http://i65.tinypic.com/f0no5s.jpg
Printable View
யாரடா மனிதன் இங்கே பாடல்.
(லட்சுமி கல்யாணம்)
நல்ல குணங்களுக்கு விலங்குகளின் குணத்தை உவமை கூறி பாராட்டுவது உலக இயல்பு.
மான் விழி
சிங்ககர்ஜனை
புலிப்பாய்ச்சல்
குதிரை ஓட்டம்.
இப்படி சில.மிருகங்களை உவமையாக்கி பாராட்டும் அதே சமயம் ,தீய குணம் கொண்டோரின் குணங்களுக்கும் அதே மிருகங்களின் குணத்தையே உவமை யாக பயன்படுத்துகின்றான்.
இது ஒரு முரண் ?என்றுசிலர் கூறுவதும் உண்டு. கவியரசரும் தன் பங்கிற்கு லட்சுமி கல்யாணம் படத்திற்காக மிருகங்களை உவமையாக்கி
இந்தப்பாடலை கொடுத்துள்ளார்.அந்த விவாதங்கள் நமக்கெதற்கு. நமக்கு நம் நடிகர்திலகத்தின் நடிப்பு ஒன்று போதுமே.
கதைமாந்தர்களின் வஞ்சக எண்ணங்களால் பாதிக்கப்படும் கதையின் நாயகன் அம்மனிதர்களின் குணங்கள் கண்டு கொந்தளித்து பாடுவதாக அமைந்த பாடல் இது. அதை நம் தலைவர் எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.நல்ல மனிதர்கள்யாராவது நடந்து போகிறார்களா என்று தீப்பந்தத்தைதூக்கி ஒவ்வொரு மனித முகமாகப் பார்த்து சலித்துப்போய் தீப்பந்தத்தை தூக்கி எறியும் அந்த முதல் ஷாட்டிலேயே அந்த விரக்தியை
எப்படி அருமையாகக் காட்டுவார் பாருங்கள்.முகத்தில் வந்து விழும் சுருட்டின் புகையை அலட்சியப்படுத்தி நம்பியாரை தள்ளிவிட்டு நடப்பதும்,எதிரில் வரும் மனிதரை தட்டு தட்டி நகர்ந்து போகச் செய்வதிலும்,சீட்டு விளையாட்டுக்கும்பலை முறைத்தபடி நகர்வதிலும் அந்தக் கோபம் எப்படியெல்லாம் வெளிப்படும்.ஒரு மனிதர் கோபப்பட்டு அதை மற்றவர்களை ரசிக்கவைக்க அவரை விட்டால் வேறு யார் உள்ளனர்.?
வெள்ளை ஜிப்பாவில் மனிதரை பார்த்துக்கொண்டேஇருக்கலாம்.நிஜத்திலும் கடைசிவரை டிரேட்மார்க் ஆடை அதுவல்லவா.
காமிரா கோணங்கள் எல்லாம் பிரமாதப்படுத்தும்.லைட் அண்ட் டார்க் வெளிச்சக்கீற்றுக்களை எந்தவித பார்வை உறுத்தல்கள் இல்லாமல் படம் பிடித்த
விதத்திற்குகாமிராமேனை எல்லோரும் பாராட்டியாக வேண்டும்.
யாரடா மனிதன் இங்கே இரண்டாவது முறையாக பாடும்
போது சட்டென்று திரும்பி ஒரு போஸ் கொடுப்பார் பாருங்கள்.அட்டகாசம் தான்.கூட்டிவா அவனை
இங்கேவில் முகம் காட்டும் வெறுப்பில் தான் எத்தனை உண்மையான உணர்ச்சிகள்.இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே. இந்த வரிகளின் போது கீழிலிருந்து மேல் செல்லும் காமிரா உழைப்பு க்கு ஒரு சபாஷ்.
பிண்ணணி இசையில் நமக்கு போனசாக கந்தன் கருணை நோட்டீஸ் விநியோக காட்சி.
மனிதரில் நாய்கள் உண்டு
இந்த வரிகளின் போது தலைவர் மெல்ல முகம் திருப்பி பார்ப்பார். என்ன அழகான போஸ் அது.அந்தப் பார்வையே ஆளை ஒரு வழி பண்ணிவிடும்.
மனதினில் நரிகள் உண்டுவுக்கு நம்பியாரை பார்த்து உடலை சற்று வளைத்து முகத்தில்காட்டும் பாவனைகள் சொல்லி மாளாது.என்ன ஒரு அர்ப்பணிப்பான நடிப்பு வெறியர்..நம்பியாரையும் நடிக வேந்தரையும் காட்டும் ஷாட் அசத்தலாக இருக்கும்.நம்மவரை வெளிச்சத்திலும் நம்பியாரை இருட்டிலுமாய் படம் பிடித்து இருவரின் குணங்களையும் ஒரே பிரேமில் காட்டுவது வெகு சிறப்பு.அற்புத பதிவு.தலைவர் காமிராவுக்குள் வந்து புகுவது போல் காட்டும் ஷாட் , தொழில் சிரத்தையை காட்டுகின்றது.க்ளோஷப் ஷாட்களில் பிரமிக்க வைப்பார்.இந்த ஷாட்களுக்கு மயங்காத மனிதர் எவரும் இருக்க முடியாது.பார்வையில் புலிகள்உண்டு என்ற வரிகளின் போது நடந்து வந்து நின்று ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள்.
என்ன ஒரு போஸ்.
என்ன ஒரு பார்வை
என்ன ஒரு மிடுக்கு
என்ன ஒரு அலட்சியம்.
எந்த ஹாலிவுட் நடிகரானாலும் இந்த ஒரு ஸ்டைலுக்கே மிரண்டு விடுவார்கள் மிரண்டு
பழக்கத்தில் பாம்பு உண்டு என்பதில் அடுத்த ஸ்டைல் அஸ்திரத்தை பிரயோகித்து வியப்பு மேல் வியப்பு காட்டுவார்,
"பூமிப்பந்தின் சிறந்த நடிகன்."
நாயும் நரியும் புலியும் பாம்பும் வாழும் பூமியிலே
மானம் பண்பு ஞானம் கொண்ட மனிதனைக் காணவில்லை.
எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது.வார்த்தைக்கு வார்த்தை சரமாரியாவந்து விழும் பாவனைகள்.
உடம்பின் செல்கள் அனைத்திலும் ஊடுருவும் உருக்கமான நடிப்பு.ஒவ்வொரு வார்த்தைக்கும் அணு அணுவாக காட்டிய நடிப்பு.
ஒவ்வொரு நடிப்பும் அவரிடத்தில் இருந்து வெளிப்பட்ட பின் தானே நடிப்புக்கலை என்னவென்று நாம் உணர முடிந்தது.நடிப்புக்கலையின் ஆசான் அவரல்லவோ.
சிரிப்பினில் மனிதன் இல்லை
அழுகையில் மனிதன் இல்லை
உள்ளத்தில் மனிதன் இல்லை
உறக்கத்தில் மனிதன் உண்டு.
மனிதன் விழித்திருக்கும் நேரமெல்லாம் மனதில் மிருகங்கள் தான் நடமாடிக்கொண்டிருக்கின்றன என்பதைத்தான் கவிஞர் எவ்வளவு நாசூக்காக வரிகளில் விளையாடி இருக்கிறார்.
கண் இமை நடிக்கும்
கன்னத்து தசைகள் நடிக்கும்
என்பதை விளக்கும் க்ளோசப் காட்சிகள் இப்போது.அவர் கை அசைந்தால் நம்மையறியாமல் நம் கை அசையும்.காலசைந்தால் தன்னிச்சையாக காலசையும்.
அவரின் வாயசைவு நம்மைவாயசைக்கச் செய்யும் உணர்வுகளை ஏற்படுத்துகின்றது.அது தான் ஜீவனுள்ள நடிப்பு என்பது.
திரு முத்தையன் அவர்கள் நீலவானம் படத்தின்
பாடல் காட்சிகளை பதிவிட்டுக்கொண்டிருந்திருக்கிறார்
அதனை கவனிக்காமல் நான் மறு வெளியீட்டு விளம்பரங்களை
பதிவிட தொடங்கினேன், பின்னர்தான் கவனித்து என் பதிவுகளை
நிறுத்திவிட்டேன்.
மறு வெளியீட்டு விளப்பரங்கள் தொடாகிறது....
http://i68.tinypic.com/nflnkl.jpg
மறு வெளியீட்டு விளப்பரங்கள் தொடாகிறது....
http://i63.tinypic.com/o8cozn.jpg
மறு வெளியீட்டு விளப்பரங்கள் தொடாகிறது....
http://i65.tinypic.com/szzguc.jpg
மறு வெளியீட்டு விளப்பரங்கள் தொடாகிறது....
http://i63.tinypic.com/732uma.jpg
மறு வெளியீட்டு விளப்பரங்கள் தொடாகிறது....
http://i63.tinypic.com/2zsxz6v.jpg
மறு வெளியீட்டு விளப்பரங்கள் தொடாகிறது....
http://i66.tinypic.com/oidg06.jpg
மறு வெளியீட்டு விளப்பரங்கள் தொடாகிறது....
http://i68.tinypic.com/2uduxec.jpg
மறு வெளியீட்டு விளப்பரங்கள் தொடாகிறது....
http://i63.tinypic.com/2r7x4j8.jpg
மறு வெளியீட்டு விளப்பரங்கள் தொடாகிறது....
http://i63.tinypic.com/2q1vxuc.jpg
முத்தையன் அம்மு சார் நீலவானம் பதிவுகள் மிக அருமை
நன்றி உங்களுக்கு.
சிவா,
சிவாஜி படங்கள் முதல் வெளியீடாகட்டும்,மறு வெளியீடாகட்டும்,அவர் சாதனையின் அருகில் கூட யாரும் நெருங்க முடியாது. நெருங்கி விட்டதாக பொய் சொல்வோர் சொல்லி விட்டு போகட்டும். சொக்கலிங்கம், நம் பட விளம்பரத்தில் ,தேவையில்லாத பெயர்களை உபயோக படுத்துவதை நாம் அனுமதிக்க கூடாது.
புதியபறவை ,1978 இல் பைலட் திரையரங்கில் வெளியாகி 50 நாட்களுக்கு மேல் ஓடி ,நிறைய திரையரங்குகளில் ஒரு வாரம்,இரு வாரம்,மூன்று வாரம் என கிட்டத்தட்ட 150 வாரங்களாவது ஓடியது. பழைய தினத்தந்தி விளம்பரம் உள்ளவர்கள் வெளியிடலாம். 1978,1979,1980 வருடங்களில்.1986 இல் சிவந்த மண். பைலட்திரையரங்கில் வெளியாகி 50 நாட்கள் கண்டு சுழற்சியில் கிட்டதட்ட 50 வாரங்கள் கண்டது.
ரசிகர் மன்ற தலைமையிடம், ஒரு ஆவணம் கூட இல்லை. நாம் கொடுத்தால்தான் உண்டு.
முத்தையன்,
என்னுடைய மிக மிக favourite சிவாஜி பாடல் லிட்டில் பிளவர் உங்கள் கை வண்ணத்தில் மிளிர்ந்ததை ரசித்து என் காலை இனிமையானது. சிரம் தாழ்ந்த நன்றி.
சின்ன வயசின்
சின்னூண்டு மனசில்
பெரிசாய்ப் பதிந்த பாட்டு.
என் ஆசை தவம் மெச்சி,
வானொலி
வரமாய்த் தந்த பாட்டு.
எந்தக் காரணமுமில்லாது
தனிமையின் நிர்மலத்தில்
என்னைக்
கசியச் செய்த பாட்டு.
அழ வைத்த பாட்டு.
தனக்குள் ஆழ வைத்த பாட்டு.
சினிமாக் கதாநாயகியின்
சோகம் தேற்றும்
சூழலுக்காக மட்டுமல்லாமல்,
எது எதனாலோ
சோகித்துக் கிடக்கும்
மனித இதயங்களையும்
தெளியச் செய்த
கவியரசரின்
இலக்கிய நம்பிக்கை
இந்தப் பாட்டு.
உலகத்தில்
எவனுக்கும் வாய்க்காத,
உணர்வுகள் கரகரக்கும்
மெல்லிசை மாமன்னரின்
ஞானக்குரலில்
இப்பாடல் கேட்டு, பார்த்து
நாளாயிற்றே
என்ற கவலையிலிருந்து
"ராஜ் தொலைக்காட்சி"
மீட்டது என்னை நேற்று..!
"எதற்கும் ஒரு காலம்"
வர வேண்டாமா?"
https://youtu.be/qcw3ExOY9Gw
இரு துருவம்
குதிரையை திருப்பும் லாகவம்
குதிரையை கூட ஸ்டைல் பண்ண வச்சிடுவார் http://i1039.photobucket.com/albums/...psdgicfcea.jpg
Chinhaiya ganesan
and
Ganesan ramkumar http://i1039.photobucket.com/albums/...psmob1pvb7.jpg
Shooting spot still
Iru duruvam http://i1039.photobucket.com/albums/...psrepvm8ln.jpg