-
4th September 2013, 07:46 PM
#11
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 2 திரியினை துவக்கிய உங்களை மறக்க முடியுமா ஜோ அவர்களே . என்றுமே மக்கள் திலகத்தின் ரசிகர்களால் மறக்க முடியாதவர் நீங்கள் .
-
4th September 2013 07:46 PM
# ADS
Circuit advertisement
-
4th September 2013, 07:48 PM
#12
Junior Member
Devoted Hubber
கலியபெருமாள் விநாயகம் அவர்கள் தொடங்கி வைத்திருக்கும் மக்கள் திலகத்தின் புகழ் பாடும் புதிய ஆறாம் பாக திரியும்,
முந்தைய திரிகள் போல் வெற்றியடைய வாழ்த்துகள்.
-
4th September 2013, 08:44 PM
#13
Junior Member
Platinum Hubber
courtesy- thats tamil
மனிதருள் புனிதர் என்ற பெயர் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ.... சமகால சரித்திர நாயகரான புரட்சித் தலைவர், பொன் மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிகப் பொருந்தும்... அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.
ஒரு மனிதன் கடவுளை வேண்டுவது பெரும்பாலும் இந்த இரண்டிற்காகவும்தான். அந்த வகையில் வாழ்ந்தபோதே பலருக்கும் கடவுளாகத் திகழ்ந்தவர் பொன்மனச் செம்மல். தமிழனுக்கு தனி நாடு அமையவே பாடுபட்ட புரட்சியாளர் இந்த பெருமகன்!
அவரைப் பற்றி ஏதாவது சொல்லத் தொடங்கினால்... அல்லது எழுத ஆரம்பித்தால் கண்களை நீர் மறைக்கிறது. இந்த வாழ்நாளில் இன்னொரு முறை இப்படியொரு மனிதரின் அருள் பார்வை கிடைக்குமா? மக்களை மட்டுமே நினைத்த ஒரு தலைவர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தின் விளைவு அது!
'என் மனதை நானறிவேன்.. என் உறவை நான் மறவேன்... எதுவான போதிலும் ஆகட்டுமே' என நெஞ்சில் உரமும் நேர்மைத் துணிவும் கொண்டு தமிழருக்காக பாடுபட்ட தலைவர் அவர்.
பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!
புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.
எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.
எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!
எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!
வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்து பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை... என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!
Last edited by esvee; 4th September 2013 at 08:48 PM.
-
4th September 2013, 08:48 PM
#14
Junior Member
Diamond Hubber
வாழ்த்துக்கள் கலியபெருமாள் விநாயகம் சார்
Last edited by saileshbasu; 4th September 2013 at 09:39 PM.
-
4th September 2013, 08:57 PM
#15
Junior Member
Diamond Hubber
-
4th September 2013, 09:03 PM
#16
Junior Member
Platinum Hubber
-
4th September 2013, 09:21 PM
#17
Senior Member
Seasoned Hubber
ஐந்தாவது பாகம் மின்னல் வேகத்தில் முடித்து ஆறாவது பாகத்தைத் தொடங்கி யிருக்கும் தங்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th September 2013, 09:55 PM
#18
Junior Member
Veteran Hubber
Hearty congratulations to Mr.Kaliyaperumal and wishing our Makkal Thilagam thread part 6 a grand success.
-
4th September 2013, 10:02 PM
#19
Junior Member
Devoted Hubber
மக்கள் திலகம் திரி நண்பர்களுக்கு,
திரியின் ஆறாம் பாகம் தொடங்கியிருபதர்க்கு நல்வாழ்த்துக்கள். திரு.எஸ்வி, திரு ரவி, திரு கலியபெருமாள், மற்றும் பல நண்பர்கள் தங்களுடைய பங்களிப்பை தந்து ஆறாம் பாகத்திற்கு இந்த திரியை கொண்டுவந்திருக்கிறார்கள். சிறந்த சேவை ! பாராட்டுக்கள். !
அன்பு நண்பர் திரு.கலியபெருமாள் அவர்களுக்கு
அவ்வப்போது நமக்குள் சில உரசல்கள் அரசல் புரசலாக வந்தாலும், அவை அனைத்தும் நாம் இருவரும் நம்முடைய ICON மீது வைத்துள்ள அளவுகடந்த அன்பே அன்றி பரஸ்பரம் எந்த ஒரு வருத்தமும் இல்லை என்பதை உறுதிபட என்வரையில் கூறுகிறேன் தங்களிடமும் அவ்வண்ணமே என்று நம்புகிறேன்.
தங்களுடைய இந்த தொண்டு சிறந்த வெற்றியடைய என்னுடைய நல்வாழ்த்துக்கள்.
இரு திலகங்களும் ஒற்றுமையை பற்றி மிக சிறப்பாக தங்களுடைய திரை பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்கள் என்பதை நாம் அனைவருமே அறிவோம்.
இந்த திரியில் என்னுடைய முதல் பங்களிப்பு : இரு திலகங்களிர்க்கும் மரியாதை செலுத்தும் விதத்தில்.
முதலில் உரிமைக்குரல் திரைப்படத்திலிருந்து "ஒரு தாய் வயிற்றில் வந்த .....என்று தொடங்கும் பாடல்...!
அதேபோல அன்புக்கரங்கள் திரைப்படத்திலிருந்து ...." ஒண்ணா இருக்க கத்துக்கணும் ....என்று தொடங்கும் பாடல்..!
-
4th September 2013, 10:25 PM
#20
Junior Member
Diamond Hubber
Originally Posted by
esvee
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் -6 இன்று துவங்கி இருக்கும் உங்களுக்கு என்னுடைய இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் - 5 துவக்கிய இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்களின் இனிய பயணம் 10.4.2013 அன்று ஆரம்பித்து 4.9.2013 , இன்று 148 நாட்களில் 1,34,000 பார்வையாளர்களுடன்
இனிதே நிறைவுற்றது . நன்றி ஜெய் சங்கர் .
மக்கள் திலகம் திரியில் பதிவிட்ட அனைவருக்கும் நன்றி .
மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் -6 வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் திலகம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .
நட்பு ரீதியில் , புரிதலுடன் நாம் எல்லோரும் இந்த திரியை சிறப்பாக திரு கலிய பெருமாள்
அவர்கள் தலைமையில் மக்கள் திலகத்தை பற்றிய செய்திகள் - நிழற் படங்கள் - விளம்பரங்கள் -
வீடியோ என்று பதிவிட்டு அவருடைய புகழுக்கு பெருமை சேர்ப்போம் .
ஆஹா!!!புதிய உறுப்பின்னர் ஆக கடந்த வாரம் நான் சேர்ந்து பின் அதற்குள் மக்கள்திலகம் பாகம்-5 இனிதே நிறைவடைந்து, பாகம்- 6 இன்று திரு கலியபெருமாள் விநாயகம் அவர்களால் துவங்க பெற்ற பேரினை என்னவென்று கூறுவது ?! கண்டிப்பாக மக்கள்திலகம் அவர்களது நல்லாசிகள் உங்களுக்கு உண்டு என்பதை பெரு உவகையுடன் பகிர்ந்து கொள்கிறேன்... பாகம் -5 சில நாட்களாக ஜெட் வேகத்தில் பயணித்திருக்கிறது என்பதை கண் கூடாக கண்டோம் ...அதே போல பாகம் - 6 சூப்பர் ஜெட் வேகத்தில் பறக்க வேண்டி கொள்வோம்... திரு joe அவர்களுக்கு அனைவரின் சார்பில் நன்றி தெரிவிபோம்...
Bookmarks