Results 1 to 10 of 13

Thread: சந்தோஷமே வருக வருக..

Hybrid View

  1. #1
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மகிழ்ச்சி எனப்படுவது மாசிலா அன்பைப்
    பகிர்வதே பாரினில் பார்..

    *


    சந்தோஷமே வ்ருக வருக..

    இடர் களையும் பதிகம்

    நான்காம் பாடல்

    *

    *
    நான்காம் பாடல்..

    சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
    சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்
    தென்னாட்டில் எல்லாரும் கொண்டாடும் வேலையடி”

    “என்னடா.. கோவாப்டெக்ஸ் எதுக்குப் போனே நீ”

    “மன்ச்சு.. இந்தப்பாட்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினது.. நம்ம கண்ணதாசன் என்ன சொல்றார்..


    பின்னிவைத்தகூந்தலில்முல்லைபூவைசூடினால்
    கன்னிநடைபின்னல்போடுமா – சிறு
    மின்னலிடைபூவைதாங்குமா”

    “ஆமா எனக்கும் சொல்லத் தெரியும் மருதகாசியோட பாட்டு..
    . சொந்தமெனும்உறவுமுறைநூலினாலே
    - அருட்ஜோதியானஇறைவன்செய்தபின்னல்வேலை
    பாசவலைபாசவலை”

    ”உனக்கு வயசாய்டுத்து மனசாட்சி.. இந்தபார்.ஸ்ரீதேவி பாடறத..
    பின்னல்விழுந்ததுபோல்எதையோபேசவும்தோணுதடி .

    நல்லாத்தான் இருக்கில்லை..பட் இது எல்லாம் பின்னுவது , குழறுவது என்பது போல் இருக்குல்ல..இந்தப் பாட் பார்த்தாக்க ஒரு மணப்பெண்ணைப் பத்தி அனேகமா வாலி எழுதியிருக்கார்னு நினைக்கறேன்..

    அல்லிவிழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி
    அந்திவண்ணப் பின்னல்மீது தாழைமலர்சூட்டி
    ஆதிமுதல் அந்தம் ஆபரணம் பூட்டி
    அன்னமிவள் மேடைவந்தாள் மின்னல் முகம்காட்டி..

    இதுல பார்த்தா சோனாலிபிந்த்ரேயோட ஜடைப்பின்னல் முழுக்க மலர்மாலை சூட்டியிருக்காங்க..இதுல தான் பின்னல் நா ஜடைப் பின்னல்..ஜடையிலுள்ள முடியின் பின்னல் என வருது

    மின்ன லிடையழகில் மென்மைக் குறுநகையில்
    பின்ன லசைந்திடவும் பித்தானேன் – சின்னவளே
    கன்னல் மொழியால் கவர்ந்திழுக்கும் கன்னிநீ
    வண்ணமாய் என்னருகில் வா

    அப்படில்லாம் சொல்லலாமில்லையா.

    “ஜொள்ளலாமில்லையான்னு சொல்லு! அது சரீஈ ஏன் பின்னிப் பின்னிப் பேசற...ஆகக் கூடி ஜடையைப் பத்திப் பேசப் போறயா”

    “பின்ன..உனக்குத் தெரியுமோ குடத்துல கங்கை அடங்கும்..”

    “தெரியாம என்ன காளமேகம் பாடல் தானே..

    விணணுக்கடங்காமல்வெற்புக்கடங்காமல்
    மண்ணுக்கடங்காமல்வந்தாலும் –பெண்ணை
    இடத்திலேவைத்தவிறைவர்சடாம-
    குடத்திலேகங்கையடங்கும்

    இதைப் பத்திச் சொல்லணும்னா பகீரதனைப் பத்திச் சொல்லணும்..
    பகீரதன் தன் முன்னோர்கள் உய்வதற்காக ஆகாச கங்கை மண்ணில் வரவேண்டுமென கங்கையிடம் சென்று கேட்டானாம்.. கங்கை, யூஸீ பகீரதா.. ஐ கேன் ஃபுல்ஃபில் யுவர் விஷஸ்.பட் பார்த்தேன்னாக்க என்னோட வேகம் ஹைஸ்பீடுப்பா..வந்தேன்னு வச்சுக்க.. பூமி தாங்காது..ஸோ என் வேகத்தைத் தாங்கற மாதிரியார்கிட்டயாவது கேட்டுச் சொல்லு..தென் ஐ வில் கம்” என்றாளாம்..

    பகீரதன் எல்லாரிடமும் கேட்டு விஷ்ணுவிடமும் கேட்க “இதப் பார் பகீரதா.. ஈசன் கிட்ட ரிக்வெஸ்ட் பண்ணு..அவரால தான் முடியும் அந்த வேகத்தைத் தாங்கறதுக்கு” எனச் சொல்ல ஈசனிடமும் வேண்ட ஈசன் “ஓ.கே ஐவில் டூ இட் ஃபார் யூ, மை பாய்” என ச் சொல்ல கங்கையிடம் “ நீ வாம்மா மின்னல்” எனப் பகீரதன் கேட்டானாம்..

    கங்கையம்மாக்குள்ள ச் சின்னதா கர்வம்..இது நல்லாருக்கே.. நான் யார்..ஆக்ரோஷ கங்கை..இந்தச் சிவன்யார் இவர் சடாமுடியைப் பிடிப்பாராம்.. நான் பாயறதை த் தடுப்பாராம்..வேலைக்காகுமா இது..

    படால்னு குதிச்சா கங்கை..இறைவனோட சடாமுடிமேல..குதிச்சது அவ இல்லை..அவளோட..அகங்காரம்

    பார்த்தார் லார்ட் ஷிவா..ஓ..இந்தப் பொண்ணுக்கு ஐ வில் டீச் ஹெர் எ லெஸன்னு நினச்சு கங்கை மொத்தத்தையும் தனது சடாமுடிலச் சுருட்டி அடக்கிட்டார்.

    பார்த்தான் பகீரதன்..இது என்ன வினையாப் போச்சேன்னு ஃபீல் பண்ணி மறுபடி தவம்..மறுபடி ஈசன் வந்து அருள கங்கை கொஞ்சம் வேகம் குறைந்து பூமியில் பாய்ந்தாளாம்..

    இதைத் தான் காளமேகம்..
    விண்ணிலும் அடங்காமல், மலைகளிலும் அடங்காமல் மண்ணில் வீழ்ந்த போதும் அடங்காமல் கோபத்துடன் பாய்ந்த கங்கை என்ன ஆனாள்.. இடப்பாகத்தில் உமையவளை வைத்திருந்த ஈசனின் ஜடாமகுடத்தில் அடங்கினாளா இல்லையா…

    என்கிறார்.. சரியாடா”

    “ நல்லா கதை சொல்ற மனசாட்சி..

    மங்கை அடக்கம் மறுதலித்தால் ஆகிவிடும்
    கங்கை நதியின் கதி

    ந்னு சும்மாவா சொன்னாங்க….

    இதுவே திருவாசகத்தில கேள்வியும் பதிலுமா சாழல் விளையாடற இரண்டு பெண்கள் பேசிக்கறா மாதிரி வந்திருக்கு தெரியுமோ..

    மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
    சலமுகத்தால் அவன்சடையில் பாயுமது என்னேடீ ?

    சலமுகத்தால் அவன்சடையில் பாய்திலனேல் தரணிஎல்லாம்
    பிலமுகத்தே புகப்பாய்ந்து பெரும்கேடாம் சாழலோ..

    கங்கை அந்தப் பரமன் சடையிலே பாயாமல் போயிருந்தால் பூமில பிரளயம் தான் வந்திருக்கும்னு பெண் ஆன்ஸர் பண்றா..

    ஆக அப்படிப் பட்ட ஜடாமகுடம் தரித்த ஈசனைப் பற்றி இந்தப் பாட்டுல என்ன சொல்லியிருக்கு தெரியுமா.. வா உள்ள போய்ப் பார்க்கலாம்”

    *


    மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பான் மகிழ்ந்தாய்
    அலைபுரிந்த கங்கைதங்கு மவிர்சடையா ரூரா
    தலைபுரிந்த பலிமகிழ்வாய்த லைவநின்றா ணிழற்கீழ்
    நிலைபுரிந்தா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

    திரு நெடுங்குளத்தில் உறைகின்ற எம்பிரானே, தென்னாடுடைய சிவனே,..

    இமவான் மகளாகிய பார்வதி தேவிக்கு உன்னில் ஒரு பாதியைக் கொடுத்து மகிழ்ந்தாய்..ஆக்ரோஷமாக வந்தகங்கைக்கு அன்புடன் உனது ஜடாமகுடத்தில் இடம் கொடுத்தாய்..திருவையாற்றில் ஆரூரனென அருள்புரிபவனே..

    தலையோட்டை விரும்பி ஏற்று அதன் பிரசாதங்களை ஏற்று மகிழ்பவனே..

    உனது அடியவர்கள் எல்லாம் உனது திருவடியின் கீழ் நிற்பதையே விரும்புகின்றன.ர்..

    எனில் அவர்களது இடர்களைக் களைந்து அருள்புரிவாயாக..

    **

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •