காலை விட்டவன்
கொஞ்சம் முறைத்தான்..
வலியில்லை என்றால்
ஏன் சொல்கிறாய்..
குறுஞ்சிரிப்பு அவள் முகத்தில்
உன் கவலை எனக்காக்ப்படும்போது
உன் முகம் அழகாகிறது மேலும்..
ஒருகணம் கோபவிழி பார்த்து
மறுகணம் சிரித்துச் சொன்னான்
‘வெவ்வெவ்வெவே”
Printable View
காலை விட்டவன்
கொஞ்சம் முறைத்தான்..
வலியில்லை என்றால்
ஏன் சொல்கிறாய்..
குறுஞ்சிரிப்பு அவள் முகத்தில்
உன் கவலை எனக்காக்ப்படும்போது
உன் முகம் அழகாகிறது மேலும்..
ஒருகணம் கோபவிழி பார்த்து
மறுகணம் சிரித்துச் சொன்னான்
‘வெவ்வெவ்வெவே”
வெவ்வெவ்வெவ்வே சொல்லும் சின்ன கண்ணு
உன் பாதம் கொஞ்ச மண்ணில் ஆடு கண்ணு..
இந்த தம்பட்டியான் தப்பும் தார தப்ப
உன் கலை கொஞ்சும் ஆட்டத்த காணத்தானே..
நாரோடு பூகோர்த்து மாலை சென்சு
உன் கழுத்துக்கு ஆரணம் போட்டுவிட்டேன்..
மஞ்சளும் குங்குமம் பிடிக்குமென்று
உன் நெற்றியில் நிலவாக இட்டுவிட்டேன்..
யாராரோ அவர் குறைகூற நித்தம் நித்தம்
உன் தலை மீது ஏற்றிடுவார் பாரம் மொத்தம்..
பாரிப்போ பார் எவரும் போர்வைக்குள்ளே
நித்திரை கொள்வதை உன்னை பனியில் தள்ளி..
உன் தம்பட்டியான் நான் தட்டும் தாளம் கண்ணு
வந்து மனம் குளிர ஆட்டத்த போடு கண்ணு..
கண்ணாத்தா பொன்னாத்தா மாரியாத்தா
வித விதமா பேர்வெச்சு அழைக்கிறாங்க..
படையலும் வேண்டுதலும் கோடி கோடி
உள்ளே எத்தனை சுயநலம் பாரு கண்ணு..
குறை தீர்க்கும் வேலையை ஒத்திவை நீ
மனம் குளிரும் வேளையில் பாதம் வை நீ..
திசை எங்கும் சந்தோசம் சிரிபலைகள்
ஆடிட ஆடிட ஆடு கண்ணு..
தப்பன் தாரை தப்பை கண்டு உருகிடவே
கணம் ஆடிட ஆடிட ஆடு கண்ணு..
கண்ணு கட்டிய தேவதை
கண்ணை திறந்தால்தான் புரியும்
வழக்குகளுக்கு வழங்குவது
நியாய தராசின் தீர்ப்பல்ல
அநியாய பரிசின் தீர்ப்பு...
-
கிறுக்கன்
தீர்ப்பு சொல்லவோ
கலங்கினான்
நடுங்கினான்
தண்டனை அவனுக்கே
வாதியிடம் சிக்கவா
பிரதிவாதியிடம் மோதவா
பிராது கொணர்ந்தது
தாய் தாரம் என்றால்
பாவம் என் செய்வான்
அப்பாவி ஆண்மகன்
ஆண்மகன் பிறந்து என்ன
..அளவிலா ஆசை கொண்டு
வான்மழை போல நன்றாய்
...வண்ணமாய் அன்பு கூட்டி
நான்பல செய்து என்ன
...நலமுடன் வேலை பெற்று
காண்பவர் வியக்கும் மாதைக்
..கண்டபின் சென்று விட்டான்..
சென்றுவிட்டான் காளை
வென்றுவிட்டான் காதலை
கொன்றுவிட்டான் பாசத்தை
பாவம் அந்த அறியாப் பேதை
புத்தன் அணைத்த கோதை
திணிக்கப்பட்டத் துறவுப் பாதை
துறவுப் பாதை நாடிச் செல்லும்
...தூய்மை எனக்கு இல்லைதான்
புறக்கண் காட்டும் காட்சி எல்லாம்
..புரிந்து உள்ளம் மயங்குவேன்
அறமா அழகா அமுதா கொடிதா
..அதுவும் நானும் அறிகிலேன்
உறவுப் பார்வை ஒன்று தாராய்
..ஒயிலில் மிளிரும் பாவையே
பாவையே
கொல்லிப்பாவையே
உயிர்க்கொல்லிப்பாவையே
உனக்கிரக்கமேயில்லையா
உனக்கிரக்கமில்லையா..
ஏரி திறக்கும் நல்லையா!
கண்ணை திறந்து பாரைய்யா..
கருகும் பயிர்விவ சாய்யையா..
அடிக்கும் வாழ்க்கை தானைய்யா..
போகும் உயிர்விரச மாயையா..
ஒட்டுவேனும் சீட்டும்வேனும் தற்கு
ஓரவஞ்சனை காட்ட வேண்டும்..
பகிர்ந்து மகிழும் பழக்கமெல்லாம்
மண்ணாகி போக வேண்டும்..
செய்தவனும் மண்ணுக்கே போகவேண்டும்!
பகிர்ந்து கொள்ள பாரையா..
நாட்டின் சுபிட்சம்கண்டு மகிழைய்யா!
மகிழைய்யா சின்னப் பைய்யா
மழலை பேசும் பொன்னைய்யா
மாந்தர் கபடறியா நல்லய்யா
மறுபடியும் வராது இப்பருவம்