-
26th June 2019, 06:49 AM
#2601
Senior Member
Devoted Hubber
வருடங்கள் ஆகிவிட்டது.இன்றைக்கு பெரிய நடிகர்கள் நடித்திருந்தாலும் மூன்று நாட்கள் மட்டும்தான் கூட்டமிருக்கும்.மூன்று வாரங்கள் ஓடினால்,மிகப்பெரும் வெற்றிப்படமாக கொண்டாடப்படுகிறது.
'வசந்த மாளிகை',1972 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்.இந்தப் படத்திற்கு வந்த கூட்டத்தைப் பார்த்து மலைத்துப் போனேன்.சென்னை ஆல்பர்ட் தியேட்டரில்தான் இந்தக் கூட்டம்.இளைஞர்களும்,பெண்களும் குடும்ப சகிதமாக வந்ததுதான் மற்றுமோர் ஆச்சர்யம்.தியேட்டர் வளாகம் முழுவதும் ஊடகத் துறையினர்.அரங்கினுள்ளே சிவாஜியின் ஒவ்வொரு ஷாட்டுக்கும் கைத்தட்டல் காதைக் கிழித்தது.
தமிழ்த் திரையுலகில் ஆச்சர்யமான நிகழ்வு, 'வசந்த மாளிகை'க்கு கிடைத்த வரவேற்பு.
https://www.facebook.com/manisekaran...q4K9KhsXXr4ciF
https://m.facebook.com/groups/535938...65167857162865
நன்றி Vasudevan.S
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
26th June 2019 06:49 AM
# ADS
Circuit advertisement
-
26th June 2019, 07:03 AM
#2602
Senior Member
Devoted Hubber
திருப்பூர் கலைவாணி தியேட்டரில் "வசந்த மாளிகை" மகோத்சவம் ரசிகர்களின் ஏகோபித்த மகிழ்ச்சியில் "ஆயிரம்வாலா" சரவெடியுடன் இன்னும் சில நிமிடங்களில் இனிதே ஆரம்பிக்க உள்ளது... இக்காவியத்தைக் காண வந்துள்ள அனைவர் முகங்களிலும் அளப்பறிய சாதனை செய்த மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது......
நன்றி Kannappan Velliangiri
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
26th June 2019, 07:11 AM
#2603
Senior Member
Devoted Hubber
படித்ததில் ரசித்தது...
சிவாஜியின் வசந்த மாளிகை ஆல்பர்ட்டில் வெள்ளியன்று திரைக்கு வந்தது.ஆன்லைனில் புக் செய்து ஞாயிறன்று சென்றோம். அடடடடா என்ன குதூகலம் கொண்டாட்டம் ஆரவாரம் சந்தோஷம் தெருவுக்குள் நுழையவே முடியவில்லை. சரி முந்தய ஷோ இப்போதான் முடிந்திருக்குமோ என்று நினைத்து காத்திருந்தோம். பிறகு தான் புரிந்தது அடுத்த காட்சியை காண வந்திருக்கும் ரசிகர்களளென்று.
தலைவர் படமென்றால் சும்மாவா? ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. திலகத்தின் பெரிய கட்அவுட் கம்பீரமாக வரவேற்கிறத. பெங்களூர் ர...
சிகமன்றம் வழங்கிய மாலைகளுடன். எவ்ளோ மாலைகள். தெருவெங்கும் தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி பூக்களை உதிர்த்து
பட்டாஸ் வெடித்து உற்சாகம் கரைபுரண்டோடியது.
கேட் தாண்டி உள்ளே சென்றதும் ஒரு சின்ன கூட்டம் மைக்குடனும் கேமராவுடனும் வரவேற்றது. ஏதாவது அண்ணனைப்பற்றி அவருடைய இந்த படத்தைப்பற்றி பேசுங்களேன் என்று. மகன் சிவாஜியின் தீவிர ரசிகன்.
அவன் பேச கூடியிருந்தோரெல்லாம் கைதட்டி வரவேற்றனர்.
எந்த திசையில் பார்த்தாலும் நடிகர்திலகத்தின் வண்ணப்படங்கள். சில அரசியல் பிரபலங்களும் தயாரிப்பாளர் குகநாதனும் வந்திருந்தார்கள்.
உள்ளே நுழையும் போது ஒரு ரசிகர் தன் சார்பாக படம் காண வந்திருந்த அனைவருக்கும் ரெவ்வெண்டு ஜாங்கிரி கொடுத்தார். படு குஷியாக இருந்தது எனக்கு. படம் துவங்க சில நிமிஷங்கள் இருந்தது. கணீரென்று ஐயாவின் குரலிலே "யாருக்காக" என்று ஐம்பது வயது மதிக்கத்தக்க இளைஞர் பாடத்துவங்கினார். அரங்கமே அமைதியானது.
அசத்தலான குரல்வளம். இடையிடையே இருமி பாட்டை தொய்வில்லாமல் கச்சிதமாக முடித்தார்.
திரையில் படம் முதல் காட்சியில் பிளேன் பறக்க இங்கு விசில் சத்தம் விண்ணை பிளக்க தலைவர் தோன்றினார்.
உதிரிப்பூக்களும் glitters தூவி ஆர்ப்ரித்தனர். பேசினால் "கைதட்டு"நடந்தா "ஆஹா தலைவா" "ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்" பாடலுக்கு யாருமே சீட்டில் இல்லை.
"ஏன் ஏன் ஏன்" தாளத்தோடு விசில் கைதட்டல் ஆட்டம்
இதுவரை இந்த சந்தோஷ ப்ரவாகம் எங்கேயும் பார்த்ததில்லை. "சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இந்த சக்கரம் சுத்துதடா... அதில் நான் சக்கரவர்த்தியடா"
அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு திரையில் என்ன வந்ததென்று யாருக்குமே தெரியாது.
நீச்சல் குளத்திலிருந்து ப்ளு கலர் டிரெஸ்ஸில் வெளியே வந்ததும், செகரெட்ரி என்று அறிமுகப்படுத்தும் போதும்,
ஆதிவாசிகளுடன் ஆடும் போது ஸ்கிப் செய்து ஸ்டெப் போடுவதும் , கண்ணாடி மாளிகையை வாணிஸ்ரீ பார்க்கும் போது வெளியே white and white ல் போஸ் கொடுத்து காத்திருப்பதும் இப்படியாக பல இடங்களில் தூண்டில் போட்டு ரசிகர்களை இழுக்கிறார்.
ஆச்சர்யமா இருக்கு. எழுபத்திரெண்டில் வந்த படமென்று நினைக்கிறேன். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும்
ரசிகர்களை சுண்டி இழுக்கும் இந்த நடிப்பாற்றல் ரசிகர் கூட்டம் இப்போதுள்ள நடிகர்களுக்கு இதே போல் வரவேற்பு கிடைக்குமா?
சந்தேகம்தான். கலைத்தாயின் தலைமகனுக்கு ஈடில்லை எவரும்.
நன்றி Vasudevan.S
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
26th June 2019, 07:24 AM
#2604
-
26th June 2019, 07:30 AM
#2605
Senior Member
Devoted Hubber
கோட்டை இல்லை . கொடியும் இல்லை.. எப்பவுமே சிவாஜிதான் ராஜா.. எந்த எதிர்பார்ப்பு இல்லா இணையற்ற ரசிகர் படை சிவாஜிக்கே சொந்தம்.. கட்சி ஆட்சி எதுவும் இல்லாமல் இறந்து 18 ஆண்டு கழிந்த பின்னரும் ஆர்ப்பரிப்போடு கொண்டாடும் ஒப்பற்ற சிவாஜி படை
C J Joe
நன்றி ஜோ
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
27th June 2019, 04:42 AM
#2606
Senior Member
Devoted Hubber
எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத சிறப்பு,
நடிகர்திலகத்திற்கு மட்டும் உண்டு.
ஆம்,
... தேசபற்றாகட்டும், பக்தியாகட்டும்,
புராணமாகட்டும், காவியமாகட்டும்,
காதலகாட்டும், பாசமாகட்டும்,
அனைத்திலும் தனது முத்திரையை பதித்தவர் நடிகர்திலகம் மட்டுமே.
2012ல் கர்ணன் காவிய திரைப்படம் வெளியாகி தமிழ் திரையுலகிற்கு புத்துணர்ச்சி ஊட்டியது.
தற்போது,
மீண்டும் 2019ல் காதல் காவியம் வசந்தமாளிகை வெளியாகி வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது.
இன்னும், எத்தனை பழைய திரைப்படங்கள் டிஜிட்டலில் வந்தாலும்,
நடிகர்திலகத்தின் படங்களின் சாதனையை நெருங்க முடியாது
நன்றி SunderRajan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
27th June 2019, 04:45 AM
#2607
Senior Member
Devoted Hubber
வசந்த மாளிகை பெயரை உச்சரித்தாலே மனதில் ஜில்லென்று காற்று வீசுகிறது ..!
இன்று என் மனைவியோடு சேர்ந்து பார்த்தேன் இதோடு பார்த்த எண்ணிக்கை 47.
படம் வெளியாகியும் 47 ஆண்டுகள் ஆகிறது இன்னும் 47 ஆண்டுகளை கடந்தும் 2072 ம் ஆண்டிலும் இந்த படம் நிற்கும் .
... எங்கள் புதுக்கோட்டையில் வெஸ்ட் என்ற தியேட்டரில் மாலை இரவு என இரண்டு காட்சிகள் இரண்டு காட்சியிலும் திரையரங்கம் நிரம்பி வழிகிறது.
படம் வெளியான ஜூன் 21 ம் தேதி சென்னையில் நடிகர்திலகத்தின் முகநூல் நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு சென்றுவிட்டேன்,
நிகழ்ச்சி முடிந்து வந்த பிறகு படம் ஓடும் தியேட்டருக்கு சென்று ரசிகர்களின் வரவேற்பு எப்படி என்று பார்க்க சென்றேன் தியேட்டர் காவலாளியிடம் பேச்சுகொடுத்தேன் மிக பிரமாதமாக இருக்கிறது சார் முதல் காட்சிக்கு 80% கூட்டம் வருகிறது இரவு காட்சிக்கு நீண்ட காலம் கழித்து ஹவுஸ்புல் என்று போர்ட மாட்டுகிறோம்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகம் வந்து50 ரூபாய் டிக்கெட் 100 ரூபாய்க்கு பிளாக்கில் விற்று அதுவும் கிடைக்காமல் பலர் திரும்பி சென்றார்கள்.என்றார் ,
அடுத்து அவரிடம் நான் கேட்டேன் படம் பார்க்க வருகிறவர்கள் எல்லாம் 50 வயதை கடந்தவர்களா என்று
உடனே அவர் சொன்னார்,
இல்லை சார் இளம் வயதினரும் ஆண் பெண் என்று வருகிறார்கள் படத்தில் வரும் முக்கியமான வசனங்களுக்கும் எல்லா பாடல்களுக்கும் பயங்கரமாக கைதட்டுகிறார்கள்.
என்று எல்லாவற்றிக்கும் சிறப்பான பதிலை சொன்னவர் இறுதியாக அதிர்ச்சியான ஒரு தகவலும் சொன்னார்,
வரும் வியாழக்கிழமை (நாளை)
அனபெல்லா என்ற படம் திரையிட ஏற்கனவே ஒப்பந்தம் செய்து இருப்பதால் புதன்கிழமையோடு படத்தை மாற்றிவிடுவார்கள் என்று வேதனையோடு சொன்னார்,.
நன்றி Abdulrazak
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
27th June 2019, 04:54 AM
#2608
Senior Member
Devoted Hubber
அப்போதெல்லாம் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் நல்ல வசூலுடன் வெற்றிக்கரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும், ஆனால் அவை 100 நாட்கள் என்ற சாதனையை படைத்து விடக்கூடாது என ஆட்சியாளர்கள் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டு படத்தை தொடர்ந்து ஓட விடாமல் தடுத்து விடுவார்கள், அப்படியான சூழ்ச்சிகளை மேற்கொண்டும் கூட இந்திய சினிமாவில் அதிக 100 நாள் வெற்றிப் படங்கள் கொடுத்து இருப்பது நடிகர் திலகம் தான்,
உதாரணத்திற்கு நடிகர் திலகத்தின் சிவந்த மண் திரைப்படம் வெளியான போது எம்ஜிஆர் நடிப்பில் ந...ம்நாடு வெளியானது, சிவந்த மண் இமாலய வெற்றியடைந்ததோடு பாடல்கள் சூப்பர் ஹிட் வேறு, தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் சக்கை போடு போட்டுக் கொண்டு இருந்தது, ஆனால் நம்நாடு படமோ கொஞ்சம் கொஞ்சமாக காற்று வாங்க ஆரம்பித்தது, (அப்போது எம்ஜியார் அதிமுக்கிய திமுக தலைவர்களில் ஒருவர், கலைஞர் கருணாநிதி முதல்வர்,) இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அன்றைய ஆட்சியாளர்கள் தமிழகத்தின் பல நகரங்களில் சிவந்த மண் திரைப்படத்தை ஓட விடாமல் தடுத்தனர் என மூத்த ரசிகர்கள் சொல்லி வருவதை பார்த்து வருகிறோம்,
நமக்கு இது போன்ற செய்திகள் வியப்பாகத் தெரிந்தது, இப்படியெல்லாம் கூட செய்தார்களா? என்று ஆனால்
தற்போதைய சூழலோடு ஒப்பிட்டு பார்த்தோமானால் அன்றைய காலத்தில் நிச்சயமாக நடந்து இருக்கும் என உறுதி செய்து கொள்ள முடிகிறது,
அதாவது தற்போது வசந்த மாளிகை டிஜிட்டலில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதை ஆச்சர்யத்தோடு பார்த்து வரும் திரையுலகம். புதுப் படங்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடுமோ என அஞ்சவும் செய்கிறது, அதன் தொடர்ச்சியாக தியேட்டர்களின் உரிமம் வைத்திருக்கும் முக்கிய நடிகர்கள் மற்றும் அதிபர்களிடம் கோரிக்கையை நீட்டுகிறது, புதுப் படங்களை திரையிட வேண்டும் என்றும் வசந்த மாளிகையை ஓட்டத்தை தடுக்க வேண்டும் என்றும் இதில் குரோத நிலைப்பாடுகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை, காரணம் இன்றைய சினிமாவின் நிலை அது தான், இன்று முன்னணியில் இருக்கும் நடிகர்களின் திரைப்படங்களுக்கே ஒரு வாரம் தான் அவகாசம், ஆனால் அந்த வார நாட்களிலேயே வெள்ளி, சனி, ஞாயிறு போக மற்ற தினங்களில் கூட்டம் இல்லாமல் ஆகி விடும்,
ஆனால் வசந்த மாளிகையோ திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் வாரம் முழுதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தும் கூட அடுத்த வாரம் ஒரு சில திரையரங்குகளில் மட்டுமே தொடர வாய்ப்பு இருக்கிறது,
உதாரணத்திற்கு திருவொற்றியூர் MSM திரையரங்குக இன்று மற்றும் நாளையும் கூட ஹவுஸ்புல் ஆகி இருக்கிறது, அப்படி இருந்தும் வெள்ளி அன்று தொடர்ந்து திரையிட உறுதி செய்ய முடியாத சூழல் திரையரங்கு நிர்வாகத்திற்கு இருக்கிறது,
எப்படி இருந்தாலும் வசந்த மாளிகை அடைந்திருக்கும் இமாலய வெற்றியை வரலாற்றில் இருந்து நீக்க முடியாது,
நன்றி Sekar
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
27th June 2019, 06:50 AM
#2609
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
27th June 2019, 06:51 AM
#2610
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks