-
1st November 2014, 05:16 AM
#491
Moderator
Diamond Hubber
என் காதல் தேர்வு தவறாகிவிட்டது: சபர்னா சொல்கிறார்
நாணயம், ரேகா ஐ.பி.எஸ், அரசி, சொந்தபந்தம், துளசி, பிரிவோம் சந்திப்போம் தொடர்களில் நடித்தவர் சபர்ணா. தற்போது புதுக்கவிதையில் தினேசுடன் நடித்து வருகிறார். சபர்ணாவுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் பக்கா கோயம்புத்தூர் பொண்ணு. டிகிரி முடிச்சதுமே மீடியாதான் என்னோட சாய்ஸா இருந்தது. சென்னை வந்தேன். மியூசிக் சேனல்ல வேலை பார்த்தேன். நிகழ்ச்சிக்கு வந்த சினிமா பிரபலங்கள் நடிக்க கூப்பிட்டாங்க. படிக்காதவன், பிரிவோம் சந்திப்போம், காளை உள்பட சில படங்களில் நடிச்சேன். அப்புறம் சீரியல் வாய்ப்பு வந்தது. சினிமாவை விட சீரியல் பெட்டரா தெரிஞ்சுது நடிக்க ஆரம்பிச்சிட்டேன்.
அதன் பிறகு வந்த சினிமா வாய்ப்புகளை தவிர்த்துட்டேன். இந்த நடிப்பு வாழ்க்கையில் எனக்கும் காதல் வந்தது. நானும் காதலிச்சேன். ஆனால் என்னோட செலக்ஷன் தப்பாகிவிட்டது. காதலில் இருந்து நானும் வெளியில வந்துட்டேன். இனி அப்பா அம்மா சாய்சுக்கு விட்டுட்டேன். அவுங்க யாரை கை காட்டுறாங்களோ அவரை கட்டிக்கிட்டு கல்யாணத்துக்கு பிறகு அவரை லப் பண்ணலாமுங்ற ஐடியாவுல இருக்கேன் என்கிறார் சபர்ணா.
நன்றி: தினமலர்
-
1st November 2014 05:16 AM
# ADS
Circuit advertisement
-
1st November 2014, 05:18 AM
#492
Moderator
Diamond Hubber
முந்தானை முடிச்சுக்கு வருகிறார் தேவி கிருபா
தென்றல், உறவுகள் சங்கமம் தொடர்களில் நடித்து வந்த தேவி கிருபா, தற்போது முந்தானை முடிச்சு தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இதற்கு முந்தைய சீரியல்களில் சேலை கட்டி அடக்க ஒடுக்கமான பெண்ணாக நடித்தேன். வயதை மீறிய தோற்றத்துடன் நடித்தேன். முந்தானை முடிச்சில் மார்டன் டிரஸ் அணியும் பெண்ணாக நடிப்பதால் சந்தோஷமாக இருக்கிறது. காரணம் நான் நிஜத்தில் மார்டன் உடைகளை விரும்பி அணிகிறவள்.
தொடர்களில் நடிப்பதோடு நிகழ்ச்சி தொகுப்பாளினி வாய்ப்புகளும் நிறைய வருகிறது. அதற்கான பயிற்சி எடுத்துக் கொண்டு அந்த பணியை செய்யலாம் என்று நினைக்கிறேன். நடிக்கும்போது தவறு செய்தால் ரீடேக் போகலாம். தொகுப்பாளினியாக அப்படி செய்யும் வாய்ப்பு குறைவு. அதனால் நன்றாக பயிற்சி எடுத்த பிறகு தொகுப்பாளினியாவேன். என்கிறார் தேவி கிருபா.
நன்றி: தினமலர்
-
5th November 2014, 07:34 PM
#493
Moderator
Diamond Hubber
புதுமைப் பெண்கள்
பெண்களை ஊக்குவித்து, அவர்களைத் தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் வீட்டுக்கலை, அழகும் ஆரோக்கியமும், பேஷன் உலகம், புதுமைப் பெண்கள் ஆகிய நான்கு பிரிவுகளில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி "அழகிய சினேகிதி'.
உபயோகமற்றப் பொருட்களில் இருந்து கலைப் பொருட்கள் தயாரித்தல், ஆபரணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட கைத்தொழில்களை தலைசிறந்த தொழில் முனைவோர்கள் கற்றுத் தருகின்றனர்.
புதிதாகத் தொழில் தொடங்குவதற்கான அனைத்து வழிமுறைகளையும் இந்த நிகழ்ச்சி விவாதிக்க உள்ளது.
மேலும், பெண்களின் தாழ்வு மனப்பான்மையை அகற்றி, தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் உரைகளும் இதில் இடம்பெறுகின்றன.
இந்த நிகழ்ச்சியை நடிகை நீலிமா ராணி தொகுத்து வழங்குகிறார்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 2.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
* தொழில் குறித்த அறிமுகம், அதற்கான சந்தை வாய்ப்புகள், தொழிலைத் தொடங்குவதற்கான பயிற்சிகள், தேவையான இயந்திரத் தளவாடங்கள், மூலப் பொருட்கள், அவை எங்கே கிடைக்கும் என்ற தகவல், விற்பனை யுக்திகள், வங்கிக் கடன் வாய்ப்புகள், அரசு மானியம், வங்கிக் கடன் பெற தேவைப்படும் மாதிரி திட்ட விவர அறிக்கை என ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான அத்தனை தகவல்களையும் காட்சிப்படுத்துகிறது புதிய தலைமுறையின் "சிறுதொழில்' நிகழ்ச்சி.
தினமும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும் "சிக்கனம் சேமிப்பு செல்வம்' நிகழ்ச்சியின் ஒரு பிரிவாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
* புகுந்த வீட்டில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், பணியிடத்தில் சந்திக்கும் பாலியல் ரீதியான தொந்தரவுகள், வீட்டைக் கவனிக்காத கணவன் ஏற்படுத்தும் அவமானம், சரியாகப் படிக்காத பிள்ளைகளால் ஏற்படும் தலைகுனிவு -
இப்படி அடுக்கடுக்காய் சந்திக்கும் பிரச்னைகளால் மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றுக்கு ஆளாகித் தவிக்கிறார்கள் பெண்கள்.
வெளியே சொல்லவும் முடியாமல், பகிர்ந்து கொள்ளவும் வழியில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு, அவர்களின் மனதில் உள்ள பாரங்களை இறக்கி வைக்கும் நிகழ்ச்சி "கொட்டித் தீர்த்துவிடு தோழி'. பிற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளைப் போல் முகம் காட்டத் தேவையில்லை. போன் அல்லது மின்னஞ்சல் மூலமாக உங்களுடைய பிரச்னைகளை சொல்லலாம்.
உங்களுடைய சந்தேகங்களுக்கு மனநல மருத்துவர் ஷாலினி பதிலளிக்கிறார். மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் மற்றும் செவ்வாய் இரவு 10.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
** கேப்டன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு "மகளிருக்காக' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் "ஹாய் பியூட்டீஸ்' பகுதியில், இயற்கைப் பொருட்களைக் கொண்டு பெண்கள் தங்களை எவ்வாறு அழகுபடுத்திக் கொள்வது என்பதை அழகுக்கலை நிபுணர் விளக்குகிறார். ஜூம்பா என்ற உடற்பயிற்சி நடனம், இந்த நிகழ்ச்சியில் புதிய பகுதியாகத் தொடங்கப்பட இருக்கிறது. நடனத்துடன் இணைந்த உடற்பயிற்சிதான் ஜூம்பா. இதில் பல நடன முறைகள் இடம்பெறும். உடல் எடை அதிகம் கொண்டவர்கள், இந்த நடனத்தை ஆடுவதன் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். "ஷாப்பிங்கோ ஷாப்பிங்' பகுதியில், பலவிதமான ஆடைகள், ஆபரணங்கள், அழகுப் பொருட்கள் எங்கு கிடைக்கின்றன போன்ற தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
Last edited by aanaa; 5th November 2014 at 07:37 PM.
"அன்பே சிவம்.”
-
8th December 2014, 07:02 AM
#494
Moderator
Diamond Hubber
http://www.sunnetwork.in/sunkudumbam/
Sun Kudumbam Virudhugal 2014 Winners List:
Best Actress – Raadhika Sarathkumar (Vaani & Rani)
Best Supporting Actor – Prithviraj (Swaminathan)
Best Child Artist – Neha ( Thenmozhi )
Best Editor – Ramesh Lal (vani rani)
Best Dubbing Artist ( MALE ) – Sathyaraj ( Saravanan’s Voice )
Best Villi Awards – Gayathiri (Deivamagal)
Best Serial – Deivamagal
Best Actor – Deepak (Thendral)
Best Jodi – Deepak Dinkar & Shruthi Raj (Tamil & Thulasi)


Last edited by aanaa; 8th December 2014 at 07:05 AM.
"அன்பே சிவம்.”
-
27th December 2014, 10:59 PM
#495
Moderator
Diamond Hubber
-
27th December 2014, 11:01 PM
#496
Moderator
Diamond Hubber
-
12th January 2015, 06:27 AM
#497
Moderator
Diamond Hubber
சின்னத்திரையிலும் பயமுறுத்துகிறார்கள்
2014ம் ஆண்டை தமிழ் சினிமாவில் திகில் ஆண்டு என்று குறிப்பிடலாம். அந்த அளவிற்கு திகில் படங்கள் வெளிவந்தது, 200 படங்களில் 50 படங்களுக்குமேல் திகில் படங்கள்தான். யாமிருக்க பயமே, அரண்மனை, பிசாசு, போன்ற படங்கள் ஹிட்டாகவும் செய்தன. அதே போல சின்னத்திரையிலும் திகில் தொடர்கள் ஒளிபரப்பாகி மக்களின் வரவேற்பை பெற்றன
ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகும் அதே கண்கள், ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சிவ ரகசியம், புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனாமிகா உள்பட பல திகில் சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்களை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. இதில் அனாமிகா டப்பிங் சீரியல். இதே போன்று பல திகில் சீரியல்களை ஒளிபரப்ப மற்ற சேனல்களும் முடிவு செய்திருக்கின்றன. முன்னணி சேனல் ஒன்று பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடம் திகில் தொடருக்கான ஸ்கிரிப்ட் கேட்டிருக்கிறது. சினிமாவுக்கு நிகராக தயாரித்து ஒளிபரப்ப திட்டமிட்டிருக்கிறது. இந்த ஆண்டு அதிகமான திகில் தொடர்கள் ஒளிபரப்பாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நன்றி: தினமலர்
-
12th January 2015, 06:29 AM
#498
Moderator
Diamond Hubber
நிகழ்ச்சி தயாரிப்பாளராகிறார் நீலிமா ராணி!
குழந்தை நட்சத்திரமாக இருந்து கோலங்கள் சீரியலில் அறிமுகமான நீலிமா ராணி தொடர்ந்து சீரியல்களில் நடித்தார். பின்னர் திரைப்படங்களில் நடித்தார். பின்னர் திருமணமாகி செட்டிலானார். 4 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சினிமாவில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும் நல்ல ரீ என்ட்ரியை கொடுத்தது. தற்போது அமளி துமளி, இருவர் உள்ளம், வாலிபராஜா படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சின்னத்திரையில், வாணி ராணி மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் மகாபாரதம், தாமரை தொடர்களில் நடித்து வருகிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் ஆகியிருக்கிறார்.
தற்போது பிசியாக நடித்துக்கொண்டும், நிகழ்ச்சிகளை தொகுத்துக் கொண்டும் இருக்கும் நீலிமா விரைவில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகிறார். முன்னனி சேனல் ஒன்றில் டாக் ஷோ நடத்துவதற்கான பேச்சு நடந்து வருகிறது. அது முடிவான பிறகு ஏப்ரல் மாதம் வாக்கில் தயாரிப்பை தொடங்குவார் என்றும் அவரது கணவர் இயக்குவார் என்றும் தெரிகிறது.
நன்றி: தினமலர்
-
3rd February 2015, 12:04 AM
#499
Moderator
Diamond Hubber
சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் வலம் வந்தவர் சாண்ட்ரா. தொகுப்பாளர் பிரஜினை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்தபோது வந்த சினிமா வாய்ப்புகளிலும் நடித்தார். கஸ்தூரிமான், போராளி, படங்களில் நடித்தார் சிவப்பு எனக்கு பிடிக்கும் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான சுற்றுலா, தரணி படங்களில் ஹீரோயின்
சினிமா வாய்ப்புகள் நிறைய வருவதால் சின்னத்திரைக்கு முழுக்கு போட்டுவிட்டார் சாண்ட்ரா. இதுகுறித்து அவர் கூறும்போது "தற்போது சினிமா வாய்ப்புகள் நிறைய வருகிறது. நான்தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். தரணி படத்துக்கு கிடைக்கும் பாராட்டுகள் சந்தோஷத்தை கொடுத்துள்ளது. தற்போது 3வது நபரை காணோம் என்ற படத்தில் நடித்து வருகிறேன். சின்னத்திரை, சினிமா இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதனால் இனி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறேன்" என்றார்.
நன்றி: தினமலர்
-
3rd February 2015, 12:07 AM
#500
Moderator
Diamond Hubber
சமீபகாலமாக சின்னத்திரையில் முகம் காட்டி புகழ் பெற்றவர்கள் சினிமாத்துறைக்குள் என்ட்ரி கொடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதிலும் சிவகார்த்திகேயன், மா.கா.பா.வின் வரவுக்கு பிறகு சில பெண் நிகழ்ச்சி தொகுப்பாளினிகளும் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது, தனியார் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் ஒருவரான அனுஷ்யாவும் சினிமாவில் என்டரி கொடுக்கிறார்.
ஆனால் இவருக்கு ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லையாம். வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவே ஆசைப்படுகிறார். காரணம் கேட்டால், கதாநாயகி என்று இறங்கி விட்டால் கதைக்கு தேவை என்று கவர்ச்சியாக நடிக்க சொல்வார்கள். ஆனால் நமக்கு அது சரிப்பட்டு வராது.
அதனால்தான் நடிக்க சில வாய்ப்புகள் வந்தபோதே, கேரக்டர் ரோல்களில் மட்டும்தான் நடிப்பேன் என்று சொல்லி விட்டேன. மேலும், கதாநாயகி என்றால் சில வருடஙக்ள் தான் நீடிக்க முடியும்.
ஆனால் எனக்கு இந்த கலைத்துறையில் நீண்டகாலம் இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால்தான் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடிப்பதுதான் சரியான வழி என்று முடிவெடுத்திருக்கிறேன் என்று கூறும் அனுஷ்கா, தற்போது என் கைவசம் இரண்டு புதிய படங்கள் உள்ளது. மேலும், சினிமாவில் பிசியாகும் வரை சினிமா, சின்னத்திரை என இரணடு துறைகளிலும் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளேன் என்கிறார் அனுஷ்யா
நன்றி: தினமலர்
Bookmarks