-
9th April 2015, 07:13 AM
#1
Moderator
Diamond Hubber
பிரபல சின்னத்திரை இயக்குநர் பாலாஜி யாதவ் தற்கொலை
சின்னத்திரை உலகில் அதிகமான சீரியல்களை இயக்கியவர் பாலாஜி யாதவ். துளசி, அரசி, பந்தம், காய்த்ரி, புகுந்த வீடு, செல்வி, ரோஜா, லட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களை இயக்கியவர். இத்தனை சீரியல்களை இயக்கிய பாலாஜி யாதவ் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது
சமீபகாலமாக பெரும்பாலான தொலைக்காட்சிகளில் இந்தி டப்பிங் சீரியல்களே ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறது. நேரடி சீரியல்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் பலர் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் சேனல்கள் டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பகூடாது நேரடி சீரியல்களைத்தான் ஒளிபரப்ப வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வருகிறார்கள். நடிகர்கள் சங்கம் இதற்காக ஒரு போராட்டம் நடத்தவும் முடிவு செய்திருந்துது. இந்த நிலையில் பாலாஜி யாதவின் தற்கொலை சின்னத்தரை வட்டாரத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது.
பாலாஜி யாதவின் மனைவி அளித்த பேட்டியில் "டப்பிங்க சீரியல்கள் நிறைய வந்து விட்டதால் என் கணவருக்கு வேலை வாய்ப்பில்லை. ஒரு வருடம் எந்த வேலையும் இல்லாமல் இருந்தார். வருமானத்தை நம்பி அப்பார்ட்மெண்டில் ஒரு வீடு வாங்கினோம். அதற்கு தவணை செலுத்த முடியவில்லை. குழந்தை பாக்கியம் இல்லாததால் தத்தெடுத்து ஒரு குழந்தை வளர்த்தோம். தற்போது அதை வளர்க்க முடியாமல் பெற்றவர்களிடமே கொடுத்து விட்டோம். இந்த மன வேதனை தாளாமல்தான் என் கணவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து சின்னத்திரை கூட்டமைப்பின் தலைவர் கவிதா பாரதி கூறும்போது "பாலாஜி யாதவின் மரணம் எதிர்பாராத அதிர்ச்சியாகும். சமீபகாலமாகவே பிறமொழி தொடர்கள் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் எங்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து விட்டது. தொலைக்காட்சி நிறுவனங்கள் டப்பிங் சீரியல்களை கைவிட வேண்டும்" என்றார்.
சின்னத்திரை கலைஞர்கள் பாலாஜி யாதவின் உடலுக்கு திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். விரைவில் சின்னத்திரை கலைஞர்களின் கூட்டமைப்பின் அவசரக்கூட்டம் நடக்கிறது. அதில் டப்பிங் சீரியல்கள் குறித்து சீரியாசன முடிவுகளை எடுக்க இருக்கிறார்கள்.
நன்றி: தினமலர்
-
9th April 2015 07:13 AM
# ADS
Circuit advertisement
Bookmarks