சின்னா!
நிம்மதியாக உறங்குங்கள். நானும் உறங்க செல்கிறேன். கண்டதையும் போட்டு மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். எல்லாம் சரியாகிவிடும். நாளை சந்திப்போம். குட்நைட்.
Printable View
சின்னா!
நிம்மதியாக உறங்குங்கள். நானும் உறங்க செல்கிறேன். கண்டதையும் போட்டு மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். எல்லாம் சரியாகிவிடும். நாளை சந்திப்போம். குட்நைட்.
குட் நைட் வாசு. லட்டு, குலோப்ஜாமூன், பாதுஷா, பால்கோவா போன்றவை கனவில் வரட்டும்.. ஸ்வீட் ட்ரீம்ஸ்..:)
//வாசு.. துவக்கியவர், துவளாமல்கொண்டு செல்பவர் என்ற லீடர் ஷிப் க்வாலிட்டி உங்களிடம் இருக்கிறது..//
எந்தக் காலத்திலும் எப்போதுமே நான் அப்படி நினைத்ததில்லை சின்னா! நான் என்ன செய்து விட்டேன்? எல்லாமே உங்களைப் போன்ற நண்பர்கள்தானே! தீபம் ஏற்றி வைப்பது பெரிய காரியம் அல்ல. அதை அணையாமல் நண்பர்கள் அத்தனை பெரும் ஒருவர் விடாமல் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கிறீர்களே! அதுதான் மிகப் பெரிய விஷயம் சின்னா! நீங்கள் கோபத்தின் உச்சியில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் நீங்கள் சொல்வது எதுவுமே என் காதில் விழாது. நாளை ஆற அமர பேசலாம். ரவி அப்படி சொன்னது எனக்கே மிக வருத்தம்தான். இன்னும் அவருடன் நான் பேசவில்லை.
//உங்களுக்கு நாலெழுத்துக் கண்ணாவை விட (எட்டெழுத்தோ!) மூன்றெழுத்து , இரண்டெழுத்து நபர்களிடம் ப்ரியம் அதிகமாக இருப்பது இயற்கையே..பார்த்தறிந்தவர்கள் ஆயிற்றே..( நானும் பார்ப்பேன் உங்களை ஒரு நாள்) ஸோ கவலைல்லாம் படாதீங்க//
ஆனால் இன்னொருமுறை பிரியம் காட்டுவதில் நான் வித்தியாசம் காட்டுபவன் என்று மட்டும் கூறி விடாதீர்கள். பார்த்தறிந்தால் ஒரு பிரியம்... பார்க்காமல் இருந்தால் வேறு பிரியம் என்றெல்லாம் இருக்கிறதா என்ன? உங்களைப் பார்த்து விட்டால் பிரியம் ஜாஸ்தியாகுமா? 'ஜி' யை இன்னும் நான் பார்க்கவே இல்லை. அவர் மேல் பிரியம் கம்மி ஆகி விடுமா? என்ன சின்னா இது? குழந்தை மாதிரி! நன்கு தூங்கி எழுந்து ரிலாக்ஸாக உங்களுடைய 3600 எண்ணுள்ள பதிவைப் படித்துப்பாருங்கள். உங்களுக்கே சிரிப்பு தாங்காது.:) ஒரு சின்ன கண்டிஷன். பதிவை நீங்கள் எடுக்கக் கூடாது.:) உங்களை இப்போது பார்த்தால் ஒரு வயதுக் குழந்தை கோபித்துக் கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. எனக்கு ரொம்ப செல்லமாகப் படுகிறது. ஒரு குழந்தையாகத்தான் இப்போது என் கண்களுக்கு நீங்கள் தென்படுகிறீர்கள். பேசாமல் கம்மென்று கண் மூடி விஜயகுமாரியை நினைத்துக் கொண்டு படுங்கள்.:) துக்கம் திசை மாறும். நல்ல பிள்ளைதானே! நாளைக்கு கேட்பரீஸ் வாங்கித் தரேன்.:) வரவா?
சி க வுக்கும் ஒரு ரே மம்மா ரே மம்மா போட்டுவிட வேண்டியதுதான் வாசு சார் !!
சி க !
நீங்கள் என்றுமே ஒரு அன்புப் படுக்கை பீஷ்மரே ! அவசரக் குடுக்கை பீமர் அல்லவே!!
நானெல்லாம் வாழ்க்கையில் மிகவும் அடிபட்டு மனம் மரத்துப்போய் ஒரு வழியாக ஒருவகை நிதானம் மற்றும் மனமுதிர்ச்சியடைவதர்க்கு இவ்வளவு காலம்
தேவைப் பட்டிருக்கிறது !
நீங்கள் வாசு ரவி எல்லோருமே உங்கள் எழுத்து வன்மையால் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி நானும் பதிவுப் படிக்கட்டுகளில் மெதுவாக ஏறி வர முன்னோடிகளாக இருந்தவர்கள் ஆனால் நீங்களே மனம் குலைவதை என்னால் நம்ப முடியவில்லை!!
நடந்தவை பாடமாக நடப்பவை மகிழ்வின் பீடமாக மறதி என்னும் இறைவன் அளித்த டோக்கனை பயன்படுத்தி பெருந்தன்மை விதைத்திட ஒரு எளியவனாக வேண்டிக் கொள்கிறேன் மதுரம் மனதிலும் பரவட்டுமே!
செந்தில்
இந்தாங்கோ.... எல்லோருக்கும் மொத்தமா ஒரு பெர்ர்ர்ரிய சாக்லேட்..
ஆளுக்கு ஒரு பக்கமா கடிச்சுக்கணும்.. சண்டை போடப்படாது.. ஓகேவா...?
( வாத்தியாரையாவுக்கு காடிவா சாக்லேட் நினைவு வந்தால் நான் பொறுப்பில்லை )
http://ww2.hdnux.com/photos/30/21/55.../3/960x540.jpg
பியானோ பாடல்களில்...
மங்கல நாயகியின் "கண்களால் நான் வரைந்தேன்"
கண்ணன் என் காதலனின் "பாடுவோர் பாடினால்"
அறிவாளியின் "கூவாத இன்பக் குயில்"
இதெல்லாம் கூட எனக்குப் பிடிக்குமே !
பியானோவைப் பற்றி ஆரம்பிக்கப் போய் எத்தனை சங்கதிகள் வந்து விழுகின்றன !
ராஜ்ராஜ் சாரும் ராகவேந்தர் சாரும் வாசு சாரும் சிக சாரும் தந்திருக்கும் படங்களும் யாழ் பற்றிய விவரங்களும் மதுரமே !
ஹிந்தி திரைப்படங்களில் பியானோவின் ஆதிக்கம் மிக மிக அதிகமே ! ஒரு காலகட்டத்தில் பியானோவும் கித்தாரும் அக்கார்டினும் இல்லாத இந்திப் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்! ஸ்ரீதர் பாணி முக்கோணக் காதலின் சங்கம் திரைப்படம் ஷங்கர் ஜெய்கிஷன் மியூசிக்கில் ஒரு மிகச்சிறந்த இசைப் படமாகும்!!
அதில் வரும் ஒரு பியானோ சார்ந்த / அக்கர்டின் சார்ந்த மறக்க முடியாத முகேஷ் குரலில் ராஜ்கபூருக்கான மதுர கீதங்கள் !
நடிகர்திலகமும் எங்க மாமா திரைப்படத்தில் சொர்க்கம் பக்கத்தில் பாடலுக்கு அக்கார்டின் வாசிப்பார் !
Rajkapoor and NT with Akkaardin!
https://www.youtube.com/watch?v=mj7mr6f2xOo
https://www.youtube.com/watch?v=YfZiMFE66pY
Rajkapoor with an upright Piano?
https://www.youtube.com/watch?v=PY5AMJtMY3A
From Avan(1953)
un pErai kEttEn........
http://www.youtube.com/watch?v=UmO_WyHGwK4
What you see is a Grand Piano. It takes a lot of space. Suitable for big houses with big living or family room.
We have an Upright Piano in the living room, bought about 35 years back when the children were learning piano. Even now, when they visit us they play the piano. It is an attraction for young kids visiting us. They will press a few keys and smile at us ! :)
Mr C K
Don't worry Be happy Do contribute as usual with your humourus postings.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
35 ஆவது சிறப்புப் பதிவு
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-8...Y/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
35
பாகம் 1
'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ'
'சபதம்'
http://cf-images.emusic.com/music/im...94/600x600.jpg
இன்றைய பாலாவின் தொடரில் சிகரங்களைத் தொட்ட பாடல். என்றுமே சிரஞ்சீவித்துவம் நிறைந்து மனமெல்லாம் சுகந்த தென்றலை இனிமையாக வீசச் செய்யும் பாடல். மிகச் சிறந்த தமிழ்ப் பாடல்களின் வரிசையில் முன்னால் நிற்க போட்டி போடும் பாடல். நீங்கள் எவ்வளவு சோகத்தில் இருந்தாலும் இந்த பாட்டை ஒருமுறை கேளுங்கள். பிளாட் ஆகி விடுவீர்கள். குரலினிமையா... குழலினிமையா என்று போட்டி வைத்தால் பாலாவின் குரல்தான் இனிமை என்று ஒட்டுமொத்தமுமே கூக்குரல் எழுப்பும் அளவிற்கு அவரது வசந்த சுகந்த குரலால் பாராட்டு பெற்ற பாடல். 'சபத'மிட்டு சொல்கிறேன்.
ஆமாம். 'சபதம்' (1971) படத்தில் பாலா பாடிய
'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ' பாடல்தான் அது.
அதற்கு முன் 'சபதம்' படத்தைப் பற்றி ஒரு முன்னோட்டம் பார்த்து விடுவோம். அதனால் இந்தத் தொடரை உங்கள் வசதிக்காக இரண்டு பாகமாகப் பிரித்து தனித்தனியே தருகிறேன். படம், கதை பற்றிய விவரங்களை ஒரு பாகமாகவும், பாடல் பற்றிய சிறப்பம்சங்களை இன்னொரு பாகமாகவும் தருகிறேன்.
தேவநாயகி பிலிம்ஸ் 'சபதம்' ஓர் அருமையான ஒரு படம். ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், டி கே.பகவதி, வி.கே.ராமசாமி, சஹஸ்ரநாமம், அஞ்சலிதேவி, பண்டரிபாய் நடித்த இத்திரைப்படம் கதாநாயகிக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்த ஒரு படம். நடனத்தை சலீம் அமைத்திருப்பார். நமது பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவு இயக்குனராக பணியாற்றி இருப்பார். இயக்கம் நமது பிரிய பி.மாதவன்.
கதை
http://i.ytimg.com/vi/yPRAkU6T8zk/0.jpg
மிக நல்லவரான பெரிய மனிதர் செல்வநாயகத்திற்கு (டி கே.பகவதி) அவரைப் போலவே உருவ ஒற்றுமையும், குரல் ஒற்றுமையும் கொண்ட துரைசிங்கம் (டி கே.பகவதி) என்ற தறுதலை தம்பி. அண்ணனிடமிருந்து சொத்தை பாகம் பிரித்துக் கொண்டு குடி, காமம் என்று சொத்தை அழிக்கிறான் அவன். தம்பியின் போக்கு கண்டு, மனம் நொந்து, மறுபடியும் அவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார் செல்வநாயகம். தன் மனைவி கண் தெரியாத ராஜேஸ்வரி (அஞ்சலிதேவி), மகன் முத்து மேல் அதிக பாசம் அவருக்கு. தம்பி துரைசிங்கத்திற்கு லஷ்மி (பண்டரிபாய்) என்ற பண்பான மனைவி.
வியாபார விஷயமாக அண்ணனும் தம்பியும் வெளியூர் புறப்பட, அந்த சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதமாக்கிக் கொள்கிறான் தம்பி. உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, அண்ணனைக் கொன்றுவிட்டு, அண்ணன் வேடத்தில் வந்து நல்லவன் போல ஊரில் கபடமாடுகிறான் துரைசிங்கம். ஊரும் அவனை செல்வநாயகம் என்று பரிபூரணமாக நம்பி ஏமாறுகிறது. குழந்தையுடன் இருக்கும் தன் அண்ணியை பைத்தியம் என்று பட்டம் கட்டி அவள் வீட்டை விட்டு ஓடும்படி செய்கிறான் செல்வநாயகம்.
தன் கணக்கப்பிள்ளை வள்ளிமுத்துவின் (சஹஸ்ரநாமம்) மகள் சிவகாமி (கே.ஆர்.விஜயா) என்ற பெண்ணின் மீது காமப் பித்து பிடித்து அலைந்து, அவளை ஆசைநாயகியாய் வைத்துக் கொள்ள வள்ளிமுத்துவிடமே அனுமதி கேட்கிறான். இல்லையென்றால் கொன்று விடுவதாக பயமுறுத்துகிறான். அவன் சுயரூபம் தெரிந்து கொண்ட வள்ளிமுத்து செய்வதறியாமல் திகைத்து தூக்கில் தொங்குகிறான். (உண்மையில் துரைசிங்கத்தால் தூக்கில் தொங்கவிடப் படுகிறான்) வெளியூரில் படிக்கும் சிவகாமி தன் தந்தை இறந்த சேதி கேட்டு துடிதுடித்துப் போகிறாள். தன் தந்தையின் கடிதம் மூலம் செல்வநாயகம் ஒரு காமுகன் என்று புரிந்து கொள்கிறாள். தந்தை சாவுக்குக் காரணமானவனை பழி வாங்கத் துடிக்கிறாள். ஆனால் செல்வநாயகம் போர்வையில் இருக்கும் துரைசிங்கம் ஊர்மக்களை அப்படியே தன்னை நல்லவன் என்று நம்பும்படி செய்திருக்கிறான். இதனால் சிவகாமி துரைசிங்கம் கெட்டவன் என்று ஆதாரத்துடன் ஊர் மக்களிடம் நிரூபித்தாலும் தன் சாமர்த்தியப் பேச்சாலும், பசுத்தோல் போர்த்திய புலி நடிப்பாலும் சிவகாமியின் ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் உடைத்தெறிகிறான் துரைசிங்கம். அவனை அயோக்கியன் என்று ஊர் மக்கள் முன்னிலையில் விரைவில் நிரூபிப்பதாக துரைசிங்கத்திடம் 'சபதம்' போடுகிறாள் சிவகாமி.
வீட்டை விட்டு ஓடிப்போன ஓடிப்போன ராஜேஸ்வரியின் மகன் முத்து (ரவிச்சந்திரன்) வளர்ந்து பெரியவனாகி எல்லா உண்மையையும் தன் தாயின் மூலம் அறிகிறான். முத்து சிவகாமியைக் காதலித்து துரைசிங்கம் மூலம் சிவகாமி பட்ட துயரங்களை அறிந்து கொள்கிறான். பாதிக்கப்பட்ட சிவகாமி, முத்து இருவரும் கூட்டணி அமைத்து, திட்டம் போட்டு துரைசிங்கம் வீட்டில் தம்பதிகளாக நுழைகிறார்கள். இவர்களுடன் துரைசிங்கத்தின் மகன் நாகேஷும் தன் தந்தையின் கபட நாடகத்தைத் தெரிந்து கொள்ள, மூவரும் துரைசிங்கத்துடன் ஆடு புலி ஆட்டம் விளையாட ஆரம்பிக்கிறார்கள். அவனுக்கெதிரான ஆதாரங்களைத் திரட்டி அவனை நிலைகுனிய வைத்து ஊருக்கு 'அவன் துரைசிங்கம்தான்...செல்வநாயகம் இல்லை' என்று புரிய வைக்கிறார்கள். இறுதியில் இறந்து போன செல்வநாயகமே உயிருடன் திரும்ப நேரில் வர, அதிர்ச்சியடைந்து தான் வாயாலேயே தன் அண்ணன் செல்வநாயகத்தைக் கொன்றதாக தன்னையுமறியாமல் ஊர் மக்கள் முன்னிலையில் கூறி காவலர் வசம் மாட்டிக் கொள்கிறான் துரை சிங்கம். ('புதிய பறவை' கோபால் போல) ஆனால் வந்தது உண்மையான அண்ணனா?..
இறுதியில் தன் 'சபத'த்தில் மாபெரும் வெற்றி காணுகிறாள் சிவகாமி.
'புன்னகை அரசி'க்கு இந்த மாதிரி சிவகாமி.ரோல் அல்வா சாப்பிடவது போல. கலக்கிவிடுவார். டி .கே.பகவதி நல்ல அண்ணனாகவும், கெட்ட தம்பியாகவும் அருமையான நடிப்பைத் தந்திருப்பார். படம் நெடுக கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அமைதியாகச் சிரித்தபடியே வில்லத்தனம் புரிவது ஏ.ஒன். இந்தப் படம் சென்னையில் பாரகன், கிரௌன், புவனேஸ்வரி ஆகிய தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.
தொடரும்
பாகம் 2
http://www.stephenprayog.com/image/gkvenkatesh.jpg
இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமான தூண் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். என்ன ஒரு திறமை! இவர் நம் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு குறிஞ்சி மலர். இசையமைப்பதோடு மட்டுமல்லாமல் வித்தியாசமான குரல் வளம் கொண்ட பாடகரும் கூட.
https://i.ytimg.com/vi/BAlryz7Jl2Q/hqdefault.jpg
இப்படத்தில் இடம் பெற்ற எஸ்.பி.பாலா தங்கக் குரலில் பாடிய சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான,
'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ'
பாடல் ஒன்று போதும் ஜி.கே.வெங்கடேஷ் அவரின் திறமையை காலம் முழுதும் பறைசாற்ற. நமக்கு இறப்பு என்று ஒன்று வரும்போது இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே கண் மூடினால் கண்டிப்பாக சொர்க்கம் கிடைக்கும்.
இந்தப் பாடலின் 19 வினாடி துவக்க இசை இருக்கறதே! வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இந்திரஜால இசை அது. அதைக் கேட்கும் போதெல்லாம் உடல் சில்லிட்டுத்தான் போகும். உடலின் ஒவ்வொரு அணுவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தும் உன்னதம் அது.
பாலாவின் இளநீர்க் குரல் அப்படியே நம்மைக் குளிர்விக்கும். அவ்வளவு மென்மையாக இப்பாடலை அவர் ரசித்து அனுபவித்துத் தந்திருப்பார். நானெல்லாம் பாலா பைத்தியமானதற்கு முழு முதற் காரணமே இந்தப் பாடல்தான் என்று சொல்லலாம். இந்தப் பாடலைக் கேட்டால் சப்த நாடியும் ஒடுங்கிப் போய் அமர்ந்து விடுவேன். இந்தப் பாடலை நான் கேட்கும் போது எனக்கு எந்த இடைஞ்சலும் இருக்கவே கூடாது. இந்தப் பாடல் ஒலிக்கும் போது வீடு அப்படியே நிசப்தமாகி விடும். பாலா பாடுவது போல் அவர் வாயிலிருந்து வருவது தென்றலா, மலர்களா, கனிகளின் இனிமையோ,தேன் துளிகளின் சுவையோ என்று நமக்குள் ஒரு பெரும் குழப்பமே ஏற்பட்டுவிடும்.
பாடல் முழுக்க பாடலுடனேயே இணைந்து வரும் அந்த கிடாரின் மெல்லிய சுகம் வலியது. (டிடிங்... டிடிங்... டிங் டிங் டிங் டிங் டிங்க் என்று ஒலிக்கும்போது நாம் உணரும் சுகங்களை எழுத்தில் வடித்து விட முடியாது.) சரணங்களுக்கு முன் இடையிசை வரும்போது ஒவ்வொரு முறையும் மிகப் பொருத்தமாக இந்த இசை தொடர்வது இப்பாடலுக்கே மிக அழகும், இனிமையும், பெருமையும் சேர்க்கிறது. அதே போல எப்படி அந்த இனிமையான ஓசையுடனேயே இந்தப் பாடல் துவங்குமோ அதே இனிமையான இசையுடன் வெகு சுகமாக முடிவடையும்.
'தேரில் ஏறி தேவதை வந்து
இங்கு நீரிலாடும் என்னுடன் நின்று'
என்று பாலா அட்டகாசம் பண்ணிவிட்டு திடுமென்று
'உடல் தேய்த்து விட்டாளோ
முகம் பார்த்து விட்டாளோ'
என்று வேகம் எடுப்பாரே! வாவ்! கிரேட்! அது மட்டுமா? திரும்ப அதே வரிகளை பாடும் போது 'விட்டாளோ' என்னும் போது அந்த 'ளோ' வுக்கு ஒரு நடுக்கம் கொடுப்பார் பாருங்கள். அடடா! ஹேட்ஸ் ஆப் பாலா!
http://i4.tinypic.com/15dvsie.jpg
அதே போல
'இன்று சித்திர முத்தங்கள் சிந்திய ரத்தினம் யாரோ
அவள் யா........ரோ'
இரண்டாம் முறை அந்த 'யாரோ' வை 'யாஆ ஆ ஆஆரோ' என்ற ரீதியில் அவர் பாடும் போது இவன்தான் பாடகன் என்று உரக்கக் கத்தத் தோணும்.
பாடல் முழுக்க மென்மையான இசையும், பாலாவின் மென்மையான குரலும் பலத்த போட்டியிலேயே இருக்கும். இதனால் காலத்தால் அழியாத இன்ப சுகம் நமக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
'ம் ம் ம் ம்....ஆ ஆ ஆ'.. ஆனந்த இன்ப அதிர்ச்சி! வார்த்தைகள் வரவில்லை அந்த இன்பத்தை எழுத.
பாடலின் வரிகள் பின்னிப் பெடலெடுக்கின்றன. பாருங்கள்.
'இன்று சித்திர முத்தங்கள்
சிந்திய ரத்தினம் யாரோ'
'இளம் சிட்டுமுகம் கொண்ட
பொட்டு குலம் அவள் யாரோ'
இது போன்ற அற்புதமான பாடல்களை படமாக்குவதில் கோட்டை விட்டு விடுவார்கள். ஆனால் இந்தப் பாடல் விதிவிலக்கு. பாடலின் தன்மை கொஞ்சமும் கெடாமல் அதியற்புதமாகப் படமாக்கியிருப்பார்கள். இதற்காக 'சபதம்' பட யூனிட்டிற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கலாம். அவ்வளவு அற்புதம்.
http://i60.tinypic.com/2vt37fs.jpghttp://oi62.tinypic.com/vo8lya.jpg
பல்லவி வரிகளுக்கு துண்டு கட்டிக் கொண்டு கிணற்றடியில் ரவி குளிக்க, வெகு சிம்பிளாக புன்னகை அரசி டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணி டிரேட் மார்க் சிரிப்புடன் வெட்கி, நாணி பாவம் காட்டுவது டாப்.
ஒவ்வொரு வரியையும் அனுபவித்து எடுத்திருப்பார்கள். பாடலைப் போலவே மிக மென்மையான சோப்புக் குமிழ்கள் பறக்கும் மிக எளிமையான செட் தான். ரவி தூக்கி வாரிப் படிய சீவிய சிகை அலங்கார 'விக்'கில் அட்டகாசமாக இருப்பார். மிக அழகாகப் பண்ணியிருப்பார். பாலா குரல் பாந்தமாக இவருக்குப் பொருந்தும். குளோஸ்-அப் காட்சிகளில் குறிப்பாக சைட் போஸ்களில் நடிகர் திலகத்திற்குப் பிறகு அம்சமாக காமிராக் கோணங்களுக்குப் பொருந்தக் கூடியவர் ரவி ஒருவர் மட்டுமே.
'அதை நடக்க விட்டாளோ
எனை மிதக்க விட்டாளோ'
வரிகளுக்கு மனிதர் சைட் வாங்கியபடி பக்கவாட்டில் நளினமாக லேசான பெண்மைத் தன்மையுடன் நெளிந்தபடி ஒரு நடை நடப்பார் பாருங்கள். சும்மா அள்ளும். பாடல் ஒரு பக்கம் பட்டை கிளப்பும் என்றால் ரவி வேறு அவர் பங்குக்கு அட்டகாசம் செய்வார். இந்த ஒரு பாடலில் எவ்வளவு இனிமைகளைத்தான் தாங்குவது?
இதுவரை பாலா தொடர்களில் எழுதிய பாடல்கள் மட்டுமல்லாமல் இனி எழுதப் போகும் பாலா பாடல்களுக்கும் சேர்த்து இதுதான் என்றும் முதலிடம் பெற்ற முழுமையான பாடல். இந்தப் பாடலுக்குப் பிறகுதான் பாலாவின் மற்ற பாடல்கள் எதுவாயிருந்தாலும். இதில் மாற்றமேதும் கிடையாது.
https://i.ytimg.com/vi/tZng3eguV2c/hqdefault.jpg
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
உடலெங்கும் குளிராவதென்ன
என் மனமெங்கும் நெருப்பாவதென்ன
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
தேரில் ஏறி தேவதை வந்து
இங்கு நீரிலாடும் என்னுடன் நின்று
தேரில் ஏறி தேவதை வந்து
இங்கு நீரிலாடும் என்னுடன் நின்று
உடல் தேய்த்து விட்டாளோ
முகம் பார்த்து விட்டாளோ
உடல் தேய்த்து விட்டாளோ
முகம் பார்த்து விட்டாளோ
இன்று சித்திர முத்தங்கள்
சிந்திய ரத்தினம் யாரோ
அவள் யா........ரோ
ம் ம் ம் ம்....ஆ ஆ ஆ..
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
காமதேனு பால் கறந்தாளோ
அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ
காமதேனு பால் கறந்தாளோ
அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ
அதை நடக்க விட்டாளோ
எனை மிதக்க விட்டாளோ
அதை நடக்க விட்டாளோ
எனை மிதக்க விட்டாளோ
இளம் சிட்டுமுகம் கொண்ட
பொட்டு குலம் அவள் யாரோ
அவள் யா.........ரோ..!
ம் ம் ம் ம் ஆ ஆ ஆ..!!
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ (பாலாவின் சிரிப்பு அட்டகாசம்)
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
உடலெங்கும் குளிராவதென்ன
என் மனமெங்கும் நெருப்பாவதென்ன
ஆ ஆ ஆ ஆ..!
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
https://youtu.be/BAlryz7Jl2Q
From Facebook
மகாராஜன் உலகை ஆளலாம்..
படம் : கர்ணன் (1964)
நடிப்பு : சிவாஜி கணேசன் & தேவிகா
பாடியவர்கள் : டி.எம்.சௌந்திரராஜன் & பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர்கள்
பாடல்கள் : கவியரசு கண்ணதாசன்
இயக்கம் : பி.ஆர்.பந்துலு
https://www.youtube.com/watch?v=DBVdIzzgwgc
தெலுங்கிலும் 'சபதம்'
http://images.boxtv.com/clips/4/3004...8_3004_q80.jpg
சூப்பர் பாடலான 'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ' பாடல் அதே மெட்டில் தெலுங்கிலும் அற்புதமாக நமது பாலாவின் குரலில் ஒலித்தது. தெலுங்கிலும் நமது 'புன்னகை அரசி' தான் நாயகி. ரவிக்கு பதில் தெலுங்கு 'சூப்பர் ஸ்டார்' கிருஷ்ணா.படத்தின் பெயர் 'கோடலு பிள்ளா'
'நன்னுதாக்கரெவ்வரோ எவ்வரோ' என்று அதே சிச்சுவேஷனில் ஒலிக்கும் பாடல். காட்சியமைப்புகள் தெலுங்கிலும், தமிழிலும் ஒன்றே. இதே 'சபதம்' படம்தான் தெலுங்கிலே 'கோடலு பிள்ளா' ஆனது. ஆனால் வெளியான ஆண்டு 1972. விஜயா 'சபதம்' படத்தை விட இன்னும் குண்டடித்திருப்பார். நன்றாகத் தெரியும். தமிழில் டி.கே.பகவதி நடித்திருந்த இரட்டை வேடத்தை தெலுங்கில் நாகபூஷணம் ஏற்று நடித்திருந்தார். தமிழிலும், தெலுங்கிலும் அதே அஞ்சலிதேவி. நாகேஷுக்கு பதிலாக ராஜ்பாபு. இசை இனிமை நாயகர் ஜி.கே.வெங்கடேஷ்தான்.
https://youtu.be/univNcTN7l0
வாசு சார்
தெலுங்கு சூப்பர்ஸ்டார் கிருஷ்ணா நமது ரவிசந்திரனின் பிம்பம்தான்!
டப்பிங் பட போஸ்டர்களில் கிருஷ்ணா ரவியைப் போலவே இருப்பார் !!
குழந்தைக்காக தமிழ் படத்தின் ஆரம்பத்தில் கிருஷ்ணா ஆடும் ஸ்டெப்புலு டான்சை அதன் தெலுங்கு ஆக்கத்தில் ரவிச்சந்திரன் ஆடியிருப்பார்!!
படத்தின் ஆரம்பத்தில் ஒரு டான்ஸ் வருமே வாசு சார்! கிருஷ்ணா ஆடி முடித்ததுடன் கொல்லப்பட்டு பேபி ராணி அனாதையாகி விடுவார் என்று
ஞாபகம் ...!!
இந்த டான்சை தெலுங்கில் எடுக்கும்போது ரவிச்சந்திரன் கஸ்ட் ஸ்டாராக ஆடியிருப்பார் ....எதற்கும் வெரிபை பண்ணிப் பார்க்கிறேன்!!
ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்..
காலையிலிருந்து ஒரே மீட்டிங்க்ஸ்லில் பொழுது போனதினால் வர முடியவில்லை..
வாசு, சி.செ ஸாரி..மன்னிச்சுக்கோங்கோ ஷமிக்கணும் என்னுடைய குழந்தைத்தனமான கோபத்திற்கு..
மதுண்ணா சாக்லேட்டிற்கு நன்றி அச்சோ நான் டயட்ல இருக்கேனே
எஸ். வாசு தேவன் தாங்க்யூ..
BAGPIPER music and songs!
Quote:
பேக்பைபெர் என்றதும் அந்தக்கால உற்சாகபானமான விஸ்கி ஞாபகத்துக்கு வந்தால் உங்களுக்கு வயது 40க்கு மேல்...அது ஒரு காற்றடைத்த பையை இசைக்காக வெவ்வேறு துவாரக் குழாய்கள் வழியாக முறையாக காற்றை வெளியேற்றும் இசைக்கருவி என்று மனதில் பட்டால் உங்கள் வயது 80க்கு மேல்தான்!! அது என்னவென்றே தெரியாதென்றால் நீங்கள் இந்த இளைய தலைமுறை சார்ந்தவரே!!
இந்த இசைக்கருவியை வாசித்துத்தான் யாரோ ஒருவர் எலிகளை எல்லாம் தன பின்னால் வரவைத்து கடலில் முக்கினாராம் கதை ! எப்போதோ கேட்ட கதை!
சங்கம் இந்திப்படத்தில் நான் இந்த இசைக்கருவியை முதல்முதல் பார்த்து இசையில் லயித்தேன் !!
https://www.youtube.com/watch?v=9a-ONy8iGNQ
உடல் நிலை சரியில்லாததால் அலுவலகத்திலிருந்து சீக்கிரமாக - இங்கேபோஸ்ட் போட்ட கையோடு கிளம்பி வந்து- ஒரு தூக்கம் தூங்கி இப்பத் தான் எழுந்தேன்..
சபதம் ஏற்கெனவே எழ்தியிருக்கிறிர்க்ள் இல்லியோவாசு..வேறு பாடல் என நினைக்கிறேன். தொடுவதோ தென்றலோ மலர்க்ளோ எனக்குப் பிடிக்கும்..
போல் ராதா போல் எனக்கும் பிடிக்கும்.ஹிந்திபழைய கானங்கள் என்றால் ரெண்டு நினைவுக்கு வரும்..ஆஜா ஆஜா..அஹ்ஹ் ஆஜா...ஆ.. (தீஸ்ரி மன்ஸில்) இன்னொரு பாட்டு வஹிதாவின் துள்ளலுடன் கூடிய கானம் நேற்றிலிருந்து யோசித்துப் பார்க்கிறேன் நினைவில் வர மாட்டேன் என்கிறது..காரில் இருந்தோ லாரியில் இருந்தோ பாடுவார் ஒரு துள்ளல் பாட்டு..காரணம் முக நூலில் நேற்று போட்டது..:
வஹிதா நடிகையின் வண்ணமயத் துள்ளல்
வஹிபா மணற்துகளில் வந்தே - தகித்திடும்
வெயிலில் அனைவருமே வேகமாய்ச் சூரியனின்
மறைவினைப் பார்க்கலாம் வா..
Sur என்னும் இடத்தை த் தாண்டி கொஞ்ச தூரம் போனால் கண்ணுக்கெட்டியவரை
செம்மாந்து சிவந்த நிறத்தில் பாலை வனம்... நட்ட நடுவில் காட்டேஜஸும் உண்டு
தங்குவதர்கு.. டிசம்பர் ஜனவரியில் இரவுகளில் குளிரும்.. கேம்ப் ஃபயர் போட நேரிடும்..
சமர்த்தாய் எழுந்து மணல் மலையில் ஏறி சூர்ய உதயமும் பார்ப்பார்கள்.. நான் கேம்ப்பில்
தங்கியதுடன் சரி.. மற்றவர் போய்வர கீழிருந்தேன்.. பட் டெஸர்ட் ட்ரைவ் ஒரு த்ரில்
அனுபவம்..
வஹிதா நடிகை - வஹிதா ரஹ்மான்..அது என்ன ஒரு துள்ளல் பாட்டு.. நெஞ்சுக்குள்ற இருக்கு
வரமாட்டேங்குது..
https://www.google.com/search?q=wahi...FUU8Ggod5YkG7g
பாலைவனம் பற்றி பாடல்கள் தமிழில் எப்போது ஆரம்ப மானது..
புதியன காணலும் பழையன பேணலும்
PART 3 : HIS MASTERS' VOICE (HMV) EMBLEM : The Gramophone with the Disc கிராமபோன்!
கிராமபோன் பின்னணிப் பாடல் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை வண்ண சித்திரத்தில் கிருஷ்ணகிரி கிட்டப்பாவாக பின்னணியில் விசுவநாதன் ராமமூர்த்தி இயங்க நாகேஷுடன் சச்சு துள்ளித் துள்ளி வேகமாக ஆடும் ஆட்ட பாட்டமே ! மலரென்ற முகம்....Quote:
பாடல்கள் இசைத் தட்டுக்களில் காந்தக் குறியீடுகளாக சுழல் வட்டமாகப் பதிக்கப் பட்டு வெளிவந்த காலத்தில் HMV கம்பனி பிரசித்தம்! இசைத்தட்டு வைக்கப்பட்ட கிராமபோனின் முன்னால் நன்றிமிக்க நாய் தனது எஜமானனின் குரலைக் கேட்கக் காதுகளைத் தீட்டிக் கொண்டு ஏக்கத்துடன் மோனாலிசா போஸில் காத்துக் கொண்டிருக்கும் எம்ப்ளமும் மிகப்பிரபலம் !!
காந்த ஊசி பொருத்தப் பட்டு கிராபைட் தட்டின் சுழல் வட்டப்பாதையில் குறிப்பிட்ட கட்டுப்பாடான வேகத்தில் ஊசி பயணிக்கும்போது காந்தப் பதிவுகள் ஒலி அலைகளாக மாறி கீதங்கள் இசைக்கப்பட்டு ஒலிபெருக்கி வாயிலாக அதைக் கேட்கும் சுகமே அலாதி !
இன்று கிராமபோனும் பெட்ரோமாக்ஸ் லைட் போல ஒரு பசுமையான நினைவுச் சின்னமே !
https://www.youtube.com/watch?v=5GtS0q2UOGE
அப்புறம் அதே நாகேஷ் படகோட்டியில் கிராமபோன் இசைத்தட்டு போட்டவுடன் காட்டும் வீரமும் இசைத்தட்டு வேகமிழந்ததும் இவரும் பலமிழந்து சரிந்து விழுவதும்...
https://www.youtube.com/watch?v=ai_7HEXRplI
சி.செ. புதியன காணலும் பழையன பேணலும்.. கிராம ஃபோன் என்றதும் நினைவுக்கு வருவது சுஜாதா எழுதிய ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பில் வரும் ஒரு கதை.. அந்தக் காலத்தில் பக்கத்து வீட்டு பத்ம நாபன் வீட்டிற்குச் செல்லும் சிறுவன் அந்த கிராமஃபோனை இயக்கத் தெரியாமல் இயக்கி உடைத்துவிட அவரிடம் திட்டு வாங்குவோம் என நினைக்கையில் சரி போனாப் போறது என்று சொல்லிவிடுவார் பதமனாபன்.. நல்ல கதை..
கிராமஃபோன் வைத்து கமல்ஸ்ரீதேவியிடம் நல்ல மனம் வாழ்க ஜேசுதாஸ் பாட்டு ஆசையாய் இசைத்தட்டு போட அது ந...ல்...ல.. ம...ன..ம் வா..ழ்க.. என இழுத்து இழுத்துப் பாடும் மூன்று முடிச்சுக் காட்சி நினைவுக்கு வருகிறது..
Today I complete 50 years in America (US). I never thought I would stay that long in a foreign country. Now it is my home ! :) That is life ! :lol:
The America I came to in 1965 is not there any more! :( Greed and selfishness have taken over! Sad ! :(
பகலில் பெளர்ணமி - சிவகுமார் நடித்த பேய்ப் படம் என்று படித்தேன்..தேடினால் எதுவும் கிடைக்கவில்லை..யாருக்காவது தெரியுமா ஏதாவது பாடல்கள் இருக்கின்றதா..
Hearty Congratulations for your Golden Jubilee residential feat in USA Rajraj Sir!!
Congratulations too for having your virtual feet in India by your interactions in this thread!!
senthil
பாட்டில் வரும் வார்த்தை யைக் கொடுத்தால் சர்ச் பண்ணிக் கண்டு பிடிக்கலாம்.. இப்படி இசைக்கருவி கொடுத்தால் நினைவுகளில் சர் ச் செய்ய வேண்டியிருக்கிறது..இருந்தும் தப்பி விடுகிறது.. சி.செ.. நீங்கள் சொன்ன இரண்டு காட்சிகளும் மலரென்ற முகமிங்கு, நாகேஷ்.. முத்திரை பதித்த காட்சிகள் சட்டென நினைவுக்கு வராமல் போய்விட்டது.. நன்றி..இன்னும் கிராமஃபோன்..ம்ம் நினைவுகளில் தேட வேண்டும்..
அன்பார்ந்த திரி நண்பர்களே
நிறைந்த மனதுடன் பெறும் வாழ்த்துக்கள் உடனே பலித்து விடும் என்பது எவ்வளவு உண்மை ....!
என் ஆராய்ச்சி மாணவர்கள் எனக்குப் பெருமை சேர்ப்பார்கள் என்று அன்புள்ளத்தோடு எனக்கு கல்விப்பணி ஓய்வு வாழ்த்துக்களைத் தெரிவித்தீர்கள் ...
இப்போது எனது வழிநடத்துதலில் பி எச் டி முடித்த இரு மாணவர்கள் :
ஒருவர் Dr AC MATHEW தற்போது கேரளா கசரகோடில் உள்ள மலைத்தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சிக் கேந்திரத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்
இன்னொருவர் Dr Manoj சாமுவேல் தற்போது ஹைதராபாதில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் முதன்மை விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார்
முனைவர் பட்டம் சார்ந்த ஒரு ஆய்வுக்கட்டுரையை சிகாகோவில் செயல்படும் உலக நீர்சூழல் அமைப்புக்கு சமர்பித்து சிறந்த ஆய்வுக்கான பரிசினை தட்டி
வந்து எனக்கும் எனது பல்கலைக்கழகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள்!. மகிழ்ச்சியை உங்களனைவருடனும் பகிர்வதில் பெருமை
கொள்கிறேன் !!
செந்தில்
FOR IMMEDIATE RELEASE 20 August 2015
Indian Scientists to Receive Prestigious Water Quality Award
ALEXANDRIA, Va. – Indian Scientists Dr. Manoj P. Samuel (Principal Scientist, Indian Council of Agricultural Research- National Academy of Agricultural Research Management, Hyderabad), Dr. S. Senthilvel (Professor(Agricultural Engineering)), Tamil Nadu Agricultural University, Coimbatore and Dr. A.C. Mathew (Principal Scientist, Indian Council of Agricultural Research-Central Plantation Crops Research Institute, Kasaragod, Kerala) will receive the prestigious McKee Groundwater Protection, Restoration, or Sustainable Use Award- 2015 from the Water Environment Federation (WEF), an international not-for-profit technical and educational water quality organization. The award will be presented during a ceremony at the organization’s 88th Annual Technical Exhibition and Conference this fall in Chicago, Ill. www.weftec.org.
This award is considered to be one of the most prestigious awards in the area of water resources and environmental engineering and being conferred to Indian scientists for the first time.
McKee Groundwater Protection, Restoration or Sustainable Use recognizes significant contributions to groundwater science or engineering research published peer reviewed journals worldwide. The award is in honor of Dr. Jack McKee, the 1962-63 president of the Water Environment Federation, a founder of the consulting firm of Camp, Dresser and McKee, Inc., and a long-time professor at the California Institute of Technology.
கங்கிராஜுலேஷன்ஸ் வாத்தியாரையா... அமெரிக்காவின் ஆதி குடிமகனே (செவ்) இந்தியர்கள்தானே !
சிக்கா...
நீங்க கேட்ட வஹிதா பாட்டு இதுவா ? கைடு படத்தில் வருதே !
ஆஜ் பிர் ஜீனே கி தமன்னா (?) ஹை... ஆஜ் பிர் மர்னே கா இராதா (?) ஹை...
https://www.youtube.com/watch?v=1odcNKyfZJU
கிராமபோன் ரிகார்டு பாட்டுன்னா இதெல்லாம் நினைவுக்கு வருது
ஆத்தா.. ஆத்தோரமா வாரியா
https://www.youtube.com/watch?v=FkTJXOAuld4
மௌண்ட் ரோடு சரஸ்வதி ஸ்டோர்ஸ்., பாண்டி பஜார் சௌத் இந்தியா மியூசிக் எம்போரியம், உஸ்மான் ரோடு லக்ஷ்மி மியூசிகல்ஸ் என்று அலைந்து எஸ்.பி, ஈ.பி, எல்.பி என்று கலைத்துப் போட்டு வாங்கி அழகாக போட்டோ ஆல்பம் போல இருக்கும் ஆல்பத்தில் வரிசையாக அடுக்கி வைத்து அப்பப்போ ஃப்ரீ டைமில் என் அண்ணனை அழைத்து ( வேறு யாராவது அந்த hmv கிராமபோனைத் தொட்டால் சாமியாடி விடுவாராக்கும்) பாட்டு லிஸ்ட் கொடுத்தால் வரிசையாக இசைத்தட்டுகளை எடுத்துப் போட ரசித்த நாட்கள்...
காசெட் பிளேயர் வந்ததும் இது காணாமல் போக... ஒரே ஒரு ரிகார்டை எடுத்து ஒளித்து வைத்திருந்தேன்.. அது எட்டு துண்டுகளாக கிடைத்தபோது :(
டேப் போயி, காசெட் போயி.. சிடி போயி... டிவிடி போயி... எம்.பி எண்கள் எல்லாம் போயிகிட்டே இருக்கு... அடுத்ததாக நம்ம தலையில் ஒரு சிப் பதிச்சு அதில் அப்பப்போ பாட்டு பதியலாம் என்று வரப்போகுதாம்...
மூக்கடைத்த குரலில் மனதை மயங்க வைக்கும் குலாம் அலியின் குரலில் இந்த நிக்காஹ் படப்பாடலைக் கேட்கும்போது யாத் ஆ ரஹா ஹை...
https://www.youtube.com/watch?v=38_AJgdtXm4
Thanks madhu,senthil and chinnakkaNNan ! :)
madhu: I think Columbus mistook them for Indians. They are now knoown as native Americans. We are known as Asian Indians ! :)
chinnakkaNNan: I was planning to write a book with the title, "Idiot America". I usually go for a cup of mocha around 3 pm and browse the book store next door. One day I found a book with the same title (Idiot America) displayed prominently. I thought of picking up the book after making my rounds. By the time I finished browsing and went to pick up that book it was gone. Now, I am looking for another title ! :lol: A couple of years back I posted some of my views iin some thread. Some hubbers wanted me to continue. If I locate that thread I will continue.
Senthil: Congratulations. If you visit Chicago for the conference please call me. Thanks.
https://www.youtube.com/watch?v=OZ9qKfOoFxc
ராஜ் ராஜ் சார் கூறிய upright பியானோ.. இப் பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ளது.
மது,
இன்னும் கூட சில கிராமஃபோன் ரிக்கார்டுகள் என்னிடம் உள்ளன. 78 rpm, EP, LP என மூன்று வகை இசைத்தட்டுகளும் மாதிரிக்கு வைத்திருக்கிறேன். ஆனால் ப்ளேயர் தான் இல்லை.
அதே போல ஒலி நாடாக்களும் சிலவற்றைப் பாதுகாத்து வருகிறேன்.
இசைத்தட்டுக்களைப் பொறுத்த மட்டில் புரசைவாக்கம் ராஜா மியூஸிக்கல்ஸ், மிகவும் பிரபலமானது. அவருடைய சகோதரர் மோகன் அண்ணா சாலை ரேடியோ மார்க்கெட்டில் ஓரிரு கடைகளை வைத்திருந்தார். மோகனுடன் அவருடைய இன்னோர் சகோதரர் சரவணனும் உடனிருந்து இசைத்தட்டு விற்பனை செய்து வந்தார்கள். ஒலிநாடாக்கள் வந்தபின்னர் இவை வெகுவாக மறையத்தொடங்கின. இளையராஜா அவர்களின் பாடல்கள் காலம் வரை இசைத்தட்டு பரவலாக விற்பனையாகி வந்தது. ஏ.ஆர்.ரகுமான் நுழைவிற்குப் பின்னர் அத்தனையும் மாறிப்போனது. எக்கோ ரிக்கார்டிங் கம்பெனியின் மூலமாகத் தான் பெரும்பாலான இளையராஜா படங்களின் இசைத்தட்டுக்கள் வெளியிடப்பட்டன. இவையன்றி லஹரி, இன்ரிக்கோ, அவ்வப்போது ஹெச்எம்வி என வெளியிடப்பட்டன.
http://polkacafe.s3.amazonaws.com/ar...9674658241.jpg
டெல்லியில் ஒரு இசைத்தட்டு விற்பனைக்கூடம்
Raj Raj Sir
I learnt that the record players (incl gramaphone records of 78 rpm) are being manufactured with the latest technology including USB drives, so as to record them live and store them. It is also available in India (of course online sales, I presume). It seems they work under magnetic reading capability 0r magnetic stylus or something of that kind, with which we can play around and upto 10000 records.
Can you elaborate on this?
Raghavendra: I don't think they use magnetic pick up in turn tables/record players. But, USB connection, wireless, pre amplifiers are common. They used to make these record players only for LP records. Now it is 33 rpm, 45 rpm and 78 rpm records. I have not followed the developments closely. In fact, I have to transfer all my LP records and audio cassettes collected over the last 50 years to CDs or memory cards. Then comes all the movies I took - 8mm film,VHS tape and 8mm tape and negatives and slides ! Big project ! :) I hope my movie projector works ! :)