-
26th April 2015, 02:19 PM
#1
Senior Member
Senior Hubber
Originally Posted by
chinnakkannan
Face bookla kidaitha ponmozhi:
Open your "Eye" and close your "I"
இதற்கு வெண்பா எழுதிப் பார்த்தேன்..
நானை மறைத்தங்கு நல்லவிழி தான் திறந்தால்
வீணையொலி மீட்டும் உளம்
நானொத்த எண்ணங்கள் நன்றாகத் தான்மறந்தே
மீனொத்த கண்கள் திறந்துவிடு - தேனொத்தே
வாழ்விலே உந்தன் வளம்பெருகி தோற்றமதும்
ஆழ்ந்தே அழகாகும் ஆம்
கிறுக்கனின் மொழியில்
உன்னை துறந்து உள்ளம் திறந்தால்
உலகம் உன் வசம்.
-
கிறுக்கன்
Last edited by kirukan; 26th April 2015 at 02:26 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th April 2015 02:19 PM
# ADS
Circuit advertisement
-
24th April 2015, 01:43 PM
#2
Senior Member
Senior Hubber
காதலோடு கண்ணை நோக்கி கவர்ந்தனள் காரிகை
தூய நெஞ்சிவன் கவிதை வரைய தூக்கினான் தூரிகை
வெற்றி கிட்டி அவளை சேரின் முழக்குவான் பேரிகை
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th April 2015, 02:12 PM
#3
Senior Member
Senior Hubber
ச், ப், த் வர வேண்டிய இடத்தில் அதை உபயோகித்து எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்.எங்கு எப்படி உபயோக படுத்த வேண்டும் என்பது எனக்கும் சரியாக தெரியாது.சி.க மற்றும் பிபி அவர்கள் உதவ முடியும் என நம்புகிறேன்.
Note: ithu kurai kooral alla meruketral
-
கிறுக்கன்
-
26th April 2015, 02:21 PM
#4
Senior Member
Senior Hubber
உன்னைத் துறந்து.. என்று வரும் கி.. அவர்களே
-
26th April 2015, 02:30 PM
#5
Senior Member
Senior Hubber
Originally Posted by
chinnakkannan
உன்னைத் துறந்து.. என்று வரும் கி.. அவர்களே
athil santhegam vanthu than googlai nadinen varthaiyai parthen porulai parkka villai.Nandri si.ka avargale... matri vitten
yosithal athuvum sariyagathan irukirathu...unnai kinaru pol thondi ullam thiranthaal....
-
கிறுக்கன்
-
-
27th April 2015, 08:52 AM
#6
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
9th May 2015, 06:57 PM
#7
Senior Member
Senior Hubber
மறந்தே போகினேன் கவிதை எழுத
திறந்தே கிடக்கிற திரியாய் இதுவும்
இறந்தே போகும் இப்படியே விட்டால்
பிறந்தே வந்ததே கவிதையும் இதுகண்டு
எதையே எழுதுவேன் கவிதையாய் இங்கு
இதையே எழுதலாம் பார்த்து விட்டு
கதையை அள்ளினால் கலாய்ப்பார் இங்கே
வதைக்காதே எமையெவென்று வைவார் உளர்
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
5th June 2015, 02:36 PM
#8
Senior Member
Senior Hubber
கவிதையொன்றை எடுத்து விடு
கருவேயில்லைஎன்ற கவலை எடு
அவியலாயும் இருக்கலாம் நினைத்து இடு
உருவேயில்லாமல் கிடைக்கவே இரவு படு
தவிப்பேயில்லாமல் வார்த்தை குடு
குருடனும் கேட்டால் இடுவான் மடு
குவித்ததைஎல்லாம் மறக்காமல் சுடு
அருமையாய் இல்லை என்போரை தடு.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
5th June 2015, 03:20 PM
#9
Senior Member
Senior Hubber
சரி சரி அழாதீங்க..
கல்லென்றேன் இல்லை கலையென்றாய் காலத்தில்
...நில்லாது நிற்கும் எனச்சொல்லி என்னையே
செல்லென்றாய் சீரைச் தெரியாத செல்வனென்றாய்
..சேல்விழிகள் சிவக்க ஏதேதோ பேசிநின்றாய்
மெல்லநானும் மேவி அணைக்கவும் மிரள்விழிகள்
..மேன்மேலும் அனலைக் கக்கிவிடப் பார்க்கின்றாய்
கல்லென்றேன் உண்மை கற்றுவிடு சிற்பத்தை
..கண்களிலே வடிக்கும் கலையாலே எனச்சொன்னேன்..
*
ஒங்களை மாதிரி நானும் எழுதிட்டேன்
*
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th June 2015, 11:42 PM
#10
Senior Member
Senior Hubber
**
சிந்து வருவதற்கு – ஷண்முகா
..சிந்தை வரவில்லையே
விந்தைக் கற்பனைகள் – மனதில்
..வித்தை கூட்டுதய்யா
சொந்தக் காரியவள் – அழகை
…சொக்கி வார்ப்பதற்கு
பந்தக் காலிட்டுக் – கற்பனை
வாயிலில் தேக்கிவைத்தேன்
என்ன எழுதுவது – ஷண்முகா
…எனக்கே சொல்லிவிடு
வண்ண மயிலழகை – நானும்
வார்த்தையில் மெல்லுதற்கு
கன்னக் குழியிங்கே – கண்கள்
சிமிட்டிக் காட்டுதய்யா
எண்ணக் குரலினையே – ஓசை
இயல்பாய்க் கூட்டுதய்யா..
பண்ணாய் இசைத்திடவே – பல
பாடல் வகையுண்டே
வண்ணக் கவியழகாய் – சிந்து
திண்ணமாய் நிற்குதய்யா
கண்கள் திறந்துவிடில் – கற்பனை
கொட்டும் அருவியென
உண்மை சொல்லிவிடு – ஷண்முகா
உணர்ந்தே பாடல்நெய்வேன்..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks