-
22nd November 2009, 12:05 AM
#281
Moderator
Diamond Hubber
. நடிகர்-நடிகை தேர்வில் மோசடி
சிறந்த நடிகை விருதை திருப்பி அனுப்பினார் நடிகை ராதிகா
சென்னை, நவ.19-
சிறந்த டி.வி. நடிகர்-நடிகைகள் தேர்வில் மோசடி நடந்து இருப்பதாக கூறி, தனக்கு வழங்கப்பட்ட விருதை நடிகை ராதிகா திருப்பி அனுப்பினார்.
சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் சீரியலில் சிறந்த நடிகர்- நடிகை மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் அரசி சீரியலில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை ராதிகாவுக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கப்பட்ட பின்னணியில் இருந்த அணுகுமுறை தனக்கு திருப்தியளிப்பதாக இல்லை என்று கருதிய ராதிகா, அந்த விருதை சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்புக்கே திருப்பி அனுப்பி விட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மனதை பாதித்த விருது
கடந்த 14-ந் தேதி மாலை சென்னை காமராஜர் அரங்கில் சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு (பெஸ்ட்) சார்பில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில் பல சங்கடமான நிகழ்வுகள் நடந்தேறின. அது சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் மனதையும் பெரிதும் பாதித்துள்ளது. சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், கதை, வசனகர்த்தா வரிசையில் பல திறமைசாலிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்படவே இல்லை. என்ன காரணத்துக்காக அவர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்து நீக்கப்பட்டன என்பதும் தெரியவில்லை.
தகுதியும் திறமையும் படைத்த யாராக இருந்தாலும் அவர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்பதே என் கருத்து. ஆனால் விழாவிற்கு வரவழைப்பதற்காகவே பலரையும் அழைத்து, அதை படம் பிடித்து பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் காட்ட முனைவது தவறான முன்னுதாரணமாகவே அமையும்.
திருப்பி அனுப்புகிறேன்
எனவே, தகுதி, திறமையின் அடிப்படையில் எனக்கு விருது வழங்கப்பட்டு இருந்தாலும், இதேபோல் திறமை வாய்ந்த பல பேர் புறக்கணிக்கப்பட்ட நிலையில் சிறந்த நடிகைக்கான விருதை ஏற்றுக்கொள்ள என் மனசாட்சி இடம் தரவில்லை. இந்த தவறுகள் மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காகவும், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் எதிர்கால நலனை கருதியும் இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் தொடரக்கூடாது என்ற நல்ல எண்ணத்தோடும் எனக்கு வழங்கிய விருதை உங்களிடம் திருப்பி ஒப்படைக்கிறேன்.
மேற்படி விருது வழங்கிய நிகழ்ச்சியில் நான் இடம் பெறும் எந்த ஒரு புகைப்படம் அல்லது படக்காட்சிகள் உள்ளிட்ட எவையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் இடம் பெறுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் ராதிகா கூறியிருக்கிறார்.
நன்றி: தினதந்தி
[html:46fbca4972]<div align="center"><img src="
http://www.dinamani.com/Images/article/2009/11/18/19tv.jpg"></div>[/html:46fbca4972]
சிறந்த சின்னத்திரை நடிகையாக ராதிகா தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு சின்னத்திரைக் கலைஞர்கள் கூட்டமைப்புடன் விஷன் புரோ மற்றும் காஸ்மிக் டவுன் நிறுவனங்கள் இணைந்து 2008-ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளை கடந்த சனிக்கிழமை வழங்கியது.
இதில் சிறந்த நடிகைக்கான விருது "அரசி' தொடருக்காக ராதிகாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருது "திருமதி செல்வம்' தொடருக்காக சஞ்சய்க்கு வழங்கப்பட்டது. சிறந்த இயக்குநராக குமரன் தேர்வு செய்யப்பட்டார். "திருமதி செல்வம்' தொடருக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
சிறந்த திரைக்கதைக்கான விருதை "கோலங்கள்' திருச்செல்வம் பெற்றார். இசையமைப்பாளருக்கான விருது இமானுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த வில்லி நடிகைக்கான விருது நடிகை வடிவுக்கரசிக்கும், வசனகர்த்தாவுக்கான விருது பாஸ்கர் சக்திக்கும், நகைச்சுவை நடிகருக்கான விருது ஜெயமணிக்கும், ஒளிப்பதிவாளருக்கான விருது வசீகரனுக்கும் வழங்கப்பட்டது.
வாழ்நாள் சாதனையாளர் விருது பழம்பெரும் நடிகை எஸ்.என்.வரலட்சுமிக்கு வழங்கப்பட்டது.
விழாவில் நடிகர்கள் ஜீவா, பாக்யராஜ், டெல்லி கணேஷ், நடிகைகள் குஷ்பு, தேவயானி, சங்கீதா, அபிதா, இயக்குநர்கள் மிஷ்கின், பேரரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்கள
நன்றி: தினமணி
-
22nd November 2009 12:05 AM
# ADS
Circuit advertisement
-
26th November 2009, 07:05 AM
#282
Moderator
Diamond Hubber
தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு, விஷன் பீரோ ஈவென்ட் மேனேஜ்மென்ட் மற்றும் காஸ்மிக் டவுன் இணைந்து 2009ஆம் ஆண்டிற்கான சின்னத் திரை நெடுந்தொடர்களுக்கான விவேல் சின்னத்திரை விருது வழங்கப்பட்டது. இதில் திருமதி செல்வம் தொடருக்காக நடிகர் சஞ்சீவ் சிறந்த நடிகர் விருது பெற்றார். நடிகர் ஜீவா மற்றும் நடிகை சங்கீதா ஆகியோர் இணைந்து விருதை வழங்கினார்கள். சிறந்த இயக்குநர் மற்றும் கதாசிரியருக்கான விருதை திருமதி செல்வம் தொடருக்காகக் குமரன் பெற்றார். சிறந்த திரைக்கதைக்கான விருதைக் கோலங்கள் தொடருக்காகத் திருச்செல்வம் பெற்றார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை டி.இமானுக்கும், சிறந்த பாடலாசிரியர் விருதை யுகபாரதியும், சிறந்த நடன ஆசிரியர் விருதை கலாவும் தட்டிச் சென்றனர். வசனத்துக்கான விருதைப் பாஸ்கர் சக்திக்கும், சிறந்த புதுமுகத்துக்கான விருதை லியாகத் அலிகானுக்கும், சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை வி.சி.ஜெயமணியும் பெற்றனர். சிறந்த வில்லனுக்கான விருது அஜய்க்கும், சிறந்த வில்லிக்கான விருது வடிவுக்கரசிக்கும் வழங்கப்பட்டது. சிறந்த குணச்சித்திர நடிக்கருக்கான விருதை டெல்லி கணேஷ் பெற்றார். சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை வசீகரன் பெற்றார். கோலங்கள் தொடரைத் தயாரித்த விகடன் ஒளித்திரை பா.சீனிவாசனுக்கு சிறந்த தயாரிப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. இத்துடன் வாழ்நாள் சாதனையாளர் விருது, பழம்பெரும் நடிகை எஸ்.என்.லஷ்மிக்கு வழங்கப்பட்டது.
-
26th November 2009, 07:08 AM
#283
Moderator
Diamond Hubber
சினிமா வாய்ப்பு குறைந்ததும் திருமணம் செய்து கொள்ளும் நடிகைகள் பட்டியலில் இணைந்த நடிக*ை கஸ்தூரி, திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆனார். அதன் பின்னர் குடும்ப பிரச்னை காரணமாக மீண்டும் சென்னை திரும்பிய அவர், ரீ-எண்ட்ரிக்காக காத்திருக்கிறார். ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் என்றாலும் ஓ.கே., சொல்லி விட வேண்டியதுதான் என்ற முடிவோடு கோடம்பாக்கத்தில் காலடி எடுத்து வைத்த அவருக்கு கதிர்வேல் படத்தில் குத்தாட்டம் போட வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த பாத்திரத்தை சரியாக செய்து முடித்திருக்கும் கஸ்தூரியை இப்போது சின்னத்திரை வாய்ப்புகள் சுற்றி வருகின்றனவாம். சின்னத்தி*ரை இயக்குனர்கள் பலர் கஸ்தூரியை அணுகி கதை சொல்லி இருக்கிறார்களாம். சின்னத்திரைக்கு இன்னமும் ஓ.கே., சொல்லாதது ஒருபுறம் இருந்தாலும், சினிமா விழாக்களில் தனது கவர்ச்சி மேனியை காட்டிக் கொண்டுதான் மேடையேறி வருகிறார் கஸ்தூரி. அதற்கு சமீபத்தில் நடந்த பையா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஒரு சின்ன சாம்பிள்! (வாய்ப்பு வாங்காமல் விட மாட்டார் போலிருக்கி*றதே?)
[html:3fb09cbc6a]<div align="center">
</div>[/html:3fb09cbc6a]
நன்றி: தினமலர்
-
26th November 2009, 07:10 AM
#284
Moderator
Diamond Hubber
இளமை புதுமை நிகழ்ச்சியில் தோன்றி பறக்கும் முத்தம் கொடுத்து சின்னத்திரை ரசிகர்களை கிறங்கடித்த சொர்ணமால்யா திருமணத்துக்கு பிறகு சின்னத்திரையில் இருந்து விலகினார். அதன் பின்னர் ஒரு சில சினிமாக்களில் தலைகாட்டிய அவர் இப்போது மீண்டும் சின்னத்திரையில் தோன்ற உள்ளார். இந்த முறை சீரியல் நாயகி. ஸீ தமிழ் டி.வி.,யில் ஒளிபரப்பாகும் யாதுமாகி நின்றாய் என்ற நெடுந்தொடரில் சொர்ணமால்யா நடிக்கிறார். திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7.30 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாகும். இதில் சொர்ணமால்யாவுடன் நீரஜா, ஸ்ரீரேகா, காத்தாடி ராமமூர்த்தி, நரேந்திரா ஆகியோர் நடிக்கிறார்கள். சரவணன் இந்தத் தொடரை இயக்குகிறார். மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மெண்ட் யாதுமாகி நின்றாய் தொடரை தயா*ரித்துள்ளது. வழக்கமான அழுகாச்சி தொடராக இல்லாமல், குற்றமே செய்யாத சில நிரபராதிகள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தண்டிக்கப்படும் துர்பாக்கிய சூழலை கதைக்களமாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாகியுள்ளது. பெண்கள்தான் இந்தத் தொட**ரின் முக்கிய கதாபாத்திரங்கள். ஒரு போலீஸ் அதிகா*ரி, ஒரு சமூக சேவகி, ஒரு வழக்குரைஞர்... இவர்கள் தங்களுடைய சவால்களை எதிர்கொள்ளும்போது கணவனும், குடும்பமும் அதற்கு உறுதுணையாக இருந்தார்களா? என்ற குடும்ப சென்டிமெண்டும் இந்த*த் தொட*ரில் உண்டு.
இ*த்தொட*ரி*ன் *கி*ரியே*ட்டி**வ் பொறு*ப்பை நடிகை ரேவ*தியு*ம், ரோ*கி*ணியு*ம் பா*ர்*த்து*க் கொ*ள்*கிறா*ர்க*ள் எ*ன்பது எக்ஸ்ட்ரா தகவல்.
-
26th November 2009, 07:11 AM
#285
Moderator
Diamond Hubber
1990ல் இருந்து 2000 வரை தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன், திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழில் ஓரிரு படங்களில் மட்டுமே அவர் நடித்தாலும், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கிறார். இதன் மூலம் நிறைய சம்பாதிக்கிறாராம். ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ரூ. 75 லட்சம் சம்பளம் நிர்ணயித்துள்ளார். தொலைக்காட்சி தொடரில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.3 லட்சம் வாங்குகிறார். கூடுதலாக இரவில் நடிக்க ரூ.2 லட்சமும் சேர்த்து மொத்தம் ரூ.5 லட்சம் வாங்குகிறார்.
-
12th December 2009, 10:45 PM
#286
Moderator
Diamond Hubber
பாடல் வாய்ப்புக்கு காத்திருக்கும் ஷில்பா
Shilpa waiting for cinema chance
விஜய் டிவியின் நம்ம வீட்டுக் கல்யாணம் நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஷில்பா கர்னாடிக், ஹிந்துஸ்தானி இசையில் தேர்ச்சி பெற்றவராம். கேரளத்தை இருப்பிடமாக கொண்ட இவர், தற்போது தமிழ் சினிமாக்களில் பாடும் வாய்ப்பை எதிர்நோக்கி இருக்கிறார். இதற்காக தான் பாடிய பாடல்கள் அடங்கிய சி.டி.யை தெரிந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறாராம். "பாடகியானார் ஷில்பா' என்ற செய்திக்காக ஆர்வமுடன் காத்தி
நன்றி: தினமலர்
-
19th December 2009, 09:09 PM
#287
Moderator
Diamond Hubber
சாதனை விருது
இதுவரை 12 ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் இயக்கி சாதனை செய்தவர் டைரக்டர் சுந்தர்கே.விஜயன். சின்னத்திரையின் ஜனரஞ்சக இயக்குனரான சுந்தர்கே.விஜயனுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைத்தது. "என் கலைப்பணிக்கு அரசு தந்த மிகப்பெரிய அங்கீகாரமாக இதை எடுத்துக் கொண்டிருக்கிறேன்'' என்கிறார், இயக்குனர்.
நன்றி: தினதந்தி
-
19th December 2009, 09:10 PM
#288
Moderator
Diamond Hubber
நேற்று இல்லாத மாற்றம்
நடிக்காத சீரியல்களே இல்லை என்கிற அளவுக்கு பிசியாக இருந்து கொண்டிருந்த தீபா வெங்கட் இப்போதெல்லாம் சீரியல் வாய்ப்பு என்றாலே தவிர்த்து விடுகிறார். நடிகைகள் ரேவதி, ரோகிணி மாதிரி பட்டிமன்றம், பெண்கள் அரங்கம் என்று தன் பார்வையைத் திருப்பியிருக்கிறார். நடிகையின் இந்த மாற்றத்துக்கு காரணம் புரியாமல் சீரியல் இயக்குனர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நன்றி: தினதந்தி
-
26th December 2009, 08:11 PM
#289
Moderator
Diamond Hubber
திரையுலகின் பொற்காலம்
தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத பொற்காலமாக இருந்தது, எம்.ஜி.ஆர்.-சிவாஜி என்ற இரு ஜாம்பவான்கள் கோலோச்சிய காலகட்டம். 1971-வரை இந்த சாதனைக்கலைஞர்கள் காலத்தில் வந்த படங்களைப் பற்றிய ஒரு நேரடி கண்ணோட்ட நிகழ்ச்சி, `பொற்காலம்' என்ற பெயரில் தயாராகிறது. இதற்காக ஏவி.எம்.மில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
முதல்கட்ட படப்பிடிப்பில் டைரக்டர் ஸ்ரீதரின் காலத்தால் அழியாத படங்களில் ஒன்றான `காதலிக்கநேரமில்லை' படம் பற்றிய பகிர்தல் நடந்தது. நடிகர்கள் ராஜேஷ், ஒய்.ஜி.மகேந்திரா இருவரும் இந்தப்படத்தின் சிறப்பு பற்றிய தங்கள் கருத்துக்களை மேடையில் பகிர்ந்து கொண்டனர். அதுவே படம்பற்றிய நல்லதொரு விமர்சனமாகவும் இருந்தது.
இந்தப் படம் குறித்த விவாதத்தின்போது படத்தில் நடித்த நட்சத்திரங்கள், பங்காற்றிய தொழில் நுட்பக்கலைஞர்களையும் அழைத்திருந்தார்கள். படத்தில் நாயகன்-நாயகியாக நடித்த ரவிச்சந்திரன்- காஞ்சனா வந்திருந்தார்கள். டைரக்டர் ஸ்ரீதரின் வலதுகரமாக இருந்த சி.வி.ராஜேந்திரன், சித்ராலயா கோபு கலந்து கொண்டார்கள்.
படத்தில் நாகேசுடன் காமெடிக் கலாட்டா செய்த சச்சு முதல்ஆளாக வந்துவிட்டார். நாகேஷ் சார்பில் அவர் மகனும் நடிகருமான ஆனந்தபாபு, டி.எஸ்.பாலையா பற்றி பேச அவது மகன் ஜுனியர்பாலையாவும் அரங்கில் இருந்தார். படம் பற்றிய அலசலின்போது நடித்தவர்களும் பங்காற்றியவர்களும் தங்களின் அன்றைய உணர்வை நெஞ்சம் நெகிழ பகிர்ந்து கொண்டார்கள்.
காமாட்சிவிஷன் தயாரிக்கும் இந்த நிகழ்ச்சியில் பாகப்பிரிவினை, கர்ணன், பார்த்தால்பசிதீரும், அன்பே வா, தில்லானா மோகனாம்பாள் என அடுத்தடுத்த படங்கள்பற்றிய பகிர்தலும்தொடரவிருக்கிறது.
விரைவில் தனியார் சேனல் ஒன்றில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது.
நன்றி: தினதந்தி
-
26th December 2009, 08:11 PM
#290
Moderator
Diamond Hubber
டைரக்டர் ஆனாலும்...
சின்னத்திரையில் நடிக்கவரும் முன்பே `மோகமுள்' என்ற படத்தில் நாயகனாக நடித்தவர் அபிஷேக். தொடர்ந்து பெரியதிரை வாய்ப்பு இல்லாத சூழலில் சின்னத்திரையில் இருந்துவந்த வாய்ப்புக்களை கெட்டியாக பிடித்துக் கொண்டார். கோலங்கள் தொடர் ஒரு சிறந்த நடிகராக அவரை வெளிப்படுத்தியது.
இப்போது மீண்டும் பெரியதிரையில் அடியெடுத்து வைத்திருக்கிறார், அபிஷேக். இம்முறை நடிகராகஅல்ல...இயக்குனராக! ஒரே வீச்சில் `கதை' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
"இனி சினிமாதானா?'' அபிஷேக்கிடம் கேட்டால்...
"எனக்கு பணம், புகழ் எல்லாம் தந்தது சின்னத்திரை தான். எனவே சினிமாவில் இயக்குனராக எத்தனை பிசியாக இருந்தாலும் சின்னத்திரையில் இருந்துவரும் ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளர் அழைப்பைக் கூட தவிர்க்க மாட்டேன்'' என்கிறார்.
நன்றி: தினதந்தி
Bookmarks