சின்னத்திரைக்கு டாடா காட்டிய நாகினி மெளனிராய்


கடந்த பத்து ஆண்டுகளாக இந்தி சேனல்களில் டிவி தொடர், ஸ்டேஜ் ஷோக்களில் பங்கேற்று வந்தவர் மெளனிராய். குறிப்பாக பாலிவுட் சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரையில் கவர்ச்சிகரமாக தோன்றி கலக்கியவர் மெளனிராய். அவர் இந்தியில் நடித்த நாகினி சீரியல், தமிழிலும் ஒளிபரப்பாகி நாகினிராயை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. இந்த சீரியலின் இரண்டாம் பாகம் அடுத்து தமிழில் டப்பாகி வெளியாகும் நிலையில், அடுத்தபடியாக நாகினி தொடரில் மூன்றாம் பாகம் இந்தியில் படமாக்கப்படுகிறது.


ஆனால், நாகினி தொடரின் முதல் இரண்டு பாகங்களில் நடித்த மெளனிராய், மூன்றாம் பாகத்தில் நடிக்கவில்லை. காரணம், இந்தியில் நடிகர் சல்மான்கான் தயாரிக்கும் ஒரு படத்தில் மெளனிராய்க்கு கதாநாயகி வேடம் கிடைத்துள்ளது. அந்த படத்தில் நாயகனாக சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை முன்பே முடிந்து விட்டதால், நாகினி மூன்றாம் பாகத்தில் நடிக்க தனக்கு அழைப்பு வருவதற்கு முன்பே, தான் சினிமாவில் என்ட்ரி கொடுக்கப் போவதை சொல்லி சீரியலில் இருந்து விலகிக்கொண்டுள்ளாராம் மெளனிராய்.

நன்றி: தினதந்தி