முகமூடி/முகத்திரை: உள்ளே சிரிப்பவர் வெளியே அழுவது போல் அகத்தே அழுபவர் புறத்தே சிரிப்பது போல் !
வாழ்க்கையில் எல்லோருமே ஏதோவொரு தருணத்தில் இந்த வகை முகமூடியை /முகத்திரையை போட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவது இயல்பே இங்கே நடிகர்திலகம் சிபிஐ ராஜனாக தீயவர் முகத்திரை கிழிப்பதை காண்போமே !
Watch from 2:15 to 2:20 interesting and entertaining sequence with slim NT in his elegant JB/Dean Martin's Silencers get up!
(with Nagesh in his Jerry Lewis get up!!)
*courtesy : Vasudevan’s YouTube upload)
Last edited by sivajisenthil; 13th December 2014 at 11:24 PM.
மையத்தில் இன்று வரை வந்த நடிகர் திலகத்தின் திரைப்பட வரிசை மற்றும் ஆவணங்கள் தொகுத்து சுமார் 260உக்கும் மேற்பட்ட திரைப்பட ரிலீஸ், 50, நூறு, வெள்ளிவிழா விளம்பரங்கள் மற்றும் நடிகர் திலகத்தை பற்றிய தகவல்கள், பத்திரிகையில் வந்த பேட்டிகள் இன்னும் பல விஷயங்கள் ஒரு cd அல்லது dvd வடிவில் நம்முடைய ரசிகர்களுக்கு, இந்த அறிய ஆவணங்களை பத்திரபடுத்தி வைக்க நினைக்கும் இளைய தலைமுறையினருக்கு மையம் திரியில் நடிகர் திலகம் அவர்கள் திரியில் பதிவுகளை படிக்க வரும் அனைவருக்கும் புத்தாண்டில் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் ஒரு அரிய செயலாக "இலவசமாக" கொடுக்க நான் தீர்மானம் செய்துள்ளேன்.
இது தவிர என்னிடம் உள்ள நான் தனிப்பட்ட முறையில் சேகரித்துள்ள சுமார் 1000 துக்கும் அதிகமான அரிய புகைப்படங்கள் நடிகர் திலகம் அவர்களின் திரைப்பட காட்சிகள், personal போட்டோ ஆகியவையும் cd மற்றும் dvd வடிவில் நமது ரசிகர் மற்றும் அதனை பொக்கிஷமாக வைத்துகொள்ள விரும்புவோர் இளைய ரசிகர்கள் இவர்களுக்காக வழங்கவுள்ளேன்.
கூடிய விரைவில் அதற்க்கான மின் அஞ்சல் இதே மையம் திரியில் பதிவிடுகிறேன். அந்த மின் அஞ்சல் முகவரிக்கு, உங்களுடைய பெயர், விலாசம், கைபேசி எண் ஆகியவை எழுதி அனுப்பினால். Courier இல் அந்த cd அல்லது dvd அனுப்பிவைக்கப்படும்.
இந்த ஆவணங்கள் பெரும்பான்மையானவை திருச்சி, திண்டுக்கல், மதுரை, நாகை , கோவை மாவட்ட நடிகர் திலகம் ரசிகர் மன்றத்தை சேர்ந்த நண்பர்கள் முக்கால்வாசி பேர் நடிகர் திலகம் புகழ் பரப்பவேண்டும், இக்கால இளைஞர்கள் இளைய தலைமுறையினர் நடிகர் திலகம் சாதனைகள் பற்றி அறியவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் இலவசமாக கொடுத்து உதவி, அது நமது மையம் திரியில் பதிவேற்றப்பட்டவையாகும் !
ஆகையால் இதற்க்கு கட்டணம் எதுவும் கிடையாது...!
rks
நண்பர் ரவிகிரண் சூரியா
தங்களின் முயற்ச்சியை வரவேற்கின்றேன்
கூடிய விரைவில் இதனை செய்யுங்கள்
உங்கள் முயற்ச்சிக்கு எனது ஆதரவு
நிச்சயம் உண்டு
நண்பர் சுந்தரராஜன் நடிகர் திலகத்தின்
மறுவெளியீட்டு பட விபரங்களை
மெயின் திரியில் பதிவிடுவதோடல்லாமல்
மறுவெளியீட்டிலும் மன்னரின் சாதனை
திரியிலும் பதிவிடுங்கள்
தாங்கள் மெயின் திரியில் பதிவிட்டவை
தங்கள் சார்பாக
மறுவெளியீட்டிலும் மன்னரின் சாதனை
திரியில; பதிவிடுகின்றேன்
இனிவரும் நாட்களில்
மறுவெளியீட்டு பதிவுகளை
மறுவெளியீட்டிலும் மன்னரின் சாதனை
திரியிலும் பதிவிடுங்கள்
செலுலாய்ட் சோழன் – 50 ! பத்திரிகையாளர் சுதாங்கன்
(From His FaceBook Post)
1959ம் வருடம் வெளிவந்த படம் `பாகப்பிரிவினை’! அடுத்து 1960ம் வருடம் சிவாஜியின் இரண்டு `பா’ வரிசை படங்கள்!
இந்த `பா’ பட்ங்களைத்தவிர கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் கதை வசனம் எழுதிய ` தெய்வப் பிறவி’ கருணாநிதி கதை வசனம் எழுதிய ` குறவஞ்சி’ ` ஜெமினியின் ` இரும்புத் திரை’ ஸ்ரீதரின் ` விடிவெள்ளி’ `எல்லாம் உனக்காக’ படங்கள் வந்தது!
இந்த் வருடம் வந்த இரண்டு ` பா’ படங்களில் குறிப்பிடத் தக்கது ! ` படிக்காத மேதை’ `பாவை விளக்கு!
`இதில் `படிக்காத மேதை’ பீம்சிங்! `பாவை விளக்கு’ அகிலனின் நாவல்!
`படிக்காத மேதை’ இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை! ஒன்று தெரியாத அப்பாவி! தன்னை வளர்த்தவர்களின் விசுவாசியாக ரங்கன் கதா பாத்திரம் சிவாஜி கணேசனுக்கு!
இந்த ப்`’ வரிசைப் படங்களைப் பற்றி சிவாஜி அழகாக சொல்வார்!
`பா’ வரிசை படங்கள் வருமென்று பீம்சிங் அவர்களுக்கே தெரியாது. `பா’ என்று முதல் எழுத்தில் ஒரு படம் எடுத்து , அது நன்றாக ஒடியவுடன், செண்டிமெண்டாக `பா’ என்றே படத்தின் முதல் எழுத்தை வைக்கலாம் என்று அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும். `பா’ வரிசையில் வந்த படங்கள் நன்றாகவே ஒடியது. நான், இயக்குனர் பீம்சிங், கவிஞர் கண்ணதாசன், இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகியோரின் கூட்டு முயற்சியால் உருவானவை இந்தப் படங்கள்.
அந்த நாட்களிலிருந்து மிகச் சிறந்த நடிக, நடிகையர்களை, தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து எல்லோருமாக உழைத்து, இந்த மண்ணின் மகத்துவங்களை, குடும்ப உறவுகளின் மேன்மைகளையும், சிறுமைகளையும் காட்டி நல்ல படங்களாக கொடுத்தோம்.
நாங்கள் நடிக்கும்போது எங்கள் முழு கவனமும் தொழிலின் மேல்தான் இருக்கும். எங்களுக்கு டீம் ஒர்க் முக்கியம.
கதாநாயகன் நன்றாக இருக்கிறானா ? அல்லது கதாநாயகி அழகாக இருக்கிறாளா ? இயக்குனர் நன்றாக இயக்கக் கூடியவரா ? என்கிற சிந்தனைகள் யாருக்கு இருக்காது. ஒரு படம் என்பது எல்லோரும் சேர்ந்து உருவாக்குவது. ஒரு டீமினுடைய வேலைதான் அந்தப் படம். எல்லோரும் சேர்ந்து கைதட்டினால்தானே நன்றாக இருக்கும். அதுபோல்தான் நாங்களும் ஒத்துழைத்து வெற்றிகரமான படங்களைத் தர முடிந்தது.
`பாகப்பிரிவினை’ படத்தில் கை, கால் ஊனமுற்ற ஒரு பட்டிகாட்டான் வேஷம். சரோஜாதேசி, நடிகவேள் எம்.ஆர்.ராதா, பாலையா, சுப்பையா, எம்.என் நம்பியார் என்னோரு நடித்தார்கள். ஊனமுற்றவர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்ந்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற கருத்தையும், `ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்று உயர்ந்த கருத்தையும் விளக்கிய படம் இது!
அடுத்தது ` பாவமன்னிப்பு’ படத்தில் ஜாதி, மத ஒற்றுமைப் பற்றி பேசினோம். இந்து, கிறித்துவர், இஸ்லாம் என்ற பாகுபாடு இன்றி நாமெல்லாம் சதோதரர்களாக வாழ வேண்டும் என்பதை, கதை மூலமும், என் கதா பாத்திரம் மூலமாக மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.
இந்தக் கால கட்டத்தில் இயக்குனர், கதாசிரியர், இசையமைப்பாளர்,, முக்கிய நடிகர்கள் எல்லோரு சேர்ந்து உட்கார்ந்து, கதையமைப்பு, கதாபாத்திரங்கள், பாட்டுக்கள் பற்றிப் பேசி, முடிவு செய்வோம்,மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைப் படத்தில் எப்படி சொல்லலாம் என்பதைப் பற்றி கலந்து பேசுவோம். அதனால் தான் அந்த படங்கள் அப்படி ஒடியது’ என்கிறார் சிவாஜி கணேசன்.
சிவாஜி சொன்னது உண்மைதான்.! `படிக்காத மேதை’ வங்காளத்தில் ஆஷா பூர்ணாதேவி என்பவர் எழுதிய கதை!
அதற்கு வசனம் எழுதியவர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்! திரைக்கதை இயக்கம் ஏ. பீம்சிங்!
படத்திற்கு இசை கே.வி. மகாதேவன்! படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுமே போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்!
எஸ்.வி.ரங்காராவ் – கண்ணாம்பா இருவருமே ஆந்திரம் தமிழ் திரையலகிற்கு அளித்த அரிய பொக்கிஷ சீதனங்கள்!
சீர்காழி குரலில் ஒலித்த அந்த அசரீரி பாட்டு `எங்கிருந்தோ வந்தான் ரங்கன்’ பாட்டில் படுக்கையில் படுத்துக் கொண்டே தான் வளர்த்த பிள்ளை பிரிந்து துக்கத்தை ரங்காராவ் வெளிப்படுத்திய விதம், இதயத்தில் மென்மை கொண்ட அனைவரையும் அழ வைக்கும்!
சிவாஜி சொல்கிற அந்த `டீம் ஒர்க்’கின் வெளிப்பாடு என்பது `பாவை விளக்கு’ படத்தின் ஆரம்பத்திலேயே காட்டியிருப்பார்கள்!
எழுத்தாளர் அகிலனின் மிகப் பிரபலமான நாவல் ` பாவை விளக்கு’
திரைக்கதை வசனம் எழுதியவர் ஏ.பி.நாகராஜன்.
படத்திற்கு இசை. கே.வி. மகாதேவன்!
இந்த படத்தின் முதல் காட்சி சிவாஜி கணேசனின் சொந்த வீடான அன்னை இல்லத்திலிருந்து துவங்கும்!
அவர் வீட்டிற்கு முன்னாலிருக்கும் தோட்டத்தில் தரை விரிப்பு போட்டு, அதில் சிவாஜி, வி.கே.ஆர். பாலாஜி, அசோகன், பிரேம் நசீர் எல்லோரும் அமர்ந்திருப்பார்கள்!
பிரேம் நசீர் அப்போது இங்கே கொஞ்சமாகவும், கேரளத்தில் கொடி கட்டியும் பறந்து கொண்டிருந்த நடிகர்! பிரேம் நசீர் சிவாஜியை பார்த்து கேட்பார், ` என்ன சிவாஜி, எங்க எல்லோரையும் எதுக்கு உங்க வீட்டிற்கு கூப்பிட்டிங்க ?’ `இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை வேலை இருக்காது! அதனால் உங்க எல்லோருக்கும் அகிலனுடைய ` பாவை விளக்கு’ நாவலை படிச்சுக் காட்டலாம்னு கூப்பிட்டேன்’ என்பார் சிவாஜி! அங்கே அவருடனிருந்தவர்கள், எல்லோருமே அந்த படத்தில் நடித்த கதா பாத்திரங்கள்! சிவாஜி அகிலனின் ` பாவை விளக்கு நாவலை சிவாஜி படிக்க ஆரம்பித்து, சில பக்கங்கள் படித்தவுடன் படம் துவங்கும்!
` பாவை விளக்கு’ படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியவர் மருதகாசி! `டீம் ஒர்க்’ என்பதை இந்த படத்தின் ஆரம்பத்தில் சிவாஜி மூலமாக காட்டியிருப்பார்கள். ஆனால் `பாவை விளக்கு படத்தை இயக்கியது ஏ. பீம்சிங் அல்ல! இயக்குனர் கே. சோமு!
இந்த படத்தை விட இந்தப் பாடல்கள் அத்தனையும் கே.வி. மகாதேவன் இசையில் அற்புதமாக வந்து, அன்றை இலங்கை வானொலியினாலேயே இந்த படம் மிகப் பிரபலமானது! இந்தப் படத்தின் கதாநாயகன் ஒரு மிகப் பெரிய எழுத்தாளன் தணிகாசலம்! குமாரி கமலாவுக்காக பி.சுசீலா பாடிய பாடல் அந்த நாளில் ஒரு காதல் தூது பாட்டாகவே அமைந்தது!
`நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ !
படத்தில் அமைந்த இன்னொரு தாலாட்டு! `நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே! நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே!
ஆனால் படத்தில் மிகப் பிரபலமான பாடல் ` காவியமா? நெஞ்சின் ஒவியமா?’ குற்றாலத்தின் அழகை வர்ணித்த ` ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே! குற்றால அழகை நான் காண்பதற்கு வண்ணக்கிளியே! மருதகாசியில் தமிழ் விளையாடியிருக்கும்!
அடுத்த ஆண்டு வந்த பீம்சிங் `பா’ வரிசை படம் இன்று வரையில் தமிழ் சினிமாவின் ஒரு சாதனைக் கல்
அந்தப் படம் ?
(தொடரும்)
Surprise package என்று ஆங்கிலத்தில் ஒரு Phrase உண்டு. அது நடிகர் திலகத்தின் நடிப்பிற்கென்றே உருவாக்கப்பட்ட சொற்றொடரோ என ஒரு எண்ணம் எழும். அந்த அளவிற்கு நம்மை வியப்பில் ஆழ்த்தும் உடல் மொழி அவர் நடிப்பில் அவ்வப்போது தென்படும்.
இன்னொரு பரிமாணம், பாடல் காட்சிகளில் அவருடைய உடல்மொழி. நம்மையும் அறியாமல் நாமும் அவருடைய அங்க அசைவிற்கேற்ப ஆட முற்படுவோம். அதில் நாம் ஒன்றி விடுவதோடு மட்டுமின்றி அவர் நமக்குள்ளே ஊறி விட்ட படியால் நமக்கும் அந்த உடல் மொழி சில சமயம் தொற்றிக் கொண்டு விடும். ரசிப்பதற்கென்றே இறைவன் படைத்த அற்புதப் படைப்பு நடிகர் திலகம். அதுவும் தாளம் போட வைக்கும் இசை, அர்த்தமுள்ள வரிகள், சொக்க வைக்கும் குரல், மயக்கும் பின்னணி இசை, இவையோடு சக நடிகர்களின் ஒத்துழைப்போடு ஒரு பாடல் காட்சி அமைந்தால் அது காலங்களைக் கடந்து நிற்கும்.
அதற்கு ஓர் உதாரணம் இந்த பாடல் காட்சி.
விஸ்வரூபம் படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் எஸ்.பி.பாலாவின் குரலில் வாலியின் வரிகளில் சிறந்த நடன அமைப்பில் இப்பாடல் ஒரு முறை பார்த்தால் நெஞ்சில் என்றுமே நிரந்தரமாக நிழலாடும்.
இப்பாடல் காட்சியில் நளினம் என்பதற்கான இலக்கணத்தை நடிகர் திலகம் வகுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சொடுக்குப் போட்டவாறே கைகளை மேலே உயர்த்தும் பாணி, பாடலின் தாளத்திற்கேற்ற உடல் மொழி, அதிகம் உடலை வருத்தாமல் மிக மென்மையான நடன அசைவுகள், எப்போது எனத் தெரியாத வகையில் ஸ்ரீதேவியின் கைகளைப் பிடித்து நடன அசைவுகளை இருவரும் வெளிப்படுத்தும் பாங்கு என ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர் திலகத்தின் தனித்துவமான ஸ்டைல் இப்பாட்டில் கொடி கட்டிப் பறக்கும்.
திரையரங்கமாக இருந்தால் கரவொலி விண்ணை முட்டும்.
Hats off to the choreographer for the super synchronisation of the dance movements with the tune of the song delivered out of the world by NT and ably supported by Sridevi, who deserves equal credit for the stylish and smooth body language.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Rajkapoor, had been the greatest friend of our NT and one of the 'greatest 'showmen' on the earth' in the Indian Panorama, who had a lot of fanfare in Russia too after his films like Aawaara, Shree420, Sangam and Mera Naam Joker! NT had a great admiration for his father Prithviraj Kapoor!
Today is the 90th birthday of Rajkapoor! Our respectful reminiscence on his movie clips!!
Last edited by sivajisenthil; 14th December 2014 at 07:07 PM.
முதல் நன்றி ராகவேந்தர் சாருக்கு சொல்ல வேண்டும். அவர்தான் பல நாட்கள் இந்தப் படத்தை பற்றி சொல்லி கொண்டேயிருந்தார். பல முறை நமது NT FAnS அமைப்பால் நடத்தப்படும் மாதந்திர திரையிடலில் இந்தப் படத்தை உட்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். இன்றுதான் அதற்கு வேளை வந்தது.
அருமையான படம். ஆற்றொழுக்கு போன்ற கதை திரைக்கதை அமைப்பு. எத்துனை இயல்பான வசனங்கள்! மட்டுமா, 53 வருடங்களுக்கு பிறகு இன்றைய சூழலில் கூட வெகு இலகுவாக பொருந்தும் அற்புதம்! Hats Off to KSG!
நகைச்சுவை கலந்த வில்லத்தனத்தில் பாலையா தூள் கிளப்ப, பாசமுள்ள தந்தையாக அதே நேரத்தில் சிறிது வில்லத்தனம் கலந்த வேடத்தை ரங்காராவ் அழகாக கையாள, அதிகமில்லாவிட்டாலும் கிடைக்கும் ஒரு இரண்டு மூன்று காட்சிகளில் ஸ்கோர் செய்யும் நடிகையர் திலகம் இவர்களுக்கெல்லாம் தன் விழியாலேயே ஈடு கொடுத்து முகபாவத்திலே முந்தி செல்லும் நமது நடிகர் திலகம்!
அந்தக் கால படங்களிருந்து வேறுபட்டு மிக குறைந்த அளவிலேயே பாடல்கள்! ஊரில் புயல் வெள்ளம் வரும்போது மக்கள் பாதிக்கப்படுவதை வெகு இயல்பாக எடுத்திருப்பது! நகராட்சிகளிலே நடைபெறும் ஊழல், சிபாரிசு, வேண்டியவர்களுக்கு contract, ஏழை மக்கள் வியாபாரம் செய்யும் இடத்தை கவுன்சிலர்கள் வளைத்துப் போடுவது என்று படம் நெடுக சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை.
இந்தப் படத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது பாச மலர் வெளிவந்த 5 வாரத்துக்குள்ளாகவே இந்தப் படம் வெளியானதால் இதில் நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் ஜோடியாக நடித்ததனால்தான் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஒரு காரணம் சொல்லப்பட்டு வந்தது. நானும் அப்படியே நினைத்திருந்தேன். ஆனால் இன்று படம் பார்க்கும்போது அப்படி நினைத்தவர்கள் தவறு செய்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது. இதில் இருவரும் கணவன் மனைவிதான். ஆனால் எந்தக் காட்சியிலும் ஒரு காதல் காட்சிக்குரிய நெருக்கமோ இல்லாத படம். எனக்கு தோன்றுவது என்னவென்றால் எப்போதும் போல் சீரிய இடைவெளி இல்லாமல் வெளியான பல நடிகர் திலகத்தின் படங்களே ஒன்றுக்கு ஒன்று போட்டியாக அமைந்து வெற்றியோட்டதை சுருக்கி விட்டது என்றே தோன்றுகிறது. 1961-ம் ஆண்டில் வெளியான பாவ மன்னிப்பு, புனர் ஜென்மம், பாச மலர் ஆகியவை ஓடிக் கொண்டிருக்கும்போதே 1961 ஜூலை 1-ந் தேதி வெளியான இந்தப் படம் அதே நாளில் வெளியான நடிகர் திலகத்தின் மற்றொரு படமான ஸ்ரீவள்ளியையும் எதிர்கொள்ள வேண்டி வந்தது, அதன் பிறகு இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கும்போதே 50 நாட்கள் இடைவெளியில் வெளியான மருத நாட்டு வீரன் அதற்கு அடுத்த 14 நாட்களில் வெளியான பாலும் பழமும் ஆகியவற்றையும் எதிர்கொள்ள வேண்டி வந்ததால்தான் வெற்றி ஓட்டம் தடைப்பட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த படம் முதல் வெளியீட்டில் அதிகபட்சமாக ஓடிய நாட்களை மதுரையில் பதிவு செய்தது ஒரு சின்ன ஆறுதல்.
நேரம் கிடைக்கும்போது படத்தைப் பற்றி விரிவாக அலசலாம்! சில நேரங்களில் dvd -யின் quality சற்றே குறைந்ததை தள்ளி வைத்துப் பார்த்தால் மிக நிறைவான ஒரு மாலை! படம் முழுக்க பார்க்க முடியாது, ஒரு அவசர வேலை இருக்கிறது அதனால் ஒரு மணி நேரம் மட்டுமே இருக்க இயலும் என்று சொன்ன நமது அருமை நண்பர் சாரதி அவர்கள் படம் முழுக்க இருந்து பார்த்துவிட்டுதான் கிளம்பி போனார் என்ற உண்மையை இங்கே பதிவு செய்யும்போதே படம் எந்தளவிற்கு ஆட்களை கவர்ந்து இழுத்தது என்பது புரிந்து விடும்!
இந்த நல்ல படத்தை என் எதிர்பார்ப்பிற்கும் மேலாக ஏராளமான மக்கள் வந்திருந்து படம் முழுக்க இருந்து விட்டு பாராட்டி சென்றதற்கு உளமார்ந்த முதல் நன்றி என்றால் இந்தப் படத்தை வலுவாக பரிந்துரை செய்த ராகவேந்தர் சாருக்கு உளமார்ந்த இரண்டாம் நன்றி!
எல்லாம் உனக்காக! நடிகர் திலகமே இந்த புகழுரைகள் எல்லாம் உனக்காக!
..............
பட்டிக்காடா பட்டணமா?..கொழும்பு.............சென்ட்ரல்.....115.. நாட்கள்
பட்டிக்காடா பட்டணமா?..யாழ்நகர்...............ராணி............. 102..நாட்கள்
..............
பாபு.......................................கொழும்ப ு.............ஸெயின்ஸ்தான்..112..நாட்கள்
பாபு.......................................யாழ்நகர ்...............ராஜா.....................105..நாட் கள்
..............
வசந்த மாளிகை..............கொழும்பு...............கெப்பிட ்டல்...........250..நாட்கள்
வசந்த மாளிகை..............யாழ்நகர்.................வெலிங ்டன்............208..நாட்கள்
..................
எங்கள் தங்க ராஜா........கொழும்பு...............சென்ட்ரல்...... .......100..நாட்கள்
எங்கள் தங்க ராஜா........யாழ்நகர்.................ராஜா......... ............126..நாட்கள்
.........
ஜெனரல் சக்கரவர்த்தி.....கொழும்பு..கிங்ஸ்லி....104..நாட்கள ்
ஜெனரல் சக்கரவர்த்தி....யாழ்நகர்..ராஜா..121..நாட்கள்
........................................
பட்டாக்கத்தி பைரவன்...கொழும்பு...ஜெஸிமா....105.நாட்கள்
பட்டாக்கத்தி பைரவன்..யாழ்நகர்..ஸ்ரீதர்..100...நாட்கள்
.................................................. ............
இவை தவிர திரிசூலம் 2 தியேட்டர்களில்
வெள்ளிவிழா ஓடியதாக தகவல் உண்டு
திரிசூலம் ஓடியபொழுது நான் நாட்டில் இருக்கவில்லை
அத்துடன் அதன் விபரம் தெரியாததனால் அதனை குறிப்பிடமுடியவில்லை
பொய் குரல்போல் 5 தியேட்டர்களில் 100 நாட்கள்
6 தியேட்டர்களில் 100 நாட்கள் என்று எனக்கு பொய் ஒலிக்கத் தெரியாது
2 தியேட்டர்களில் 100 நாட்களை தாண்டி ஓடிய பத்துக்கு மேற்பட்ட
படங்களை கொடுத்த ஒரே சாதனை சக்கரவர்த்தி
கொடை சக்கரவர்த்தி வசூல் சக்கரவர்த்தி
அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
ஒருவர் மட்டுமே
வேறு எந்த நடிகருக்கும் 10 படங்கள் எட்டவே இல்லை
.............. 16.12.1972..பாபு.................................. .....கொழும்பு.............ஸெயின்ஸ்தான்..112..நாட்க ள்
பாபு.......................................யாழ்நகர ்...............ராஜா.....................105. .நாட் கள்
........................... 11.01.1973வசந்த மாளிகை...கொழும்பு...கெப்பிட்டல்....250..நாட்க ள்
வசந்த மாளிகை....யாழ்நகர்....வெலிங்டன்....208..நாட்க ள்
.......................
பட்டிக்காடா பட்டணமா? திரையிட்ட ஒன்பதாம் நாள் குலமா குணமா?
திரையிடப்பட்டது
பட்டிக்காடா பட்டணமா 52ம் நாள் காட்சியளித்துக்கொண்டிருக்க
குலமா முணமா? 44ம் நாள் காட்ச்சியளித்துக்கொண்டிருக்க
16.12.1972 பாபு திரையிடப்படுகிறது
அடுத்து பட்டிக்காடா பட்டணமா? 78ம் நாள்
பாப 27ம் நாள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்பொழுது
குலமா குணமா ஓடிக்கொண்டிருந்த அதே திரைகளில்
11.01.1973 அன்று வசந்த மாளிகை
திரையிடப்படுகிறது
ஒரே நேரத்தில் திரையிடப்பட்டாலும்
அனைத்துமே சாதனை செய்தன
இப்படி ஒரு சாதனை நிலை நாட்ட
வசூல் சக்கரவர்த்தி சிவாஜிகணேசனை தவிர
வேறு எந்த நடிகனாலும் முடியாது
Last edited by sivaa; 15th December 2014 at 09:34 AM.
Bookmarks