என்ன வென்று சொல்வது இது போன்ற பல காட்சிகளை நாம் கூற முடியும். இளையதலைமுறை என்ற திரை படத்தில் தனது தந்தையின் மரண செய்தியை மறைத்த மாணவனை
தண்டிக்க முடியாமலும் தாயின் நிலையை கண்டு கலங்குவதாகட்டும் ஒரு உணர்ச்சி போராட்டமே
நடத்தி இருப்பார் நம் கலை கடவுள்.
Printable View
என்ன வென்று சொல்வது இது போன்ற பல காட்சிகளை நாம் கூற முடியும். இளையதலைமுறை என்ற திரை படத்தில் தனது தந்தையின் மரண செய்தியை மறைத்த மாணவனை
தண்டிக்க முடியாமலும் தாயின் நிலையை கண்டு கலங்குவதாகட்டும் ஒரு உணர்ச்சி போராட்டமே
நடத்தி இருப்பார் நம் கலை கடவுள்.
நண்பர் திரு.நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு இதயம் நிறைந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாசு சார்
"பாதுகாப்பு"
அவர் வெளிப்படுத்தும் ஒரு விநாடி முக பாவம் சொல்லுமே ஓராயிரம் விஷயங்களை.நீங்கள் எழுதிய போலீஸ்ஸ்டேசன் காட்சி
அருமை.
வாசு சார்
பிறந்த நாள் சிறப்புப் பரிசாக கந்தன் கருணை அளித்து விட்டீர்கள். தங்களுடைய எழுத்தில் நடிகர் திலகம் குரல் இணைந்து ஒலித்திருக்க வேண்டும், அதை நாங்கள் கேட்டு, இதைப் போல் ஒரு நினைவூட்டல் மற்றும் ஆய்வுரையும் எழுதியிருக்க வேண்டும். இது தான் என் மனதிற்கு உடனே தோன்றியது.
அதிகம் காட்சிகள் இல்லை என்ற காரணத்தாலோ என்னவோ ரசிகர்களிடம் பாதுகாப்பு திரைப்படம் அதற்குரிய வரவேற்பைப் பெற முடியவில்லை. நான் முன்பே சொன்னது போல் இரு துருவம் வெளியீட்டினாலும் சொர்க்கம் எங்கிருந்தோ வந்தாள் இந்த இரண்டு படங்கள் பண்ணிய மிகப் பெரிய தாக்கத்தினாலும் பாதுகாப்பு சற்று அமுங்கி விட்டது. என்றாலும் வெலிங்டனில் ஓடிய அந்தக் கொஞ்சம் நாட்களிலும் குறைந்தது மூன்று நான்கு முறை பார்த்திருப்பேன். சாய்பாபா பின்னணி குரல் ஒலிக்க, ஈஸ்வரியின் குரலில் ஒலிக்கும் அட்டகாசமான பாடல், சொர்க்கம் போ என்று துள்ளித் துள்ளி ஆடும் பாடலுக்காகவே பார்க்க வைத்தபடம்.
மேலே தாங்கள் குறிப்பிட்ட காட்சி வெலிங்டன் திரையரங்கில் அன்று பெற்ற வரவேற்பை விட இன்று திரையிட்டால் இன்னும் அட்டகாசமாக வரவேற்பைப் பெறும். அதற்கு தங்கள் எழுத்து முக்கிய காரணமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
திருச்சி தினமலரில் ஒரு நேயர் கேட்டிருக்கும் கேள்வி, தினமலரின் பாரபட்சமான அணுகுமுறையை குறை கூறியிருக்கிறது.
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...93ac3a1c8ca809
திருச்சி தினமலர் நாளிதழில் தீபிகா என்கிற வாசகர் நம்மைப் போன்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு நமது உளமார்ந்த பாராட்டுக்கள். இந்த கடிதத்தை வெளியிட்டதன் மூலம் திருச்சி பதிப்பு தன் மனசாட்சியின் குரலுக்கு மதிப்பளித்துள்ளது.
இதே கடிதம் சென்னைப் பதிப்பில் வெளியாகி இருக்குமா என்பது கேள்விக்குறியே.
நிழற்படத்திற்கு நன்றி அருமை நண்பர் சீனிவாச கோபாலன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து..
Many more happy returns vasu sir
Wish you many more happy returns vasudevan sir
Dear Sir,
The Fan who has written this has given a good piece of his mind to this useless paper Dinamalar.
These guys while showcasing Sivaji Films will bring voluntarily topic about other actors and will hail them unnecessarily.
They are ADIVARUDIS we know about it
RKS
தமிழ் திரை உலக வர்த்தகம் ! - நடிகர் திலகத்தால் பொலிவடைந்தது ! புத்துயிர் பெற்றது !
1952 இற்கு முன் - வர்த்தகம் இருந்தது ! அண்டை மாநிலமான ஆந்திர மாநில தயாரிப்பாளர், நடிகர்கள் தொடர்ந்து ஆட்சி செலுத்தி வந்தனர் ! தமிழ் நடிகர்கள் பலர் தங்களுடைய நிலைமையை தக்கவைத்துக்கொள்ள படாத பாடு பட்டனர். தொடர்ந்து கதாநாயகன் வாய்ப்பு கிடைக்கபெராமல் சும்மா இருந்த காலங்கள் தமிழ் கலைஞர்கள் கண்ட சரித்திரம் தமிழ் திரைஉலகம் கண்டதுன்ன்டு.
வந்தது 1952 தீபாவளி - நடந்தது நரகாசுர வதம் மட்டும் அல்ல ! தமிழ் திரை உலகில் ஒரு தமிழ் சூறாவளி, ஒரு தமிழ் நடிக சுனாமி ஒரு தமிழ் நடிக புரட்ச்சி எட்டு திக்கும் எதிரொலித்தது !
சுறாவளி, சுனாமி பெயர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். - இதில் அதுவரை கோலோச்சிக்கொண்டு இருந்த ஆந்திர நடிகர்கள் மொத்தமாக அந்திராவிர்க்கே அடித்து செல்லபட்டார்கள் !
தமிழ், தெலுங்கு மலையாளம் வடமாநிலம் கன்னடம் இப்படி எங்கும் எதிர் ஒலித்த ஒரே பெயர் சிவாஜி ...சிவாஜி ...சிவாஜி...!
பல ஆண்டுகளாக நடித்தாலும் 25 படங்கள் கூட தொடமுடியாத திக்கு முக்காடி மூச்சு வாங்கிகொண்டிருந்த நடிகர்கள் மத்தியில் நடிக்க வந்த 3 ஆண்டுகளில் 25 திரைபடங்கள் முடித்து அசுர சாதனை படைத்தார் நடிகர் திலகம்.
சும்மா இருப்பார்களா துரோகமணம் போட்டி பொறாமை கொண்ட தமிழ் கனவான்கள்...?
எப்படி எல்லாம் இந்த அசுர வளர்ச்சியை முரியடிக்கவேண்டுமோ, தடுக்கமுடியுமோ அத்தனை வழிகளையும் கையாண்டார்கள் கயவர்கள் !
நடிக்க வந்த புதிது முதல்படமே வெள்ளிவிழா அசுரவேற்றி ..முதல் படத்திலயே நிரந்தர உச்ச நட்சத்திர அந்தஸ்த்து...இனி எப்படி தொடரும் பார்க்கலாம் என்று சற்றே under estimate செய்தனர் இந்த பொறாமை கனவான்கள்...!
தயாரிப்பு என்ற பெயரில் வில்லனாக தொடர்ந்து அவதாரம் கொடுத்தனர்...தமிழ் திரை உலகில் ஒரு திரைப்படத்தில் வில்லனாக வந்து வெற்றிபெற்றால் அதற்க்கு பிறகு கதாநாயக அந்தஸ்து சிறிதும் கிடைக்காது. திரும்பிப்பார் திரைப்படத்தின் அசுர வெற்றி...மகிழ்சிகடலில் நீந்தினர் இந்த கருங்காலிகள் ! ஆஹா இனி கவலை இல்லை...நல்லவேளை என்று ஏகத்தாலமிட்டனர்..!
நடக்குமா இவர்கள் சதி நமது கலை அவதாரத்திடம்...இந்தா பிடி என்பதுபோல அமரதீபம், கொங்கு தமிழ் மக்களை பெற்ற மகராசி, வணங்காமுடி, உத்தமபுத்திரன், பதிபக்தி, சம்பூர்ண ராமாயணம் என்று அசுர வெற்றி பயணம் தொடர்ந்தது ....விளைவு நடிக்க வந்து ஆறு வருடம் முடியும் முன்னே 50 படங்கள் நிறைவு - 14 திரைப்படங்கள் 100 நாட்களும் பெரும்பான்மையான திரைப்படங்கள் 10 வாரங்களை கடந்தும் பெரு வெற்றி கண்டன...
நடிகர் திலகம் விநியோகஸ்தர்களின் விடிவெள்ளியாக முதல்படம் தொட்டு தொடர்ந்து திகழ்ந்தார்.
தமிழ் திரைப்படத்தின் மூன்றில் ஒரு பங்கு வர்த்தகம் நமது நடிகர் திலகம் கையில் இருந்தது, அவரால் மட்டுமே லாபகரமாக நடந்தது !
எகத்தாளம் இட்டவர்கள் வாயடைத்து போனார்கள் ! வயிதெரிச்சலும், புகைச்சலும் இவர்கள் கூடாரங்களை அலங்கரித்தன !
50 படங்களுக்கு பிறகு !
உலக விருது பெற்ற முதல் இந்திய நடிகரானார் நமது நடிகர் திலகம் !
உலக சிறந்த நடிகர் சிவாஜி மட்டுமே ! ஆசியா ஆப்பிரிக்கா உலக திரை விழா புகழாரம் பெருமிதமும் ! தமிழ்நாட்டில் நயவஞ்சக கனவான்களின் வயிதெரிச்சல், பொறாமையும் !
இவர்களின் அடுத்த கட்ட சதி - பொய் செய்தியே..இனி மெய் செய்தி ! மக்கள் மடமையே நமது உடமை !
தொடரும் !
Rks