திரைப்பட கதாசிரியர் காலமானார்



சென்னை, மார்ச் 5: பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகரும் கதாசிரியருமான கோவை கதிரொளி (83) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை இரவு காலமானார்.

மறைந்த கதிரொளி "தெய்வம் பேசுமா', "அன்னையின் ஆணை', "முக்கனிகள்' உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். எம்.ஆர்.ராதா நடித்த "நாகமலை அழகி' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

அவருக்கு ரோஸி என்ற மனைவி, கே.ஆர்.செல்வராஜ் என்ற மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். ரோஸி பழம்பெரும் நாடக நடிகை. இயக்குநரும் நடிகருமான கே.ஆர்.செல்வராஜ், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைச் செயலாளராக இருக்கிறார்.
நன்றி -- தினமணி