`சவுபர்ணிகா' சீரியல் பார்த்தவர்களை `யார் இந்தப் பொண்ணு?' என்று கேட்க வைத்தவர் புவனேஸ்வரி! முதல் சீரியலிலேயே முத்திரை பதித்தவர் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. `பட்ஜெட் பத்மநாபனில்' ஆரம்பித்து இதுவரை 12 படங்களை முடித்தவர் சீரியல்களில் அரைச் சதத்தைத் தாண்டி விட்டார். `பாசம்' சீரியலில் இருந்த இந்த `வில்லி'யுடன் `முத்து... பத்து' சந்திப்பு...

* சீரியல், சினிமா- முதலிடம் எதற்கு?

சீரியலுக்குத்தான்.

* நல்ல சம்பளம் - சிறிய பாத்திரம், குறைவான சம்பளம் - கனமான பாத்திரம்- எதைத் தேர்வு செய்வீர்கள்?

கனமான பாத்திரத்தை...

* நிஜத்தில் நீங்கள் வில்லியாகக் கருதுவது யாரை?

என்னுடைய கோபத்தை...இதை நினைத்துத்தான் நான் பயப்படுவேன்.

* வில்லியாக விரும்பி நடிக்கிறீர்களா? அல்லது கிடைக்கும் வேடத்தில் நடிக்கிறீர்களா?

நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்...!

* நீங்கள் பொறாமைப்படும் நபர்?

ஐஸ்வர்யாராய்...

* மறக்க நினைக்கும் சம்பவம்?

என் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்கள் அனைத்தையும்...

* உங்களைப் பற்றிய தவறான கிசுகிசுவைப் படிக்கும்போது மனநிலை எப்படி இருக்கும்?

சிரித்துக் கொள்வேன்!

* ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசில்லாமல் தவித்ததுண்டா?

இல்லை...அந்த நிலை இதுவரை ஏற்பட்டதில்லை.

* நடிகையாகாமல் வேறு வேலைக்குப் போயிருக்கலாம் என்று எண்ணியதுண்டா?

அப்படி நினைப்பு வந்ததில்லை...ஆனால் கல்யாணமாகி செட்டிலாகி இருக்கலாம் என்று எண்ணியதுண்டு!

* உங்களின் அழகாக நீங்கள் கருதுவது?

என்னுடைய கண்களை...