-
7th May 2016, 10:46 AM
#3
Senior Member
Senior Hubber
வா வா மகிழ்ச்சியே சுகம்தரும் சொர்க்கமே..
சந்தோஷமே வ்ருக வருக..
இடர் களையும் பதிகம்
முதற்பாடல்..
****
“மன்ச்சு..ஒனக்கு ஸ்ருதி தெரியுமோ”
”:இரு வர்றேன்.. இசைன்னு எடுத்துக்கிட்டேன்னா அதுல ஏழு ஸ்வரங்கள் இருக்கு..ச ரி க ம ப த நி.. இரண்டு ஸ்வரங்களை ஒரே நேர்க்கோட்டில இணைக்கறது தான் ஸ்ருதி… கொஞ்சம் ஜாஸ்தியாய்டுச்சுன்னு வை..ஸ்ருதி சேரலைன்னு பாட்டுப் போட்டில டிஸ்க்வாலிஃபை பண்ணிடுவாங்க..என்ன முழிக்கறே.. சரி.சரி.. நீ சொன்னது கமலோட பொண்ணைத் தானே..”
‘இல்லைப்பா இல்லை.. என்னோட ரிலேட்டிவ் இப்பத் தான்காலேஜ் முடிச்சு ஒரு வேலைல ஜாய்ன்பண்ணாளே..”
”ஆமாம்..அவளுக்கு என்ன.. நன்னா லட்சணமா இருப்பா..ஒன்னோட ரிலேட்டிவா இருந்தாலும்”
‘ இதானே வேணாங்கறது.. அவ சேர்ந்து மூணு மாசமாச்சு.. ஒரு நாள் காலைல அவளோட ஜி.எம் வந்தப்ப அவ அஸ்யூஸ்வல் குட்மார்னிங்க் சொல்லிட்டு இன்னொண்ணும் சொன்னாளாம்’
“என்ன”
“சார் இன்னிக்கு யூ ஆர் லுக்கிங் வெரி யங்..உங்களுக்கு இந்த டார்க் ப்ளூ ஸ்யூட் ரொம்ப சூட் ஆகுது டை ஆல்ஸோ வெரி நைஸ் – அப்படின்னு இருக்கா..”
“என்ன ஏதாவது லவ்வாம்மா.. வாஸ்ஸப்ல சொன்னாளா”
“ச் அதெல்லாம் இல்லை.. அவர் வயசானவர்ப்பா..ஆக்சுவலா மொத நாள் அவர் ஒரு இம்பார்ட்டண்ட் இமெய்ல் அனுப்பச் சொல்லியிருக்கார்..இவ மறந்துட்டா..ஸோ காலைல வந்தவுடனே இண்ட் டர் காம்ல கூப்பிட்டு இந்த மாதிரி புகழ்ந்துட்டு ஸார்..நான் இமெய்ல் அனுப்ப மறந்துட்டேன்னு சொல்லியிருக்கா..’
“அவர் இட்ஸால்ரைட்னு சொன்னாராக்கும்”
“இட்ஸால்ரைட் சொன்னதென்னவோ வாஸ்தவம்..ஆனா கூடவே ஒரு மெமோவும் மெய்ல் பண்ணிட்டார்!”
“அடப்பாவமே..சரி சரி.. நீ எதுக்குச் சொல்றேன்னு புரியுது..மறையுடையாய்க்காகத் தானே..’
“அதுக்கே தான்..வா..போய்ப் பார்க்கலாம்..”
*
மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
*
“திரு நெடுங்களத்தில் உறையும் இறைவனே..
உன்னை இகவாழ்வில் பல குறைகள் கொண்டவர்கள், “ வேதங்களை உடைமையாய் க் கொண்டவனே, புலித் தோலினால் செய்யப்பட்ட ஆடை அணிந்தவனே, அழகிய நீண்ட ஜடாமுடிமேல் வளரும் இளம் பிறையை அணிந்த ஈசனே, உனது தலைக்கோலம் எவ்வளவு எழிற்கோலம் அன்றோ..” என்றெல்லாம் உன்னை வாழ்த்திப் போற்றினாலும் அவர்களீன் குறைகளை மன்னித்து அருளுவாய்..
அப்படிப் பட்ட நீ, உன்னைத்தவிர வேறு தெய்வமில்லை.. உனது பாதமே சரண் என்று இருக்கும் அடியவர்களின் துன்பங்களைத் துடைத்து அருள்புரிவாயாக..”
*
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks