சி.க. நீங்கள் சொன்ன புதுக்கவிதை கருத்த்தினையே ஒரு கவிதையாக்கி மகிழ்கின்றேன்.

புதுக்கவிதை இலக்கணம் இல்லா கவிதை மற்றும் அது
மதுக்கவிதை இருப்போர் இல்லையோர் எவரும் இயற்றும் கவிதை
அது இது என எதையும் பாடவைக்கும் கவிதை. சிந்தனை
எதுவும் பொதிந்திருக்கும், படித்தவுடனே புரிந்திருக்கும்.

அசாதாரணங்களும் அநாயசமாய் சொல்லப்பட்டிருக்கும்.
இயல்பான விடயங்களும் இயல்பை மீறி எடுக்கப்பட்டிருக்கும்.
பாரதியென்ற பெரும்புலவன் காட்டிவிட்ட பாதைதனில்
பாமரரும் பயணித்திருக்கும் பாடைஏறா பாட்டுவழி.