெகநாதன், மு.குலசேகரன்.
நன்றி: தினமலர்
-
4th June 2011 06:27 PM
# ADS
Circuit advertisement
Bookmarks