-
20th September 2014, 01:23 AM
#481
Moderator
Diamond Hubber
அழகி, பொம்மலாட்டம், குறிஞ்சி மலர் சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறவர் தேசிகாஸ்ரீ. அடுத்து மலையாளம் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மசாலா குடும்பம் சீரியலில் அறிமுகமாகி இதுவரை 7 சீரியல்களில் நடித்து முடித்து விட்டேன். தற்போது 3 சீரியல்களில் நடித்து வருகிறேன்.
சின்னத்திரையில் நடிப்பதை சிலர் ரொம்ப எளிதானது என்று நினைக்கிறார்கள். பொதுவாக எல்லோருக்கும் 8 மணிநேர வேலை என்றால் எங்களுக்கு மட்டும் 12 மணி நேர வேலை. காலை 9 மணிக்கு ஷூட்டிங் சென்றால் இரவு 9 மணிக்குதான் வீடு திரும்புகிறோம். என்றாலும் இந்த வேலையை இஷ்டப்பட்டு செய்வதால் கஷ்டத்தை பற்றி கவலைப்படுவதில்லை.
மலையாளம், மற்றும் தெலுங்கு மொழிகளில் இருந்து ஏராளமானவர்கள் தமிழ் சீரியல்களுக்கு நடிக்க வருகிறார்கள். அதே மாதரி எனக்கு தெலுங்கு, மலையாள சீரியல்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது. இதற்காக கதை கேட்டு வருகிறேன். சில வாய்ப்புகள் வந்தது அவை சின்ன கேரக்டர் என்பதால் ஒப்புக் கொள்ளவில்லை. விரைவில் மலையாள சீரியல் ஒன்றில் நடிக்க இருக்கிறேன். இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. என்கிறார் தேசிகாஸ்ரீ.
நன்றி: தினமலர்
-
20th September 2014 01:23 AM
# ADS
Circuit advertisement
-
12th October 2014, 09:08 PM
#482
Moderator
Diamond Hubber
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக ராதிகா தேர்வு: குஷ்பு பொதுச் செயலாளர் -
தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் அக் 11 நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் ராதிகா சரத்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 2014- 2016ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.சங்கத்தின் தலைவராக ராதிகா சரத்குமாரே மீண்டும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டடார். செயலாளராக குஷ்பு சுந்தரும், பொருளாளராக டி.ஆர்.பாலேஷ்வரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நடிகை குட்டி பத்மினி, சுஜாதா விஜயகுமார் ஆகியோர் துணை தலைவர்களாகவும், ஈ.ராம்தாஸ், டி.வி.சங்கர் ஆகியோர் இணை செயலாளர்களாகவும், பி.ராதா, சுஜாதா கோபால், வினயா கிருஷ்ணன், ரவி, கே.ஜி.ஜெயவேல், ஆர்.சதீஷ், பி.சீனிவாசன், எஸ்.சுந்தர், பி.சீனிவாசலு, ஏ.எஸ்.வெங்கடாசலம், ஜி. ஜெயகுமார் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஏவிஎம்.சரவணன், டி.ஜி.தியாராஜன், அழகன் தமிழ்மணி ஆகியோர் சங்கத்தின் காப்பாளராக நியமிக்கப்பட்டனர். -
நன்றி: தினமலர்
-
12th October 2014, 09:10 PM
#483
Moderator
Diamond Hubber
ஜெனிபர் சீரியலுக்கு முழுக்கு?
பல ஆண்டுகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் ஜெனிபர், கில்லி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த பிறகு புகழ் பெற்றார். அதன் பிறகு பல படங்களில் தங்கையாக நடித்தவர் ஒன்றிரண்டு படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார். எதுவும் சரியாக வரவில்லை என்றதும் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். பல சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். கடைசியாக தாயுமானவன் சீரியலில் நடித்தார். இந்த சீரியல் முடிந்து விட்ட நிலையில் அடுத்து எந்த சீரியலிலும் நடிக்க ஜெனிபர் ஒப்பந்தமாகவில்லை.
இந்த நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். நாகேஷ் பேரன் கஜேஷ் நடிக்கும் கல்கண்டு படத்தில் ஹீரோயின் டிம்பிள் தோழியாக நடிக்கிறார்.
இதுபற்றி ஜெனிபர் கூறியதாவது: கல்கண்டு படத்தில் முக்கியமான கேரக்டர். ஹீரோயின் தோழியாக நடித்தாலும் கதையை நகர்த்தி செல்வதில் எனக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த படம் வெளிவந்த பிறகுதான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதா, சீரியலுக்கு செல்வதா என்பதை முடிவு செய்ய வேண்டும். இந்தப் படம் சினிமாவில் நல்ல ரீ எண்ட்ரியை கொடுக்கும் என்று நம்புகிறேன். ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் நல்ல கேரக்டர் கிடைத்தால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். என்கிறார் ஜெனிபர்.
-
12th October 2014, 09:11 PM
#484
Moderator
Diamond Hubber
எழுத்தாளரான நீலிமா ராணி
சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் அறிந்த முகம் நீலிமா ராணி. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு சின்னத்திரை, பெரிய திரை என்று மாறி மாறி பயணித்துக் கொண்டிருப்பவர். இப்போதும் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார், வாணி ராணி தொடரில் நடிக்கிறார். ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
நீலிமாவின் தந்தை விஸ்வமோகன் தமிழில் ராஜேஷ்குமார் மாதிரி தெலுங்கில் துப்பறியும் எழுத்தாளர் என்பது பலருக்குத் தெரியாது. 300க்கும் மேற்பட்ட கதைகளும், 100க்கும் மேற்பட்ட நாவல்களும் எழுதியிருக்கிறார். எழுத்தாளர் மகள் எழுத்தாளராகாமல் இருப்பாரா. நீலிமாவும் நிறைய கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். அதை தொகுத்து ஒரு புத்தகமாக போடவும் முடிவு செய்திருக்கிறார். நீலிமா எழுதுவது தெலுங்கு கதையல்ல தமிழ் கதைகள். இதுதவிர சில ஆங்கில இதழ்களில் தன்னம்பிக்கை கட்டுரைகளையும் எழுதி வருகிறார். ஒரு படத்துக்கு கதை எழுதி சீக்கிரமே இயக்குனராக அவதாரம் எடுத்தாலும் ஆச்சர்யம் இல்லை.
-
15th October 2014, 08:12 AM
#485
Moderator
Diamond Hubber
siima awards: 2013 winners- Tamil
http://siima.in/
- best cinematographer-rajiv menon / kadal
- best dance choreographer-shobhi / en fuse pochu (arrambham)
- best fight choreographer-anal arasu / pandiyanadu
- best actor in a supporting role (male)-arya / arrambham
- best actor in a supporting role (female)-nandita / ethir neechal
- best actor in a negative role-neetu chandra / aadhi bhagawan
- best lyricist-na muthukumar / aananda yaazhai (thankameenkal)
- best music director-anirudh / ethir neechal
- best playback singer (female)-shakthisree / nenjukkulla (kadal)
- best playback singer (male)-sriram parthasarathy / aanantha yazhai (thankameenkal)
- best child actor-sadhana / thangameenkal
- best comedian-soori / varuthapadatha valibar sangam
- best debutant actress-sri divya / varuthapadatha valibar sangam
- best debutant actor-gautham karthik / kadal
- best debutant director-nalan kumarasamy / soodhu kaavum
- best debutant producer-vishal film factory / pandiyanadu
- best actress-trisha / endrendrum punnagai
- best actress (critics)-parvathy / maryan
- best actor-sivakarthikeyan / ethir neechal
- best actor (critics)-dhanush / maryan
- best director-bala / paradesi
- best film-soodhu kaavum / thirukumaran entertainment-cv kumar
- best film - special appreciation-paradesi / b studios-bala
-
20th October 2014, 04:04 AM
#486
Moderator
Diamond Hubber
சென்னை: சின்னத்திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஒரே விருது ‘சன் குடும்பம் விருதுகள்தான்’ என்று நடிகர் தீபக் கூறினார்.சன் டி.வியில் ஒளிபரப்பான ‘மனைவி’, ‘திருமதி செல்வம்’ மற்றும் இப்போது ஒளிபரப்பாகும் ‘தென்றல்’ உட்பட பல தொடர்களில் நடித்திருப்பவர் தீபக். இப்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். கடந்த முறை நடந்த சன் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவில் இவரும் நடிகை ஸ்ருதியும் சிறந்த ஜோடிக்கான விருதைப் பெற்றனர். நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிய தீபக் இந்த வருடமும் ஐஸ்வர்யாவுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இந்த விருது பற்றி தீபக்கிடம் கேட்டபோது கூறியதாவது:
சின்னத்திரை கலைஞர்களை உற்சாகப்படுத்தும் விருதாக இருக்கிறது. சன் டி.வியில்தான் அதிகமான தொடர்கள் ஒளிப்பரப்பப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அதைப் பார்க்கின்றனர். வெளிநாடு சென்றால் அங்குள்ள தமிழர்கள் அடையாளம் கண்டுகொண்டு பேசும் அளவுக்குத் தொடர்களின் வீச்சு இருக்கிறது. அப்படி நடிக்கும் எங்களை கவுரவிக்க இந்த விருது விழா நடக்கிறது. இதை சாதாரண விருது விழா என்று சொல்லிவிட முடியாது. சின்னத்திரை கலைஞர்கள் ஒரே குடும்பமாக கலந்துகொண்டு விருது வாங்குகிறோம் என்பதால் இதை எங்கள் குடும்ப விழாவாகத்தான் பார்க்கிறோம். கடந்த வருடத்தை விட இந்த வருடம் விருது விழா சிறப்பாக இருக்கும். இவ்வாறு தீபக் கூறினார். -
நன்றி: தினகரன்
-
20th October 2014, 04:05 AM
#487
Moderator
Diamond Hubber
சன் குடும்பம் விருதுகள் வழங்கும் விழா:மகாபலிபுரத்தில் நடக்கிறது

சென்னை: சன் டி.வி.யின், ‘சன் குடும்பம் விருதுகள்’ வழங்கும் விழா, இந்த வருடம் மகாபலிபுரத்தில் மிகப் பிரமாண்டமாக நடக்கிறது.சன் டி.வியில் தினமும் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் சிறப்பாக நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சன் டிவி., ‘சன் குடும்பம் விருதுகள்’ என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் விருதுகளை வழங்கி வருகிறது. சின்னத்திரை கலைஞர்களின் திறமையை அங்கீகரிக்கவும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த முறை இந்த விருதுவிழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமர்க்களமாக நடைபெற்றது. சின்னத்திரை கலைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் நட்சத்திரங்களின் கலைவிழாவும் இடம்பெற்றன. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, மாமல்லபுரத்தில் உள்ள கான்புளூயன்ஸ் கன்வென்சன் சென்டரில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. வரும் சனிக்கிழமை நடக்கும் இந்த ஆர்ப்பாட்டமான விழாவில், ஏராளமான சின்னத்திரை நடிகர், நடிகைகள் பங்குபெறுகிறார்கள்.
திரைப்பட நடிகர், நடிகைகளும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மேலும் சின்னத்திரை கலைஞர்களின் நடனம், நகைச்சுவை நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இதற்காக தற்போது நடிகர், நடிகை ஒத்திகைப் பார்த்து வருகின்றனர்.கடந்த விருது விழாவில் சிறந்த கதாநாயகனுக்கான விருது ‘நாதஸ்வரம்’ தொடரில் நடித்த திருமுருகனுக்கும் சிறந்த கதாநாயகி விருது ‘திருமதி செல்வம்’ தொடரில் நடித்த அபிதாவுக்கும் கிடைத்தது.
டெல்லி குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், ராதிகா சரத்குமாருக்கு நீண்ட நாள் சன் குடும்பத்தில் இருந்ததற்கான விருதும் வழங்கப்பட்டது. இந்த வருடம் யார் யாருக்கு விருது கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு சின்னத்திரை வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
நன்றி: தினகரன்
-
1st November 2014, 05:11 AM
#488
Moderator
Diamond Hubber
உலகிலேயே பெண்கள் மட்டுமே பணியாற்றும் செய்தி சேனல் தமிழில் தொடக்கம்
பிராந்திய மொழிகளிலேயே தமிழில்தான் அதிக செய்தி சேனல்கள் உள்ளன. தற்போது புதிதாக நியூஸ் 7 என்ற புதிய சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேனல் நேற்று (அக் 30) தனது ஒளிபரப்பை தொடங்கி உள்ளது.உலகிலேயே பெண்கள் மட்டுமே பணியாற்றும் செய்தி சேனலாக இது அமைந்திருக்கிறது. செய்தி வாசிப்பாளர்கள், நிருபர்கள், தொழில்நுட்ட கலைஞர்கள், செய்தி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட பெண்களே.
அனைவருக்குமே சராசரி 25 வயது என்பதால் உலகின் இளமையான சேனலும் இதுதான் என்கிறார்கள். பத்திரிகைகளில் பெண்களுக்கான பத்திரிகை என்று தனியாக வெளிவருவதைப் போல முதன் முறையாக பெண்கள் செய்தி சேனல் வந்திருக்கிறது. பெண்களுக்கென்று தனி பொழுதுபோக்கு சேனலும் விரைவில் வரலாம் என்கிறார்கள்.
நன்றி: தினமலர்
-
1st November 2014, 05:13 AM
#489
Moderator
Diamond Hubber
இனி சீரியல் இயக்க மாட்டேன்: நாகா
சின்னத்திரையில் முதன் முறையாக திகில் சீரியல்களை கொண்டு வந்தவர் நாகா. அவர் இயக்கிய பல திகில் சீரியல்கள் மிகவும் பாப்புலர், மர்மதேசம், ருத்ரவீணா, சிதம்பர ரகசியம் போன்றவை அதில் முக்கியமானவை. அதன் பிறகு அனந்தபுரத்து வீடு என்ற காமெடி திகில் படத்தை இயக்கினார். அதன் பிறகு இப்போது மீண்டும் ஒரு திகில் படத்துக்கான கதையை தயார் செய்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் சீரியல் இயக்க வந்த பல வாய்ப்புகளை மறுத்திருக்கிறார் நாகா.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: அடுத்த சினிமாவுக்கான முன் தயாரிப்பில் இருக்கிறேன். மீண்டும் சீரியல் இயக்கும் எண்ணமே இல்லை. அதனால்தான் சில வாய்ப்புகளை தவிர்த்தேன். எப்போதும் சினிமா தொடர்பான வேலைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். அதனால் இப்போது சீரியல்களை பார்ப்பதுகூட இல்லை. பல சீரியல்களின் கதை ஒன்றுபோல இருப்பதாக எங்கள் வீட்டு பெண்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். அந்த நிலை எனக்கும் வரக்கூடாதல்லவா அதுதான் சீரியல் பார்ப்பதில்லை. விரைவில் சினிமாவில் சந்திப்போம். என்கிறார் நாகா.
நன்றி: தினமலர்
-
1st November 2014, 05:14 AM
#490
Moderator
Diamond Hubber
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக சின்னத்திரை நடிகர்கள் பிரார்த்தனை
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் நளினி தலைமையிலான அணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஜெயிலிலிருந்து ஜாமீனில் வந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பிரார்த்தனை செய்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக மக்களின் நலன் காக்கும் மக்களின் முதல்வர் சோதனைகளை கடந்து தமிழகம் திரும்பியிருப்பது சின்னத்திரை கலைஞர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவர் அனைத்து தடைகளையும் வென்றெடுத்து, மீண்டும் தமிழக முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர்வது திண்ணம். பெற்ற தாய்க்கு மேலாக, தன்னை நாடி வரும் கோடான கோடி தமிழ் இதயங்களின் தேவைகளை கொடுத்து தமிழ் மக்களின் துயரங்களை துடைக்க உழைக்கும் மக்கள் முதல்வரின் கசந்த காதம் வசந்த காலமாக மாற சின்னத்திரை நடிகர் சங்கம் பிரார்த்திக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்
Bookmarks