http://i67.tinypic.com/15n6ptj.jpg
Printable View
#இஸ்லாமிய #சகோதர #சகோதரிகளுக்கு #ரம்ஜான் #வாழ்த்துக்கள்
குலோபகாவலி/ அலிபாவும் 40 திருடர்களும்/
பாக்தாத் திருடன்/ ராஜா தேசிங்கு / சிரித்து வாழவேண்டும் என்கிற
படங்களிலும்
இஸ்லாமியப் பெயர்களையும், அடையாளங்களையும் தாங்கி
பாத்திரத்தோடு அவர் ஒன்றி
நடித்திருப்பது கவனிக்கத் தக்கதாக இருக்கும்.
அவர் தொப்பி அணியும் அழகே அலாதியாக இருக்கும்.
இஸ்லாத்தை மாசுபடுத்தாத வகையில்
கவனமும் செய்திருப்பார்..
குறிப்பாய் ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது
குலோபகாவலி படத்தின் துவக்கம்
ஃபஜருக்கு (அதிகாலை நேரத் தொழுகை) பாங்கு சொல்வதாக இருக்கும்.
சினிமாவில்,
எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்த காலத்திலும்
அதற்குப் பிறகான காலத்திலும் பல நடிகர்கள்
இஸ்லாமிய வேடம் ஏற்றிருக்கிறார்கள் என்றாலும்
எம்.ஜி.ஆர். அளவுக்கு இஸ்லாமியப் பாத்திரங்களோடு
ஒன்றிப் போனார்கள் என சொல்ல முடியாது.
உண்டு.
1001 இரவுகள்
பெர்ஷிய மொழியின் செறிவு கொண்ட இலக்கியம்!
ஈரானுக்கு பெருமைச் சேர்த்த
இலக்கிய கலைவடிவங்களில் இதுவும் ஒன்று.
அந்த செறிவு கொண்ட கதைகள்
ஆங்கிலத்தில் மொழிமாற்றம் ஆனபோது
உலக இலக்கிய ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
அன்றைய ஹாலிவுட்
அதை காசாக்கத் திட்டமிட்டது.
1001 இரவுகள்
பல திரைப்படங்களாக வெளிவரவும் துவங்கியது.
உலக மக்களின், மேலான வரவேற்பால்
அப்படங்கள் அமோக வெற்றிப் பெற்றது.
தமிழ்ப் பட முதலாளிகள்
அந்த வெற்றியை… அந்தக் காசை…
தாங்களும் அடைய விரும்ப…
எம்.ஜி.ஆரை முன் நிறுத்தி
குலோபகாவலி
அலிபாவும் 40 திருடர்களும்
பாக்தாத் திருடன் என தயாரித்தார்கள்.
எப்பவும் எங்கேயும் முதலாளிகளின் குறி தப்புவதே இல்லை.
வெற்றியையும் காசையும் அள்ளினார்கள்.
#வாத்தியாருக்கு #கிட்டியது #என்னவோ
#வெறும் #புகழ் மட்டும்தான்.
கூடுதலாக…
#ஒட்டுமொத்த #இஸ்லாமியர்களின் #நெஞ்சத்தில்
#நிறந்தரஇடம்! முகநூலில் பாலு சார்............ Thanks wa.,
தென்ஆற்காடு மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் புரட்சித்தலைவர் சென்றார். வழியில் பல இடங்களில் மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு, நிகழ்ச்சிக்கு தாமதமாகவே சென்றார். அவசரப் பணிகள் காரணமாக, குறித்த நேரத்துக்குள் அவர் சென்னை திரும்பி யாக வேண்டும். நிகழ்ச்சியை முடித் துக் கொண்டு காரில் ஏறிப் புறப்படும் முன் உதவியாளர்களைப் பார்த்து, ‘‘சாப்பிட்டீர்களா?’’ என்று கேட்டார். எல் லோரும் ஒரே குரலில் ‘‘சாப்பிட்டு விட்டோம்’’ என்றனர்.
காரின் சக்கரங்கள் சென்னையை நோக்கி சுழலத் தொடங்கின. நகரத்தைக் கடந்து சாலையில் கார் வேகமாகச் செல்கிறது. திடீரென, ‘‘காரை ஓரமாக நிறுத்து’’ என்று புரட்சித்தலைவரின் குரல் கடுமையாக ஒலிக் கிறது. ‘ஏன்?’ என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தாலும், புரட்சித்தலைவர் சொன்னதைச் செய்தே பழக்கப் பட்ட உதவியாளர் கள் காரணம் கேட்க வில்லை. என்றாலும், அவரது குரலில் இருந்த கடுமை அவர்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது. சாலையோரமாக கார் நின்றது.
உதவியாளர்களைப் பார்த்து உரிமை கலந்த கோபத்தோடு, ‘‘உங்கள் வாடிய முகங்களைப் பார்த்தாலே நீங்கள் எல்லோரும் சாப்பிடவில்லை என்று தெரிகிறது. நான் விரைவில் சென்னை திரும்ப வேண்டும் என்பதற்காக, என்னிடம் சாப்பிட்டதாக சொல்லி யிருக்கிறீர்கள். ஏன் பொய் சொல்கிறீர்கள்?’’ என்று இரைந்தார். குட்டு வெளிப்பட்டதில் அந்த உண்மையான பணியாளர்கள் ஊமைகளாய் நின்றனர்.
அவர்களது நிலைமையை தலைவர் புரிந்து கொண்டார். அவரது குரலில் இருந்த தந்தையின் கண்டிப்பு, இப்போது தாயின் கருணையாய் மாறியது. ‘‘இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் கள் என்னை வரவேற்று உபசரிக்கும் ஆர்வத்தில் உங்களை கவனித்திருக்க முடியாது. நான் புறப்படத் தாமத மாகிவிடும் என்பதற்காக சாப்பிட்டுவிட்ட தாக நீங்கள் பொய் சொன்னால் எனக்குத் தெரியாதா? நான் சந்தேகப் பட்டுதான் அங்கிருந்தவர் களிடம் இட்லி களை பொட்டலங்களாக கட்டச்சொல்லி வாங்கி வந்தேன். மர நிழலில் போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்’’ என்று சொல்லி, தான் கொண்டுவந்த பார்சலை எடுத்து உதவியாளர்களிடம் கொடுத்தார்.
நெகிழ்ந்துபோன உதவியாளர்கள், புரட்சித்தலைவரிடம் இருந்து பார்சலை வாங்கிக் கொண்டு ஜமுக்காளத்தை விரித்து அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர். நெய் மணக்கும் காரமான மிளகாய்ப் பொடி தடவிய இட்லி அவர்களுக்கு அமிர்தமாய் இனித்தது. சீக்கிரம் புறப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இட்லிகளை விழுங் கியவர்களில் ஒருவருக்கு விக்கல். புரட்சித்தலைவரிடம் இருந்து பார்சலை வாங்கிவந்த அவசரத்தில் தண்ணீரை எடுத்துவர அவர்கள் மறந்து விட்டனர்.
அப்போது, தண்ணீர் வைத்திருந்த ஜாடியையும் டம்ளர்களையும் ஏந்தியபடி இரு கரங்கள் நீள்கின்றன. உதவியாளர்கள் நிமிர்ந்து பார்த்தால், புரட்சித்தலைவவரேதான்! எல்லோருக்கும் டம்ளர்களில் பொறுமையாக தண்ணீரை ஊற்றி வைக்கிறார். அவரை உப சரிக்க லட்சோப லட்சம் பேர் காத்திருக்கும்போது, அந்த மாமனிதர் தங்களுக்கு பசியாற உணவு தந்து, தாகம் தீர்க்க தண்ணீரும் கொடுத்து பணி செய்வதைக் கண்ட உதவியாளர்களின் கண்கள் பனித்தன.
எம்.ஜி.ஆர். தலைவர் மட்டுமல்ல; தொண்டருக்கும் தொண்டர்............... Thanks wa.,
சென்னை அகஸ்தியா 70MM A/C யில் 7/6/ 2019 வரும் வெள்ளி முதல் மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை தினசரி 3 /6 மணி காட்சிகள் அனைத்து MGR பக்தர்களும் தவறாமல் கலந்து கொண்டு தரிசிக்கமாறு வேண்டிக்கொள்கிறோம் MGR பக்தன் ராமு............ Thanks wa.,
எம் ஜி ஆர் ஆட்சி பொற்க்காலம்
எம்ஜிஆர் தன் ஆட்சியில் எந்த அமைப்புக்கும் தன் பெயர் சூட்டியது இல்லை
ஒரு அங்குலம் நிலம் வாங்கியதில்லை
ஊழல் அற்ற தன் பொருளை மற்றவர்க்கு கொடுத்த உத்தம முதல்வர் எம் ஜி ஆர்
தண்ணீர் மின்சாரம் தட்டுபாடு இல்லா ஆட்சி எம் ஜி ஆர் ஆட்சி
விலைவாசி கட்டுபாடு ரேஷன் அனைத்து பொருளும் நியாயமாக வழங்கிய ஆட்சி எம் ஜி ஆர் ஆட்சி
நிலையான விலை அரிசி விலை எம் ஜி ஆர் ஆட்சி முழுவதும்
சட்ட ஒழங்கு சீர் எம் ஜி ஆர் ஆட்சியில்
தொழில் கல்வி சிறப்படைந்தது எம ஜி ஆர் ஆட்சியில்
கிருஷ்ணா நீர் கொண்டுவந்து சென்னை நீர் தட்டுபாடு தீர்த்தது எம் ஜி ஆர் ஆட்சி
கிராமம் நகரமாகியது தன்னிறைவு திடடம் எம் ஜி ஆர் ஆட்சியில்
எம் ஜி ஆர் போல் ஊழல் அற்ற சுயநலம் அற்ற தற்பெருமை கொள்ளா திறமைமிக்க வீரம்மிக்க மனிதநேயம் உள்ள வள்ளல் ஆட்சி இனி எம் ஜி ஆர் வந்து ஆண்டால் மட்டுமே கிடைக்கும்
தெய்வமாக நல்வழி காட்டுவார் எம் ஜி ஆர் என்ற நம்பிக்கையோடு தமிழக மக்கள்
வாழ்க எம் .ஜி .ஆர்., புகழ்............ Thanks wa.,
சூப்பர் போஸ்
தலைவர் கால்மேல் கால் போட்டபடி அமர்ந்திருக்கும் காட்சிகளைப் பார்ப்பது அரிது. அவருக்கு அது பிடிக்காது...!
இருந்த போதும் 'அன்பே வா' படத்தில் பாத்திரத்தின் தன்மை அறிந்து பணக்கார தோரணையை வெளிப்படுத்தும் விதத்தில் இப்படி ஒரு காட்சி அவசியம் என்ற படத்தின் இயக்குனரின் அன்பான வேண்டுகோளுக்காக...
தலைவரின் அட்டகாசமான தோற்றம்...! முகநூலில் விஜய் லோகு.............. Thanks wa.,
#copy
1978-ம் ஆண்டு கருணாநிதி ஆத்திரத்தில் எம்ஜிஆரை "மலையாளி" என்று சொல்லி
விடுகிறார். இதனால் அதிர்ச்சியுற்ற எம்ஜிஆர் சில அறிஞர்களை அழைத்து தனது பூர்வீகம் என்னவென்று கண்டுபிடியுங்கள் என்று கூறுகிறார். ஆய்வு செய்த அந்த அறிஞர் எம்ஜிஆரின் முன்னோர் "மன்றாடியர்" சாதியைச் சேர்ந்தவர்கள்
என்றும் அவர்கள் கோவை அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் பிழைப்பதற்காக கேரளா சென்று பின்னர் அங்கிருந்து இலங்கை சென்று தமிழகம் வந்ததாக கூறினார். பின்னர், கருணாநிதியின் பூர்வீகத்தை ஆராயுமாறு அவர்களிடம் கூறினார். அவர்கள் கருணாநிதியின் பூர்வீகம் ஆந்திரா என்றும்
அவர்கள் முதலில் பிழைப்புக்காக மஹாராஷ்டிரா சென்று பின்னர் அங்கிருந்து தமிழகம் வந்ததாக சொன்னார்கள். இதனை அறிந்த கருணாநிதி மன்றாடியார் சாதித் தலைவர்களை அணுகி எம்ஜிஆர் தங்கள் சாதியைச் சேர்ந்தவர் இல்லை என்று அறிவிக்க கோரினார். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ய மறுத்து விட்டார்கள்.
அதற்கு காரணம் எம்ஜிஆர் மன்றாடியார் சாதியைச் சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்துச் சொன்னதே அவர்கள்தான். 1978-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி மதுரை தமிழ்ச் சங்க விழாவில் பேசிய எம்ஜிஆர் இந்தத் தகவல்களை சொல்லி இருக்கிறார். இது செய்தியாக மாலை முரசு பத்திரிகையில் வந்துள்ளது. இந்த நிகழ்வுக்குப் பின்னர் கருணாநிதி மலையாளி என்ற பிரச்சனையை எழுப்பவே இல்லை. இந்த பத்திரை ஸ்கேன் பிரதி எனது முகநூல் பதிவில் இருந்தது.
தேடிப்பார்த்தால் கிடைக்கும்.
இது அல்லாமல் கருணாநிதியின் முன்னோர் வரலாறு குறித்து தஞ்சையைச் சேர்ந்த
ஒரு ஆய்வாளர் சில தகவல்களை சொன்னார். கருணாநிதியின் சாதி என்னவென்று
தெரியவில்லை. ஆனால் அவர்கள் தமிழகத்தில் "சின்னமேளம்" என்று அழைக்கப்பட்டனர். அதற்கு காரணம், அவர்கள் பயன்படுத்திய "உறுமி மேளம்"
ஆகும். கருணாநிதியின் முன்னோர் தமிழகத்திற்கு பிழைப்புத் தேடி வந்த காலத்தில் தமிழக ஆலயங்களில் பெரிய மேளமான "மிருதங்கம்" மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக அவர்களுக்கு எந்தக் கோவிலிலும்
வேலை கிடைக்க வில்லை.
இந்த நிலையில் அவர்கள் திருவாரூர் சென்று அங்குள்ள ஆலய தர்ம கர்த்தாவிடம்
கொல்லைப்புற அணுகுமுறையின் மூலமாக வேலை கேட்கிறார்கள். அப்போது அவர்
பெரிய மேளம் கற்றுக் கொண்டு வாருங்கள் வேலை தருகிறோம் என்று சொல்லி இருக்கிறார். அவர்களும் அவ்வாறே செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் அங்கு வேலை பெற்று வாழ்ந்து வந்தனர். அந்த வகையில் கருணாநிதியின் தந்தைக்கு
கூலி பாக்கியாக 8 மூட்டை நெல் தரவேண்டியது இன்னமும் பதிவேடுகளில் இருப்பதாகவும், கருணாநிதி அதை ஏற்கவோ மறுக்கவோ இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
("தமிழின பாதுகாவலர் என்று பெயர் பெற்ற கருணாநிதி ஒரு தெலுங்கர்.
கருணாநிதியின் முன்னோர்கள் ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தைச்
சேர்ந்தவர்கள்." கருணாநிதி பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் என்று தெலுங்கு
என்டிவி வெளியிட்டுள்ள செய்தித் தொகுப்பு.
https://www.youtube.com/watch?v=dxqWM5d6mfw
கருணாநிதி ஒரு தெலுகுவாடு. அவரது தாய்மொழி தெலுங்கு.
-யோயோ தெலுங்கு டிவி வெளியிட்டுள்ள செய்தித் தொகுப்பு.
https://www.youtube.com/watch?v=XsCvMawDT8k)................... Thanks wa.,
ஊமையன் கோட்டை - புரட்சித்தலைவர்
கவிஞர் கண்ணதாசன் தயாரிப்பில் புரட்சித்தலைவர் நடிப்பில் உருவாக வேண்டிய திரைக்காவியம் "ஊமையன் கோட்டை"[ சில காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது தகவல்]. அந்த காவியத்துக்காக படத்துக்காக "ஒலிப்பதிவு" செய்யப்பட்ட பாடல் "சாந்து பொட்டு தளதளக்க" - பி. லீலா, ஜமுனா ராணி பாடியது.
சில "தவிர்க்கமுடியாத காரணத்துக்காக" கைவிடப்பட்ட அந்த காவியம் [ எப்போதும் போல நியாயம் தலைவர் பக்கம் தான்] இந்த பாடல் கவிஞர் கண்ணதாசன் தயாரித்த சிவகெங்கைச் சீமை என்ற படத்தில் இடம்பெற்றது.
அந்த பாடல் உங்கள் பார்வைக்கு:https://m.youtube.com/watch?v=kCuwo2of1JI............... Thanks wa.,