சிவாஜி கணேசனைச் சந்தித்த அனுபவத்தைப் பற்றி கூறுங்களேன்?
சிறு வயதில் எனக்குப் பிடித்த விளை யாட்டு, எந்தப் பேப்பரைப் பார்த்தாலும் எந்தக் காலி சுவரைப் பார்த்தாலும் முதல் காரியமாக அதில் ‘சிவாஜி வாயிலே ஜிலேபி’ என்கிற சதுரத்தை எழுதுவது தான். இந்த விநோத சதுரத்தை நீளவாக் கில், அகலவாக்கில் என்று எப்படி வாசித்தாலும் ‘சிவாஜி வாயிலே ஜிலேபி’ என்றுதான் வரும்.
பெரியவனானதும் இந்த விளையாட்டு வேறு விதமாக தீவீர மானது. இரண்டு வாரங்கள் அடையார் ஈராஸ் தியேட்டரில் ஓடிய நடிகர் திலகம் சிவாஜியின் ‘நிச்சயத் தாம்பூலம்’படத்தை ‘மோகன் வந்தாச்சா... படம் ஆரம் பிக்கலாமா?’ என்று தியேட்டர் ஆப் பரேட்டர் கேட்கும் அளவுக்கு அத்தனை ஷோக்களையும் பார்த்தேன்.
‘படைத்தானே…’ என்று சிவாஜி சாரின் சோலோ பாடலை சக மாணவர்களு டன் விசிலடித்தபடி கண்டு மகிழ்ந்திருக் கிறேன். ஆமாம்! சிவாஜி சார் வாய் வழி யாக பாட்டோ, வசனமோ… வந்தால் அது ஜிலேபி போலத்தானே இனிக்கும்!
என் நண்பன் என்னை சீண்டுவதற்கா கவே ‘சிவாஜி ரொம்ப Over Acting’ என்பான். அதற்கு நான் ‘சிவாஜிக்குப் பிறகு Actin Over’ என்பேன். இதைப் பின்னாளில் பல இடங்களில் சொல்லி ‘கிளாப்ஸ்’ வாங்கியிருக்கிறேன்.
சிவாஜி பேசினாலும், சிவாஜியைப் பற்றிப் பேசினாலும் கிளாப்ஸ் வரும் என்பதைப் புரிந்துகொண்டேன். அந்த நடிகர் திலகம் கையால் ஒருநாள் நானும் விருது வாங்குவேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை. எப்போதுமே நினைக்காத கனவுதானே பலிக்கும்!
கமல் சாரின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் வெள்ளி விழா வள்ளுவர் கோட்டத்தில் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. எதையும் வித்தியாசமாக செய்யும் கமல் சார், தெலுங்கில் இருந்து நாகேஸ்வர ராவ், மலையாளத்தில் இருந்து மது, தமிழில் இருந்து சிவாஜி என்ற மூவர் அணியை மேடையில் கவுரவ விருந்தினர்களாக உட்கார வைத் தார். தோட்டாதரணி, பி.சி.ராம், பி.லெனின், வசனம் எழுதிய அடியேன்… இப்படி எல்லோருக்கும், சிறப்பு விருந்தினர்கள் தலா 6 பேர் என்கிற கணக்கில் விருது வழங்கினார்கள்.
‘நிச்சயத் தாம்பூலம்’ சிவாஜி சார் கையால் விருது வாங்க மனசுக்குள் திடமாக ‘நிச்சயித்து’ வாயில் போட்டிருந்த ‘தாம்பூலத்தை’ துப்பாமல் முழுங்கி டென்ஷனாக அமர்ந்திருந்தேன். கமல் சார் ‘குள்ள’ அப்புவாக வந்து கலைஞரிடம் தனக் கான விருதை வாங்கிச் சென்றார். பிறகு, நிகழ்ச்சியைத் தொகுத்தவர் படத்தில் பணியாற்றியவர்களின் பெயர்களைத் தொடர்ந்து படிக்க, ஒவ்வொருவராக மேடையேறி அந்த மூவரில் ஒருவரிடம் விருதினை வாங்கிச் சென்றார்கள்.
‘கைக்கு எட்டிய சிவாஜி, ஜிலேபியாக விருது வழங்கி என் வாய்க்கு எட்டுவாரா?’ என்ற கனவில் வசனகர்த்தாவான அடியேன் விசனகர்த்தாவானேன். எந்த தெய்வத்தை வேண்டினால் என்னுடைய நேயர் விருப்பம் நிறைவேறும் என்று எண்ணியபடி மேடையில் அமர்ந்த கலைஞரைப் பார்த்ததும், ‘பராசக்தி’ நினைவுக்கு வந்தாள். அவளிடம் வேண்டிக்கொண்டேன். அப்புறமென்ன சிவாஜியை அறிமுகப்படுத்திய ‘பராசக்தி’ சிவாஜிக்கு என்னை அறிமுகப் படுத்தினாள். அந்த சிங்கத்தின் கையால் அன்று விருது வாங்கியது என் அதிர்ஷ்டம்!
பிறகு சிவாஜியின் மைந்தர் பிரபுவுக்காக ‘சின்ன மாப்ளே’, ‘சின்ன வாத்யார்’, ‘வியட்னாம் காலனி’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதியபோது சிவாஜி சாரின் போக் ரோடு அன்னை இல்லத்துக்குச் செல்லும் பாக்யம் கிடைத்தது. அப்போது சிவாஜியை சந்தித்து சகஜமாக உரையாடு வேன். ஒவ்வொருமுறையும் பேச்சு முடியும்போது மறக்காமல் ‘தம்பி… நாடகத்தை விட்டுறாதீங்க!’ என்பார் நடிகர் திலகம். ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... இந்துவே இந்துவே… தமிழ் இந்துவே..!’
This is not only a statement from the inner heart core of Malayaalam actor de facto NT on our acting demigod but also the verdict and endorsement by global cine goers who have grown up watching NT films!!
Madhu had taken to the footsteps of NT in many a Malayalam movies and he graced the NT film Bharatha Vilas as a token of respect to NT in the song sequence Indhiya Nadu en veedu!! He had also reproduced the acting style of NT in the Malayalam version of Vaazhkkai as Jeevitham!
Watch youthful Madhu with Sheela in the evergreen national award movie Chemmeen!
Last edited by sivajisenthil; 27th March 2015 at 05:17 PM.
டி.பிரேம்குமார், கோயம்புத்தூர்6. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசும் மத்திய அரசும் உயர்ந்த விருதுகள் அளிக்காதது வேதனைக்குரிய விஷயம்தானே? நடிகர் திலகம் என்ற பாராட்டைவிட சிவாஜிக்கு வேறு என்ன பாராட்டு வேண்டும். ரசிகர்கள் அளிக்கும் பட்டத்துக்கு இணையானது அல்ல, அரசாங்கம் அளிக்கும் பட்டங்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியாக இருக்கிறது 'வீரபாண்டிய கட்டபொம்மன்.’ அவரது குரலைக் கேட்கும்போது காது அதிர்கிறது. பார்க்கும்போது கண்கள் துடிக்கின்றன.
நான் படிக்கும் காலங்களில் சுமார் இருபது வயது வரைக்கும்,நடிகர் திலகம் படம் ரிலீஸ் ஆனால் முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவேன்.வேறு யார் படமும் அதிகம் போகமாட்டேன்.
இப்போது நாப்பது வருடமாக சினிமா போவதில்லை
எதற்கு சொல்லுகிறேன் என்றால், அனுபவம் தெரிந்துகொள்ளவேண்டும். தாமரையில் நீர் எப்படி பட்டும் படாமலும் இருக்கிறதோ அதுபோல் நாம்,. இந்த உலகத்தில் பட்டும் படாமலும் இருந்தால் நமக்கு மன நிம்மதி வந்துவிடும்.
அந்த காலத்தில் குடும்ப பாங்கான சினிமா நடிகர் திலகம் அதுதான் ஒரு மனிதனை பல அனுபவத்தில் கொண்டு விடும். குடும்பம் பிரியாது. இப்ப உள்ள படங்களை பார்ஹ்தால் குடும்பம் பிரிந்துவிடும் அன்பர்களே.
ஆகவே, எல்லாமே நாம் பார்க்கும் கண்ணோட்ட தில்தான் இருக்கிறது.
எதையும் தவறு என்று சொல்லிவிடமுடியாது. நாமதான் தவறாக வாழ்கிறோம் என்பதனை நாம் எப்போது புரிந்துகொள்கிறோமோ அப்போதே நமக்கு வெற்றிதான்..
டி.பிரேம்குமார், கோயம்புத்தூர்6. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசும் மத்திய அரசும் உயர்ந்த விருதுகள் அளிக்காதது வேதனைக்குரிய விஷயம்தானே? நடிகர் திலகம் என்ற பாராட்டைவிட சிவாஜிக்கு வேறு என்ன பாராட்டு வேண்டும். ரசிகர்கள் அளிக்கும் பட்டத்துக்கு இணையானது அல்ல, அரசாங்கம் அளிக்கும் பட்டங்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியாக இருக்கிறது 'வீரபாண்டிய கட்டபொம்மன்.’ அவரது குரலைக் கேட்கும்போது காது அதிர்கிறது. பார்க்கும்போது கண்கள் துடிக்கின்றன.
For our satisfaction ....we resort to say so many consoling statements as to why NT has not been conferred with any higher awards of Indian Government. Even as admirers and followers of NT like Sanjeev Kumar or Kamalahasan or Saaradha...were honoured multiple times...the thesaurus of global acting...the dictionary of acting traits...NT was ignored and insulted during his life time for obvious reasons that are open secrets. Even now our eyes got dried up...shameful people...shameless actions and horse-trades lobbies...digging in his own soil .... even though he had emerged out from his Heaven like a Phoenix proving his success and rerun value through the pride of Tamil Cinema KARNAN....do you expect these vision less eyes searching in darkness the existence of a black cat...can do justice to NT? NT deserves even though posthumous, a Bharath Rathna for having made this nation proud with his VPKB winning accolades abroad and for his indelible characterization of roles which cannot even be thought of by these so called Oscar winners hitherto. We all perish as mortals, but NT remains forever as an immortal icon towards whose feet these awards or honours should line up to get honoured in turn!!
Even to understand the strength of ahimsa taught by our Mahaathmaa we needed a foreigner Attenborough to unearth the facts and figures culminating into an Oscar winning Movie Gandhi!! I am sure one day some one from a foreign soil will come to our solace to retrieve the latent talents of NT for a global projection leading to a life time Oscar for a foreign actor who is incomparable to any of his predecessors or footsteppers!! Hopes make us live!!! At that time these cats will also come out shamelessly!!
senthil's personal opinion only
Last edited by sivajisenthil; 28th March 2015 at 02:34 PM.
Today,I watched Iruvar Ullam in Kalaignar TV for the 36 th time. But it absorbs me totally even today .Even New Movies can not do this magic. Kudos to nadigarthilagam-Sarojadevi-Kalaignar-Prasad- K.V.Mahadevan-kannadasan-Lakshmi. Wah!!! What a masterpiece!!!
இருவர் உள்ளம்- 1963
நடிகர்திலகத்தின் நடிப்பில் மீண்டும் அவருடைய தெய்வ பிறவி,இரும்புத்திரை பாணி,இயல்பு நடிப்பில் அடக்கி வாசித்த படம் இருவர் உள்ளம். சிவாஜியின் குரு எல்.வீ.பிரசாத் இயக்கி தயாரித்து, கருணாநிதி மீண்டும் நடிகர்திலகத்துடன் இணைந்தார் குறவஞ்சிக்கு பிறகு மூன்று வருட இடை வெளியில். எழுத்தாளர் லட்சுமியின் புகழ் பெற்ற பெண் மனம் (ஆனந்த விகடனில் வெளியான தொடர்) என்ற நெடுங்கதையை தழுவி ,கருணாநிதி அவர்களால் திரைக்கதை அமைக்க பெற்றது.மூல கதையில் இருந்த பிராமண குடும்ப கதையை(ஜகன்னாதன்-சந்திரா) பிராமணம் அல்லாததாக (செல்வம்-சாந்தா) செய்து, அருமையாய் திரைக்கதை அமைத்திருந்தார்.
சிவாஜி ,எப்பவுமே, கதாநாயகியை மையமாய் கொண்ட கதா பாத்திரங்களிலும் நடிக்க தயங்காதவர்.(ஆனாலும் முதல் பரிசை தட்டி சென்று விடுவார்)
மங்கையர் திலகம்,பெண்ணின் பெருமை ,கை கொடுத்த தெய்வம், நீல வானம்,சிவகாமியின் செல்வன்,வாணி-ராணி உதாரணங்கள். இந்த வரிசையில் நாயகியை மைய படுத்தினாலும்,கதையின் நாயகனுக்கும் நிறைய scope கொடுத்த மிக சிறந்த படம் இருவர் உள்ளம்.
இருவர் உள்ளத்தின் கதை-
மிக பெரிய செல்வந்தர் வீட்டு இளைய மகன் செல்வம் டாக்டருக்கு படிக்கிறேன் என்ற பெயரில் பெண்களுடனும்,தவறான நண்பர்களுடனும் சீரழிந்து கொண்டிருப்பவன். செல்வத்தின் தந்தை பெரிய வக்கீல். மூத்த அண்ணன் ,வக்கீலுக்கு படித்திருந்தாலும்,தொழிலில் திறமையின்றி ,நிறைய பிள்ளை குட்டிகளோடு, கூட்டு குடும்ப நிழலில் வாழ்பவன்.செல்வத்திற்கு ஒரு தங்கை.செல்வத்தின் நடவடிக்கை பிடிக்காமல் ,படிப்பை பாதியில் நிறுத்தி ஊருக்கே வர வழித்து விடுகிறார் தந்தை. செல்வம் ஊரில் வந்தும் திருந்தாமல்,இஷ்டப்படி வாழ்கிறான்.
ஒரு நாள், காரில் தன பெண் நண்பி ஒருத்தியுடன் திமிராக சென்று, சாந்தா என்ற ஏழை டீச்சர் பெண்ணை, இடிப்பது போல் நிறுத்தி tease செய்கிறான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ,அவள் மேல் காதலில் விழுந்து அவளை பின் தொடர்கிறான். சாந்தா காதலுக்கு பச்சை கொடி காட்ட மறுக்கிறாள்.அவளை அடையும் ஆசையில் செல்வம் ஒரு முறை, அவளை யாருமில்லா நேரம் ,தன வீட்டுக்கு தந்திரமாக வர வழைத்து அவள் காதலை வேண்டுகிறான். ஆனால் சாந்தா மறுத்து விட்டு செல்லும் போது,தவறுதலாய் பார்த்தவர்கள் ,ஊரில் தவறாக பேச,ஏழை சாந்தா விருப்பமின்றி ,செல்வத்தை மணமுடிக்கிறாள்.
மணமுடித்த நாளில் இருந்து, செல்வத்தை வெறுக்கும் சாந்தா தாம்பத்ய உறவில் விருப்பமின்றி இனங்குவதால்,செல்வம் , அவள் தன்னை விரும்பி ஏற்கும் வரை,கணவன் என்ற உரிமையை எடுக்க மாட்டேன் என்று சத்யம் செய்கிறான். குடும்பத்தினர் அனைவருமே,செல்வம் திருந்தி வாழ நினைப்பதை அறியாமல், செல்வத்தையே குற்றம் சொல்கின்றனர். ஒரு சமயம் ,நெருங்கி வரும் சந்தர்ப்பத்தில்,செல்வத்தில் பழைய பெண் நண்பியின் குறுக்கீட்டால் திரும்ப பிளவு அதிகமாகிறது. சந்தர்ப்ப சூழ்நிலை சதி செய்ய,செல்வம் ,சாந்தா நெருங்கவே முடியாமல் இருக்கும் தருணம்,சாந்தா செல்வம் திருந்தி விட்டதை உணர்ந்து அவனிடம் தன்னை ஒப்படைக்க முயலும் தருணத்தில், செல்வத்தின் பழைய நண்பியை கொன்ற பழி(செய்தது அவளின் புது நண்பன்) விழ, தந்தை செல்வத்திற்கு எதிராகவும்,அண்ணன் செல்வத்திற்காகவும் வாதாடி, செல்வம் விடுதலையாகி ,சாந்தாவுடன் சேர்கிறான்.
முதல் காட்சியிலேயே களை கட்டி விடும் இருவர் உள்ளம். நடிகர் திலகம் அழகென்றால் அவ்வளவு அழகாக ,ஸ்டைல் ஆக தொப்பியுடன் ,காரில் பறவைகள் பலவிதம் பாட ஆரம்பிப்பார். பல பெண்களுடன் ,நடிகர்திலகத்தின் அத்தனை பாடல்,நடன காட்சிகளும் பிரமாதமாய் வந்திருக்கும்.(யாரடி நீ மோகினி,பறவைகள் பலவிதம்,காதல் மலர் கூட்டம் ஒன்று,ஏன் ஏன் ஏன்,ராஜா யுவ ராஜா,கண்ணா லீலாவிநோதம்,என் ராஜாத்தி வாருங்கடி).கே.வீ.எம்.மாமாவின் பாடலுடன் ,மன்மதனின் ஆடல் (ஜெயந்தி முதல் பத்மினி பிரியதர்ஷினி வரை இந்த பாட்டில்) கேட்க வேண்டுமா குதூகலத்தை?
அடுத்தடுத்த காட்சிகளில் காமெடியில் தூள் பரத்துவார். பல பெண்கள் ஒன்றாக வந்து விட ஒருத்திக்கு தெரியாமல் இன்னொருத்தியை சமாளிக்கும் அழகு. தன்னை நோட்டம் பார்க்க வந்த மாமாவிடம் கையும் களவுமாக மாட்டி கொண்டு முழிப்பது,மாட்டுவது, முதல் காட்சியிலேயே சரோஜா தேவியை டீஸ் பண்ணி விட்டு பிறகு இம்ப்ரெஸ் ஆவது, பிறகு தங்கைக்காக சாந்தா டீச்சரை சிபாரிசு செய்து மாட்ட பார்ப்பது,டீச்சர் தங்கைக்கு டியூஷன் எடுக்கும் போது வழிவது, கீசகன் கதையை சொல்லும் சாக்கில் தன்னை கன்னா பின்னாவென்று திட்டும் சரோஜாதேவியுடன் இனிமே எதுவும் சொல்ல தேவையில்லை அவன் போறான் என்று வாபஸ் வாங்குவது, திருட்டு தனமாக டிரைவர் வேடத்தில் சரோஜா தேவியை வீட்டுக்கு வர வழைத்து விளையாட்டாய் முதலில் பேசி பிறகு தன் காதலை வெளியிட்டு கெஞ்சுவது, தன்னை புரிந்து கொள்ளாத மனைவியிடம் முதலிரவில் விட்டு கொடுப்பது, இதய வீணை பாட்டில் சரோஜா தேவி தன் துயரத்தை அப்படியே வெளியிட,நண்பர்களின் கேலி கண்டு, கூனி குறுகி, நாணி குமுறுவது,குடும்பத்தினரும் தன்னை புரிந்து கொள்ளாதது கண்டு மௌனமாய் உருகுவது , ஒவ்வொரு முறையும் மனைவியுடன் நெருங்கும் சந்தர்ப்பத்திலும் பழைய நண்பர்களாலும்,நண்பிகளாலும் கெடும் போது பதைத்து, பதறுவது, மனைவியிடம் தன் நிலையை சொல்லி வருந்துவது என்று நடிகர்திலகம் ஒவ்வொரு பிரேமிலும் பிரமாத படுத்துவார்.
சரோஜாதேவிக்கு நடிக்கும் வாய்ப்பே நடிகர்திலகத்துடன் இணையும் போதுதான்.(பாக பிரிவினை,பாலும் பழமும்,புதிய பறவை,தேனும் பாலும்)என்னும் போது தோதாக இப்படி ஒரு பாத்திரம். விடுவாரா? ஆரம்ப காட்சியில் தன்னை சீண்டிய பெரிய இடத்து வாலிபனிடம் வெறுப்பை உமிழ்வதில் துவங்கி,அவனின் காதலை சொல்லும் அனைத்து முயற்சிகளையும் முறித்து போடுவது, அவமான படுத்த பட்டு கல்யாணத்திற்கு கட்டாய படுத்த படுவது, கணவனுடன் ஒட்டாத வாழ்க்கை,நெருங்க விரும்பும் நேரத்தில் கணவனின் பழைய வாழ்க்கையின் நிழல் துரத்தி அவமான பட நேரும் தருணங்கள்,பிறகு அவனின் நல்ல மனத்தை அறிந்து சேர வரும் போது,மிக பெரிய பிரச்சினையை எதிர் கொள்ள நேருவது என்ற தருணங்களில் பாத்திரத்தின் தன்மையுணர்ந்து நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுப்பார்.
ரங்கா ராவ், எம்.ஆர்.ராதா,சந்தியா, ராமா ராவ்,கருணாநிதி,முத்து லட்சுமி,பத்மினி பிரிய தர்சினி,ராமச்சந்திரன் அனைவருமே அவரவர் பங்கை சிறப்பாக செய்திருப்பார்.
சிவாஜி-கருணாநிதி இணைவில் வந்த அத்தனை சமூக படங்களுமே magic தான். பராசக்தி,திரும்பிப்பார்,ராஜாராணி,புதையல்,இருவ ர் உள்ளம் எல்லாமே அருமை. (மனோஹரா ஒரு சரித்திர பட சாதனை அதிசயம்) திரைக்கதை அமைப்பில் மு.க ஒரு மேதை. மூலக்கதை சிதையாமல்,பாத்திர வார்ப்பு கெடாமல், படிக்கும் கதை வேறு பார்க்கும் படம் வேறு என்பதை தெளிந்து திரைக்கதை அமைத்த இரண்டே மேதைகள் மு.கவும்,ஏ.பீ.என். மட்டுமே. மு.க தன திரைக்கதையால் படத்தை மிக மிக சுவாரஸ்யமாக்கி பாத்திரங்களுடன் ஒன்ற வைப்பார்.வசனங்களும் அவ்வளவு அருமையாய்,காலத்தை ஒட்டியதாய் அமைத்து படத்தை மெருகேற்றும். காமெடி, பஞ்ச் வசனங்கள் என்று கலக்கியிருப்பார்.(குடுக்கும் போது வாட்ச் பண்றதாலேதான் வாட்ச்னு பெயர் வச்சாங்களா)
பிரசாத் என்ற அற்புதமான இயக்குனர் ,தயாரிப்பாளராகவும் அமைந்து விட்டால்? கேட்கவா வேண்டும்? எல்லா technical அம்சங்களும் நன்கு கவனிப்பு பெற்றிருக்கும்.(கேமரா,எடிட்டிங்) சிவாஜியும் இவரை தன் குருவாக மதித்ததால் ,இவர் சொன்னதை உள்வாங்கி மிதமாய் நடித்ததை சிவாஜியே குறிப்பிட்டுள்ளார்.அற்புதமான இயக்கம்.
கே.வீ.மகாதேவன் ,சிவாஜியுடன் இணைந்ததில் மறக்க முடியாத சமூக படங்களில் ஒன்று.(மற்றவை- பாவை விளக்கு,குலமகள் ராதை,குங்குமம்,ரத்த திலகம்,அன்னை இல்லம்,செல்வம்,பேசும் தெய்வம்,வியட்நாம் வீடு,வசந்த மாளிகை).பறவைகள் பலவிதம், புத்தி சிகாமணி, கண்ணெதிரே தோன்றினால், இதய வீணை தூங்கும் போது, நதி எங்கே போகிறது, ஏனழுதாய், கண்ணே கண்ணே உறங்காதே, அழகு சிரிக்கிறது போன்ற படத்தோடு ஒட்டிய சூப்பர்-ஹிட் பாடல்கள் கே.வீ.எம்-கண்ணதாசன் இணைப்பில். இந்த படத்தின் மிக மிக சிறப்பான அம்சங்களில் ஒன்று ரி-ரெகார்டிங் எனப்படும் பின்னணி இசை சேர்ப்பு. பின்னாளில் பெரிதாக பேச பட்ட கேரக்டர் based மூட் மியூசிக் ,எனக்கு தெரிந்து இந்த படத்தில்தான் அறிமுகமானது.(சிவாஜி,சரோஜாதேவியை பின் தொடரும் இடங்கள்).இதைதான் இளைய ராஜா தன் பதினாறு வயதினிலே,முள்ளும் மலரும் போன்ற படங்களில் தொடர்ந்து பெயரெடுத்தார்.
பெண்ணின் மனதை விலை கொடுத்து வாங்க முடியாது, அப்படி வாங்கினாலும் உடலன்றி உள்ளம் உன்னை சேராது, மனதை அடையும் ஒரே வழி தூய நல்லிதயத்தின் அன்பு ஒன்றுதான் என்ற கான்செப்ட் ,அனைவரின் கூட்டு முயற்சியால் ,பிரம்மாண்ட வெற்றி படமாகி, இன்றளவும் ரசிகர்களை மட்டற்ற குதூகலத்தில் ஆழ்த்தும் அற்புத படமாகவே,காலத்தை கடந்து ஒளி வீசி கொண்டிருக்கிறது.
ஏப்ரல் 3 ( GOOD FRIDAY ONWARDS ) முதல் திருச்சி கெய்டி திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வெண்ணிற ஆடை நிர்மலா, லக்ஷ்மி, நாகேஷ், பாலையா, எம் என் நம்பியார் மற்றும் பலர் நடித்த இனிய பாடல்கள், சஸ்பென்ஸ் காட்சிகள் அடங்கிய சிறந்த குடும்ப சித்திரம் "தங்கைக்காக" திரையிடப்பட்ட உள்ளது.
1) அங்கமுத்து தங்கமுத்து பள்ளிக்கு போனாளாம்
2) உன்னை தேடிவரும் எதிர்காலம்
3) தாயின் முகம் இங்கு நிழலாடுது
4) அழகே நீ ஒரு கதைசொல்லடி
5) வெள்ளிகிழமை
6) எதையும் தாங்குவேன் தங்கைக்காக
ஆகிய இனிய பாடல்கள் நிறைந்த திரைப்படம்.
APRIL 3rd ONWARDS - GAIETY - DAILY 4 SHOWS
POSTER DESIGN - "DESIGN KING" MADURAI SUNDERRAJAN
Last edited by RavikiranSurya; 28th March 2015 at 09:01 PM.
Bookmarks