View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 109 of 157 FirstFirst ... 95999107108109110111119 ... LastLast
Results 1,081 to 1,090 of 1587

Thread: new serials/programs

Hybrid View

  1. #1
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மனதோடு மனோ

    ஜெயா டிவியில் புதன்கிழமை இரவு 9 மணிக்கு "மனதோடு மனோ'' என்ற இசை நிகழ்ச்சி இசைப்பிரியர்களுக்காக ஒளிபரப்பாகி வருகிறது.


    இந்த நிகழ்ச்சியில் பாடகர் மனோவை சந்திக்கும் ஒவ்வொரு பிரபலங்களும், தங்கள் மனதின் ரகசியங்களை, சாதனைகளை... இசையாய், பாடலாய், பேச்சாய் மனம் விட்டு பகிர்ந்து கொள்கிறார்கள்.


    இந்த வாரம் பிரபல பின்னணி பாடகி சுஜாதாவின் மகளும் பாடகியுமான சுவேதா மோகன் தனது இசைப்பயணத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களையும், மறக்க முடியாத அனுபவங்களையும் மனோவுடன் பகிர்ந்து கொள்கிறார்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மஞ்சுளா நடிக்கும் `சந்திரலேகா'

    மெகா டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் `சந்திரலேகா.' நடிகை மஞ்சுளா விஜயகுமார் முதன் முறையாக நடிக்கும் தொலைக்காட்சி தொடர் இது.


    இது அக்கா, தங்கை இருவரிடையே ஏற்படும் பிரச்சினைகள் குறித்த கதைக்களம். மஞ்சுளா - மோகன் சர்மா தம்பதியினருக்கு திருமணமாகி பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. பெண் பிறக்கிறாள். பெற்றெடுத்த குழந்தையையும், தத்தெடுத்த குழந்தையையும் வளர்த்து வருகின்றனர்.


    இந்த அக்கா, தங்கை இடையே போட்டி, பொறாமை புகுந்து கொள்கிறது. அதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.


    தேவிபாலாவின் கதை வசனத்தில் உருவாகியுள்ள இத் தொடரை, சுதர்சன் இயக்கியுள்ளார். தயாரிப்பு: மெகா டிவி.


    எம்.ஜி.ஆர். பட கதாநாயகி மஞ்சுளாவுடன் வரலெட்சுமி, புஷ்பலதா, ரவிகுமார், விஜயலெட்சுமி ஆகியோரும் தொடரின் நட்சத்திரங்கள்.


    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மறுஒளிபரப்பு: இரவு 8.30 மணிக்கு.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  4. #3
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நாலாவது சுற்றில் `வாய்ஸ் ஆப் தமிழ்நாடு'

    தமிழகத்தின் தங்க குரல் தேடலுக்கான ராஜ் டிவியின் விறுவிறுப்பான 4-வது சுற்று பிரமாண்டமான அரங்கில் நடந்தேறியது.


    இதில் 4 வித்தியாசமான சுற்றுக்கள் நடந்தன. துள்ளல் மற்றும் வெஸ்டர்ன் பாடல்கள் சுற்றில் பாடகி கல்பனா, மக்களிசைச் சுற்றில் பாடகி அனிதா குப்புசாமி, சோகம் மற்றும் மெலடி சுற்றுக்களில் மஹதி ஆகியோர் சிறப்பு நடுவர்களாக பங்கேற்றனர். இவர்களுடன் பாடகர் ஸ்ரீராம், பாடகி தேவி நெய்தியார், அப்துல் ஹமீது ஆகியோர் இணைந்து 12 போட்டியாளர்களை மட்டும் தேர்ந்தெடுக்க இருந்தனர். ஆனால் போட்டியாளர்களின் அசாதாரண பாடும் திறமையால் பரவசமான நடுவர்கள் இறுதியாக 15 போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து இன்ப அதிர்ச்சியளித்தனர்.


    ஒவ்வொரு சுற்றுக்கும் `சிறந்த குரல்' பட்டம் வழங்கி மொபைல்கள் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டு சுற்றுக்களில் வென்ற போட்டியாளர் ஜெயபிரகாஷ் இரண்டு மொபைல்களை வென்றது நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம்.


    15 பேரில் `வாய்ஸ் ஆப் தமிழ்நாடு' பட்டத்துக்கு உரியவர் யார்? வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு நிகழ்ச்சியை காணலாம்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  5. #4
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தள்ளிப்போகும் முதலிரவு

    திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், `சின்ன மருமகள்.'


    விஷாகாவின் பாட்டியால் பலமுறை பல்வேறு வகைகளால் தடைப்பட்ட ராதிகா, தேவ் இருவரின் திருமணம் நடைபெறுகிறது. அனைவரும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்திருக்க, விஷாகாவின் பாட்டி மட்டும் ராதிகாவை கொல்லும் திட்டத்தை தீட்ட, அதில் விஷாகா மாட்டிக்கொள்ள, விஷாகாவை காப்பாற்றும் முயற்சியில் ராதிகா பலத்த தீக்காயம் அடைகிறாள்.


    கோவில் பண்டிதர் சொன்னவாறு ஐந்துவிதமான புனித நீரால் ராதிகாவை தேவ் குளிப்பாட்ட, ராதிகாவின் உடம்பிலிருந்த காயங்கள் மறைந்தோடுகின்றன. வெகு நாட்களாக தடைபட்டுக் கொண்டிருந்த தேவ்-ராதிகா இருவரின் முதலிரவிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, அச்சமயம் வீட்டிலிருந்து தன் பெற்றோரால் துரத்தப்பட்ட விஷாகா யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் வந்து ஸ்டோர் ரூமில் தங்குகிறாள். இதை சற்றும் எதிர்பார்க்காத ராதிகா நிலைகுலைந்து போகிறாள்.


    தன் சின்ன மருமகள் பதவியின் பொறுப்புகளை உணர்ந்த ராதிகா, தேவுடன் இணைய முடியாமல் போக, அதனால் ராதிகாவை தேனிலவுக்காக கோவாவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிடுகிறான் தேவ்.


    தான் வீட்டில் இல்லை என்றால் நிச்சயம் விஷாகா தன் புகுந்த வீட்டாரிடம் மாட்டிக்கொள்வாள் என்று உணர்ந்த ராதிகா எடுத்த முடிவு என்ன? விடைக்கான காட்சிகள் தொடரில்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #5
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    உதிரிப்பூக்கள்-100

    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் உதிரிப்பூக்கள் தொடர், நூறாவது எபிசோடை எட்டியிருக்கிறது. குடும்ப உறவுகளின் பின்னான மர்ம முடிச்சை திருப்பங்களுடன் காட்சிப்படுத்தும் இந்த தொடர், விறுவிறுப்பான கதையோட்டத்திலும் கவர்ந்த தொடராகி இருக்கிறது.


    இதுவரை தங்களை உயிருக்கும் மேலாக பாசம் காட்டி வளர்த்த அப்பா சிவநேசன், தங்கள் சொந்த அப்பா இல்லை என்ற உண்மை சக்தி-திலீபன், நிலா மூவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. என்றாலும் அப்படியே இருந்து விடாமல் வளர்ப்பு அப்பா மீது வழக்கு எதுவும் பாயாமல் இருக்க தன்னாலான முயற்சியை செய்யத் தொடங்குகிறாள், மூத்தவள் சக்தி.


    ஆனால் அதற்குள் துரதிருஷ்டவசமாக சக்தி உள்பட பிள்ளைகள் மூவரும் கடத்தப்படுகிறார்கள். போலீஸ் தேடுகிறது. சிவநேசன் அதிர்ச்சியாகிறான். நம்மால் பிள்ளைகள் கஷ்டப் படக்கூடாது என்ற எண்ணத்தில் போலீசில் சரண்டர் ஆகிறான். பிள்ளைகள் கடத்தப்பட்டதன் பின்னணியில் அவன் பங்கு எதுவும் இருக்கிறதா என்பதை போலீஸ் துருவுகிறது.


    உண்மையில் அவர்களை கடத்தியது யார்? எதற்காக அவர்கள் கடத்தப்பட்டார்கள் என்பது தெரியவரும் போது அடுத்த கட்ட அதிர்ச்சி காத்திருக்கிறது.


    தொடரின் நட்சத்திரங்கள்: சேத்தன், மானசா, ஹரி, கிரேசி, வடிவுக்கரசி, எல்..ராஜா, ஸ்ரீலேகா. ஒளிப்பதிவு: சாஹித்யா சீனு. திரைக்கதை: முத்துச்செல்வன். வசனம்: ஆனந்த் சம்யுக்தா. இயக்கம்: விக்ரமாதித்தன்.


    ஹோம் மீடியா சார்பில் தயாரிப்பு: சுஜாதா விஜயகுமார்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #6
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஆண்பாவம் - ஒரு கண்ணோட்டம்

    Last edited by aanaa; 4th April 2012 at 08:05 PM.
    "அன்பே சிவம்.

  8. #7
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நடிகை புவனேஸ்வரி வில்லியாக நடிக்கும் `வாழ்வே மாயம்'

    மெகா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர், வாழ்வே மாயம். நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகை புவனேஸ்வரி இந்த தொடரில் வில்லியாக நடிக்கிறார்.


    காதல் ஜோடிகள் சதீஷ்-பிரியா இருவரும் ஒரு சுப நாளில் திருமணம் செய்து கொள்கிறார்கள். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் இவர்கள் வாழ்க்கையில் பேரதிர்ச்சி. விபத்தொன்றில் சதீஷ் தனது ஞாபக சக்தியை இழக்கிறான்.


    இந்தக் காதல் திருமணத்திற்கு முன்பே பாவனா என்ற பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தான் சதீஷ். அந்தக் காதல் நிறைவேறாத நிலையில் தான்அடுத்த காதல். இந்தக் காதல் கல்யாணத்தில் முடிய, சதீஷின் திருமதியானாள் பிரியா.


    நினைவாற்றலை சதீஷ் இழந்த பிறகு நிலைமை அப்படியே தலைகீழ். பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷயத்தையே மறந்து விடுகிறான் சதீஷ்.


    இந்த சூழலில் சதீஷின் பழைய காதலி பாவனா அவனை சந்திக்கிறாள். மீண்டும் தனது காதலை புதுப்பித்துக் கொள்கிறாள். சதீஷூம் பாவனாவின் அன்பில் உருகி அவளுடனே சென்று விடுகிறான்.


    விஷயம் தெரிந்து அதிரும் பிரியா, தன் கணவனை பாவனாவிடம் இருந்து மீட்டெடுக்க போராடுகிறாள். அவளால் தன் கணவனை பழைய நினைவுகளுக்குள் கொண்டு வந்து இழந்து போன தன் வாழ்க்கையை மீட்டெடுக்க முடிந்ததா என்பது பிற்பகுதி கதை.


    பிரேம்சாய், அகிலா, பாவனா, லட்சுமிராஜ், பாலாஜி, ராஜ்குமார், ஷிவானி ஆகியோர் தொடரின் நட்சத்திரங்கள்.


    திரைக்கதை: கண்மணிசுப்பு. இயக்கம்: எஸ்.வி.சோலைராஜா. தயாரிப்பு: மெகா டிவி.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #8
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மங்கம்மாவை பாராட்டிய ஸ்ரீதேவி

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் திங்கள் இரவு 8 மணிக்கு தொடங்கவிருக்கும் புதிய தொடர் `மை நேம் இஸ் மங்கம்மா.' உல்லாசம், நேசம் படங்களில் கதாநாயகியாக நடித்த மகேஸ்வரி, இந்த தொடரில் நாயகியாக நடிக்கிறார். இவர் நடிகை ஸ்ரீதேவியின் தங்கை (சித்தி மகள்) என்பது குறிப்பிடத்தக்கது.




    நட்சத்திர ஒட்டல் ஒன்றில் தலைமை சமையல் கலைஞராக பணியாற்றுகிறாள் மங்கம்மா. முதிர்கன்னியான அவளுக்கு மாப்பிள்ளை தேடுவதே அவளது பெற்றோரின் அனுதின கடமையாகி விடுகிறது. வரும் வரன்கள் எல்லாம் நழுவிப்போக, மங்கம்மா என்ற தனது பெயர் தான் திருமணத்துக்குத் தடையாக இருக்கிறதோ என்று எண்ணுகிறாள், அவள்.


    ஆனால் எதையும் வெளிப்படையாக பேசும் அவளது குணாதிசயம் தான் திருமணத்துக்கு தடையாக இருக்கிறது. இது இந்த நிமிடம் வரை அவளுக்குத் தெரியவில்லை என்பது பரிதாபம். இந்த கதையை நகைச்சுவை பின்னணியில் உருவாக்கி இருக்கிறார்கள் என்பது சிறப்பு.


    இந்த தொடரை பார்க்க செட்டுக்கே வந்த நடிகை ஸ்ரீதேவி, மகேஸ்வரியின் அப்பாவித் தனம் கலந்த நகைச்சுவை நடிப்பை ரசித்துப் பார்த்தார். `நான் எதிர்பார்த்தை விட நகைச் சுவையில் கலக்கி இருக்கிறாய்' என்று பாராட்டினார். அக்காவின் பாராட்டில் மகேஸ்வரி முகத்தில் மத்தாப்பு பிரகாசம்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  10. #9
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ருத்ரம்-50

    ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மர்மத்தொடர், "ருத்ரம்.''


    2012-ல் உலகம் அழியப்போகிறது என்கிற மையக்கருத்தை அடிப்படையாக கொண்ட இந்த தொடர், இப்போது 50-வது பகுதியை எட்டியிருக்கிறது.


    தொடரில் ஒய்.ஜி.மகேந்திரன், பாரதி, பூவிலங்கு மோகன், குயிலி போன்ற பிரபலங்களுடன் புதுமுகங்களும் உண்டு.


    இனி வரப்போகும் கதையில் அழியப்போகும் உலகை காக்கும் சக்தியை தேடிப்போகும் முயற்சியில் இறங்கும் பேராசிரியர் விஸ்வநாதன், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவர் அணிந்திருந்த ருத்ராட்சம் பறிபோக, அதன் விளைவாக பித்து பிடித்த நிலைக்குள்ளாகிறார். அவர் பறிகொடுத்த ருத்ராட்சம் பல்வேறு இடங்களில் உள்ள பலதரப்பு மக்களிடையே பல அற்புதங்களை நிகழ்த்துகிறது.


    சாலக்குடி, தலக்கோணம், திருநெல்வேலி, கும்பகோணம், பாணதீர்த்தமலை போன்ற இடங்களில் படமாக்கியதைத் தொடர்ந்து, இந்த தொடரின் அடுத்தகட்ட படப்பிடிப்பு, காசி, வாரணாசி, பத்ரிநாத் போன்ற இடங்களில் படமாக்கப்பட இருக்கிறது.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #10
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ராஜயோகம்

    ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி,


    "ராஜயோகம்.''`முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்ற பொன் மொழியின்படி அமையப் பெற்றதுதான் மனித வாழ்க்கை. இப்பிறப்பில் நம்மால் முடிந்த நல்லவற்றை இயலாதோர்க்கும் இல்லாதோர்க்கும் செய்தால், இப்புண்ணியமானது தொடரும் பிறப்புகளில் நம்மை நற்கதி அடையவைக்கும் என்பது சாஸ்திரங்கள் சொல்லும் உண்மை.


    அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், ஜோதிட நிபுணர் முனைவர் கே.ராம் கலந்து கொண்டு நேயர்கள் தங்களது எதிர்காலம் குறித்து தொலைபேசி மூலம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •