-
14th August 2014, 06:18 PM
#21
Junior Member
Newbie Hubber
வாழ்த்துக்கள் கிருஷ்ணா. திரி வெற்றி பெற வாழ்த்துக்கள்.இங்கு உள்ள அனைத்து நடிகர்திலக பக்தர்களும் தாய் திரி பாகம்-14 இலும் வந்து இணையுமாய் வேண்டுகிறேன்.
சிவாஜியாய் இருந்தால் என்ன குட்டி சிவாஜியாய் இருந்தால் என்ன. இரண்டுமே சந்தோசம்.அதுதான் உத்தரவின்றி உள்ளே வந்து விட்டேன்.
கார்த்திக் கலந்ததில் மிக மகிழ்ச்சி.
-
14th August 2014 06:18 PM
# ADS
Circuit advertisement
-
14th August 2014, 06:25 PM
#22
அழியாத கோலங்கள் திரைப்படம் பலருக்கு இன்னும் ஆட்டோகிராப் நினைவுகளைத் தூண்டும் ஒரு காவியம். இந்தப் படத்தை மனதில் அசைபோடும் போது தானாக வந்து நினைவில் மிதக்கும் பாடல் "நான் என்னும் பொழுது....." என்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் கங்கை அமரன் வரிகளில் வந்த பாடல். பாடலுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் சலீல் செளத்ரி அவர்கள். பாலுமகேந்திரா என்றால் இளையராஜா தான் இசை என்பதற்கு விதிவிலக்காக வந்த திரைப்படம் "அழியாத கோலங்கள்".
இந்தப் படத்தில் இடம்பெறும் "நான் என்னும் பொழுது" என்ற பாடலின் மூல வடிவம் பெங்காலி மொழியில் வந்த, லதா மங்கேஷ்கர் பாடி, சலீல் செளத்ரியே இசையமைத்த கஸல் பாடல்களின் தொகுப்பில் ஒரு பாடல் ஆகும். பின்னர் இதே பாடல் "ஆனந்த்" என்ற ஹிந்தித் திரைப்படத்தில் சிறிது மாற்றம் கண்டு லதா மங்கஷ்கரே பாடி வந்திருந்தது. அடுத்து இரண்டு முறை பெண்குரலில் இரு வேறு மொழிகளில் வந்த இந்த மெட்டு "அழியாத கோலங்கள்" திரையில் ஆண்குரலாக எஸ்.பி.பியின் குரலாக ஒலிக்கும்
இந்த 3 பாடல்களின் விடியோ கிடைக்குமா
rajesh sir,madhu anna,vasu sir,vindoh sir please
Last edited by gkrishna; 14th August 2014 at 06:36 PM.
gkrishna
-
14th August 2014, 06:25 PM
#23
Senior Member
Senior Hubber
Kudos krishnaji,
My fav from uvuvaa is unnai thoduvadhu iniyadhu
Andha padal patri ezhudhugiren
-
14th August 2014, 06:28 PM
#24
Originally Posted by
Gopal,S.
வாழ்த்துக்கள் கிருஷ்ணா. திரி வெற்றி பெற வாழ்த்துக்கள்.இங்கு உள்ள அனைத்து நடிகர்திலக பக்தர்களும் தாய் திரி பாகம்-14 இலும் வந்து இணையுமாய் வேண்டுகிறேன்.
சிவாஜியாய் இருந்தால் என்ன குட்டி சிவாஜியாய் இருந்தால் என்ன. இரண்டுமே சந்தோசம்.அதுதான் உத்தரவின்றி உள்ளே வந்து விட்டேன்.
கார்த்திக் கலந்ததில் மிக மகிழ்ச்சி.
மிக்க மகிழ்ச்சி கோபால் சார்
உங்கள் வாழ்த்து என்றும் வேண்டும்
உங்கள் வருகைக்காக காத்து கொண்டு இருக்கும்
நிச்சயமாக நடிகர் திலகம் ஜோதியில் என்றும் ஐக்கியம் ஆவேன்
Last edited by gkrishna; 14th August 2014 at 06:34 PM.
gkrishna
-
14th August 2014, 06:33 PM
#25
Originally Posted by
rajeshkrv
Kudos krishnaji,
My fav from uvuvaa is unnai thoduvadhu iniyadhu
Andha padal patri ezhudhugiren
ராஜேஷ் சார்
வாருங்கள்
தொடரட்டும் உங்கள் திருப்பணி
செம்மை ஆகட்டும் நமது திரி இழை
-
14th August 2014, 06:46 PM
#26
Senior Member
Veteran Hubber
Originally Posted by
Gopal,S.
இங்கு உள்ள அனைத்து நடிகர்திலக பக்தர்களும் தாய் திரி பாகம்-14 இலும் வந்து இணையுமாய் வேண்டுகிறேன்.
'அங்கே' நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது. இடம் தெரியாமல் இடறியவர்களை நீங்களும், முரளி சாரும், ரவிகிரண்சூர்யா சாரும் முகமூடிகளைக் கிழித்து, சகட்டுமேனிக்கு புரட்டியெடுத்துக் கொண்டு இருக்கிறீர்களே..
-
14th August 2014, 07:19 PM
#27
நடிகை சூர்யகலா பற்றி நாம் சென்ற பாகத்தில் எழுதி இருந்தோம் .நினைத்தாலே இனிக்கும் திரை படத்தில் அவர் ரஜினியை கலாய்க்கும் காட்சி .வழங்கிய நண்பர் வலைபதிவர் திரு சகாதேவன் விஜயகுமார் அவர்களுக்கு நன்றி
-
14th August 2014, 07:20 PM
#28
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு கிருஷ்ணா அவர்களுக்கு இனிய அன்பு வாழ்த்துக்கள் .
பல புதுமையான பாடல்களுடன் இனிதே இன்று துவக்கம் . மதுர கானம் திரியில் என்னுடய பதிவுகளுக்கு
வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் திரு வாசு, திரு கிருஷ்ணா மற்றும் திரு கார்த்திக் அவர்களுக்கு அன்பு கலந்த
நன்றி .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th August 2014, 07:26 PM
#29
வாருங்கள் எஸ்வி சார்
அள்ளி தாருங்கள் உங்கள் (என்றும் ஆணவமில்லாத) ஆவணத்தை
-
14th August 2014, 08:02 PM
#30
Senior Member
Veteran Hubber
ஏணிப்படிகள்
இப்படத்தில் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் ஒரு அருமையான பாடல்.
கிராமத்து தியேட்டர் ஒன்றில் குப்பைகளை கூட்டி சுத்தப்படுத்தும் பணியில் இருப்பவர்கள் சிவகுமார் மற்றும் ஷோபா. சந்தர்ப்ப சூழ்நிலையில் சென்னை செல்லும் இவர்களில் சிவகுமார் முயற்சியால் ஷோபாவுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புக்கிடைத்தது நட்சத்திரமாகிவிடுகிறார். ஆனால் உடனிருக்கும் சிவகுமார், ஷோபாவால் சிறுகச்சிறுக புறக்கணிக்கப்பட்டு, மீண்டும் கிராமத்து தியேட்டருக்கே குப்பை அள்ள வந்துவிடுகிறார். அப்போது கிராமத்தில் நடக்கும் பள்ளி விழா ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக திரைப்பட நட்சத்திரம் ஷோபா வர, அந்த விழாவில் கண்பார்வையற்ற சிறுவன் பாடுவதாக இந்தப்பாடல்....
கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்
அன்புமிக்க ஒருமனம் நல்லவர்க்கு ஒருகுணம்
கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்
ஏற்றிவிட்ட ஏணி ஒன்று நின்றபடி நிற்கிறது
ஏறிவிட்ட ஒருமனமோ வேறுவழி நடக்கிறது
ஏற்றியது குற்றமில்லை ஏணியிலும் பாவமில்லை
மாற்றியது கடவுள் என்னும் மாயக்காரன் லீலையம்மா
கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்
அன்புமிக்க ஒருமனம் நல்லவர்க்கு ஒருகுணம்
கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்
தேவனவன் கோயிலிலே கோடைவெயில் சுடுகிறது
தேவியவள் வாசலிலோ செல்வமழை பொழிகிறது
நல்லவர்க்கு பொருள் எதற்கு நாடிவரும் புகழ் எதற்கு
அன்புகொண்ட மனங்களிலே அசைந்து அசைந்து நடப்பதற்கு
கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்
அன்புமிக்க ஒருமனம் நல்லவர்க்கு ஒருகுணம்
கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்.
Bookmarks