-
28th May 2011, 10:07 PM
#11
Moderator
Diamond Hubber
கொடி முல்லையுடன் ஒரு கொண்டாட்டம்
ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் `கொடிமுல்லை' தொடர், பரபரப்பான திருப்பங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த தொடரில் நடிகை தேவயானி அம்மா-பெண் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இன்னும் அம்மா-மகள் சந்திக்கவில்லை. என்றாலும் காட்சியமைப்புகள் இருவரும் விரைவில் சந்திப்பார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்த தொடருக்கு ரசிகர்கள் அதிகமானதும் தேவயானி எடுத்த அதிரடி முடிவு, சிறந்த ரசிப்புத்தன்மை கொண்ட ரசிகர்களுக்கு விருது வழங்கி பாராட்டுவது. இதற்காக தமிழகத்தில் மாவட்ட வாரியாக நடக்கும் கோடைக்கொண்டாட்ட விழாக்களில் அவர் ரசிகர்களை சந்தித்து வந்தார். கடந்த வாரம் இப்படி மதுரை விழாவில் ரசிகர்களுக்கு விருதுகளை வழங்கிய தேவயானி, இன்று வேலூரில் இதற்கான பிரமாண்ட விழாவில் ரசிகர்களை சந்திக்கிறார். அவர்களுக்கு விருதுகளையும் கொடுத்து மகிழ்கிறார்.
விழாவின் முத்தாய்ப்பாக அடுத்த சனிக்கிழமை சென்னையில் விழா நடக்கிறது. இதுபற்றி தேவயானி கூறும்போது, "விருதுகளோடு இப்போது பூந்தொட்டியில் வளரும் கொடிமுல்லை செடியையும் ஒவ்வொருமேடையிலும் 50 பேருக்கு வழங்கி வருகிறோம். இது ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்துகிறது'' என்றார்.
நன்றி: தினதந்தி
-
28th May 2011 10:07 PM
# ADS
Circuit advertisement
Bookmarks