திரு. கோபால்,
மிக அழகாக கவனித்து குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த விசாரணைக் காட்சி நெடுகிலும், அவரது குரல் சற்றே கனமாக, அப்போது அவர் அணிந்திருக்கும் உடைக்கு ஏற்றார்ப்போலும் இருக்கும். காட்சி நெடுகிலும், அவரும் ஏற்கனவே காதலித்திருந்தாலும், அவர் செய்தது போல், சிவகுமாரும் தவறும் செய்து விடுவார் என்பது போல், கையாண்டிருப்பார். ஒரு வித சுய இரக்கம் மற்றும் பொறாமையும் கலந்திருக்கும். கடைசியில், மரத்தில் செதுக்கியதைக் கண்டு கண் கலங்கும் போது, சற்றே தடுமாறி, மறுபடியும் முன் இருந்த நிலைக்கு சட்டென மாறுவார்.
சௌகாரை அடித்து விட்டுச் சென்று, பின்னர் திரும்பியவுடன், காலை மாற்றிப் போடுவதை அழகாக கவனித்துக் குறிப்பிட்டுள்ளீர்கள். உடன், "I am sorry" என்று சௌகாரிடம் சொல்லும் போது, அவரது கண்களிலும், முகத்திலும், குற்றம் இழைத்தவனின் guilty பாவனையைக் காணலாம்.
நாகையா பணியிலிருந்து ஓய்வு பெறும் கட்டம். மிகச் சில நிமிடங்களே வந்தாலும், இந்த நிமிடம் வரை கண்களையும், நினைவையும் விட்டு அகல மறுக்கிறது.
மிக அற்புதமான ஆய்வு - மிக அற்புதமான படம், மற்றும் நடிப்பிற்கு.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி