தனியாக இல்லை
சாலையின் ஓரத்தில்
தன்னந்தனியே வீழ்பவன்
யாரோ ஒருவன்
தன்னைத் தொட்டுத் தூக்கும்போது
நினைக்கிறான்
தான் தனியாக இல்லை
என்று
சாலையின் ஓரத்தில் வீழும்
யாரோ ஒருவனைத்
தொட்டுத் தூக்கும்
யாரோ ஒருவன்
நினைக்கிறான்
தான் தனியாக இல்லை
என்று
-- மனுஷ்ய புத்திரன்
Bookmarks