-
24th February 2009, 11:02 PM
#1
Moderator
Platinum Hubber
அரும்பெரும் அண்டை நாடாம் பாகிஸ்
தானம் அதற்கு ஒரு தலைவன்
அரசது வமைக்கு ஒரு முறையாம்
ஜன நாயக மதற்கே செறு பகைவன்
மறுமொழி கேளா ஜெனரல் ஜியா
என்றால் அண்டம் நடுங்கிடுமே
ஒருசிறு நாவிதன் அவனைக்கூட
மிரட்டிய கதையிது கேட்பீரே
துருதுருப்பாக செயல்படும் அரசன்
காலில் என்றும் சக்கரமே
மாதம் அரைமணிநேரம் மட்டும்
ஓரிடம் அவனும் அமர்வானே
கருகரு முடியை திருத்திட வேண்டி
நாவிதனிடத்தே தலைநீட்டி
மெருகது தன்னிடை கூடிய மட்டும்
ஏத்திட அவனும் முனைந்தானே
ஒருமுறை பாதியில் நாவித மடையன்
'ஜெனரல் சாஹிப்' எனவிளித்து
'வருமோ இப்பொது தேர்தல்கள்' என்று
வினைவின வதனை உதிர்த்தானே
சிறுபிழை பொறுக்கா ஜெனரல் ஜியா
உஷ்ணம் மிகுந்த மூச்சிறைத்து
"அறிவிலி மூடா யாரிடம் என்ன
பேசுவதென்பது அறியாயா ?
ஒருபிழை அருள்வேன் இது போல் இனிமேல்
தரமறியாமல் பேசாதே
மருமுறை நடந்தால் சுல்ஃபிகர் அலியின்
நிலை தான் உனக்கு மறவாதே
பொறிபறந்திடவே கிளம்பிச்சென்ற
ஜெனரல்வாளிடை பிழைத்தவர்கள்
அரிதென வறிந்த நாவிதன் அன்று
கீழுடை மாற்றிட நேர்ந்ததுவே
வரிகள், போர்கள், மானுடப்பதர்கள்
என்றே ஜெனரல் பொன்நேரம்
சரியாய் போவது ஆயினும் அழகை
பேணுவதென்பதை மறவாரே
மறுமுறை நாவிதன் பயத்துடன் மௌனச்
சபதம் எதையோ காப்பதுபோல
விருவிருவெனவே கத்தரிகோலுடன்
வேலையில் மட்டும் ஆழ்ந்தானே
சரிவர முன்முடி திருத்திய பிறகவன்
பின்தலை வேலையை தொடங்கையிலே
'வருமோ இப்பொது தேர்தல்கள்' என்றே
மீண்டும் ஒருமுறை கேட்டானே
எரிகனல் விழிகள் நுணலனை எறிக்க
ஜெனரல் ஜியா எழுந்தங்கு
மரிப்பது இவன் விதி இதுவே எந்தன்
ஆணை என்றும் சொன்னாரே
உருமியபடியே சீருடைக்காவலர்
பிழைஞன் தன்னை நெருங்கிடவே
எரிமிலை ஜெனரல் தாள்சரணெனவே
நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தானே
சிறியவன் யான்செய் பெரும்பிழையதற்கு
காரணமுண்டு அதைக்கேட்டு
பொறையுடை அரசர் நீவிர் என்னை
மன்னித்தருள வேண்டுகிறேன்
சுருள்முடி தங்கள் பிடரியிலுண்டு
வெட்டுவதற்கே பெருஞ்சிரமம்
வருமோ தேர்தல் என நான் கேட்டால்
மயிர்கள் யாவும் கூச்செரிந்து
விரிந்திட கத்திரிகோலினில் வெட்டுதல்
எளிதாய் போவதைக் கண்டேனே.
திரிபர உரைத்தேன் நடந்தது இதுவே
நிரந்தரத் தலைவா அருள்வாயே.
(நன்றி: குஷ்வந்த் சிங்)
Cross Posted here
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
24th February 2009 11:02 PM
# ADS
Circuit advertisement
-
25th February 2009, 08:47 AM
#2
Senior Member
Platinum Hubber
Professional dedication at the risk of personal safety!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
22nd March 2010, 02:42 PM
#3
Moderator
Platinum Hubber
அமுதசுரபி இதழில் 'மரபுக்கவிதை' போட்டி பகுதியை நிறுத்திவிட்டு, ஏதாவது புதுப்பகுதியைத் தொடங்கலாமா என்று வாசகர்கள் கேட்டிருந்தார்கள். அதற்கு பதிலாக நான் அனுப்பிய வாசகர் கடிதம்:
இளவட்டம் மரபுக்கவி மாட்சியதை உணர்தற்கு
சிலநட்டம் புதுமைக்கு ஏற்பட்டால் பழுதில்லை
களைகட்டித் தொடரட்டும் அப்பகுதி அடியேனும்
தளைதட்டா கவியெழுதி பரிசுபெறும் காலம்வரை
(மார்ச் இதழ்)
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
15th September 2010, 04:22 PM
#4
Senior Member
Seasoned Hubber
So sad, you went away, leaving behind your beautiful voice
காட்டிற் பிறந்துவந்தாய் -- மாய
கானத்தின் எல்லை கடந்துவென்றாய்;
பாட்டுக் குயிலிசையே -- மீண்டு
காட்டிற்குள் ஏகி மறைந்ததென்ன!
ஊர்மக்கள் யாவரையும் -- நீ
ஊர்கோலத்துக்கோ அழைக்கவந்தாய்!
நேர்நிற்ப தியார்குரலோ -- பிற
நெஞ்சினில் தோன்ற அவைதவிர்த்தோம்
Bookmarks