வருமானம் பெருக்கவே
சுருக்கான வழி
வெளிநாட்டு நிறுவனம்
வெட்டிய குழி
விழுந்தது இந்தியன் தானே !

இடியாப்பம் இட்லி தோசை வடகறி
என ஏராளமாய் கிடக்கையில்
ஏன் நமக்கு நூடுல்ஸ் வெறி
என்ன குறை நம் வீட்டினில் ?
என்ன காரணம் நம் நாட்டினில் ?

தரங்கெட்ட அரசியல்வாதியா ?
துணை நிற்கும் அதிகாரியா?
தன்மானம் விற்ற வியாபாரியா?
தறி கெட்ட விளம்பரமா ?

ஏற்றமற்ற போட்டி கொண்டு
ஏமாற்றியவர் பலர் உண்டு
ஏமாந்ததில் இந்தியாவும் ஒன்று!
இன்றாவது விழித்தோமா ? இல்லை
இன்னொரு சதியில் விழுந்தோமா?