-
19th May 2016, 10:49 PM
#201
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th May 2016 10:49 PM
# ADS
Circuit advertisement
-
19th May 2016, 10:50 PM
#202
Junior Member
Platinum Hubber
மாலைச்சுடர் -
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th May 2016, 11:01 PM
#203
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th May 2016, 11:14 PM
#204
Junior Member
Diamond Hubber
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.
வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,
இல்லாமல் மாறும் பொருள் தேடி,
அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ,
இந்நாட்டில் மலரும் சமநீதி.
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் ,
இருந்திடும் என்னும் கதை மாறும்,
ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க,
இயற்கை தந்த பரிசாகும்,
இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க,
நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்.
நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்,
அல்லதை நினைப்பது அழிவாற்றல்
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th May 2016, 11:15 PM
#205
Junior Member
Diamond Hubber
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித் தந்த்தெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைப்பதெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th May 2016, 11:16 PM
#206
Junior Member
Diamond Hubber
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th May 2016, 11:17 PM
#207
Junior Member
Diamond Hubber
மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th May 2016, 11:18 PM
#208
Junior Member
Diamond Hubber
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th May 2016, 11:19 PM
#209
Junior Member
Diamond Hubber
சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்விற்கும் வசதிக்கும்
ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால்பிடிப்பார்
முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
(நான் ஆணையிட்டால்)
இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
20th May 2016, 12:04 AM
#210
Junior Member
Diamond Hubber
கவுண்டமணி காமெடி” யை விட பெரிதாக இருக்கிறது ,
இந்த “கருத்துக் கணிப்பு” காமெடி..!
இப்போது மட்டும் அல்ல...எப்போதுமே !
1982-ஆம் வருடம்...
அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சி..!
அந்த சமயத்தில் பெரியகுளம் நாடாளுமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடத்த வேண்டிய எதிர்பாராத சூழ்நிலை ஏற்பட்டதாம் ..!
குறுகிய காலம்தான் பிரச்சாரம் செய்ய முடியும்...!
எப்படியாவது தி.மு.க.வைத் தோற்கடித்தாக வேண்டும் என்று ஊண் உறக்கம் இன்றி , ஊர் ஊராக , தெருத் தெருவாக சுற்றிச் சுழன்று சூறாவளியாய் பிரச்சாரம் செய்து முடித்து , சோர்ந்து போய் வந்தாராம் எம்.ஜி.ஆர். !
அனல் பறக்கும் பிரச்சாரம் நடத்தி முடித்து விட்டுத் திரும்பிய அவருக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் காத்திருந்தது..!
ஆம்.... அந்த இடைதேர்தல் பற்றி , காவல்துறை ஒரு துல்லியமான கருத்துக் கணிப்பை நடத்தி முடித்து ,
அந்தக் கணிப்பின் முடிவை எம்.ஜி.ஆரின் கைகளில் பயபக்தியோடு கொடுத்தார்களாம்..!
படித்துப் பார்த்த எம்.ஜி.ஆர் அதிர்ந்து போனார்...!
“ இந்த இடைத் தேர்தலில் தி.மு.க. தான் வெற்றிபெறும்” என்று திட்டவட்டமாக சொன்னதாம் அந்தக் கருத்துக் கணிப்பு..!
அதிர்ச்சியில் இருந்து மீளாத எம்.ஜி.ஆர். , அந்த ரிப்போர்ட்டை தன் கையில் கொடுத்த அதிகாரியை நிமிர்ந்து பார்த்து கேட்டாராம் ...
“இந்தக் கருத்துக் கணிப்பை நான் நம்பலாமா..?”
“100% சதவீதம் நம்பலாம் ஸார்..”
அசையாமல் அப்படியே நெடுநேரம் அமர்ந்திருந்தாராம் எம்.ஜி.ஆர்..!
அடுத்த சில நிமிடங்களில் , அப்போதைய அமைச்சர் மற்றும் அ.தி.மு.க.வின் முக்கியத் தலைவரான அரங்கநாயகத்தை உடனே தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தாராம் எம்.ஜி.ஆர்...!
“ இங்கே பாருங்க அரங்கநாயகம்...தோல்விதான் மக்களின் தீர்ப்பு என்று தெளிவாகத் தெரிந்து விட்டது..! கருத்துக் கணிப்பு கரெக்டாகத்தான் இருக்கும்..! எனவே நான் சொல்கிறபடி செய்யுங்கள்..!”
# எம்.ஜி.ஆர். ஆலோசனைப்படி தேர்தல் முடிவு வருவதற்கு முதல் நாள் , “பெரியகுளம் நாடாளுமன்றம் தேர்தலில் அ.தி.மு.க. தோற்றது ஏன்?” என்பதற்கு விளக்கம் சொல்லி , ஒரு நீண்ட அறிக்கையை தயார் செய்து , அதை அரங்கநாயகம் பெயரில் , “தினத்தந்தி”க்கு அனுப்பி வைத்து விட்டார்களாம்..!
[ அது செய்தியாக வெளி வந்து விட்டதாகவும் சொல்கிறார்கள்..]
ஆனால்...அடுத்த நாள் காலை தேர்தல் முடிவு வெளிவந்தது...!
இப்போதும் அதிர்ந்து போனார் எம்.ஜி.ஆர்...!
அ.தி.மு.க. வேட்பாளர் ஜக்கையன் 69260 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தார் !
# அதன் பின் நடந்தது என்ன..? ....அந்தக் கருத்துக் கணிப்பை எம்.ஜி.ஆர் கைகளில் கொடுத்த அந்தக் காவல்துறை அதிகாரி , அதற்குப் பின் எம்.ஜி.ஆரிடம் என்ன பாடுபட்டார் என்பதற்கான கணிப்பு ஏதும் எனக்குக் கிடைக்கவில்லை..!
# ஆம்...
“கவுண்டமணி காமெடி” யை விட பெரிதாகவே இருக்கிறது ,
இந்த “கருத்துக் கணிப்பு” காமெடி..!
அப்போதும்...இப்போதும்...!
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks