பின் குறிப்பு : யாரோ ஒரு சிலர் எழுந்து கை தட்டினால், மற்றவர் நம்மை அறியாமல் எழுந்து கொள்கிறோம்! அரங்குகளில், ஆங்கில ஜோக்கிற்கு (சில சமயம் தமிழிலும்!). ஒருவர் சிரித்தால், நமக்கு புரிந்தாலும் இல்லாவிட்டாலும் சிரிக்கிறோம். எத்தனை தடவை, "ஏன் சிரிச்சே?" எனும் கேள்விக்கு, 'அப்புறம் சொல்றேன்? ' என்று தட்டி கழிக்கிறோம். இது ஏன்?

கும்பலாக இருக்கும் போது, நமது சுய சிந்தனையை மீறி பறவை கூட்டங்கள் போல, மந்தைகளை போல, ஒருவரை பார்த்து ஒருவர் செயல் படுகிறோம். இது ஒரு குரூப் டைனமிக்ஸ். இந்த கதையின் மைய கருத்து அதுவே.

இன்னொன்று: கதைப்படி இங்கே, கல்லூரி மாணவர்கள் கூட்டம். என்ன சொன்னாலும், ஒரு நடிகருக்கு, மாணவர் இளைஞர் மத்தியில் இருக்கும் மதிப்பும், மரியாதையும், மற்றவருக்கு இருக்கா?

விக்ரம் சிங், சேகர் பாசு , வி. சாந்தா, வி. ராமகிருஷ்ணன், வடிவேலு இவங்க வந்தா, யாருக்கு பொறியியல் கல்லூரி மாணவரிடையே கை தட்டல் நிறைய இருக்கும்? வரவேற்பு இருக்கும்? முதலில்சொ ன்ன நான்கு பேரும் யாரு? ! (GK question!- கூகிள் உதவிக்கு நன்றி).

இவர்கள் இந்த நாட்டிற்காக பாடு படுபவர்கள். ஒருவர் இந்திய ராணுவ தலைமை அதிகாரி , மற்றொருவர் இந்திய அணு சோதனை நிலைய (BARC) தலைமை அதிகாரி, ஒருவர் சிறந்த புற்றுநோய் நிபுணர், ஒருவர் நோபெல் பரிசு பெற்ற தமிழர் (வேதியியல்). உண்மையில், இவர்களை , ஒரு சிலரைத்தவிர, யாருக்கும் தெரியாது. என்னையும் சேர்த்துதான் சொல்லுகிறேன்.

ஆனால்,சூர்யா, வடிவேலு, சந்தானம், அமலா பால்,நமீதா ? இவர்கள் யார் தெரிகிறதா? கட்டாயம் தெரிந்திருக்கும். இதுதான் நடைமுறை உலகம்.

இதில் தவறு எதுவும் இல்லை, இது மனித இயல்பு என்பதே பெரிய அறிஞர்களின் கருத்து...