ஆமாம் ..இது பெரியார் பூமி தான் ..முடிந்தால் மாற்றிப் பார் ..
Printable View
ஆமாம் ..இது பெரியார் பூமி தான் ..முடிந்தால் மாற்றிப் பார் ..
.......
திரு.ஆர்.கே.எஸ்.
ஒட்டுமொத்தமாக திராவிட கட்சிகளை, பெரியாரையும் அண்ணாவையும் தயவு செய்து மோசமாக தாக்க வேண்டாமே. காங்கிரஸ் ஆட்சியில் அரிசி பஞ்சம் ஏற்பட்டு மக்களை எலிக்கறி சாப்பிடச் சொன்ன மந்திரிமார்களைக் கொண்டது காங்கிரஸ் ஆட்சி.
‘1967 தேர்தலில் காங்கிரசுக்காக பிரசாரம் செய்யச் சென்றபோது, தாய்மார்கள் தங்களைக் கண்டதும் அரிசியை மறைத்து எடுத்துச் சென்றனர்’ என்று அர்த்தமுள்ள இந்துமதம் தொடரிலே கவியரசர் கண்ணதாசன் கூறியுள்ளார். அது புத்தகமாகவும் வந்துள்ளது. காங்கிரசின் பெருமை இது.
1967 தேர்தலில் திமுகவோடு தனது சுதந்திரா கட்சியை கூட்டணி அமைத்து, ஒரு கையில் பூணுலை பிடித்துக் கொண்டு மறுகையால் உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள் என்று பிராமண சமூகத்தினரை மூதறிஞர் ராஜாஜியே கேட்டுக் கொண்ட அளவுக்கு மோசமான ஆட்சி, காங்கிரஸ் ஆட்சி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு கலைவேந்தன்
நான் அதற்க்கு congress அனுதாபி அல்லவே.
காமராஜர் - அவரை நான் congress காரராக கருதவில்லை எந்தகாலத்திலும்.
எவர் என்ன சொன்னாலும் 1950 முதல் 1967 ஜூன் வரை அதாவது சுதந்திரம் பெற்று 17 வருடங்களில் தமிழகம் கண்ட முன்னேற்றம் (இன்னும் சரியாக சொல்லப்போனால் ஏப்ரில் 1954 முதல் 1957 வரை )அதன் பின்னர் தமிழகம் கண்டதில்லை. காரணம் பலர் வக்காலத்து வாங்கும் திராவிடர்களை 67 ஜூலை முதலே முட்டாளாக்கும் கழகங்கள் ஆண்டதால்தான் !
ஊழல் என்ற வார்த்தையை பெருமளவு புழக்கத்தில் கொண்டுவந்து அரசுத்துறைகளில் சரளமாக புழக்கத்தில் விட்டு பிரபலபடுத்திய கட்சிகள்தானே இவை...!
எலிக்கறி வசனம் ....கண்ணதாசன்...கண்ணதாசன் அவர்கள் இதுபோல பல புத்தகங்களை எழுதியுள்ளார், பலரை பற்றியும் எழுதியுள்ளார்...கட்சிகளின் அவலம் பற்றி, மனிதர்களின் குனங்கள்பற்றி இப்படி பல புத்தகங்கள் ...இவர் எழுதி வெளிவந்துள்ளது..அவை சான்றாக, ப்ரூபாக, உத்தரவாதமாக எடுத்துகொள்ள முடியுமா என்று தெரியவில்லை. !
மறைந்த மேதைகள் திரு கண்ணதாசன், திரு வாலி, மற்றும் உயிருடன் உள்ள திரு ஆரூர்தாஸ்..கிட்டத்தட்ட ஒரே குண நலன்கள் கொண்ட கலைஞர்கள் என்பதே என்னுடைய முடிவான கருத்து !
எலிக்கறி வசனத்தால், கண்ணதாசன் எழுதிய விஷயத்தினால் இதனால் தமிழகத்திற்கு அதன் வளர்ச்சிக்கு பாதிப்பு இருந்துள்ளதா என்று தெரியவில்லை..ஆனால் லஞ்ச லாவண்யம் இவர் ஒருகாலத்தில் போற்றி புகழ்ந்த கட்சிகள் கொண்டுவந்தது எந்தளவிற்கு தனிமனிதன் பாதிப்பிற்கு உள்ளானான் என்பதை நாம் அறிவோம் நாடும் அறியும் !
Rks
நண்பர்கள் ரவிகிரண் மற்றும் ஜோ அவர்கள்
பெரும்பாலும் முகமறியா நண்பர்களாகவே நாமிருக்கிறோம். எங்கோ இருக்கும் நாம் நடிகர்திலகம் குறித்த நமது எண்ணங்களின் பரிமாறல் வாயிலாகவே இத்திரியில் இணைகிறோம். ஏகவசனம் தவிர்த்து பரஸ்பர மரியாதைகளுக்குப் பங்கம் வராது நமது திரிக்கு பெருமை சேர்ப்போமே!
வேண்டுதல்களுடன்
செந்தில்
இந்தி உனக்கு தேவையுண்ணா இந்தி பிரசார சபாவுல போய் படிச்சுக்கோ .. எங்க மேல திணிக்குறதுக்கு எப்போதும் நடக்காது ..நடக்கவும் விட மாட்டோம் ..இந்தி தெரிஞ்சவனவை விட நாங்க நல்ல நலமா தான் இருக்கோம் .. இந்த முதலைக் கண்ணீரெல்லாம் அடையாளம் காணப்பட்டு நாளாச்சு .
நண்பரே ! இந்த நபர் சிவாஜி பற்றி பேசுகிறேன் பேர்வழி என்ற போர்வையில் திராவிட இயக்கத்தை வசை பாடுவதற்கே இந்த திரியை பயன்படுத்துவது உங்களுக்கு ஒப்புதலா ? குறைந்த பட்சம் "திராவிட இயக்க எதிர்ப்பு வாந்தி' என தனியாக ஒரு திரி அமைத்துக் கொடுத்தால் இவரும் இவரைப் போல வாந்தி எடுக்க விரும்புபவர்களும் சூடாகும் போது அங்கே சென்று வாந்தி எடுக்க வசதியாக இருக்குமே என பல காலமாக நான் கோரிக்கை வைத்து வருகிறேன் ..நீங்களும் இணைந்து குரல் கொடுத்தால் நல்லது ..இந்த எழவையெல்லாம் இந்த திரியில் பார்க்காமல் இருக்கலாம் .
கவியரசர் கண்ணதாசனை நீங்கள் நம்ப வேண்டாம் திரு.ஆர்.கே.எஸ்.
ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் அரிசி பஞ்சம் ஏற்பட்டதும் மக்களை எலிக்கறி சாப்பிடச் சொன்னதும் மூதறிஞர் ராஜாஜியே காங்கிரசை ஒழிக்க, திமுகவோடு கூட்டணி அமைத்து உதயசூரியனுக்கு ஓட்டு போடச் சொன்னதும் வரலாற்று உண்மைகள். இதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்