-
24th May 2017, 07:12 AM
#1
Moderator
Diamond Hubber
சினிமா இயக்கப்போகிறார் நிவேதிதா.
கடந்த 5 வருடங்களுக்கு மேலாக மியூசிக் சேனல்களின் நட்சத்திர தொகுப்பாளினியாக இருக்கிறார் நிவேதிதா. தற்போது செந்தமிழ் பெண்ணே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். விரைவில் சினிமா ஒன்றை இயக்கும் முயற்ச்சியில் இருக்கிறார் நிவேதிதா.
சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்புகளையெல்லாம் எனக்கு நடிப்பு வராது என்று மறுத்தவர், இப்போது சினிமா இயக்கத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக தமிழ், இந்தி, ஆங்கிலம், கொரியன் படங்களை பார்த்து வருகிறார். "சின்ன வயசிலிருந்தே எனக்கு கதை கேட்கவும், சொல்லவும் பிடிக்கும். சினிமாவிலும் இயக்குனராகி கதை சொல்ல ஆசை. நடிப்பு எனக்கு வராது என்று எனக்கே தெரியும். அதனால் தான் அந்தப்பக்கம் போகவில்லை. இப்போது சீரியசாகவே ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் படம் இயக்குவேன்" என்கிறார் நிவேதிதா.
நன்றி: தினதந்தி
-
24th May 2017 07:12 AM
# ADS
Circuit advertisement
-
24th May 2017, 07:17 AM
#2
Moderator
Diamond Hubber
கதாசிரியர் ஆனார் அப்சரா .
மலையாள சின்னத்திரையிலிருந்து தமிழுக்கு வந்தவர் அப்சரா. பல சீரியல்களில் விதவிதமான கேரக்டர்களில் நடித்து வந்த அப்சரா தற்போது மரகதவீணை சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். அப்சராவின் புதிய அவதாரம் கதாசிரியர். தற்போது ஒளிபரப்பாகி வரும் விதி தொடரின் கதையை எழுதியவர் அப்சரா. இதுவரை பல சிறு கதைகள் எழுதியுள்ள அப்சரா நிறைய நாவல்களையும் எழுதி வருகிறார். அப்படி எழுதப்பட்ட ஒரு நாவலையே விதி சீரியலுக்கான கதையாக மாற்றியிருக்கிறார்.
கூட்டுக் குடும்பமாக வாழ்கிறவர்கள். திருமணமான பிறகு பணம், வேலை, சேமிப்பு, எதிர்காலம் என்று சந்தோஷங்களை தொலைத்துவிட்டு ஓடுகிறவர்களின் கதை. தற்போது இந்த கதையின் பிளாஷ்பேக் பகுதிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் சில எபிசோட்களுக்கு பிறகு முக்கிய கதைக்கு வருகிறது சீரியல்.
"மாமியார் கொடுமை, கர்ப்பிணி கொடுமை என்று வழக்கமான கதையாக இல்லாமல் இன்றைய குடும்ப சூழ்நிலைகளை சுட்டிக் காட்டி நாம் எந்த மாதிரியான இயந்திரத்தனமான வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதை சுட்டுக்காட்டும் விதமாக விதியின் கதையை அமைத்துள்ளேன். சினிமாவுக்கு கதை எழுதுவீர்களா என்று கேட்கிறார்கள். ஒரு விஷயத்தை 2 மணிநேரத்துக்குள் சொல்வதற்கு நிறைய பயிற்சி வேண்டும். இப்போதைக்கு அதற்கு நான் தயாராக இல்லை. மலையாளத்தில் எழுதும் கதையை தமிழில் சொல்லி எழுத வைக்கிறேன். விரைவில் தமிழ் எழுத கற்றுக் கொள்வேன்" என்கிறார் அப்சரா.
நன்றி: தினதந்தி
-
24th May 2017, 07:20 AM
#3
Moderator
Diamond Hubber
நான் எப்போதுமே இயக்குனர்களின் நடிகன் - சொல்கிறார் சஞ்சீவ் .
நம்பிக்கை, மெட்டிஒலி, அண்ணாமலை, மனைவி, பெண், திருமதி செல்வம் என பல மெகா சீரியல்களில் பாசிட்டீவ், நெகடீவ் வேடங்களில் நடித்தவர் சஞ்சீவ். திருமதி செல்வம் தொடரில் நடித்து சிறந்த நடிகருக்கான மாநில அரசு விருது பெற்றவர். தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும், யாரடி நீ மோகினி சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி.
.* சமீபகாலமாக உங்களை சீரியல்களில் பார்க்க முடியவில்லையே?
நான் சீரியல்களில் அதிகமாக நடித்திருந்தபோதும் சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அதனால் சீரியல்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு ஒரு படத்தில் நாயகனாக நடிக்க தயாராகிக்கொண்டிருந்தேன். கடந்த ஆண்டு நவம்பரில் அந்த படம் தொடங்க இருந்தது. ஆனால் அப்போது ஏற்பட்ட பணப்பிரச்சினை காரணமாக அந்த படம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், வருகிற ஜூன், ஜூலையில் அந்த படம் தொடங்குகிறது..
* யாரடி நீ மோகினி சீரியல் நேயர்களிடம் எத்தகையை வரவேற்பு பெற்றுள்ளது?
நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு என்னை பார்த்த நேயர்கள், இத்தனை நாளும் நீங்கள் ஏன் சீரியல்களில் நடிக்கவில்லை. மறுபடியும் உங்களை ஸ்கிரீன்ல பார்த்தது சந்தோசமாக உள்ளது என்று சொல்லி நல்ல ரெஸ்பான்ஸ் கொடுக்கிறார்கள். அதோடு, யாரடி நீ மோகினி சீரியல் சினிமா பார்த்த திருப்தியை கொடுப்பதாகவும் சொல்கிறார்கள். யாரடி நீ மோகினி சீரியல் ஒரு பேமிலி டிராமா. எல்லோருக்குமே இதில் முக்கியத்துவம் உள்ளது. மோகினி என்றொரு திரில்லர் மேட்டரும் உள்ளது. குழந்தைகளுக்கு அதுதானே பிடிக்கும். ரொம்ப விகாரமாக காட்டாமல் குழந்தைகளுக்கு பிடிக்கிற மாதிரி மோகினி கேரக்டர் இடம்பெற்றுள்ளது
.* சீரியல் கதைகளை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?
நான் எதிர்பார்ப்பது பியூர் எண்டர்டெய்ன்மென்டுதான். அதுக்கு நடுவுல அப்பப்ப ஒரு சின்ன மெசேஜ் வேண்டுமானால் கொடுக்கலாம். மற்றபடி கருத்து சொல்ல வேண்டும் என்று நான் நினைப்பதில்லை.
* சீரியல் நடிகர்களுக்கு சினிமாவில் வரவேற்பு எப்படி உள்ளது?
முன்பெல்லாம் சீரியல் ஆர்ட்டிஸ்ட் என்றால் சீரியலோட நிறுத்திக்கொள்வார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. டிரண்ட் மாறியிருக்கு. சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும் சினிமா டைரக்டர்கள் நல்ல வெயிட்டான வேடம் கொடுக்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய விசயம்
.* பேமிலி டிராமா தவிர என்னென்ன வித்தியாசமான கேரக்டர்கள் பண்ண ஆசை?
நான் டோட்டலாக ஒரு டைரக்டர் நடிகன்தான். டைரக்டர் என்ன நினைக்கிறாரோ அதை திரையில் கொண்டு வர நினைப்பேன். அந்த கேரக்டர் குறித்து டைரக்டர் மைண்டில் என்ன உள்ளதோ அதை வெளிப்படுத்தவே முயற்சி செய்வேன். அப்படித்தான் ஆரம்ப காலம் முதல் இப்போதுவரை நடித்து வருகிறேன். இனிமேலும் அப்படித்தான் நடிப்பேன்.
இப்போது நடித்து வரும் யாரடி நீ மோகினி சீரியல் பேமிலி டிராமா என்றாலும், இந்த சீரியலே சினிமா போன்று படமாக்கப்பட்டு வருகிறது. இதுவே ஒரு பெரிய வித்தியாசம்தான். முக்கியமாக, பாடல், சண்டை காட்சியெல்லாம் உள்ளது. சினிமா மாதிரி பிரமாண்டமாக தயாராகிக்கொண்டிருக்கிறது. சினிமா போன்று ஒரு சீரியலில் நடிப்பது ரொம்ப சந்தோசமாக உள்ளது. இது நேயர்களுக்கு மட்டுமின்றி எனக்கும் புதுமையான அனுபவமாக உள்ளது என்கிறார் சஞ்சீவ்.
நன்றி: தினதந்தி
-
14th October 2017, 07:05 AM
#4
Moderator
Diamond Hubber
தவறான உறவுகளை சித்தரிக்கும் சீரியல்களை குறைக்க வேண்டும்: ஜெயராம் மோகன்
சீரியல்களில் குடும்பங்களில் நடக்கும் நல்ல விசயங்களை எடுத்துக்கொண்டு தவறான உறவுகளை சித்தரிக்கும் கதைகளை தவிர்த்து விடுவது சீரியல்களின் தரத்தை அதிகப்படுத்தும் என்கிறார் நடிகர் ஜெயராம் மோகன்.
அவர் மேலும் கூறுகையில், சீரியல் என்பது மக்களின் வாழ்வோடு கலந்து விட்டது. சீரியல்களை பார்க்கும் நேயர்கள், அதில் வரும் பிரச்சினைகளை தங்களுக்கு ஏற்படுவது போலவே உணருகிறார்கள். இப்படி நேயர்களின் மனநிலை இருப்பதினால் தான் குடும்ப சூழலைக்கொண்ட சீரியல்கள் அதிகமாக வருகிறது .
குடும்ப பிரச்சினைகளில் தவறான உறவுகளை சித்தரிக்கும் கதைகளை குறைத்து விட்டு, நல்ல ஆரோக்யமான விசயங்களை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி, பொதுஅறிவு, விழிப்புணர்வு சம்பந்தமான விசயங்களை நிறையவே சேர்க்கலாம். காமெடி காட்சிகள் சீரியல்களில் இடம்பெறுவதே இல்லை. அதனால் ஒவ்வொரு சீரியல்களிலுமே காமெடியை அதிகப்படுத்தலாம். குழந்தைகள் சம்பந்தப்பட்ட நல்ல விசயங்களை சொல்லலாம்.
இப்படி சொல்லும் நடிகர் ஜெயராம் மோகன், இதுவரை நான் நடித்த பல சீரியல்களில் நெகடீவ் ரோல்களில் அதிகமாக நடித்திருக்கிறேன். அதில் வாணி ராணியில் நடித்த வில்லன் வேடம் என்னை பேச வைத்தது. அதைப்பார்த்து தாமரை சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அதில் பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டு விதமான வேடங்களில் நடித்தேன். இப்போது அழகு உள்பட இரண்டு சீரியல்களில் நடிக்கிறேன். இதில் எனது இமேஜ் மாறக்கூடிய அளவுக்கு நல்ல குணசித்ர வேடங்கள். அதனால் இந்த சீரியல்கள் ஒளிபரப்பாகும் போது எனக்கான வரவேற்பு இன்னும் நேயர்கள் மத்தியில் அதிகரிக்கும் என்று நினைக்கிறேன்.
சமீபகாலமாக சின்னத்திரைகளில் டப்பிங் சீரியல்களில் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது வரவேற்க வேண்டிய விசயம். இப்படி சேனல்கள் மாறியிருப்பதால் தமிழ் சீரியல்களையே நம்பியிருக்கும் என்னைப்போன்ற நடிகர் நடிகைகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அதனால் இந்த நிலை தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார் ஜெயராம் மோகன்.
நன்றி: தினமலர்
-
14th October 2017, 07:07 AM
#5
Moderator
Diamond Hubber
சீரியலுக்கு வருகிறார் ரேவதி
மண்வாசனை படத்தில் அறிமுகமானவர் ரேவதி. துளியும் கிளாமர் காண்பித்து நடிக்காமல் நல்லதொரு பர்பாமென்ஸ் நாயகியாக சினிமாவில் நீண்டகாலம் நாயகியாக நடித்து வந்தார். திருமணத்திற்கு பிறகும் சில படங்களில் நடித்த அவர், சமீபகாலமாக அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.
சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் அவரது அம்மாவாக நடித்த ரேவதி, அம்மா கணக்கு, ப.பாண்டி படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் யுத்தம் சரணம் உள்ளிட்ட சில படங்களில் அம்மா ரோலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஏற்கனவே ஓரிரு சீரியல்களில் நடித்துள்ள ரேவதி, தற்போது அழகு என்றொரு கிராமத்து நெடுந்தொடரில் லீடு ரோலில் நடிக்கிறார். அவரது கணவராக தலைவாசல் விஜய் நடிக்கிறார். குடும்பத்தலைவியாக அவர் நடித்து வரும் இந்த தொடரில் மையக் கேரக்டரில் நடிக்கும் ரேவதி, தனது குடும்பத்தில் நடக்கும் பெரிய பிரச்னைகளையெல்லாம் அனுபவத்தைக் கொண்டு எப்படி சிக்கல்களை சீராக்குகிறார் என்பதுதான் இந்த அழகு தொடரின் மையக் கதையாம். தற்போது இந்த சீரியலின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
நன்றி: தினமலர்
Bookmarks