-
13th October 2009, 10:48 AM
#261
Senior Member
Seasoned Hubber
"அத்திப் பூக்கள்' உள்ளிட்ட சீரியல்களில் பிஸியாக இருக்கும் தேவதர்ஷினி ரஜினியின் "எந்திரன்' படத்தில் நடிக்கிறார். 90 சதவீதம் முடிந்த நிலையில் தேவதர்ஷினி நடிக்கும் காட்சிகள் இப்போதுதான் படமாக்கப்பட்டு வருகிறது. ""இதற்காக இயக்குநர் ஷங்கருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். ஷங்கர் -ரஜினியின் கூட்டணியில் நடிப்பது பெருமையாக இருக்கிறது'' என பெருமிதம் கொள்கிறார் தேவதர்ஷினி.
-
13th October 2009 10:48 AM
# ADS
Circuit advertisement
-
13th October 2009, 10:03 PM
#262
Moderator
Diamond Hubber
இந்தி சேனல் ஒன்றில் நிகழ்ச்சிகளைத் தொகுக்கப் போகிறார். ""இந்தியில் புதிதாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள படத்தின் தயாரிப்பு நிறுவனம்தான் அந்த நிகழ்ச்சியைத் தயாரிக்கிறது. அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டதால் மட்டுமே தொகுப்பாளினியாக மாறி உள்ளேன். இது சில காலங்கள்தான். படம் தொடங்கியவுடன் அந்தப் பொறுப்பு என்னை விட்டு போய் விடும்'' என்கிறார் ஜெனிலியா.
நன்றி: தினமணி
-
13th October 2009, 10:05 PM
#263
Moderator
Diamond Hubber
சீரியல்களில் நடித்துக் கொண்டே, மெகா டி.வி.யில் தொகுப்பாளராக இருந்த ஐஸ்வர்யா திருமணத்துக்குப் பின் அந்தப் பணியைத் தொடர முடியாத நிலையில் உள்ளார். இந்நிலையில் சீரியல் நடிகை பிருந்தாதாûஸ தொகுப்பாளராக நியமித்து இருக்கிறது மெகா டி.வி. குறிப்பிட்ட சீரியல்கள் எதுவும் கையில் இல்லாத நிலையில் தொகுப்பாளர் பணியை தொடர்ந்திருக்கிறார் பிருந்தாதாஸ். இதனிடையே சில கேம் ஷோக்களையும் தயாரிக்க போகிறாராம்.
நன்றி: தினமணி
-
13th October 2009, 10:07 PM
#264
Moderator
Diamond Hubber
திருமணத்துக்குப் பின் பெங்களூரில் 15 நாள்களும், சென்னையில் 15 நாள்களும் வசித்து வருகிறார் மீனா. ""விஜய் டி.வி.யின் நடன நிகழ்ச்சிக்காகத்தான் சென்னை வந்து போகிறேன். திருமணத்துக்குப் பின்னும் சினிமா வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. சினிமாவில் நடிப்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. கேரக்டர் ரோல் கொண்ட ஒரு கதையை கேட்டிருக்கிறேன். அதில் உடன்பாடு ஏற்பட்டால் நிச்சயம் நடிப்பேன்'' என்றார் மீனா
நன்றி: தினமணி .
-
17th October 2009, 06:39 PM
#265
Moderator
Diamond Hubber
கலைஞர் குரல்
கமல்ஹாசனின் ``உன்னைப் போல் ஒருவன்'' திரைப்படத்தில் கலைஞர் கருணாநிதி பேசுவது போல் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும்.
இந்தப் பின்னணி குரலைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும் ஒரு கருத்தரங்கமே நடைபெற்றது. இந்த பின்னணி குரல் யாருடையது என்று கமலுக்கே தெரியாமல் இருந்தது.
கடந்த வாரம் கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்காக, கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வந்த கமலுக்கு, அந்த பின்னணிக் குரலின் சொந்தக்காரர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
``இசையருவி'' தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகும் `என்னோடு பேசுங்கள்' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சேது தான் அந்த குரலுக்கு சொந்தக்காரர். அவரது குரல் மிக தத்ரூபமாக இருந்தது என்று சேதுவை பாராட்டினார், கமல். அன்று அறிஞர் அண்ணாவிற்கு குரல் கொடுத்த சிவகங்கை சேதுராசனின் புதல்வர் தான் இந்த சேது .
அப்பா அண்ணாவுக்கு குரல் கொடுத்தார் அன்று.
மகன் கலைஞருக்கு குரல் கொடுத்தார் இன்று!.
[html:c2549a7ce3]<div align="center">
</div>[/html:c2549a7ce3]
நன்றி: தினதந்தி
-
19th October 2009, 06:07 AM
#266
Moderator
Diamond Hubber
Popular Carnatic musician and Arasi serial's charming face Anuradha Krishnamurthy is now appearing for the Kalaignar TV Channel's Matrimonial programme. She interviews all the grooms and brides who are willing to enroll themselves through the Tamil Matrimony dotcom. Unlike other channels which organise the very same programme in a different manner, she questions the grooms and brides about the sort of hobby they follow and the way they wanted their jacks and jills. If the grooms needed a particular qualified brides, then she would not hesitate in asking them reason for such demands. When the programme is on, the tv viewers forgetting that they witness a carnatic musician and an actress who is talking in a gentle manner as they never would have dreamt about her intrinsic value.
-
19th October 2009, 06:08 AM
#267
Moderator
Diamond Hubber
One-time TV serial director now film director and actor Samuthirakani has now good stories with good scripts. The director has become popular after his Nadodigal film never misses to think back his past life. Samuthirakani had the experiences of directing Radaan TV's various tv serials. Hence, the director is now thinking of directing some more serials, for which he has come out with a story as an initiative measure for some other producers to come and produce trusting the calibre of Samuthirakani.
-
19th October 2009, 06:08 AM
#268
Moderator
Diamond Hubber
Most popular Jaya TV Channel's compere Mahalakshmi who is now doing a role in Radaan's Chellamey is going to act in another mega-serial of the Jaya TV Channel. Mahalakshmi has been popular among the Jaya TV Channel viewers, when she was at the peak of the channel's compere. Mahalakshmi was attracted by many with her glamorous dresses wherever she went to participate in various functions. Besides Mahalakshmi another compere is likely to act in the Jaya TV Channel's new serial.
-
19th October 2009, 06:09 AM
#269
Moderator
Diamond Hubber
Sethu film fame Abhitha who married a few months ago, has been planning to act in Malayalam film serials. Now she is acting for the Sun TV Channel's mega-serial Thirumathi Selvam. The actor who is now living with her husband in Kerala spends 15 days in a month in Kerala comes back to Chennai to act in the Tamil Serial. She is also acting in another serial Thangamana Purushan. After completing her roles in both the serials, she is going to concentrate only on Malayalam mega-serials.
-
23rd October 2009, 12:38 PM
#270
Senior Member
Seasoned Hubber
த்ரிஷா, லட்சுமிராய், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட மாடல்கள் கலந்து கொண்ட சமீபத்திய பேஷன் ஷோ ஒன்றில் தலைக்காட்டி இருக்கிறார் சோனியா அகர்வால். சினிமாவுக்கு மீண்டும் வருவதற்காகதான் இது போன்ற ஷோக்களில் கலந்து கொள்கிறாராம் சோனியா. விரைவில் சினிமா பிரவேசம் இருக்குமாம். கதாநாயகியாக சோனியாவை பார்த்தாலும் பார்க்கலாம் என்கிறது அவரது தரப்பு.
"கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்' என்ற புதிய தொடரை ஒளிபரப்புகிறது விஜய் டி.வி. "கனா காணும் காலங்கள்' தொடரில் நடித்தவர்களில் குறிப்பிட்ட சிலர் இதில் முக்கிய வேடம் ஏற்கிறார்கள். தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் மண் சார்ந்த கதையாக இது உருவாகியிருக்கிறது. பள்ளி வாழ்க்கையின் குதூகலமும், அனுபவங்களும்தான் கதை களன். ஜெரால்டு இயக்குகிறார்.
வெளிநாட்டு சினிமாக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் தொலைக்காட்சியின் பணி தொடர்கிறது. தமிழ் சினிமா பக்கமே திரும்பாமல் வெளிநாட்டு சினிமாக்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தரப் போகிறார்களாம். இதைத் தவிர ஜாலி, கேலி, விளையாட்டு என நிர்வாகம் புதுமையடைகிறது. இந்த ஆபரேஷனுக்கு தலைமை சௌமியா அன்புமணி. மக்கள் தொலைக்காட்சியை மக்களிடம் எளிய முறையில் கொண்டு சேர்ப்பதுதான் அவரின் முதல் வேலையாம்.
சினிமாவில் பிஸியாக இருந்தாலும் மேடை நிகழ்ச்சிகளில் பாடுவதை சின்மயி தவிர்க்கவில்லை. எந்த நிகழ்ச்சிகள் ஆனாலும் "கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் பாடிய தன் முதல் பாடலான ""வெள்ளைப் பூக்களை'' பாடி விடுகிறார். அதே போல் வாய்ப்பு கொடுத்த ரஹ்மானுக்கும் வைரமுத்துவுக்கும் நன்றி சொல்லி விடுகிறார். இவரின் அடுத்த இலக்கு தனியாக ஆல்பம் போடுவதுதானாம். அதற்கான பணிகளையும் தொடங்கி விட்டார்.
இயக்குநர் பாலசந்தரின் "சொல்லத்தான் நினைக்கிறேன்' தொடரை முடித்து விட்டார் ரம்யா. பத்துக்கும் மேற்பட்ட சீரியல்களை முடித்த இவர் சினிமா வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். ""கேரக்டர் ரோல் மட்டுமே என் இலக்கு. சீரியல்களில் நடித்த அனுபவங்கள் அதற்கு துணை புரியும் என நினைக்கிறேன். சீரியல்களிலிருந்து சினிமாவுக்கு பயணமாக காத்திருக்கிறேன்'' என்றார் ரம்யா.
"கோலங்கள்' சீரியலில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தீபா வெங்கட் சினிமாவில் டப்பிங் பேசுவதில் பிஸியாகிறார். ""கோலங்கள்' சீரியலில் மட்டுமே நடிப்பதற்கு மக்களிடம் உள்ள எதிர்பார்ப்புகள்தான் காரணம். தொடர்ந்து ஆறு வருடங்களாக முதலிடத்தில் இருக்கும் சீரியல் என்பதால் வேறு எதிலும் நடிக்க விருப்பமில்லை. சீரியலைத் தவிர டப்பிங்கில் கவனம் செலுத்துகிறேன். "அறுவடை' படத்தில் சிநேகாவுக்கு நான்தான் குரல் கொடுக்கிறேன்'' என்றார் தீபா.
நெருங்கிய தோழிகளான ரோகிணியும், ரேவதியும் ஜீ டி.வி. நிறுவனத்துக்காக தயாரித்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் சொர்ணமால்யாதான் ஹீரோயின். பொது பிரச்னைகள் மற்றும் சமுக சேவைகளில் ஆர்வம் காட்டும் இருவரும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்கப் போகிறார்கள். இதை தவிர இவர்களின் தற்போதைய கவனம் மேடை நாடகம்.
விஜய் டி.வி.யின் "அன்பே வா' சீரியல் நாயகி சோனு, மலையாள சீரியலுக்கும் விஜயம் செய்திருக்கிறார். சூர்யா டி.வி.க்காக தயாரிக்கப்பட்டுள்ள "துலாபாரம்' சீரியலிலும் அவர்தான் நாயகி. ""சென்னை கல்லூரி ஒன்றில் பி.ஏ. படித்துக் கொண்டு இரு சீரியல்களிலும் நடிப்பது சிரமமாகத்தான் இருக்கிறது. "துலாபாரம்' மலையாள சீரியல் உலகில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருக்கிறது. சினிமா பற்றி யோசிக்கவில்லை'' என்றார் சோனு.
லேடி ஆண்டாள் பள்ளியில் படிக்கும் அர்ஜுன் மகள் அஞ்சனாவை சக மாணவிகள் ஆக்ஷன் கிங் ஆர் ஜே என்றுதான் அழைக்கிறார்கள். குச்சுப்புடி, பரதம், கராத்தேயில் தேர்ச்சி பெற்றவராக உள்ள இவருக்கு கதகளியும் தெரியுமாம். அர்ஜுனின் சமீபத்திய காஸ்ட்யூம் வடிவமைப்பாளர் இவர்தானாம்.
Bookmarks