http://youtu.be/85KXz3s1w4c
அது சரி சிக்கா.. அது ஆனந்தனா ? உதயகுமாரா ?
Printable View
http://youtu.be/85KXz3s1w4c
அது சரி சிக்கா.. அது ஆனந்தனா ? உதயகுமாரா ?
//ம்ம்... ம்ம்... அந்தப் பெண்மணி எந்த கிளாஸ் ? ஆறாவதோ ஏழாவதோவா ?
வீ..கா..வுக்கு இந்த விஷயம் தெரியுமா ?// வீ.காவிடம் இதுவரை சொன்னதில்லை..(சொல்லச்சந்தர்ப்பம் நேரிடவில்லை..) அந்தப் பெண்மணி பி.ஏ லேடி டோக்கில்ஃபர்ஸ்ட் இயர் படித்திருந்தார் என நினைக்கிறேன்..:)
//சின்ன கண்ணனிடம் ஒரு சின்ன கேள்வி (கேட்கலாமா ?)
பதிவு ஆரம்பிக்கும் போது 'ம்ம்' அப்படின்னா என்ன அர்த்தம்
எட்டாப்பு படிக்கும் போதே 'கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா '// க்ருஷ்ணா ஜி.ம்ம்னா ஆரம்பிக்கப் போறேன்ம்ம் நு அர்த்தம்.. அப்புறம் க.ஆ.கா எல்லாம் இல்லை.. ஒன்றும் தெரியாத கண்ணாவாக்கும் நான்.. :)
மக்கள்ஸ்.. என் அம்மாவிடமும் சொல்லிக் கொண்டு தான் போனோம்.. ! :) (டிவிஎஸ் ஸ்டாப் ல ருந்து பெரியார் பஸ்ஸ்டாண்ட் அங்கிட்டு இருந்து 4 சென் ட்ரல் (பிற்காலத்தில் மையப்பேருந்து நிலையம்) டு தெப்பக்குளம் பஸ் ஏறிப் போய் விட்டு..இன் டர்வெல்ல கோன் ஐஸ் சாப்பிட்டு பின் சமர்த்தாய் பஸ் ஏறி வீட்டிற்கு வந்தோமாக்கும்..
டி.ஆர். எம்மின் சோலோ..அந்தக் குரல் அதைவிட அந்த லிரிக்ஸ் மனதை அள்ளுமாக்கும்.. படம் மாலையிட்ட மங்கை..படம் பார்த்ததில்லை..பாடல் பார்த்திருக்கிறேன் வெகுகாலம் முன்..யாராக்கும் ஆடுவது..
*
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றாது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ..
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ…
*
ப்ளூ ஐஸ் இருந்தாக்க கண்களில் நீலம் விளைத்தவளோ..அப்புறம் அதைப்பயிர் பண்ணி கடல்ல கரைச்சுட்டாளாம் அதான் ஸீ இஸ் ப்ளூவாம்..என்னா இமாஜினேஷன்..
அந்தப் பழரசம் பருக இவன் தானே தலைகுனியணும்.. கன்ஃப்யூஷன் :)
இந்த கண்கள் ப்ளூ, ப்ரெள்னா இருந்தா தனிக் கவர்ச்சி தானே..(காண்டாக்ட்லாம் இல்லாம)
//பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ…// ம்ம் பிற்காலத்தில இத வெச்சுத்தான் உன்னழகைக் கண்டுகொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்னு பிபிஎஸ் முத்துராமன் மூலமாப் பாடினாரோ..
காதலர்கள் ஏக்கத்தில் தங்களை மறந்து பாடும் பாடல் .
எத்தனை உவமைகள் - வார்த்தை விளையாட்டுக்கள் - அமுத கானம் .
தென்றலிலாடும் கூந்தலில்ககண்டேன்
மழைக்கொண்ட மேகம் என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம்
இனி என்ன நாணம்
இனி என்ன நாணம், இனி என்ன நாணம்
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில்
ஏன் இந்த வேகம் ஏன் இந்த வேகம்
பாவை உடல் பார்க்கடலில்
பள்ளி கொள்ள நான் வரவோ
பனி சிந்தும் கனி கொஞ்சும் பூவிதழில் தேன் பெறவோ மாலை வரும் நேரமெல்லாம்
மன்னன் வர காத்திருந்தேன்
வழியெங்கும் விழி வைத்து
பார்த்த விழி பூத்திருந்தேன்
ஆலிலையின் ஓரத்திலே
மேகலையின் நாதத்திலே
இரவென்றும் பகலென்றும்
காதல் மனம் பார்ப்பதுண்டோ
கள்ள விழி மோகத்திலே
துள்ளி வந்த வேகத்திலே
இதழ் சிந்தும் கவி வண்ணம்
காலை வரை கேட்பதுண்டோ
காலை வரை கேட்பதுண்டோ
கற்பகத்து சோலையிலே
பூத்த மலர் நீ அல்லவோ
விழிஎன்னும் கருவண்டு
பாட வந்த பாட்டென்னவோ
காவியத்து நாயகனின் கட்டழகு மார்பினிலே
சுகம் என்ன சுகமென்று
மோஹன பண் பாடியதோ
மோஹன பண் பாடியதோ
என்னை மறந்ததேன் தென்றலே
இன்று நீ என்னிலை சொல்லிவா
காற்றோடு வளரும் சொந்தம்
காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு
கனியாக மாறாதோ
கலையாத காதல் நிலையானதென்று
அறியாமல் சொல்லிவைத்தாயோ -
உன்னைஅறியாத பெண்ணின் மனவாசல் கண்டு
திறவாமல் எங்கே சென்றாயோ
நிழலான தோற்றம் நிஜமானதென்று
நீயாளும் நாளும் வருமோ - இந்த
நிலமாளும் மன்னன் நீயானபோதும்
நானாளும் சொந்தம் இல்லையோ
கண்டாலும் போதும் கண்கள்
என் ஆவல் தீரும் மன்னவா
சொன்னாலும் போதும் நெஞ்சம்
கனியாக மாறாதோ(என்னை)
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே
நினைத்தேன் உடன் பார்த்தேன்
மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
நினைத்தேன் உடன் பார்த்தேன்
மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
களித்தேன் சுகம் குளித்தேன்
கதை படித்தேன்என்னை மறந்தேன்..
என்னை மறந்தேன்..என்னை மறந்தேன்
பாலும் புது தேனும் பனி போல்
என் மேலே படர்ந்தோட இடம் தேட
அமுதாகவே பாய்ந்தாய்
என்னைக் கொடுத்தேன்..
என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே
கண்ணா,
LDC முதல் வருஷம்னா 17-18. நீங்க 9th-ன்னா 13-14. அதுவும் போனது கணேஷா தியேட்டர்னு சொல்லும்போது எங்கோ இடிக்குதே! ஒரு வேளை கூட வந்தவருக்கு ஹெல்ப் பண்ண (அதாவது அவர் யாரையேனும் சந்திக்க) நீங்கள் துணைக்கு போனீர்களா என்று கேட்டேன்.
வாசு என்னை பிய்க்க போகிறார். பாட்டைப் பத்தி பேச வரல்லை. சைட்டை பத்தி பேச வந்துட்டார்-னு ஓகே எஸ்கேப்!
அன்புடன்
ஒரு தூக்கம் போட்டுட்டு வரதுக்குள்ள எத்தனை பக்கங்கள் ...
வாசு ஜி, குலமகள் ராதை , மானோடும் பாதையில பாட்டெல்லாம் போட்டு பட்டய கிளப்பிட்டீங்க
கூடவே கிருஷ்ணா ஜி, மது அண்ண இன்னிக்கு புல் ஃபார்ம்ல இருந்தார் போல (என்னவோ என்னவோ ????)
சி.கா கேட்கவே வேண்டாம் ஆயிரம் கேள்விகள் ஆயிரம் பதில்கள்னு தூள் கிளப்பிட்டார்
ராகவ் ஜி கடைசி வரைக்கு ஓடி ஓடி வந்து பஸ் கிளம்பியவுடன் படிக்கெட்டில் ஏறுபவர்கள்போல அடுத்த பாகம் தொடங்குவதற்குள் பாட்டுக்களை பதிவிட்ட விதம் அபாரம்...
அதே போல் எஸ்.வியின் படங்கள் என நான் வருவதற்குள் எத்தனை களேபரம்... பிரம்மாண்டம்.. ராட்சசி பாடி நம்மை அசத்தினால் இந்த ராட்சசர்கள் பதிவில் அசத்துகிறார்கள் ..என்னே நான் செய்த பாக்கியம்
முரளி சார்..
உங்களிடமிருந்து இப்படி ஒருகேள்வி வரும் என எதிர் பார்க்கவில்லை :)
..ச்சும்மா ஒரு சுவாரஸ்யத்திற்காக லேடிடோக் ஃபர்ஸ்ட் இயர் என எழுதியிருந்தேன்..இப்படியா வயதுக் கணக்குப் போட்டு என்னை வாருவது :)
அந்தப்பெண்மணி எஸ்.எஸ்.எல்.சியிலேயே படிப்பை நிறுத்தி வீட்டோடு பல வருடம் இருந்தார்..வீட்டில் அவருக்கு பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. என் நண்பனுடைய வீட்டில் தான் அவர்கள் குடியிருந்தார்கள். அவர்கள் வீட்டிலிருந்து பார்த்தால் எங்கள் தெருவை குறுக்கால் வெட்டிய தெரு ஆரம்பிக்கும்..வலதுகைப்பக்கம் ஒரு அரசு பிரசவ ஆஸ்பத்திரி..சற்றுத் தாண்டி சந்தை.. அந்தத்தெருமுனைக்குச் சென்றால் ஆறு முச்சந்தி வந்து விடும்..(லொகேஷன் தெரிகிறதா) (இப்போது எப்படி மாறியிருக்கிறது எனத் தெரியாது)
ஒரு பள்ளி விடுமுறை தினம் தான் என நினைக்கிறேன்.. அவர் அம்மா வராததினால் என்னைத் துணைக்குக் கூப்பிட்டார் அந்த ப் பழைய பட விரும்பி.. நானும் சமர்த்தாய் என் அம்மாவிடம் சொல்லிவிட்டுத் தான் சென்றேன்..
இப்போது எப்படி இருக்கிறாரோ என்னவோ.(ஹைய்யா..கண்டிப்பா வாசு சாரிடம் அவரின் இந் நாளைய புகைப்படம் இருக்காது!):)
அடுத்த வருடமே அவர் அப்பாவிற்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகிப் போய் விட்டார்..-சென்னை என்று தான் நினைக்கிறேன்..அப்புறம் தொடர்பில்லை.. 13 வயசுப் பையன் 25 வயதுப் பெண்ணிற்குத் துணைக்குப் போகலாம் தானே..
அன்புடன்
சி.க.
கூடவே பனியில்லாத மார்கழியா..காதலில்லாத வாலிபமான்னுசம்பந்தமே இல்லாம பாட்டு எனக்குக் கேக்குதே காரணம் என்னவா இருக்கும்..
எனக்கு கிடைக்கும் நேரத்தில் நூற்றுகணக்கான பதிவை படிக்கவே நேரம் போதவில்லை...
நீங்கள் உருகு உருகுன்னு உருகி கேட்க நூறாவது நாள் பாடல் இதோ :
http://www.mediafire.com/listen/f6nv...vathu_Naal.mp3
நன்றி
ஆஹா! மாட்னேன்பா மதுண்ணாகிட்ட. (இனிமே நானும் மதுண்ணா அப்படின்னுதான் கூப்பிடப் போறேன். சார் அந்நியமாப் படுது)
ஷிப்ட்டுக்கு புறப்படும் போது அவசரமா போட்டேனா . எப்பவும் கடைசியா ஒரு தடவ செக் பண்ணுவேன். இன்னைக்கு டைம் இல்லாம மிஸ்ஸிங். கந்தனுக்கு பதிலா கண்ணன் ஆயிடுத்து.
அழகா கண்டு பிடிச்சுட்டேளே! நல்ல வேளை. தெய்வக் குத்தம் ஆகியிருக்கும்.:) திருத்திட்டேன்.
ஆமாம்... மதுண்ணா...அங்கே விளக்கெண்ணை என்ன விலை?:)
முரளி சார்,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு? வாருங்கள் சார்.
தங்களுக்குக் கீழ்தான் நாங்கள் எல்லோருமே!
நீங்களும் சைட்டை பத்தி பேச வந்தது மிகவும் சந்தோஷம். ஐ மீன் நம்ம 'மதுரகானங்கள்' வெப் சைட் பற்றி.
கிராதகர் வந்தால் மட்டுமே டோஸ்.
முரளி சார்! எப்படி இருக்கிறீர்கள்? ரொம்ப நாட்களாயிற்று. விரைவில் செல்லில் தொடர்பு கொள்கிறேன். தாங்கள் ஒன்றுமே பதிவிடா விட்டாலும் முரளி ஸ்ரீனிவாஸ் என்ற பெயர் பார்த்தாலே கரை புரண்ட வெள்ளம் போல் மகிழ்ச்சி. அது எங்கள் முரளியால் மட்டுமே முடிந்த ஒன்று.
அடுத்த பாகத்திற்கு தங்கள் மனமுவந்த வாழ்த்துக்கள் தேவை.
நேற்று இரவு இணைய இணைப்பு கிடைக்காததனால் அனைவருக்கும் நன்றி கூற இயலவில்லை. நேற்று நண்பர்கள் அனைவரும் அமர்க்களப்படுத்தி விட்டீர்கள். குறிப்பாக மதுண்ணா அதிகமாகக் கலந்து பெருமைப்படுத்தியுள்ளார். அவருக்கு நன்றி. சின்னக்கண்ணன் அற்புதமான பல பாடல்களை அளித்துள்ளார். கிருஷ்ணாஜி ஏ .வி.எம்.பற்றி அழகாக ஞாபகப்படுத்தியுள்ளார். ராகவேந்திரன் சாரின் விஸ்வரூபம் விவரிக்க முடியாத ஒன்று. எஸ்.எஸ். சாரின் நூறாவது நாள் பாடலுக்கும் நன்றி! வினோத் சார் அமர்க்களம். கிருஷ்ணாஜி சூர்யகலாவை நினைவுகூர்ந்து கலக்கி விட்டீர்கள். அதிகம் வெளியே தெரியாத கலைஞர்களை திரியில் பெருமைப்படுத்தும் தங்கள் பதிவுகள் பாராட்டுக்குரியவை. மாற்றும் விடுபட்டுப் போன அனைத்துப் பதிவாளர்களுக்கும் நன்றி! படித்து இன்புற்ற பார்வையாளர்களுக்கும் நன்றி! மதியம் சந்திப்போம்.
ராஜேஷ் சார்,
அமர்க்களம். தங்கள் பதிவுகளை இனிமேதான் பார்க்க வேண்டும். இரவு சந்திப்போம். நன்றி!
பொங்கும் பூம்புனல்
http://www.inbaminge.com/t/k/Kaidhi/
Be Happy Be Cheerful Be jolly
இப்படி ஒரு ஜாலியான பாடலை ராதா ஜெயலக்ஷ்மி பாடி கேட்டிருக்க மாட்டீர்கள். கைதி படத்தில் எஸ்.பாலச்சந்தர் இசையில் இப்பாடலை நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்பீர்கள். இது நிச்சயம்.. தங்கள் காலர் அளவு சட்டையின் நீளம் என ஒரு அங்கியின் அளவு, என ஒரு பெண் தையற்கலைஞர் பாடும் பாடலாக்கும் இது
1951ம் ஆண்டிலேயே எப்படிப்பட்ட புதுமையான கருத்துக்கள்...
பொங்கும் பூம்புனல்
ஆனந்தம் ஆனந்தமே...
உண்மையின் வெற்றி எப்போதும் தரும் ஆனந்தம் ஆனந்தமே...
1951ம் ஆண்டு வெளியான உண்மையின் வெற்றி திரைப்படத்திலிருந்து டி.ஏ.கல்யாணம் இசையில் நடராஜகவியின் வரிகளில் எப்போதும் ஆனந்தமே...
http://www.inbaminge.com/t/u/Unmayin%20Vetri/
99% சிவாஜி ரசிகர்களாலேயே ,ஆரம்பிக்க பட்டு,நடத்த பட்டு,பங்களிக்க பட்ட திரி. இதன் வெற்றி ,சிவாஜி ரசிகர்களின் பரந்து விரிந்த அறிவு,தெளிவு,ரசனை மற்றும் விவரங்களின் தெளிவை நிரூபித்துள்ளது.இது எனக்கு சந்தோஷமே ஆனாலும் ,கார்த்திக் ,வாசு,ராகவேந்தர்,சி.க.,ராஜேஷ்,மது, கிருஷ்ணா எல்லோருமே நமது முக்கிய திரியான பாகம்-14 ஐ வந்து கவனிக்க வேண்டுமாய் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா ,பாகம்-2 ,மதுர கானத்தை துவக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையை வழி மொழிகிறேன்.
பாகம்-2 வெற்றி பெற வாழ்த்துக்கள். இவ்வளவு வேகம்,பதிவுகளின் மேல் குவிய வேண்டிய கவனத்தை சிதறடிக்க வாய்ப்புண்டு.
காட்டாற்று வெள்ளம் போல் ஓடிக்கொண்டிருப்பதை அணை போட்டு தடுக்கலாமா கோபால் ஜி .. நியாயமா தர்மமா நீதியா அடுக்குமா .. அச்சசோ சினிமா வசனம் போல பொங்கி வருகிறதே ..:)
காலை வணக்கம்
உண்மை கோபால் சார் . நேற்று இரவு நான் உண்மையில் பயந்து போய் வாசு அவர்களுக்கு போன் செய்து எனது நடுக்கத்தை பகிர்ந்து கொண்டேன்.
இந்த திரியில் நல்ல நல்ல பாடல்கள் மற்றும் சுவையான தகவல்கள் மேலும் வினோத் சார் அவர்களின் கருத்து படங்களுடன் கூடிய பழைய நிகழ்சிகள் என்று கலந்து கட்டி கொண்டு இருந்தாலும் அதையும் மீறி ஒரு நல்ல நட்பு,புரிதல் என்ற வளையம் உருவாகி கொண்டு இருக்கின்றது. அந்த சங்கிலி வளையம் அறுந்து விட கூடாது என்பது தான் அடியேனின் தினசரி பிரார்த்தனை .
எதிலும் சற்று நிதானம் தேவை என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு .அதே சமயம் ராஜேஷ் சார் கூறியது போல் காட்டாறு வெள்ளத்தை அணை போடவும் முடியாது .
எது எப்படி இருந்தாலும் உங்கள் வாழ்த்து ஆலோசனை இரண்டும் இந்த திரியின் வளர்ச்சிக்கு என்பதில் சற்றும் ஐயம் இல்லை
துரை தன திரை வாழ்க்கையை உதவியாளர் ஆக டைரக்டர் யோகானந்த் அவர்களிடம் துவக்கி பின் ஹம்சகீத என்ற கன்னட படத்தின் இயக்குனுர் G .V ஐயர் அவர்களிடம் பணி புரிந்தார் . அவளும் பெண்தானே இவரது இயக்கத்தில் வெளி வந்த முதல் தமிழ் படம் சற்று புதுமையான கருத்துகளுடன் சமுதாய பார்வையை வெளிபடுத்திய படம் இவரது பசி (1979), குடிசை வாழ் மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்த படம் .இந்திய அரசாங்கத்தால் சிறந்த தமிழ் படம் என்ற பரிசை பெற்ற படம் . நடிகை ஷோபா இந்த திரை படத்தில் குப்பை பொறுக்குபவர் பாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார் .அதனால் அவருக்கு அந்த ஆண்டின் சிறந்த தேசிய நடிகை விருதும் கிடைத்தது
சில நல்ல படங்கள்
ஒரு குடும்பத்தின் கதை (1975)
பாவத்தின் சம்பளம் (1977)
துணை (1982)
ஒரு மனிதன் ஒரு மனைவி (1985)
ஒரு வீடு , ஒரு உலகம் (1975)
பாலைவனத்தில் பட்டாம்பூச்சி (1988)
இவரது முதல் படமான அவளும் பெண்தானே திரை படத்தில் இடம் பெற்ற ரசித்த பாடல் ஒன்று பன்முக குரல் பாலாவும் கண்ணிய பாடகி சுசீலாவும் இணைந்து பாடியது
http://antrukandamugam.files.wordpre...gili.jpg?w=317
வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது
பார்வைகள் என் நன்றி சொன்னது
எண்ணம் எல்லாம் நீ தெய்வம் என்றது
(வார்த்தைகள் )
நன்றியைச் சொல்ல நான் என்ன செய்தேன்
பெண்மையை மதித்தேன் வேறென்ன செய்தேன்
வார்த்தைகள் என்னைச் சொல்லச் சொன்னது
பார்வைகள் நான் சொன்னேன் என்றது
எண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது
(வார்த்தைகள் )
உறவைத் துறந்து ஊரைப் பிரிந்து
பறவை ஒன்று வந்தது - அதன்
உடலைத் தின்று பசியைத் தீர்க்க
உலகம் சுற்றி நின்றது
பறவையின் மனமோ பால் மனம் என்று
பார்த்தேன் எடுத்தேன் கையோடு
உறவேது பேசும் ஊரென்ன சொல்லும்
இரு மனம் கலந்தால் அன்போடு
(வார்த்தைகள் )
காலம் ஒரு நாள் கனியும் என்று
கனவிலும் நந்தன் நினைத்தேனா
கடவுள் மனிதன் வடிவில் வந்து
கருணையை என் மேல் பொழிந்தன
ஏழையின் உள்ளம் கோவிலை எண்ணி
தேவியை இங்கு ஏற்றினேன்
நெஞ்சிலே பொங்கும் நினைவெலாம்
வண்ண மாலையாய்க் கொண்டு சூட்டினேன்
(வார்த்தைகள் )
v குமார் இசை என நினைவு முத்துராமன் சுமித்ரா நடித்து
நடிகை பண்டரிபாய் தயாரிப்பு
http://www.inbaminge.com/t/a/Avalum%...rathu.eng.html
எஸ் வி ஜி, கிருஷ்ணா ஜி வாங்க வாங்க காலை வணக்கங்கள்
கல்யாண பந்தல் அலங்காரம் மற்றும் அவளும் பெண் தானே பாடல்கள் அற்புதம்
============================
வாசு ஜி,கிருஷ்ணா ஜி, எஸ்.வி ஜி இதோ உங்களுக்காக அருமையான இரு பாடல்கள்
ஒரே மெட்டு கொஞ்சம் மாற்றத்துடன் இன்னொரு மொழியில்
நமக்கு என்றும் பிடித்த கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதி ராதா ஜெயலெக்*ஷ்மி பாடிய மனமே முருகனின் மயில் வாகனம்
https://www.youtube.com/watch?v=-uKUXueJYDc
தெலுங்கில் இசையரசியின் குரலில் மாஸ்டர் வேணு சற்றே மாற்றிய மெட்டு
https://www.youtube.com/watch?v=tHzF-HWbFkY
கிருஷ்ணா சார்
http://i58.tinypic.com/vsjgk6.jpg
இன்றைய பொழுது சுமித்ராவின் அறிமுகத்தோடு களை கட்டுகிறது .பரிதாபமான முகம் .அகன்ற விழிகள் -1977-1980 வரை நிறைய படங்களில் நடித்தார் .நிழல் நிஜமாகிறது - சிட்டுக்குருவி
எனக்கு பிடித்த படங்கள் .
க்ருஷ்ணாஜி, வாசு சார், ராஜேஷ் ஜி,கோபால் ஜி, எஸ்வி சார், ராகவேந்தர் சார், முரளி சார் குட்மார்னிங்க்..
ஆஹா மங்களமா ஒரு பாட்டு
மனமே முருகனின் மயில் வாகனம் அழ்கு..நன்றி
க்ருஷ்ணாஜி..சுமியோட பாட்டு க் கேட்டதில்லை..
காலங்கார்த்தால ஒலிக்கும்கீதம்
அலைபாயுதே கண்ணா என் மனம்மிக அலைபாயுதே..
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே
மிக விநோதமான முரளிதரா
என் மனம் அலை பாயுதே
கண்ணா....
தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!
தனித்த மனத்தில் உருக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழல் எனக்களித்தவா!
கதறி மனமுருகி நான் அழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ? இது முறையோ?
இது தருமம் தானோ?
குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்
குழைகள் போலவே
மனது வேதனை மிகவோடு
**
மிஸஸ் அஜீத் பாடிய வெர்ஷனை விட புதிய சங்கமம் என்ற படத்தில் ஒரு வெர்ஷன் வரும்..இருவர் பாடிய பாட்டு எஸ்பி..வாணியா தெரியவில்லை..வெகு அழகாய் இருக்கும்..
இந்தப் பாட்டை வைத்தே பாலகுமாரன் தனது’தலையணைப் பூக்கள்” என்னும் நாவலில் க்ளைமாக்ஸில் இந்தப் பாட்டையும் வேதாந்தத்தையும் மிக்ஸ் செய்து எழுதியிருப்பார்..அதுவும் எப்பொழுது கதையின் நாயகன் ஹார்ட் அட்டாக்கில் துடிக்கும் போது.. அதுவும் நன்றாக இருக்கும்..
ம் அப்புறம் வரட்டா..
பொதுவாக ராஜாவின் தாய்-சேய் பாடல்கள் நம்ம மனதைக் கரைக்கும் உணர்ச்சிகர மெலொடிகளா இருக்கும், இந்த பாடல் அப்படியில்லாமல் ஒரு குஷியான விளையாட்டா போற பாட்டு.
ஒரு குழந்தைய பார்த்துக்கிறதுன்னா சும்மாவா, கண்ணே, மணியே முத்தேன்னு கொஞ்சி, மன்னவனே நல்லவேன்னு பாடி, பாலூட்டி சோறூட்டி, முரண்டு செய்ற முரட்டு பாலகனைச் செல்லமா மிரட்டி அதட்டி சொல்லுறத கேக்க வச்சு, கெட்டபழக்கம் எல்லாம் விலக்கி, நல்ல பழக்கம் எல்லாம் சொல்லிக்குடுத்து, கூட குழந்தையா மாறி விளையாடி ஆட்டம் ஆடி, ஆராரோ தாலாட்டு சொல்லி தூங்க வச்சு… அப்பப்பா.. எத்தனை இருக்கு!!. இது அத்தனையும் இருக்கு இந்தப் பாட்டுல :)
குடுத்திருக்கிற துணுக்குல அப்படியே ஒத்தை வயலினோட ஒரு சாஸ்த்திர சங்கீதமா அமைதியா ஆரம்பிச்சு ஒவ்வொரு கருவியா பக்கவாத்தியமா கூட சேர்ந்து அது போற இடம் கவனிங்க.. இந்த ப்யூஷன்னு என்னமோ இருக்காமே ;))
இந்த படத்தில உள்ள மற்ற பாடல்களின் பிரம்மாண்ட வெற்றியால, இந்தப்பாடல் கொஞ்சம் மறைக்கப்பட்டதுன்னே சொல்லலாம். :-)
ரெட்டை வால் குருவி 1987 -பாலு மகேந்திர இயக்கம்
மோகன் ராதிகா அர்ச்சனா நடித்து வெளிவந்த திரைப்படம்
http://upload.wikimedia.org/wikipedi...Kuruvi_dvd.jpg
கண்ணிய பாடகி சுசீலா அம்மாவும் சின்ன குயில் சித்ராவும் இணைந்து
மிக அபூர்வமான பாடல்
பெண்1 தத்தெடுத்த முத்துப் பிள்ளை யாரோ
ஆல மரத்தடி தேடி அமர்ந்தவர் தானோ
பெண்2 நான் கண்டெடுத்த கட்டுப் பிள்ளை யாரோ
கண்ணியர் கொஞ்சிடும் கன்ன பிறான் இவர் தானோ
பெண்1 பாலை தான் கொடுக்கவா புட்டிப் பாலை தான்
பெண்2 அள்ளித் தான் கொடுக்கவா சத்துனவைத் தான்
பெண்1 இப்போ தத்தெடுத்த முத்துப் பிள்ளை யாரோ
ஆல மரத்தடி தேடி அமர்ந்தவர் தானோ
பெண்2 நான் கண்டெடுத்த கட்டுப் பிள்ளை யாரோ
கண்ணியர் கொஞ்சிடும் கன்ன பிறான் இவர் தானோ
இசை சரணம் - 1
பெண்1 பாலைக் குடிக்காமே படுத்துவதேனோ
பாலகனே இது போலும் பாவி மனம் அலை மோதும்
பெண்2 சேலை இழித்து இழுத்து சிரிப்பது ஏனோ
செய்வது ஏன் இந்த வம்பு தெரியுது உந்தனின் அன்பு
பெண்1 முரண்டு பிடிக்காதே முரடனைப் போல
பெண்2 நெருண்டு முழிக்காதே திருடனைப் போல
பெண்1 சொல்லுரதைக் கேட்டு கொள்ளு பாப்பாவாப்பா
பெண்2 கைய கைய சப்பாதே இந்தா புட்டிப் பால்
பெண்1 கண்ணைக் கண்ணைக் கொட்டாதே அம்மா கோவிப்பா
பெண்2 இப்போ தத்தெடுத்த முத்துப் பிள்ளை யாரோ
பெண்1 ஆல மரத்தடி தேடி அமர்ந்தவர் தானோ
இசை சரணம் - 2
பெண்2 டிஸ்கோ பாப்பா டிஸ்கோ பாப்பா டிஸ்கோ பாப்பா
டிஸ்கோ பாப்பா டிஸ்கோ ஆடு
பெண்1 பிஸ்கெட் தந்தா டிஸ்கோ பிடிக்கும்
பிஸ்கெட் தந்தா டிஸ்கோ பிடிக்கும் கிஸ் கிஸ் பண்ணு ஹ ஹ ஹ
பெண்2 அரச மரம் தேடி அலையவுமில்லே
அதிசயம் வேரெதுமில்லே அதிரசம் போலொரு பிள்ளை
பெண்1 பன்னீரில் நீராட்டி பாலன்னம் ஊட்டி
பாடட்டும்மா ஒரு பாட்டு பால் வடியும் முகம் காட்டு
பெண்2 உருண்டு தெருவில் வந்து மன்னு திண்ண வேணாம்
பெண்1 மருந்து குடிக்காமே மக்கார் பண்ண வேணாம்
பெண்2 மண்டையிலே ரெண்டு வைப்பேன் ராஜா ராஜா
பெண்1 சுட்டி புள்ளே நீ தூங்கு ஆரோ ஆரோ ஆரிராரோ
பெண்2 சொல்லும் பேச்சை நீ கேள்ளு ஹீரோ ஹீரோ வேராரோ
பெண்1 இப்போ தத்தெடுத்த முத்துப் பிள்ளை யாரோ
ஆல மரத்தடி தேடி அமர்ந்தவர் தானோ
பெண்2 நான் கண்டெடுத்த கட்டுப் பிள்ளை யாரோ
கண்ணியர் கொஞ்சிடும் கன்ன பிறான் இவர் தானோ
பெண்1 பாலை தான் கொடுக்கவா புட்டிப் பாலை தான்
பெண்2 அள்ளித் தான் கொடுக்கவா சத்துனவைத் தான்
பெண்1 ஆஹா ஆரிராரி ராரி ராரோ ஆரோ
ஆரிராரி ராரி ராரி ராரோ
பெண்2 ஆரிராரி ராரி ராரி ராரி ராரோ
ஆரிராரி ராரி ராரி ராரி ராரோ
இந்த பாட்டு லிங்க் யாரவது ஹெல்ப் ப்ளீஸ்
ராஜேஷ் சார்
மிகவும் இனிமையான பாடல்களை வழங்கியுள்ளீர்கள் .இசையும் குரலும் அருமை .நன்றி
சி.கா வருக வருக
எஸ்.வி , சுமித்ரா சாந்தமான அழகு ... .. நல்ல நல்ல பாத்திரங்கள் செய்தார்..
துரை இயக்கத்தில் வந்த படங்களில் ஒன்று ரகுபதி ராகவ(ன்) ராஜாராம்.
ஜெயச்சந்திரன், சுமித்ரா நடிக்க எஸ்.பி.பி., சுசீலா குரல்களில் ஒலித்த "தங்கத் தேரோடும் அழகினிலே" பாடல் மட்டுமே இன்று வரை இந்தப் படத்தை நினைவில் வைத்திருக்க உதவிக் கொண்டு இருக்கிறது.
இதைப் ப்ற்றி வேறு ஏதாச்சும் செய்தி இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.
http://www.inbaminge.com/t/r/Ragupat...rodum.vid.html
நடிகை சுமித்ரா வாசுதேவன் நாயர் இன் நிர்மால்யம் 1973 இல் உண்டு இல்லே ராஜேஷ் சார் ?
Sumitra was fluent in all languages like Sujatha..
ஆரம்பத்தில் ரகுபதி ராகவ ராஜாராம் என்று படத்தின் தலைப்பு இருந்து பின்னர் மகாத்மா காந்தியின் வார்த்தை இது என்று சொல்லி
ரகுபதி ராகவன் ராஜாராம் என்று மாற்றப்பட்டதாக நினைவு
ரஜினியின் ஆரம்ப கால படம் . சுமித்ராவின் அண்ணன் என்று நினைவு
ரஜினிக்கு ஒரு பாடல் உண்டு .s c கிருஷ்ணன் என்று ஒரு பாடகர் பாடும் 'கத்தாழை காட்டுக்குள்ளே கை அடிச்சா சுகம் இருக்கும் ' என்று வரும்
சங்கர் கணேஷ் இசை .இந்த படத்தில் ராம்குமார் என்று ஒரு நடிகர் நடித்த நினைவு .விஜயகுமார் ராம்குமார் ஜெயச்சந்திரன் மூவரும் அண்ணன் தம்பியாக வருவார்கள் சொல்லத்தான் நினைக்கிறன் படத்திலும் வருவார் . (ஸ்ரீவித்யாவை பெண் பார்க்க வந்து ஜெயசித்ராவை சைட் அடிப்பார் )
ஆமாம் ராஜேஷ் சார்
1974-80 கால கட்டத்தில் ஏகப்பட்ட படம் சிவகுமார் ஜெய்கணேஷ் விஜயகுமார் உடன் வருவார்
முகத்தில் முகம் பார்காலம்,நந்தா என் நிலா ,நிழல் நிஜமாகிறது (யாராலும் மறக்க முடியாத இந்து ) ,தேவைகள்,ஒரே முத்தம்,கடவுள் அமைத்து வைத்த மேடை ,முதல் இரவு,அண்ணன் ஒரு கோயில்,இவள் ஒரு சீதை இப்படி சொல்லிகிட்டே போலாம்
கிருஷ்ணா ஜி .. தத்தெடுத்த முத்து பிள்ளை யாரோ தூள் பாட்டு , ஞாபகம் செய்ததற்கு நன்றி ...
இதே போல் துள்ளல் பாடல், குழந்தைகளுடன் கேலி செய்யும் விதமாக அமைந்த பாடல்
இசையரசியுடன் யுவன்,கார்த்திக்,பவதாரிணி,வெங்கட் பிரபு பாடிய பாடல்
சொன்ன பேச்ச கேட்க மாட்டோம் ...
https://www.youtube.com/watch?v=P3cI0z8Gq0c