//கிருஷ்ணா ஜி எங்கே எங்கே//
இப்போதுதான் செல்லில் என்னுடன் பேசி விட்டு நித்திரை கொள்ள சென்று விட்டார். இங்கே மணி பத்து ஆகப் போகிறது. அங்கே ராஜேஷ் சார்? அப்படியே எங்கே? வும். விருப்பப்பட்டால்.
Printable View
//கிருஷ்ணா ஜி எங்கே எங்கே//
இப்போதுதான் செல்லில் என்னுடன் பேசி விட்டு நித்திரை கொள்ள சென்று விட்டார். இங்கே மணி பத்து ஆகப் போகிறது. அங்கே ராஜேஷ் சார்? அப்படியே எங்கே? வும். விருப்பப்பட்டால்.
நன்றி வாசு சார் …:) பின்ன சரக்கு கொஞ்சம்மாவா இருக்கு் இங்கு இருப்பவர்களிடம்..ஏதோ ஒலகத்துக்கு எதுனா நல்லது சொல்லணும் உங்க மூலமா.:)
.
இந்த நாட்டியம் தெரிந்த நடிகைகள் இன்னும் கொஞ்சம்பாக்கி இருக்கே.. கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு…வில் ஆடும் தோழி.. அவரும் நாட்டியம் தெரிந்தவரா..
அப்புறம் நா.தெ.தேவதைகளில் – சொர்ண புஷ்பம் அமலா.. சலங்கையிட்டாள் ஒரு மாது அப்புறம் ? (ரேவதி மாதவில்லாம் அவ்ளோ அட்ராக்ட் பண்ணவில்லை நடனத்தில்)
இப்ப ஒன்பதே முக்கால் தானே ஆகுது..இங்க எட்டே கால்..
ஆமாம் விஜியா நடனமா..சரி பாட் பாத்துட்டுச்சொல்றேன்..
சி.கா .. அது ராஜசுலோசணா .. மிகச்சிறந்த நடன கலைஞர் ..
வாசு ஜி, இங்கே காலை மணி 11:15 , இடம் ஹுஸ்டன் , டெக்சாஸ்
ஓ விஜயலலிதாவா.. நான் கோழி கூவுது விஜின்னு நினச்சுட்டேன்..
சி.கா .. அது ராஜசுலோசணா .. மிகச்சிறந்த நடன கலைஞர் ..// இது எந்தக் கேள்விக்கான பதில் ..சூர்யகலா யார்க்கா..
ஆனால் ரா.சு ஆடுவாங்கன்னு தெரியாது..
ராஜ சுலோச்சணாவின் நினைவாக இதோ
வால்மீகி என்ற கன்னட/தெலுங்கு படப்பாடல்கள் .. படமாக்கியிருக்கும் விதம், கண்டசாலாவின் இசை, இசையரசியின் குரல் என அமர்க்களம்
https://www.youtube.com/watch?v=QKykDB0iRrI
https://www.youtube.com/watch?v=-nge1Bt_xkc
ஓ நன்றி ராஜேஷ்.. ரொம்ப நாளாச்சா..படம்பார்த்து..இப்ப நினைவுக்கு வருது..வீடியோபார்க்கறேன்..ஆனா ஜெய்ஷங்கருக்கு வெற்றிப்படமான பாலாபிஷேகம் தான் நினைவுக்கு வருது..அதில் ரா.சு தானே..
வடிவேலு பாணியில்..ஹய்யோ ஹய்யோ.. நீங்க நம்பிட்டீங்களா..என்னத்தே கன்னையா வாய்ஸில்..பொதுவாக் கேட்டேன்..பட் வாசுசார் கொஞ்சம்மறந்தது உண்மை..சாரங்கதாரா ரா.சுவை..அம்பிகாபதிபார்த்து நாளாச்சு பார்க்கணும்..
oh...மிஸ் லில்லியை எப்படி மறந்தேன்..இதயக் கனி..துணிவே துணையும் மறந்து போச்சு..ம்ம்
ராஜேஷ் சார்!
அருமை! அற்புதம். கொன்னுட்டீக.
'சாரங்கதாரா'வின்
'தன்னை மறந்தாடும் என் மனம் நாடும் சந்திரனே'
வண்ணத்தமிழ் பாடி என்னையும் தேடி வந்திடக் கண்டேனே
என்ன வைப்ரேஷன்ஸ் இசையரசி குரலில்.
குரல் மாடுலேஷன்ஸ். இனிமே ஒருத்தர் பிறக்கக் கூட முடியாது ராஜேஷ் சார். பத்மினி பிரியதர்ஷினி கொள்ளை அழகு.
இந்தப் பாட்டைத்தான் இரவெல்லாம் காதில் ரீங்காரமிடப் போகிறது. இதையெல்லாம் பலர் கேள்விப்பட்டிருக்கக் கூட மாட்டார்கள். அதுதான் வீண் வாக்குவாதம் எல்லாம்.
ராஜேஷ் சார்!
இசையரசி பாடகர் திலகத்துடன் இணைந்து பாடும் பாடல். என்ன சுகமான பாடல்! 'நல்ல முடிவு' திரைப்படத்தில்
'முல்லைப் பூப் போலே ரெண்டு மூக்குத்தி மின்னுதடி'
'சித்தன்ன வாசலிலே அழகு சித்திரம் காணுதய்யா'
பிடிக்கும்தானே!
https://www.youtube.com/watch?v=9ExB...yer_detailpage
நல்ல முடிவு ...அருமையான பாடல் ..
//'தன்னை மறந்தாடும் என் மனம் நாடும் சந்திரனே'
வண்ணத்தமிழ் பாடி என்னையும் தேடி வந்திடக் கண்டேனே
என்ன வைப்ரேஷன்ஸ் இசையரசி குரலில். // வேலவன் வேல் போலே இரண்டு விழிகள் மின்னுதய்யா//
தன்னைமறந்தாடும் பாட்டு வெகு அழகு.. அந்த மாடுலேஷன்ஸ் இனிமை..இசையரசியின் குரல் ம்ம்
//வேலவன் வேல் போலே இரண்டு விழிகள் மின்னுதய்யா//
இல்லை இல்லை என்ற இடை சொல்வது என்னடியோ..
பட்டுக்கால்கள் பட்டதனாலிபஞ்சு விளைந்ததடி
உன் கூட இருந்தால் குளிராய்த் தோன்றுதய்யா...ஓ..
ஒரு இனிமையான டூயட்..
அழகான பாடல் தந்த ராஜேஷீக்கும்.. வாசு சாருக்கும் ஒரு ஓ :) அண்ட் நன்றி..
வாசு சார்..அந்தபத்மினி பிரிய தர்ஷனியெல்லாம் எப்படி நினைவு வைத்துக்கொள்கிறீர்கள் ம்ம் ஆச்சர்யம்.
சரி ராஜேஷ் சார்/சி.க. சார்.
நான் போய் தூங்கப் போறேன். இன்னைக்கு நிறையப் பக்கங்கள். நிறையத் தகவல்கள். தங்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி!
நாளை பார்க்கலாம்.
குட் நைட்.
ஷ்யுர் வாசு சார்..இனிய பாடல்கள் (மட்டும்) உங்க்ள் கனவுகளில் வரட்டும் :) குட் நைட்..( நாளைக்கு மறக்காமச் சொல்லணும் என்ன :) )
ராஜேஷ் கண்ணா.. நானும் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்..:)
ஏன் ஓய் ப.பி யோட புதிரே விடுபடல்ல இதுல ஜெமினி சந்திராவா.. எனக்கு ஜெமினி கணேஷ், ஜிஜி (ஹேண்டில் வித் கேர் மாதிரி கார்த்திக் பாடுவாரே), ரேகா தான் தெரியும்..
சின்ன பெண்ணான போதிலே .. ஆஹா என்ன அருமையான பாடல்
ராமனாதன் தனக்கும் மேல் நாட்டு பாணி அற்புதமாக வரும் என்பதை சொல்லாமல் சொல்லும் பாடல்
que sera que sera .. ஒரிஜினல் .. டோரிஸ் டே.. எனக்கு மிகவும் பிடித்த நடிகை
அதே போல் ஜிக்கியம்மா என்ன உருட்டல் அந்த குரலில்.... சின்ன பெண்ணான போதிலே போன்று பல பாடல்கள்
இசையரசியிடம் பேசும்பொழுதெல்லாம் ஜிக்கியம்மா பற்றி சிலாகித்து சொல்வார் ...
கணவனே கண் கண்ட தெய்வத்தின் இயக்குனரின் மகனும், பல இசையமைப்பாளரிடம் போங்கோஸ் வாசிக்கும் என் நண்பர் திரு பாஸ்டன் கணேஷ் மற்றும் அவரது நண்பர் திரு சி.ஏ.ராஜா அவர்களும் சேர்ந்து பல கலைஞர்களை நினைவு கூறும் இசை நகிழ்ச்சிகளை நடத்துகிறார்கள்
பாடகர் திலத்திற்கும், வாலி ஐயாவிற்கும் ஆகிவிட்டது. இந்த மாதம் ஜிக்கியம்மாவிற்கும் அடுத்த மாதம் ஸ்வர்ணலதாவிற்கும் நடத்துகிறார்கள்
சென்னை நண்பர்களை கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். விருப்பபட்டவர்கள் எனக்கு பிரைவேட் மெசேஸ் அனுப்புங்கள்
அவருடைய அலைபேசி எண் தருகிறேன்.
நன்றி
Attachment 3481
சர்ர்ரிய சொன்னீங்க.. அவங்க மட்டும் நளினமாக ஆடியிருந்தா எங்கேயோ போயிருப்பாங்க.. "பொன் மகள் வந்தாள்" பாட்டுக்கு அபினயத்துல ரெண்டு வெட்டு வெட்டுவாங்க.. தியேட்டர்ல ஒரு பாட்டி "ஏன் இப்படி ஆடறா ? ஃபிட்ஸ் வந்துடுச்சா?" என்று கேட்டு ஆடியன்ஸை அலற வைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
பத்மினி பிரியதர்சினி ?
நெஞ்சம் மறப்பதில்லை இளைய ஜமீந்தாரிணியா நடிச்சாங்களே ? அவங்களா ?
பி.சுசீலா தேன் சொட்ட பாடிய "என்னாளும் வாழ்விலே" பாட்டு மாதிரியே ஏறக்குறைய அதே டியூனில் பாட தன் மனைவி ஜிக்கிக்கும் ஒரு சான்ஸ் ஏ.எம்.ராஜா "விடிவெள்ளி" படத்தில் கொடுத்திருப்பார்.
அந்தப் பாட்டுக்கு நடனம் ஆடுவபரும் அவரேதானா ?
http://youtu.be/3Q4UoWcARF4
உள்ள(த்)தை அள்ளித்தா
5000 பதிவுகளைக் கடந்து வெற்றி நடை போடும் வாசு சாருக்கு என் உள்ளம் கனிந்த பாராட்டுப் பதிவினைத் தொடர்ந்து இப்பாடல் அவருக்காக அளிக்கப் படுகிறது.
திரியின் நாயகனிலிருந்து மய்யத்தின் மய்யமாக விளங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஆவலுடன் காத்திருக்கிறோம்.
தங்களுக்காக பழைய எல்லாம் இன்ப மயம் படத்திலிருந்து ஏ.எம்.ராஜா பி.லீலா குரல்களில் வண்டும் மயிலும் என்ற இனிமையான பாடல் தரமான ஒலிப்பதிவில்
https://www.mediafire.com/?np9ud5inwwk5gyt
அடடா ....அல்வா மாதிரி பாயிண்ட் எடுத்து கொடுத்த மது ,வாசுதேவா உங்களுக்கு நன்றி. மேலும் எவ்வளவோ சொல்ல நாவு துடித்தாலும்,ஜோதியின் ரசிகன் என்றாலும்,திரியில் இருந்து சற்றே ஓய்வெடுக்கும்,கார்த்திக்கை சீண்ட வேண்டாம் (இல்லாத போது)என்ற நல்லெண்ணத்தால் தற்போது ,இச்சையை தள்ளி வைக்கிறேன்.
பொங்கும் பூம்புனல்
மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி அவர்களின் இசையில் வெளிவந்த பாடகர் திலகம் இசையரசி டூயட்கள் என்றைக்குமே தனித்தன்மையுடன் காலம் காலமாய் நினைவில் நிற்பவை. அப்படி ஒரு பாட்டுத் தான் பட்டத்து ராணி படத்தில் இடம் பெற்ற இப்பாடல்.
கேளுங்கள் உணருங்கள்
http://www.inbaminge.com/t/p/Pattathu%20Rani/
[QUOTE=RAGHAVENDRA;1155207]பொங்கும் பூம்புனல்
மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி அவர்களின் இசையில் வெளிவந்த பாடகர் திலகம் இசையரசி டூயட்கள் என்றைக்குமே தனித்தன்மையுடன் காலம் காலமாய் நினைவில் நிற்பவை. அப்படி ஒரு பாட்டுத் தான் பட்டத்து ராணி படத்தில் இடம் பெற்ற இப்பாடல்.
QUOTE]
Thank you Sir. My Day is done.:-D
உள்ள(த்)தை அள்ளித்தா
வேதா ... இவர் பெயரைச் சொன்னாலே அந்தக் கால இளைஞர்களின் நெஞ்சில் தனி ஈர்ப்பு உண்டாகும். இவரின் இசை பெரும்பாலான இளைஞர்களை சுண்டி இழுத்தது. அப்படிப்பட்ட ஒரு படம் தான் காதல் பறவை. 1967ம் ஆண்டு வெளிவந்த இப்படப் பாடல்கள் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவை. இவை ஒலிக்காத இடமே இல்லை எனலாம். துரதிருஷ்டவசமாக இது வரை மறுவெளியீடு காணாத இப்படத்தின் பாடல்கள் கேட்கும் போதே படத்தைப் பார்க்கத் தூண்டும்.
வேத காலப் பிராணியைப் பாரு வெங்கிட்டு என்பது இவரது பேரு... நண்பர்கள் வட்டாரத்தில் அந்தக் காலத்தில் ஒருவனைக் கிண்டல் செய்ய வேண்டுமென்றால் வெங்கிட்டு என்று நக்கலாக சொல்வார்கள். இந்தப் படப் பாடலின் தாக்கம் அவ்வாறு.
இணையத்தில் வேறு எங்கும் இப்பாடல் உள்ளதா தெரியவில்லை. நம் நண்பர்களுக்காக பகிரந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
https://www.mediafire.com/?vgwepbqem6d1x9a
Vasu,
Congrats. Yours deserve special mention as you took effort for all your postings. Many others achieved this mile stone but not as impressive as you did it.But my pick is enathu giramam, sivaji udai , thunai ,and efforts to start this thread.
[QUOTE=RAGHAVENDRA;1155209]உள்ள(த்)தை அள்ளித்தா
வேதா ... இவர் பெயரைச் சொன்னாலே அந்தக் கால இளைஞர்களின் நெஞ்சில் தனி ஈர்ப்பு உண்டாகும். இவரின் இசை பெரும்பாலான இளைஞர்களை சுண்டி இழுத்தது. அப்படிப்பட்ட ஒரு படம் தான் காதல் பறவை. 1967ம் ஆண்டு வெளிவந்த இப்படப் பாடல்கள் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவை. இவை ஒலிக்காத இடமே இல்லை எனலாம். துரதிருஷ்டவசமாக இது வரை மறுவெளியீடு காணாத இப்படத்தின் பாடல்கள் கேட்கும் போதே படத்தைப் பார்க்கத் தூண்டும்.
வேத காலப் பிராணியைப் பாரு வெங்கிட்டு என்பது இவரது பேரு... நண்பர்கள் வட்டாரத்தில் அந்தக் காலத்தில் ஒருவனைக் கிண்டல் செய்ய வேண்டுமென்றால் வெங்கிட்டு என்று நக்கலாக சொல்வார்கள். இந்தப் படப் பாடலின் தாக்கம் அவ்வாறு.
இணையத்தில் வேறு எங்கும் இப்பாடல் உள்ளதா தெரியவில்லை. நம் நண்பர்களுக்காக பகிரந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
(QUOTE)
Very Famous during our childhood. Another song also "Kathal paravaigale ganam padungal padungal". Vedha, away from Modern theatres ,proved his worth in Athe kangal,kathal paravai,mana satchi.
பொங்கும் பூம்புனல்
எஸ்.பாலச்சந்தர்..
தமிழ்த்திரையுலகிற்கு இவரது பங்களிப்பு மகத்தானது. பல புதுமைகளை அந்தக் காலத்திலேயே முயன்றவர். மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர். சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர்.. என்று பலரும் அறிந்திருப்பர்.
இவர் ஒரு தேர்ந்த பாடகர் கூட... இது எத்தனை பேருக்குத் தெரியும்...
இதற்கு சான்றாக ... இதோ ஒரு பாடல்...
இது நிஜமா படத்திலிருந்து... மாதரெல்லாம் பாடத்தில் எஸ்.பாலச்சந்தர் ஜெயலக்ஷ்மி பாடிய டூயட் பாடல்.
http://www.inbaminge.com/t/i/Ithu%20Nijama/
இந்தப் பாடலை இவரோடு பாடியுள்ள ஜெயலக்ஷ்மி இவரது சகோதரி என நினைக்கிறேன்.