தமிழ் சானல்களில் பிரபல சீரியல் ரெட்டை வால் குருவி, இதில் நடித்த பவானியின் கணவர் பிரதீப் இன்று அதிகாலை 4 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.


பிரதீப் தமிழில் சுமங்கலி என்னும் சீரியலில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் சீரியல் பிரபலமான இவரின் தற்கொலை பற்றி பவானி பேட்டி அளித்துள்ளார்.


எங்களுக்குள் பெரிய சண்டைகள் எதுவும் இல்லை. ஆனால் இன்று காலை 2 மணியளவில் வெளியே சென்றுவருகிறேன் என்று சொல்லிவிட்டு போனார்.


மீண்டும் வந்தார். ஆனால் இன்று மிக அதிகமாக காலையிலேயே குடித்துக்கொண்டிருந்தார். நான் அதிகாலையிலேயே ஷூட்டிங் சென்றுவிட்டேன்.


மீண்டும் வீட்டிற்கு வந்தபோது அவர் இறந்து கிடந்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தார். சிறு விசயத்திற்காக இப்படி செய்துகொண்டுள்ளார் என பவானி கூறியுள்ளார்.