அசத்தல் ஆர்ட்டில் ஆண்டவன் 'கர்ணன்'
http://fc03.deviantart.net/fs71/i/20...fs-d5cu1t2.png
Printable View
அசத்தல் ஆர்ட்டில் ஆண்டவன் 'கர்ணன்'
http://fc03.deviantart.net/fs71/i/20...fs-d5cu1t2.png
http://tamilmoviesongs.net/wp-conten...ndararajan.jpg
நம்முடைய துயரத்தைக் கூற வார்த்தைகள் இல்லை. தமிழ்த்திரையுலகை தாங்கிப் பிடித்த தூண் சரிந்து விட்டது. தமிழ் சினிமா என்றால் டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் பங்கு தான் கண் முன் நிற்கிறது. 91வயது வரை அவர் வாழ்ந்தது நமக்கு ஒரு புறம் ஆறுதல் என்பது தான் சொல்லிக் கொள்ள முடியும். அவரை இழந்து வாடுவது அவர் குடும்பம் மட்டுமல்ல, தமிழ்த் திரையுலகமே... அதில் ரசிகர்கள் என்கிற முறையில் நாமும் அடங்குவோம்.Quote:
from Maalaimalar website:
சென்னை, மே 25-
பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91. உடல்நல குறைவு காரணமாக கடந்த 12-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 19-ந்தேதி வீடு திரும்பினார். மூச்சுக் கோளாறுக்கு வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
1923ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மீனாட்சி அய்யங்காரின் மகனாக மதுரையில் பிறந்த டி.எம். சவுந்தரராஜன், பிரபல இசை வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்காரிடம் இசை பயிற்சி பெற்று பல ஆண்டுகளாக மேடை கச்சேரி செய்து வந்தார்.
1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமான டி.எம். சவுந்தரராஜன் தனது கம்பீர குரலின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.
2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ஏராளமான மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார்.
தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார்.
எந்த நடிகருக்காக பாடினாரோ, அந்த நடிகரின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலைநிறுத்தும் ஆற்றல் டி.எம். சவுந்தரராஜனுக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.
வீரம், காதல், சோகம், துள்ளல், நையாண்டி, தத்துவம் மற்றும் கிராமிய ரசம் சொட்டும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜன் இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்காகவும் பாடியுள்ளார்.
2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த டி.எம்.சவுந்தரராஜனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
நமக்கு நாமே ஆறுதல் கூறிக் கொள்வது தான் நம்மால் முடியும். அவர் குரலிலேயே ...
இரவல் தந்தவன் கேட்கின்றான் ... அதை
இல்லையென்றால் அவன் விடுவானா
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா..
நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகமாடும் கலைஞனடா
http://sphotos-a.xx.fbcdn.net/hphoto...90824845_n.jpg
http://i1.ytimg.com/vi/h--sHLpguvA/hqdefault.jpg
பாடகர் திலகம் மறைந்தார். இசை தன் புதல்வனை இழந்தது. நீ மறைந்தாலும் உன் குரல் வித்தைகள், ஜாலங்கள் மறையுமோ!
இருமாதங்களுக்கு முன் கூட சுறுசுறுப்பாய் என் தெய்வத்தை வசந்த மாளிகையில் காண ஆல்பர்ட்டுக்கு வந்தாயே! ரசிகரோடு ரசிகராகத்தான் படம் பார்ப்பேன் என்று அவ்வாறே அமர்ந்து உன் குரலுக்கு என் தலைவன் வாயசைத்ததைக் கண்டு பரவசமடைந்தாயே!
அதற்குள் ஏன் பிரிந்து விட்டாய்?
திலகங்களுக்குத் தக்கவாறு தித்திக்கும் தமிழை உச்சரித்து மாயாஜாலங்கள் புரிந்தவனே!
உடலை மட்டுமே பிரிந்துள்ளோம். உன் குரலுடனேயே வாழ்வோம்.
அன்னாரைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்திற்கும், ரசிக இதயங்களுக்கும் நடிகர் திலகம் திரியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாட்டும் நானே! பாவமும் நானே!
http://i1.ytimg.com/vi/twfWvRYnJTU/hqdefault.jpghttp://i1.ytimg.com/vi/xg_hBWlR3h0/h...jpg?feature=og
இனி இப்படி உன்னை எங்கே காணப் போகிறோம்?
http://i1.ytimg.com/vi/PhJiD2DzGY0/hqdefault.jpg
'அருணகிரிநாதர்' படத்தில் திரு.T.M.S அவர்கள்.
http://i.imgur.com/9werq.jpghttp://i.imgur.com/wQdrO.jpg
http://i.imgur.com/8kI5O.jpghttp://i.imgur.com/Ftthm.jpg
'பட்டினத்தார்' படப்பிடிப்பில்.
http://directorksomu.com/gallery/fil...thar/gal_1.jpg
'பட்டினத்தார்' படப்பிடிப்பில்.
http://directorksomu.com/gallery/fil...thar/gal_3.jpg
'கல்லும் கனியாகும்'.திரைப்படத்தில்.
http://i3.ytimg.com/vi/Bp8kuO1Dq-o/hqdefault.jpg
'கல்லும் கனியாகும்' திரைப்படத்தில் மிக மிக அபூர்வ அற்புதப் பாடலான
"கை விரலில் பிறந்தது நாதம்.....என் குரலில் வளர்ந்தது கீதம்"....
"உலகமெல்லாம் என் இசை கேட்கும் ....
நல்ல உள்ளமெல்லாம் அதை வரவேற்கும்".....
கண்களில் கண்ணீரை பெருகச் செய்யும் டி.எம்.எஸ்ஸின் மெய் சிலிர்க்க வைக்கும் பாடல். அவருடைய வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாடல்.
http://www.youtube.com/watch?feature...&v=Bp8kuO1Dq-o
மற்றுமொரு பாடல் அதே 'கல்லும் கனியாகும்' திரைப்படத்தில்.
"எங்கே நான் வாழ்ந்தாலும் என் உயிரோ பாடலிலே...
பாட்டெல்லாம் உனக்காக பாடுகிறேன் எந்நாளும்...
பாடுகிறேன் என்னுயிரே"...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=wLcddb8O4M4
"நான் கடவுளைக் கண்டேன்...
என் குழந்தை வடிவிலே"...
http://www.youtube.com/watch?v=pbqQHFzDUOE&feature=player_detailpage
மக்கள் திலகம் மறைந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்பிறகு,
தலைவர் மறைந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு,
அவர்களின் பாடல் குரல் இன்று இயற்கை எய்தியது.
அன்னாருக்கு நமது அஞ்சலியை அற்புதமாக செலுத்தியிருக்கும்
நண்பர்கள் ராகவேந்தர்,வாசு விற்கு நன்றி.
Sounduள்ளவரை சௌந்தரராஜன் இருப்பார்.
நடிகர்திலகத்திற்கென்றே பிறந்து வளர்ந்து வாழ்ந்த குரல் ,தன்னை மட்டும் வாழ வைத்து கொண்டு ,தன்னை வாழ வைத்தவரை கை விட்டு விட்டது. நான் என்ன சொல்ல போகிறேன்?எத்தனை rafi ,kishore ,S .P .B ,P .B .S வந்தாலும் ஒரு T M S T M S தான். கம்பீரம்,கார்வை,பாவம்,அந்த காந்தர்வ குரல் lower முதல் mid -Octave(Bass - மடி மீது தலை வைத்து, உன் கண்ணில் நீர் , baritone -யாரந்த நிலவு,மலர்ந்தும் மலராத,தூங்காத கண்ணென்று) வரை அப்படியே சொக்க வைக்கும். சில fine musical notes miss ஆனால்தான் என்ன,இவர் உரை நடை பேசினாலும் மற்றவர்களை விட இனிமையே.
அவரை இழந்து வாடும் எனக்கு முதலில் ஆறுதல் சொல்லி கொண்டு , அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.
ஒரு முறை வாமனன் சாரிடம் இவரை பார்க்கும் ஆசையை தெரிவித்தேன். இல்லைப்பா இவரு கொஞ்சம் ஒரு மாதிரி. சமயம் பார்த்து சொல்றேன் என்றார். இனி சொர்க்கத்தில் சந்தித்தால்தான் .
எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய அற்புதமான bio graphy T .M .S ஒரு பண்பாட்டு சரிதம் .எழுதியவர்-வாமனன்.
தமிழ்
தமி
ஆகி விட்டது.
The Performance Era of Tamil Cinema Spans for about 49 years.
Tamil Films have undergone a complete transition from a music dominated presentation to Performance dominated Presentation that had music as one component.
Thanks to the advent of Nadigar Thilagam Sivaji Ganesan. His entry into films has completely changed the way things were looked at in those days - Prior To Sivaji.
All Schools of Talents were mastered by one individual named Sivaji Ganesan. He taught Tamil Cinema how to speak the way anything to be spoken, he demonstrated the art of expression and conveying the multiple dimensions-of-feeling of a human relationship, Be it is a husband, lover, brother, uncle, stepfather, young turk ....what not...what not !
Though, there were many veterans who had the capability to showcase...were experts of either one domain or couple of domains and it would not be wrong to mention NOT ALL DOMAINS MASTERED.
Nadigar Thilagam, the first and the only actor who took cinema to the next level in-terms of portrayal even though there were many who out of Professional Jealousy & inferiority complex ensured Betrayal from time to time .
Nadigar Thilagam, the only actor who took Tamil cinema to an international level and not just taking it to the level BUT also ensured it won its distinction and mention !!
It should be admitted that Winning THE BEST ACTOR in the whole of ASIA-AFRO CONTINENT is not just an easy task...Amidst, so many foreign films and better exposed seasoned performance of actors from across the globe, if Nadigar Thilagam could win it WITHIN JUST 7 Years of his coming into the film world that too for his 55th film, am sure, every individual if unbiased and neutral, will accept his capability.
The Second International Distinction for Nadigar Thilagam was in 1962, when he was invited by the Govt of John. F.Kennedy , the then president of United States of America Ambassador representing the Indo-US Arts & Culture Exchange Programme and was made the ONE DAY MAYOR for the City of CAIRO and presented with the GOLDEN KEY OF CAIRO. It is 2013 now & till date NO INDIAN ACTOR received this honor. The Other Indian who was honored with this distinction was Our Indian Prime Minister Pandit Shri. Jawaharlal Nehru.
NT proved he is not just equated with the word famous Regionally (or) Nationally BUT ALSO ACROSS ASIA, US & EUROPE much..much to the ENVY OF OTHERS !!!
This did make other actors / politicians who were always backstabbing him at appropriate opportunities to fume more and more on his professional achievements !!!
The Biggest Achievement which NO OTHER ACTOR could achieve was that making a Rationalist leader who hated Cinema & Actors (whom he addressed as Koothaadi's) to get mesmerized with his performance to the extent of declaring and conferring him on stage the eternal title of "Sivaji". Such was his calibre.
Tamilnadu history may have different views interms of their versions of Nadigar Thilagam Performance that's a different story entangled with political biases, yet all Tamilians at the corner of their heart will confess and feel guilty of their low esteem.
Nadigar Thilagam had no complaints on this yet if we think for a while, we all will realise that POLITICIANS WERE BETTER ACTORS than ACTORS OF ALL AGES !!
Nadigar Thilagam - ANYONE CAN LIKE HIM - ANYONE CAN HATE HIM - BUT NONE CAN IGNORE HIM !!!!
During his period, NO ACTOR's History (or) Political Involvement gets completed without mentioning NADIGAR THILAGAM..! Such was his prowess !!
Nadigar Thilagam - 1952 to 2001 - The Golden years of Cinema !
TMS. Thaen Madhuram Sindhum (TMS) kuralukku sondhakkarar. The Singing Voice of NT like Rafi for Shammi Kapoor, Mukesh for Raj Kapoor and Kishore Kumar for Rajesh Kanna and AMRaja/PBS for GG. But he was unique in modifying his NT base voice to suit MGR or Jaishankar or Ravichandran! Long live TMS fame! Our sincere condolences to this doyen of Tamil Cinema's Play Back history. Unforgettable 'Engae Nimmadhi', Aaru Maname Aaru...... tear jerkers!
திரு T M சௌந்தரராஜன் அவர்கள் நம்மிடையே உயிருடன் இல்லை என்றாலும் அவருடைய குரல் இந்த புவி உள்ளவரை நிலைத்து இருக்கும். நடிகர் திலகத்துடன் திரு சௌந்தரராஜன் அவர்களுடைய குரலும் நடித்தது என்றால் அது மிகை அல்ல !
மக்கள் திலகம் அவர்கள் அரியணை ஏற முக்கிய ஒரு காரணம் திரு.சௌந்தரராஜன் அவர்களது குரல் பட்டிதொட்டி எங்கும் சென்றடைந்ததும் ஒன்று என்றால் அது அனைவரும் ஒத்துகொள்ளகூடிய ஒரு விஷயமாகும். அந்த அளவிற்கு அவருடைய குரலின் வலிமை ...நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்ற பாடலாகட்டும்...தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்....ஓடி..ஓடி..உழைக்கணும்...ஊருக்கெல்ல ாம் கொடுக்கணும்..மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும்...திருடாதே...பாப்பா..திருடாதே...தூங ்காதே..தம்பி..தூங்காதே...இப்படி முக்கால் வாசி பாடல்கள் பட்டிதொட்டிஎங்கும் மிகுந்த சக்தியாக ஒலித்தது..என்றால் அது மிகையாகாது..! அதே போல Jaishankar, Muthuraman, Nagesh, Rajini, Kamal, sathyaraj, Vijayakanth ஆகிய அனிவருக்கும் அவரகளுடைய குரல் வளதிர்கெற்றால் போல பாடி இருப்பார்...
திரு.சௌந்தரராஜன் அவர்களின் கடினமாக உள்ள பாடல்களைகூட சர்வ சாதாரணமாக பாடும் திறமை நமது நடிகர் திலகத்தின் பல திரைப்படங்கள் வாயிலாக பெரும்பாலும் வெளிகொண்டுவரபட்டது என்றால் அது மிகையாகாது...பாட்டும் நானே....சுந்தரி சௌந்தரி நிரந்தரியே ....இசை கேட்டால் புவி அசைந்தாடும்..யார் அந்த நிலவு...எங்கே நிம்மதி...மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள்...சிந்தனை செய் மனமே...சின்னஞ்சிறிய வன்னபரவை என்னத்தை சொல்லுதாம்மா...எல்லோரும் நலம்வாழ நான் பாடுவேன்....சோதனை மேல் சோதனை...சட்டி சுட்டதட...கை விட்டதட..who is the blacksheep..அது யார்..யார்..யார்..இப்படி பல பாடல்கள்..திரு சௌந்தரராஜன் அவரகளுடைய பல திறமையை வெளிக்கொண்டு வந்தது..!
அதே போல ...இரவு வரும் பகலும் வரும்...அன்புள்ள மான் விழியே...மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்...வீடு வரை உறவு...வீதி வரை மனைவி...மதுரையில் பரந்த மீன்கொடியை ....மற்றும் பக்தி கானங்கள்...புல்லாங்குழல் கொடுத்த..அழகென்ற சொல்லுக்கு முருக...கந்தன் திருநீரணிந்தால்..போன்ற பாடல்கள் என்றும் மறைய அமரத்துவம் கொண்டது...!
அவர் ஆன்மா இறையடி சேர பிரார்த்திகிறேன்...
http://www.youtube.com/watch?v=mS_DsFaQl28
டி.எம்.செளந்தரராஜன் அவர்களுக்கு நமது கண்ணீர் அஞ்சலி.
கண்ணீர் அஞ்சலி. TMS - Unparalleled. An era comes to an end. The man, who gave soul to many songs for Sivaji, MGR, Jai Shankr right thru Rajini is no more. May God give courage to the bereaved family during this testing time. RIP.
360 degree யிலும் நடிகர்திலகத்தை பார்த்து விட்ட திருப்தி. மீண்டும் வருக நண்பரே.
T M S நடிகர்திலகத்துக்கு பாடிய பாடல்களில் என்னை கவர்ந்தவை .
1954-1960- பெண்களை நம்பாதே, சுந்தரி சௌந்தரி, மந்தமாருதம் தவழும்,மாசிலா நிலவே,வாடா மலரே,சித்தனை செய்,யாரடி நீ மோகினி,முல்லை மலர் மேலே,வசந்த முல்லை,கண்களோ காதல் காவியம்,அன்னையை போல், கனவின் மாயா லோகத்திலே,
சித்திரம் பேசுதடி, நிறைவேறுமா எண்ணம்,வா கலாப மயிலே,கண்ணுக்குள்ளே என்னை பாரு,தாழையாம் பூ முடிச்சு, ஏன் பிறந்தாய் மகனே, நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு.
1961-1970- வந்த நாள் முதல், சிலர் சிரிப்பார், மலர்களை போல் ,மலர்ந்தும் மலராத,பாலும் பழமும்,போனால் போகட்டும்,என்னை யாரென்று,கொடியசைந்ததும்,உள்ளம் என்பது,படைத்தானே, இது வேறுலகம் தனி உலகம்,பளபளக்குது, பூஜ்யத்துக்குள்ளே,பொன்னொன்று,நான் கவிஞனுமில்லை,நான் என்ன சொல்லி விட்டேன்,வாழ நினைத்தால்,கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு,பொன்னை விரும்பும்,கல்லெல்லாம்,பறவைகள், கண்ணெதிரே, ஏனழுதாய்,நீரோடு, அவள் பறந்து,பார் மகளே பார், உன்னை சொல்லி,தூங்காத, மயக்கம் எனது, சின்னஞ்சிறிய,பசுமை நிறைத்த, தாழம்பூவே,பனி படர்ந்த மலையின் மேலே,நமது ராஜ சபையிலே,எண்ணிரெண்டு பதினாறு, மடி மீது,இரவும் நிலவும்,மகாராஜன் உலகை,அமைதியான,ஆறு மனமே,கேள்வி பிறந்தது,சிந்து நதியின்,ஆயிரத்தில் ஒருத்தியம்மா,மெல்ல நட, எங்கே நிம்மதி,இரவினில் ஆட்டம்,யாரந்த நிலவு,பாட்டும் நானே,ஓஹஹோ லிட்டில் flower ,யார் தருவார்,ராணி மகா ராணி,முத்துக்களோ,நெஞ்சிருக்கும்,பூ முடிப்பாள்,நான் அனுப்புவது, இதய ஊஞ்சல் ஆடவா,இனியது இனியது உலகம்,சித்தமெல்லாம் எனக்கு,மாதவி பொன்மயிலாள் ,மன்னிக்க வேண்டுகிறேன்,புது நாடகத்தில்,பூ மாலையில்,அங்கே மாலை மயக்கம்,யாரை நம்பி நான், போட்டாளே உன்னையும் ஒருத்தி பெத்து,வெள்ளி கிண்ணந்தான் ,அந்த நாள்,தேரு வந்தது,வள்ளி மலை,கட்டழகு பாப்பா, சந்தன குடத்துக்குள்ளே,தெய்வமே தெய்வமே,ஒரு நாளிலே,பார்வை யுவராணி,என்னங்க, எல்லோரும் நலம் வாழ,உன் கண்ணில் நீர் வழிந்தால்,ஒரே பாடல் உன்னை,சிரிப்பின் உண்டாகும்,பொன் மகள்,ஒரு நாள் நினைத்த காரியம்.
1971- 1980- தேரு பார்க்க, நேத்து பறிச்ச ரோஜா,தாலாட்டு பாடி,ஒரு தரம் ஒரே தரம்,வரதப்பா வரதப்பா,தேவனே என்னை ,அடி என்னடி ராக்கம்மா,கேட்டுகோடி ,பள்ளியறைக்குள் வந்த,இசை கேட்டால்,ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்,குடி மகனே,மயக்கமென்ன,இரண்டு மனம், மாப்பிள்ளையை ,சக்கை போடு போடு ராஜா,ஆகாய பந்தலிலே,நல்ல காரியம்,பாலூட்டி, நீயும் நானுமா,அம்மம்மா தம்பி என்று,இனியவளே, மேளதாளம்,சுமை தாங்கி,ஊஞ்சலுக்கு பூச்சூட்டி,ஆட்டுவித்தால் யாரொருவர்,தெய்வத்தின் தேரெடுத்து,பேசாதே வாயுள்ள , நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள்,வேலாலே விழிகள்,மௌனம் கலைகிறது, எந்தன் பொன் வண்ணமே .
நெஞ்சை அடைக்கின்றது. தமிழிசை தனது ஈடில்லா இசை மகனை இழந்துவிட்டது. நடிகர் திலகத்தின் பாடும் குரல் இறைவனடி சேர்ந்து விட்டது. பாடகர் திலகம் t.m. சௌந்தரராஜன் அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். அவர் பாடிய திரைப்பாடல்களும், பக்திப் பாடல்களும் குறிப்பாக முருகன் மேல் அவர் பாடிய பாடல்கள் எந்நாளும் நிலைத்திருக்கும். அவரது இழப்பை எற்றுக்கொள்ளும் வலிமையை அவரது குடும்பத்தாருக்கும், திரை உலகத்தாருக்கும், ரசிகர்களுக்கும் இறைவன் தருவாராக!!
The power of TMS got amplified by the mind boggling facial expressions of NT in the song 'Neeye unakku endrum nigaraanavan....' in Bale Pandia which makes any other singer to sweat out! The same way songs in Thookku Thookki, Thiruvilayadal, Pudhiya Paravai, Aandavan Kattalai...... one can perceive the deep impact of NT in the minds of TMS to render a song for NT.
நினைவலைகள்
ஒரு திரைப்பட விழாவில் கந்தர்வக் குரலோன் TMS அவர்களுடன் நானும் பின்னால் அமர்ந்திருந்தபோது எடுத்த படம். உடலால் மறைந்தாலும் TMS அவருடைய குரலால் என்றென்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பார்.
http://i1234.photobucket.com/albums/...psde0d29a5.jpg
குணசேகரனை மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் என்று எத்தனை முறை. ஆனால் ஒவ்வொரு முறையும் புத்தனுபவம். அப்பப்பா !!அறிமுக நடிகரா இவர்? ஹோட்டல் அறையும் நுழைவதிலிருந்து தொடரும் ஐந்து காட்சிகளை பாருங்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரியும். தமிழனாய் பிறந்து தமிழனாய் வாழ்வதின் தவ பயன் நடிகர்திலகமே.
அதிகம் பேசப் படாத ஆனால் மிக மிக அற்புதமாய் நடிகர் திலகமும் பாடகர் திலகமும் இணைந்து கலக்கிய பாடல், அடுத்து நம் திரைப்படப் பட்டியலில் இடம் பெற உள்ள சாரங்கதாரா படத்தில் ஒலிக்கும் மேகத் திரை பிளந்து பாடலாகும். கணீரென்ற குரலில் ஜி.ராமனாதன் அவர்களின் இசையில் டி.எம்.எஸ். அவர்கள் மேல் ஸ்தாயியில் பாடலைத் துவங்கி அட்டகாசமாய் பாட, அதற்கு நடிகர் திலகம் உயிர் கொடுக்க இதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அமரத்துவம் பெற்று விட்ட டி.எம்.எஸ். அவர்களின் அமரத்துவம் வாய்ந்த பாடல்
http://www.dailymotion.com/video/xrumr3_megaththirai-sarangadhara_shortfilms#.UaHRV9j_QnA
இப்பாடலில் வளையாபதி முத்துகிருஷ்ணனுக்காக பாடியிருப்பவர், ஜி.ராமநாதன் அவர்களின் உதவியாளரும் இசையமைப்பாளருமான திரு ராஜகோபால் அவர்கள். ஏ.கருணாநிதிக்குப் பாடியிருப்பவர் எஸ்.சி.கிருஷ்ணன்.
டி.எம்.எஸ் பாடுவது இரைச்சலாக இருக்கிறது என ஒரு சில மக்கள் குறை சொல்கிறார்களே? அவர்களை எப்படி கையாள்வது? இப்போதான் "நாதஸ்வரமும் இரைச்சல்தான், அறிவிச்சிடலாம் அது தேர்ந்த வாத்தியக்கருவி அல்ல என! " என நண்பர் ஒருவருக்கு பதிவிட்டு வந்தேன்.
They are right and wrong. He sang equal number of very very good ones and bad ones. His voice is more enjoyable in Bass and baritone. high Octave(Tenor and counter tenor) with nasal tone is not at all bearable. His is a karvai not Birka sareeram and this is a limitation in some fine notes. But he is one of the finest in India and there cant be another TMS.
SUN LIFE telecasting NADIGAR THILAGAM's 200th Film - THIRISOOLAM -
http://www.youtube.com/watch?v=SjJRQ_QpMhg
சமீபத்தில் சில பதிவுகள் நடிகர் திலகத்தின் திரியில் தேவையற்ற சலசலப்பினை ஏற்படுத்தி சிவாஜி-எம்.ஜி.ஆர். ரசிகர்களிடயே வீண் சச்சரவினை ஏற்படுத்துவது போன்று இடப்பட்டு சிறு சலனத்தை உண்டாக்கியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இருவருமே அமரத்துவம் அடைந்து விட்டவர்கள். தமிழ்த் திரையுலகை இன்னும் பல ஆண்டுகளுக்கு வாழ வைக்கக் கூடிய சக்தி இவர்கள் இருவரின் திரைப்படங்களுக்கு மட்டுமே உண்டு. அது மட்டுமின்றி இரு தரப்பிலும் இரு திலகங்களையும் மதிப்பவர்கள் உள்ளனர். அது மட்டுமின்றி அந்த நல்லெண்ணத்தைத் தங்கள் உழைப்பிலும் காட்டி வருகின்றனர்.
இதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாய் இருவரைச் சொல்லலாம். திரு பம்மலார் அவர்கள் நடிகர் திலகத்தின் அதி தீவிர பக்தர், தமிழ்த் திரையுலகின் ஆவணத் திலகம் என்று கூறும் அளவிற்கு தமிழ்த் திரையுலக வரலாற்றை அறிந்து வைத்திருப்பவர். எம்.ஜி.ஆர் அவர்களின் நிழற்படங்களின் தொகுப்பாக பம்மலார் வெளியிட்டிருக்கும் மலர் இது வரை இல்லாத புது முயற்சி. இந்த பதிப்பு நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
இதற்கு சற்றும் குறைவில்லாத, சொல்லப் போனால் சற்று கூடவே, தன் நல்லெண்ணத்தைத் தன் செயலில் காட்டியுள்ளது உரிமைக்குரல் நிறுவனம். சிவாஜி ரசிகர்கள் நிறையப் பேர் பார்த்திராத திரைப்படங்களை நெடுந்தகட்டில் வெளியிட்டு மனதைக் கொள்ளை கொண்டு விட்டது உரிமைக்குரல் நிறுவனம். குறிப்பாக எங்கள் தங்க ராஜா, எந்தக் காலத்திலும் வசூலை வாரிக் குவிக்கும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம். அதனைப் பார்க்க ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு வரப்பிரசாதமாய் அமைந்தது உரிமைக்குரல் நிறுவனம் வெளியிட்ட காணொளி நெடுந்தகடு. அது மட்டுமின்றி முதல் வெளியீட்டில் இருந்ததாய் கருதப் பட்ட சிற்சில குறைகளையும் களைந்து மறு வெளியீட்டில் மிகுந்த தரத்துடன் அப்படத்தின் நெடுந்தகட்டனை வெளியிட்டு அனைத்து ரசிகர்களின் மனதிலும் அமர்ந்து விட்டது உரிமைக்குரல் நிறுவனம். அது மட்டுமா, தாயே உனக்காக, உலகம் பல விதம், ஸ்ரீ வள்ளி போன்ற அபூர்வமான படங்களையும் வெளியிட்டு இந்தப் படங்களைத் தற்போது பார்க்கும் வாய்ப்பினையும் ஏற்படுத்தித் தந்துள்ளது உரிமைக்குரல் நிறுவனம்.
உரிமைக்குரல் நிறுவனத்திற்கு நமது நெஞ்சம் நிறைந்த நன்றியும் பாராட்டுக்களும். இது வரை இந்த நெடுந்தகடுகளைப் பற்றி அறிந்திராத சிவாஜி ரசிகர்களுக்காக அவற்றின் முகப்புகள் இங்கே நிழற்படங்களாக.
எங்கள் தங்க ராஜா
http://i872.photobucket.com/albums/a...overs/etr2.jpg
http://i872.photobucket.com/albums/a...rs/etrfrfw.jpg
தாயே உனக்காக மற்றும் உலகம் பல விதம்
http://i872.photobucket.com/albums/a...TUPVCovefw.jpg
ஸ்ரீ வள்ளி
http://i872.photobucket.com/albums/a.../SriValliF.jpg
நானறிந்து உரிமைக்குரல் நிறுவனத்தால் வெளியிடப் பட்ட நடிகர் திலகத்தின் படங்கள் இவை. இவையன்றி வேறு ஏதாவது இருந்தாலும் அதனை நண்பர்கள் யாராவது வைத்திருந்தால் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். இன்னும் சில அபூர்வமான நடிகர் திலகத்தின் படங்களை நாங்கள் மிகவும் ஆவலுடன் காணக் காத்திருக்கிறோம். அவற்றில் ஒரு சிலவற்றின் பட்டியல் இதோ
1. பெற்ற மனம்
2. அவள் யார்
3. நல்ல வீடு
4. கண்கள்
5. மனிதனும் மிருகமும்
6. பூங்கோதை
7. வளர் பிறை
இன்னும் இது போன்று மேலும் உள்ளன. இவற்றையும் உரிமைக்குரல் நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வெளியிட வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.
உரிமைக்குரல் நிறுவனம், பல அபூர்வமான பழைய படங்களை நெடுந்தகடாக வெளியிட்டு தமிழ்த் திரையுலகிற்கு சிறந்த சேவையாற்றி வருகிறது. அவர்களுடைய முயற்சிகள் வெற்றி பெற உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
1. பெற்ற மனம்
2. அவள் யார்
3. நல்ல வீடு
4. கண்கள்
5. மனிதனும் மிருகமும்
6. பூங்கோதை
7. வளர் பிறை
https://encrypted-tbn3.gstatic.com/i...xxrdFVM9Y-Ufpg
ராகவேந்திரன் சார் குறிப்பிட்டுள்ள மேற்கண்ட படங்களின் பழைய வீடியோ கேசட் யாரிடமாவது இருந்தால் தயவு செய்து அவசியம் தெரிவிக்கவும். அதை dvd ஆக மாற்றிக் கொள்ளலாம்.
Nt's films in tv channels this week 27.05.2013 - 02.06.2013
pls check with the channel for the confirmation
details compiled from whatsonindia website
j movies
01.06.13 – 6.00 am – gnana paravai
30.06.13- 1.00 pm – en magan
30.06.13 – 9.00 pm – andavan kattalai
jaya tv
31.05.13 – 10.00 am – padithal mattum podhuma
kalaignar tv
30.05.13 – 1.30 pm – shanthi
mega 24
29.05.13 – 1.00 pm – maragatham
29.05.13 – 6.30 p.m. – marumagal
31.05.13 – 6.30 p.m. – vaazhkkai
mega tv
30.05.13 – 12,00 noon – en magan
raj digital plus
30.05.13 – 10.00 am – amara kaaviyam
27.05.13 – 4 pm – lorry driver rajakkannu
28.-05-13 4 pm – makkalai petra magarasi
31.05.13 – 8 pm – mannukkul vairam
raj tv
27.05.13 – 1.30 pm – imaigal
31.05.13 – 10.00 pm – thaaikku oru thaalaattu
vasanth tv
27.05.13 – 2.00 pm – chitra pournami
01.06.13 – 2.00 pm – tenali raman
zee tamil
28.05.13 - 2.00 pm – lakshmi vanthachu
TODAY WE HAVE THREE MOVIES IN TV CHANNELS - IMAIGAL, LORRY DRIVER RAJAKKANNU AND CHITRA POURNAMI AS PER THE ABOVE LIST
http://i872.photobucket.com/albums/a.../AOKNAVPON.jpg
மோசர் பேர் நிறுவனம் அளித்துள்ள பொன்னூஞ்சல், அண்ணன் ஒரு கோவில், நவராத்திரி என்று மூன்று படங்களை கொண்ட தொகுப்பு dvd யில் தலைவரின் 'வளர்பிறை' ஸ்டில் கவரில் அச்சிடப்பட்டுள்ளது. மோசர் பேர் நிறுவனம் நிச்சயம் 'வளர்பிறையை' விரைவில் அளிக்கும் என்று தினம் தினம் ராகவேந்திரன் சாரும் நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
நடிகர் திலகம் பாகம் பத்து முடிவடைய இன்னும் எட்டு பக்கங்களே பாக்கியுள்ள நிலையில் பாகம் பதினொன்றை தொடங்கி வைக்க திரு கோபால் சார் பெயரை நான் முன்மொழிகிறேன். ஹப்பர்ஸ் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
கோ,
எதற்கும் ரெடியாக இரு.
வாசு சார்,
கை கொடுங்கள், நானும் முரளி சாரும் இதைத்தான் நினைத்துக் கொண்டிருந்தோம். தாங்கள் செயல் படுத்தி விட்டீர்கள். தங்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் உளமார்ந்த நன்றி.
கருத்துக் கணிப்பே தேவையில்லை. இதை 100க்கு 100 சதவீதம் பேர் ஏற்றுக் கொள்வார்கள்.
கோபால் சாருக்காக இந்தப் பாடல்...
சுறுசுறுப்பாக பாகம் 11ஐத் துவக்குங்கள் ஐயா...
http://youtu.be/vTZvsa0MVuU
கோபா(ல்)லன் எங்கே உண்டோ கோபியர் அங்கே உண்டு...
ராகவேந்திரன் சார்,
என்ன ஒரு புரிதல்!