*
பதினொன்றாம் பாடல் (முடிபு)

*

“நான் நன்றி சொல்வேன்..”

“சரி..ஏன் பாதிலேயே நிறுத்திட்ட என் கண்களுக்குன்னும் வெச்சுக்க வேண்டியது தானே..”

“இல்லை மன்ச்சு..இந்த நன்றி என் நண்பருக்கு. இதை எழுதத் தூண்டியவருக்கு..அவரை என்னிடம் சொல்லச் செய்தவன் பரமன் அவனுக்கு..

“ஸோ ஒட்டுக்க தாங்க்ஸ்ங்கற..:

:யா..

பாழ்மனமாய்ப் பரிதவித்துப் பலபாவம் செய்தவன்
..பகட்டுடனே பலவிதமாய் பரிகசித்து நின்றவன்
காழ்ப்புணர்ச்சி கோபமென பலவுணர்வு கொண்டுதான்
..கட்டவிழ்த்து நின்றவனைக் கொண்டழைத்த நண்பரும்
ஆழ்மனதில் ஆடியாடி உறங்கிநின்ற ஜோதியை
..அழகுடனே ஊக்குவித்து எழுதவைத்த மாண்பினை
கோள்பதிகம் பலவுரைத்த அடியவராம் பிள்ளைக்கும்..
..கொண்டிடுவேன் நன்றிகளை எந்தவெந்த நாளுமே..

:ஸோ இந்தப் பாட்டில என்ன சொல்றார் ஞான சம்பந்தர்.. இந்தக் கோளாறு பதிகம் படிச்சா ஏற்படற நன்மைகளைச் சொல்றாரா..”

“:ஆமாம் மனசாட்சி.. வா, போய்ப் பார்க்கலாம்..”

*

தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.

அடர்த்தியான தேனைக் கொண்ட அழகிய பல மலர்களை உடைய நந்தவனங்களைக் கொண்டதும் க்ரும்பும், செந்நெல் நிறைந்ததும் பொன்போல் ஒளிர்வதும், நான்முகனாகிய பிரம்மன் வழிபட்ட காரணத்தால்
பிரமா புரம் என்னும்பேர் பெற்றதுமான சீகாழி என்ற ஊரில் தோன்றி அபர ஞானம் பர ஞானம் ஆகிய இருவகை ஞானங்களையும் உணர்ந்த ஞான சம்பந்தனாகிய நான், தாமே வந்து சம்பவங்கள் உண்டு பண்ணும் நவக் கிரகங்கள், நாள் நட்சத்திரங்கள் போன்றவை அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இந்தப் பதிகத்தைப் படிப்பவர்களுக்கு என்ன ஆகும்..

என்ன ஆகுமென்றால் வானுலகில் அவர்களுக்கு இனிய மோட்சமும் அழகிய பதவியும் பெற்று அரசு புரிவர்.இது நமது ஆணை..

*

ஈசனடி போற்றி..

சிவமயமே என்றும் சிவமயமே.. நன்றி.

. வாசக் தோஷ ஷந்தவ்யஹ..