-
25th March 2011, 09:48 AM
#1
Senior Member
Senior Hubber
மாற்றுவேன் என்ற் நீயும்..
மாறிய மாய மென்ன
காற்றிலே அலைந்து பாயும்
கார்குழல் முடிந்த தென்ன..
ஊற்றென சிரிக்கும் தன்மை
உதிர்ந்துமென் நகையாய் மாறி
ஆற்றலைக் காட்டி டாமல்
அடங்கிய நிலைதான் என்ன?
**
எனக்குத் தெரிந்த பெண்ணொன்று..
என்னிடம் வளர்ந்தாள் அவளின்று..
எங்கே சென்றாள் தெரியவில்லை..
என்ன ஆனதோ புரியவில்லை..
மழலைப் பருவம் முதற்கொண்டு
மங்கை யாக மாறும்வரை
அழகிய அவளின் அசைவுகளும்
அளவாய்ப் பொங்கும் உணர்வுகளும்
பழகிய எனக்கு இப்பொழுது
புதிராய்ப் போன தேனிங்கு..
வளர்ந்து விட்டாளா என்மகளும்..
வியப்பாய் மகிழ்வாய் இருக்கிறது..
**
அம்மா கொஞ்சம் புலம்பாதே..
அன்பைப் பொழிந்தே மயங்காதே..
சும்மா புகுந்த விடந்தன்னில
சுகமாய் இருக்க விழைந்தே தான்
என்மெய் தனையே மாற்றிவிட்டேன்..
எளிதாய் இதையே எடுத்துக்கொண்டேன்.
மாற்ற்ம் என்னும் ஒன்றேதான்
மாறா விஷயம் தெரியாதா..
**
-
25th March 2011 09:48 AM
# ADS
Circuit advertisement
-
26th March 2011, 07:59 AM
#2
Senior Member
Platinum Hubber
தெரியாதா சாத்திர நூல்கள் உரைகள்
வேத பாடங்கள் மேதாவி விளக்கங்கள்
வினவினான் பண்டிதன் பாமர படகோட்டியை
அவனோ படகில் பழுது நீந்த்த்தெரிந்தால்
உம் உயிர் உமக்கு என்று அறிவித்தான்
அந்தோ மூழ்கியது கர்வம் பரிதாபமாய்
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
26th March 2011, 01:10 PM
#3
Senior Member
Senior Hubber
பரிதாபமாய்த் தான் இருக்கிறது..
*
நிரந்தர எதிரிகள்
தற்கால நண்பர்களாவதும்..
இலவசங்கள் மக்களுக்கு அணிவகுப்பதும்..
இதையும் மீறி
மக்கள் நல்வாழ்வுக்காக அர்ப்பணிக்கிறோம்
என்று அறிவிப்பதும்..
எல்லாம் பணத்தை மட்டும் மையமாகக்
கொண்டு காய்களை நகர்த்துவதும்..
அதைக் கேட்டுக் கொண்டு
பாமரர்கள் நம்புவதும்..
*
எல்லாம் பார்க்கையில்
பரிதாபமாய்த் தான் இருக்கிறது..
மிக மோசமான நிலையில்
இன்னும் ஒன்று..
அது மனித நேயம்..
**
-
26th March 2011, 02:35 PM
#4
Senior Member
Senior Hubber
மனித நேயம் மறந்து மதநேயமாகி
மண்ணில் மறையும் மனிதம்.
-
கிறுக்கன்
-
26th March 2011, 04:10 PM
#5
Senior Member
Platinum Hubber
மனிதம் என்றும் புதிர்தானோ
மாட மாளிகை பிடிக்காதோ
மண் குடிசையில் தழைக்குமோ
கணக்குப் போட தெரியாதோ
அடித்த கையை வருடுமோ
அழுத கண்ணை துடைக்குமோ
உடுக்கை இழந்தவன் கை போலே
ஒடி வந்து உதவுமோ உருகுமோ
பலனை எண்ணாத பரோபகாரமோ
என்றும் ஒரு கண்ணோடு சேர்ந்தழும்
மறு கண்ணின் இயல்பின் குணமோ
வற்றாத உயிர்மையின் ஊற்றோ
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
27th March 2011, 10:47 AM
#6
Senior Member
Senior Hubber
ஊற்றோ;
அருவியோ.
காட்டாற்று வெள்ளமோ;
சூழலைப் பொறுத்துப்
பொங்கிடும் கவிதை..
-
27th March 2011, 01:30 PM
#7
Senior Member
Senior Hubber
கவிதையால் கவியாகி
புவி ஆள்பவரும் உண்டு
கவிதையில் விதை இல்லாது
வெறும் கதையாகி
கதைப்போரும் உண்டு
சொத்தை கவிதை கொண்டும்
சொத்தை சேர்க்கும்
வித்தை சிலர்க்கே
சொந்தம்.......
-
கிறுக்கன்
-
27th March 2011, 04:57 PM
#8
Senior Member
Platinum Hubber
சொந்தம் சுருங்கித்தான் போனதின்று
ஒரு பிள்ளை பெறுவதே பெரும்பாடு
அண்ணா தங்கை அத்தை பெரியப்பா என்ற
ஆலமரக் கிளைகள் விழுதுகள் தொலைந்து
பனை மரங்கள் ஆகி நிழலின்றி வாடுது
பாலைவனமாய் புதிய சமுதாயம் ஒன்று
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
27th March 2011, 08:47 PM
#9
Senior Member
Senior Hubber
ஒன்றிலே அரையைக் கொடுத்து..
..ஒன்றியச் செயலாள ராகி..
ஒன்றியே இரண்டாய் ஆக்கி..
..ஊராட்சித் தலைவ ராகி..
ஒன்றுடன் பலதும் வைத்து..
..ஒழுங்காக அணிகள் சேர்த்தே...
ஒன்றாக வெற்றி பெற்றான்..
..ஓரினத் தலைவ னானான்...!
-
28th March 2011, 07:34 AM
#10
Senior Member
Platinum Hubber
தலைவனானான் பழங்காவிய பாணியில்
விசிலடிக்கும் நண்பர் குழாம் உசுப்பவே
பள்ளிக்கூடப் பிள்ளையை தொடர்ந்தான்
அயராது மாறன் கணைகளை தொடுத்தான்
அருமையான பல நவீன வழிகளின்றிருக்க
அரும்பிய மீசை வயதுக்கு வந்ததைச் சொல்ல
விளையாடுகிறான் பிருந்தாவனக் கண்ணன்
வீரமான விவரமான வித்தகன் களிப்புடனே
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
Bookmarks