-
1st December 2020, 06:05 AM
#651
Senior Member
Devoted Hubber
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே...
மதுரை சிவாஜி ரசிகர்களின்
அலப்பறை ஆரம்பம்....
டிசம்பர் 4. வெள்ளி முதல்,
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வெளிவர இருக்கும்,
நடிகர்திலகத்தின்
ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படத்தை அகன்ற திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
டிசம்பர் 6 ஞாயிறு மாலை ரசிகர்கள் சிறப்புக் காட்சியில், வருகை தரும் அனைத்து ரசிகர்களுக்கும்,
இனிப்பு வழங்கப்படுகிறது.
அன்பு சகோதரர், மதுரை நகர் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் திரு.ஆர்.மலர்பாண்டியன் அவர்கள்
இனிப்பு வழங்குகிறார்கள்.
ரசிகர்கள் அனைவரும்,
தயவுசெய்து முகக்கவசம் அணிந்து வரவும்.
Thanks Sundar Rajan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st December 2020 06:05 AM
# ADS
Circuit advertisement
-
1st December 2020, 06:07 AM
#652
Senior Member
Devoted Hubber
Thanks Venkatesan (madurai)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st December 2020, 06:21 AM
#653
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகத்தின்.
கர்ணன் படம்.
மீண்டும் டிஜிட்டலில்
திரையிட்டு 150நாட்களுக்கு
மேல் ஓடி வசூல் சாதனை
புரிந்தது!
நடிகர்திலகம் பராசக்தி
படம் மூலம் ஒரே நாளில்
புகழ் உச்சிக்கு சென்றாரோ!
அது போல் புராணபடங்கள்
மக்கள் மத்தியில் விலை
போகாது?
என நினைத்து புராணபடங்களை
எடுத்து
நஷ்டபட்டு விடுவோமா?
என்ற பயம் நிறையபேருக்கு
இருந்தது!
அந்த சமயத்தில் நடிகர்திலகத்தின்
கர்ணன்.படத்தை தனது கனவாக
கர்ணனை டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் துணிந்து
எடுக்க இரவுபகலாக!பக்கத்தில்
இருந்து காட்சிகளுக்கு தகுந்தாற்போல்
இசைஅமைந்திருப்பதை கவனித்து
வெளியிட்டார்.
திரு.சாந்திசொக்கலிங்கம். அவர்கள்.
நடிகர்திலகத்தை நம்பினார்
கெடுவதில்லை.
என்பது போல் விளம்பரம்
ஒருபுறம் இருந்தாலும்
ரசிகர்களின் ஒத்துழைப்புடன்
களம்கண்டார்.
முதல்டிஜிட்டல் கர்ணனுடன்!..
மாபெரும் வெற்றியுடன்
வசூல்மழையை அள்ளி
தந்த தமிழினமக்கள்
அலை அலையாய் குழந்தைகளுடன்
குவிந்தனர்.
சென்னையில்150நாட்களை
கடந்துவெற்றிவிழாவும்
நடைபெற்றது...
யாவரும்அறிந்ததே!
ஒரேநாளில் வெற்றியின்
உச்சத்திற்கு சென்றவர்.
கணேசரால் உயர்ந்தவர்.
ராமசந்திரனால் வனவாசம்
மட்டும் செல்லாமல் மீண்டும்
கர்ணனால் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்.
தற்போதும்.திருப்பூரிலும்.
நெல்லை ஆலங்குளத்திலும்
திரையிட்டுள்ளார்.
அப்படிபெருமை பெற்ற
கர்ணன்.மக்கள் மனதில்
நிலைத்து விட்டதால்
கர்ணன்.அரிசி.
கர்ணன்ஸ்வீட்ஸ்.
கர்ணன்.மொபைல்ஸ்.
என மிகவும் பிரபலமானதால்
தற்போது கடைகள் வாசலில்
கர்ணன்சிவாஜி ஸ்டைலில்
சிலை வைத்து வரவேற்கிறார்கள்.
இது கர்ணன்.ஸ்டைல்.
Thanks Sivaji Palanikumar
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st December 2020, 06:31 AM
#654
Senior Member
Devoted Hubber
-
1st December 2020, 06:32 AM
#655
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகம் தந்த கர்ணன் பெருமை மிக்க மகா பாரத காவியத்தில் இறுதிக் காட்சியில் கர்ணனின் தான தர்மத்தையெல்லாம் கண்ணன் சூழ்ச்சி செய்து பெற்றுக் கொள்வார்,
அதன் பிறகு தான் கர்ணனை வெல்ல முடிந்தது,
அப்படித்தான் நடிகர் திலகத்தின் புகழ், பெருமை இவற்றையெல்லாம் 1987 ஆம் ஆண்டின் போது எம்ஜியார் அவர்கள் அமெரிக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரனுக்காக " தம்பி நீ தான் துனை நிற்க வேண்டும்" என நடிகர் திலகத்திடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டார்,
பிறகு தான் அரசியலில் நடிகர் திலகம் தோற்று விட்டதாக இன்று வரையிலும் சந்தோஷப்பட்டு வருகின்றனர் எதிர் வழித் தோன்றல்கள்,
Thanks Sekar .P
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
3rd December 2020, 05:48 AM
#656
Senior Member
Devoted Hubber
நல்லோர்கள் தம் நெஞ்சம் நவசக்தி பெறவேண்டும்-ஆர்ப்பாட்டம் அலைஓசை வரவேண்டும்,
எல்லோர்க்கும் வாழ்வென்னும் கர்மவீரர் பின்னாலே இன்நாட்டின் இளைஞர்கள் எழ வேண்டும்.
3 வார மொத்த வசூல்: ரூ 1,20,544.50
பார்த்த நல் மக்கள் : 1.25,536
மதுரை சென்ட்ரல்
ராஜபார்ட் ரங்கதுரை
மற்றும் திண்டுகல்- சென்ட்ரல் * விருதுநகர்- நியூ முத்து
பழநி-சந்தானகிருஸ்ணா * காரைகுடி- நடராஜா
( விளம்பரத்தில் உள்ளவை)
Thanks Venkateshan (Madurai)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
3rd December 2020, 05:59 AM
#657
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகத்தின் திரையுலகச் சாதனைகளைப் புகழ்ப்பரப்பும் அழகிய நூல்.... விரைவில்!
நன்றி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
3rd December 2020, 06:01 AM
#658
Senior Member
Devoted Hubber
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
மனோகராவைப் பாராமல் இருக்க வேண்டாம்...
இப்படி ஒரு அழகிய வாசகங்கள் கொண்ட விளம்பரத்தை இதுவரை நான் கண்டதில்லை.... நீங்கள்?
1954ல் வசூலில் தெறிக்கவிட்ட படம்!
#மனோகரா
நன்றி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
4th December 2020, 11:40 PM
#659
Senior Member
Devoted Hubber
12ஆம் வகுப்பு பொதுத்தமிழ் பாடத்தில் நடிகர்திலகம் சிவாஜிகணேசனைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கியிருக்கிறது!
.................................................. ..............
சிவாஜி ஒரு நடிகர்தானே அவருடைய வாழ்க்கை வரலாறு தேவையா என்றே நினைப்பார்கள்.
அவசியம் தேவை என்றே நான் சொல்வேன்.
விஞ்ஞானம் வளராத காலத்திலேயே ஒரு தமிழ் நடிகனின் புகழ் எகிப்து நாட்டிற்கும் அமெரிக்க நாட்டிற்கும் பறந்தது.
முதன் முதலில் ஆசிய-ஆப்பிரிக்க கண்டத்திலேயே சிறந்த நடிகன் என்ற பட்டத்தை வாங்கியது சிவாஜி ஒருவரே!
எகிப்து அதிபர் இந்தியா வந்த பொழுது அவர் விருந்துண்டது இரண்டு பேர் இல்லத்தில் மட்டுமே!ஒருவர் பண்டித ஜவஹர்லால் நேரு,மற்றொருவர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன்.
நியூயார்க் நகரத்தின் ஒரு நாள் மேயர் பதவி வகித்தது சிவாஜி ஒருவர் மட்டுமே!
காமராஜர் மதிய உணவுத்திட்டம் கொண்டு வந்த பொழுது அத் திட்டமானது நீண்ட நாள் நிலைக்காது என்றே எல்லோரும் சொல்லி அவரை சோர்வுறச் செய்த நேரத்தில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் முதல் ஆளாக ஒரு லட்ச ரூபாயை காமராஜரின் கையில் கொடுத்து அவருக்கு நம்பிக்கை வரச் செய்தார்.இன்றைக்கு அதன் மதிப்பு ஒரு கோடிக்கும் மேலும் இருக்கலாம். .இச் செயல் அவருக்கு பிள்ளைகளின் படிப்பின் மீதுள்ள அக்றையையே நமக்கு காட்டுகிறது.
பிள்ளைகளின் படிப்பின் மீது தன்னுடைய அக்கறையை காட்டும் விதமாகத்தான் அவருடைய வீட்டின் முகப்பில் குழந்தை ஒன்று புத்தகத்தை விரித்து படிப்பது போல் சிறு சிலை வைத்திருப்பார்.
1962 ஆம் ஆண்டு இந்தியா-சீனா யுத்த நிதியாக 600 பவுன் நகைகளை அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களிடம் அளித்தார்.
மேலும் விடுதலைப் போராட்ட வீரர்களை நம் கண் முன்னே நிறுத்தியவர்.
32 செண்ட் நிலம் வாங்கி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைத்து 2000 ஆம் ஆண்டில் அந்நிலத்தை அரசாங்கத்திடமே ஒப்படைத்தார்.
அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல,தேசப்பற்றாளரும் கூட.
நன்றி மணிசேகரன் சார்
Thanks Msmani Mlr (International Shivaji Fans)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
4th December 2020, 11:46 PM
#660
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks