ஐம்பதிலும் ஆசை வரும் (எனக்கில்லை... ஜோதிலஷ்மிக்கு ஆட):)
Printable View
நடிகர் மற்றும் மக்கள் திலகலுக்கு தனி திரியே இருக்கிறது. எனவே அவர்களுடைய படங்களின் பாடல்களை அவர்களுடைய திரியிலே பதிவு செய்வதால், அங்கே பதிவு செய்யாத / விமர்சிகதா பாடல்களை இங்கே பதிவு செய்யலாமே
கங்கைக் கரைத் தோட்டம் பாலாசார், என்னதான் ரகசியமோ இதயத்திலே - கார்த்திக் சார்.. ரெண்டுமே என் மனதைக் கொள்ளை அடித்த பாட்டுக்கள்.. (லிரிக்ஸ், மியூசிக் அண்ட் பிக்சரைசேஷன்) நன்றி..
இப்ப என்ன மனசுல ஓடிக்கிட்டிருக்குதெரியுமா
அம்பலத்து நடராஜா உன் பலத்தை காட்டுதற்கு
என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனைய்யா
உன் பதமே கதியென்று நம்பியவர் வீட்டிலே
கண் மறைக்கும் விளையாட்டு ஏனைய்யா..!'
பாமாலை அவர் படிக்கப் பூமாலை நான் தொடுக்க
வாழ் நாள் முடிந்ததையா நடராஜா..
அதுக்கப்புறம் வரிகள் கிடைக்கலை.. நான் அந்தப் படமும் பார்த்ததில்லை..நண்பர்கள் அலசலாமே (இந்தாங்க சூப்ப்ர் ரின் பாக்கெட் :) )
பின்வரும் கடிதம் இன்று காலையில் நண்பர் திரு s b காந்தன் (ஜெர்ரி பட டைரக்டர் மற்றும் நடிகர் மௌலியின் சகோதரர் )
அவர்களிடம் இருந்து ஜிமெயில் மூலமாக வந்த ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன்
கண்ணதாசன் ஒரு சகாப்தம்
திரைப்பாடல்களில் ஒருவரியிலேயே திரைக்கதையைச் சுருக்கித் தரும் திறமையும், வளமான சொல்லாட்சியும், வற்றாத கற்பனை ஊற்றும்.. கண்ணதாசன் ஒரு சகாப்தமாக வாழ்ந்தார்.
“ரஸமான தத்துவம், ரஸமானதத்துவம்
ராட்சஸச் சிந்தனைகள்…..”
“சுட்டெரித்தாலிந்த மேனியும் சாம்பலாய்ச்
சுடுகாட்டு மண்ணிலுருளும்
சுவையான பாவலன் போயினான் எனச் சொல்லி
சொந்தமும் வீடுசெல்லும்…”
என்ற மரபு வரிகளிலும்,
“நாயகனைச் சிலை வடிவில் நாட்டி வைத்த சைவர்திருக்
கோயிலுக்குள் நான் போனேன் தோழீ-நிலை
கொள்ளவிலை வநதுவிட்டேன் தோழீ!”
“………………………………………………- இந்தக்
கொக்குக்குத் தேவைதன் கூரிய மூக்கினில்
சிக்கிடும் மீன் மட்டுமே-அதன்
தேவைகள் வாழட்டுமே”
“தோட்டத்திலே தென்னை இரண்டு
முற்றித் திரண்டு
பக்கம் உருண்டு”
போன்ற சிந்து நடையிலும்
“மெத்தைச் சுகத்துக்கும் மேலெழுமோர் வேட்கைக்கும்
தத்தைச் சுகத்துக்கும் தத்தளிக்கும் ஆசைக்கும்..
எத்தைத் தான் நம்புவதோ எதனைத் தான் நாடுவதோ
அங்கொருகால் இங்கொருகால் ஆடும் சிறுமனமே”
போன்ற சுயதரிசனக் கவிதைகளிலும்,
பழுத்த ஆன்மிகவாதியாகத் தன் அர்த்தமுள்ள இந்துமதம் கட்டுரைகளிலும் பலபரிமாணங்களில் மின்னிய கவியரசரை மரியாதையுடன் நினைவு கூர்கிறேன்.
” படகோடு கங்கை குகனாக வேண்டும்
பணிவான ஆசை ரகுராமா”
என்கிற அவர்தம் வைரவரிகளுக்குக் காணிக்கை யாக இந்த ஓவியத்தை சமர்ப்பிக்கிறேன்!
நன்றி
காந்தன்
www.sbkanthan.com
www.sbkanthanblogspot.com
நன்றி கார்த்திக் சார்,
நாம் நியாயமாகவே நடக்கிறோம். நடப்போம்.
அருமையான, எனக்கு மிகவும் பிடித்த, என்னுடனேயே (cellil) இருக்கும் 'என்னதான் ரகசியமோ' இதயத்திலே பாடலைப் பற்றி பதித்து மகிழ்ச்சியடைய வைத்துள்ளீர்கள்.
இப்பாடலில் வீடியோ மிக்ஸிங் அவ்வளவு அழகு.
நினைத்தால்
எனக்கே (ஆனந்த) மயக்கம் வரும் சமயத்திலே
சூப்பர் பாடலை அளித்ததற்கு நன்றி!
தரிசனம் (1969) (குறு ஆய்வு)
http://www.inbaminge.com/t/d/Dharisanam/folder.jpg
கதையின் நாயகன் ஓவராக செலவு செய்து மனைவி, மக்கள், உற்றார், உறவினர், தாய், சுற்றம் என்று வெறுத்து காசில்லாமல் கடனாளியாகி, வீட்டை விட்டே ஓடி விடுகிறான். வழியில் அவன் சந்திக்கும் பெண் அவனிடத்தில் ஆசை கொண்டு விரகதாபத்தில் பாடுகிறாள். அவன் தான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை என்று அவள் உறவுக்கு மறுத்து சாமியார் ரேஞ்சில் பதில் அளிக்கிறான். இறுதியில் கதாநாயகனைப் போல் தோற்றம் கொண்ட இன்னொருவன் கதாநாயகன் இடத்திற்கு வந்து அவன் கடனையெல்லாம் அடைத்து வாழ்க்கை வாழ்வதற்கே என்று கதாநாயகனுக்குப் புரிய வைக்கிறான் கண்ணியமாக.
இரு வேடங்களிலும் ராஜன். ராஜனின் நாடகக் குழுவால் நாடகமாக நடத்தப்பட்டு திரைப்படமானது.
'கல்யாணமாம் கல்யாணம்' என்ற சென்சாரின் வயற்றில் புளி கரைத்த பாடல் ஒன்று உண்டு
இந்தப் பாடலில்
'காலம் பார்த்து கர்ப்பத்துக்கு தடை விதிச்சாங்க' (சிவப்பு முக்கோணம் சுவர்களில் வரைந்த சமயம்) வரிகள் 'உற்பத்திக்கு தடை விதிச்சாங்க' என்று மாற்றப்பட்டது.
மனோரமா துக்ளக் ஜோடி. மனோரமா சினிமா பாட்டு பிரியை. தொட்டதற்கெல்லாம் சினிமாப் பாடல்கள் பாடி சோவை சித்ரவதை செய்வார். நம்மை அல்ல.
புஷ்பலதா எ.வி.எம்.ராஜனுக்கு ஜோடி. ஸ்ரீகாந்த், சேஷாத்திரி இருப்பார்கள். வி.டி.அரசு இயக்கம்.
சைலஸ்ரீ என்ற அழகான கன்னட நடிகை ஒருவர் இருந்தார். அவர்தான் 'மாலை நேரத்து மயக்கம்' தந்தவர். அழகாக இருப்பார். அப்போது அவருக்கு ஆஷா என்று பெயர். 'பேசும்படம்' புத்தகத்தில் பார்த்திருக்கிறேன்.('வெண்ணிற ஆடை' படத்தில் மூர்த்தியுடன் 'அல்லிப் பந்தல் கால்கள் எடுத்து ஆட்டம் ஆடிட வா' என்று ராட்சஸி குரலில் அட்டகாசமாக ஆடுவாரே அவரேதான்)
ராஜன் வழக்கம் போல. ஆனால் இரு வேடங்கள்.
'அவனவன்' தலையெழுத்து என்ற பாடல் ஒன்றும் உண்டு. ராஜனுக்கு பாடகர் திலகம் பாடுவார். (பைத்தியக்கார தொனிப் பாடல்)
'மாட்டிகிட்டான் மாட்டிகிட்டான்'
'மக்கு மாப்பிள்ளே!
என்று.
அப்புறம் மனோரமா பாடும் 'போகாதே அய்யா போகாதே' சங்கீதப் பாடல் கேட்டு சோ அழுவார். பதிலுக்கு வேறு பாடுவார். புதுக் கோட்டை ரங்கராஜன் என்பவர் சோவுக்கு பின்னணி கொடுத்ததாகப் படித்திருக்கிறேன்.
'உன்னை என்னால் திருத்த முடியாதம்மா'
கண்ணதாசனைப் பற்றி சொல்லவா வேணும்!
சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இசை. 'இது மாலை நேரத்து மயக்கம்' தந்து அந்த ஒரு பாடலில் எங்கேயோ போய் விட்டார்.
எப்படியோ 'தரிசனம்' பற்றி தெரிந்ததை சொல்லியாயிற்று.
கார்த்திக் சார் இன் இதய கமலம் பல நினைவுகளை தூண்டி விட்டது
சுசீலாம்மாவின் ஒரு "மோகனமான" பாட்டு
இது ஒரு வசீகரமான காதல் பாட்டா அல்லது தெய்வீக பாட்டா
எதில் சேர்ப்பது
நடுநடு-ல கண்ணன், முருகன்-ன்னு வருவதால், இது ஏதோ சாமிப் பாட்டு மாதிரி இருக்கும் . ஆனால் இனிய மோகன மெலடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி-
பாடலின் துவக்கத்தில் வரும் புல்லாங்குழல் இசை
பாடலின் நடுவில் வரும் மிருதங்க பீட்
மாமா கண்ணதாசன் சுசீலா கூட்டணி
மலர்கள் நனைந்தன பனியாலே!
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே!
பொழுதும் விடிந்தது கதிராலே!
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே!
(மலர்கள் நனைந்தன)
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்!
இரு கன்னம் குழி விழ நகை செய்தான்!
என்னை நிலாவினில் துயர் செய்தான்!
அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்!
சேர்ந்து மகிழ்ந்து போராடி!
தலை சீவி முடித்தே நீராடி!
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி!
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி!
(மலர்கள் நனைந்தன)
இறைவன் முருகன் திருவீட்டில்,
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி,
உயிரெனும் காதல் நெய்யூற்றி,
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி!
(மலர்கள் நனைந்தன)
ரவியின் இளமை துள்ளல் வளைந்த நடையை இரண்டாவது சரணத்தில் அருமையாக படம் பிடித்து இருப்பார்கள்
வாசு சார்
தரிசனம் குறு ஆய்வு அருமை
தோள் கண்டேன் தோளே கண்டேன்..விட்டுட்டீங்களே..
தேடிவந்த திங்கள் திங்களில் செவ்வாய்
செவ்வாயில் வெள்ளி சேர்த்தணைப்பேன் கையில் அள்ளி
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல..
ம்ம்
ஏதோ வங்க/ஒரிய மொழிப் படத்திலிருந்து தழுவி எடுத்த படம் என நாகிரெட்டியாரோ யாரோ எழுதியதைப் படித்த நினைவு..
ஒரு கோர்ட்
ஒரு ஃப்ளாஷ்பேக்
ஒரு அழுகை
ஒரு கோர்ட் சீன்
என ஏதோ ஒரு விமர்சனத்திலும் படித்த நினைவு.. கே.ஆர்.வி யின் இரண்டாவது படம்..ஏதோ ஒரு சிலை போல வைத்து அது தான் கே.ஆர்.வி என்று பூஜையெல்லாம் செய்வார்கள்..
சமீபத்தில் கலைஞர் டிவியில் - மேபி ஆறுமாதத்திற்குள் பார்த்த படம்..என்ன தான் ரகசியமோ இதயத்திலே..ஷீலுவோன்னோ..
தரிசனம் பற்றிய தகவல்களுக்கு நன்றி வாசு சார்..பாட்ட மட்டும் பார்த்துட்டு ஒதுங்கிக்கறது பெஸ்ட் நு நினைக்கறேன்..