-
16th August 2007, 08:32 AM
#1
Senior Member
Seasoned Hubber
`சவுபர்ணிகா' சீரியல் பார்த்தவர்களை `யார் இந்தப் பொண்ணு?' என்று கேட்க வைத்தவர் புவனேஸ்வரி! முதல் சீரியலிலேயே முத்திரை பதித்தவர் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. `பட்ஜெட் பத்மநாபனில்' ஆரம்பித்து இதுவரை 12 படங்களை முடித்தவர் சீரியல்களில் அரைச் சதத்தைத் தாண்டி விட்டார். `பாசம்' சீரியலில் இருந்த இந்த `வில்லி'யுடன் `முத்து... பத்து' சந்திப்பு...
* சீரியல், சினிமா- முதலிடம் எதற்கு?
சீரியலுக்குத்தான்.
* நல்ல சம்பளம் - சிறிய பாத்திரம், குறைவான சம்பளம் - கனமான பாத்திரம்- எதைத் தேர்வு செய்வீர்கள்?
கனமான பாத்திரத்தை...
* நிஜத்தில் நீங்கள் வில்லியாகக் கருதுவது யாரை?
என்னுடைய கோபத்தை...இதை நினைத்துத்தான் நான் பயப்படுவேன்.
* வில்லியாக விரும்பி நடிக்கிறீர்களா? அல்லது கிடைக்கும் வேடத்தில் நடிக்கிறீர்களா?
நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்...!
* நீங்கள் பொறாமைப்படும் நபர்?
ஐஸ்வர்யாராய்...
* மறக்க நினைக்கும் சம்பவம்?
என் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்கள் அனைத்தையும்...
* உங்களைப் பற்றிய தவறான கிசுகிசுவைப் படிக்கும்போது மனநிலை எப்படி இருக்கும்?
சிரித்துக் கொள்வேன்!
* ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசில்லாமல் தவித்ததுண்டா?
இல்லை...அந்த நிலை இதுவரை ஏற்பட்டதில்லை.
* நடிகையாகாமல் வேறு வேலைக்குப் போயிருக்கலாம் என்று எண்ணியதுண்டா?
அப்படி நினைப்பு வந்ததில்லை...ஆனால் கல்யாணமாகி செட்டிலாகி இருக்கலாம் என்று எண்ணியதுண்டு!
* உங்களின் அழகாக நீங்கள் கருதுவது?
என்னுடைய கண்களை...
-
16th August 2007 08:32 AM
# ADS
Circuit advertisement
Bookmarks