http://i63.tinypic.com/2ldc8ih.jpg
Printable View
From Ananda vikatan, some Q&A with Kamal hassan,
http://img.vikatan.com/news/images/kamal1nov12.jpg
'நான், சிவாஜி ரசிகன். எனது மகனோ, கமல்ஹாசன் வெறியன். எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை. நீங்கள் யார் பக்கம் கமல்?''
'
'பாவம்... சின்னப் பையன் மனதை உடைக்காதீர்கள். உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்... நான் பெரியவர் பக்கம்தான். உங்கள் மகனுக்கு மகன் பிறக்கையில், அவர் விரும்பும் நடிகரும் என் மாதிரி பதில் சொன்னால் சந்தோஷம்!''
'சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்பவர்’ என்ற அவர் மீதான விமர்சனம்பற்றி உங்கள் கருத்து?''
''ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப நடித்ததால்தான் அவர் நடிகர் திலகமானார். ஒருவேளை, அந்தக் காலத்து ரசனை கொஞ்சம் ஓவரோ என்னவோ!''
''என்னதான் விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட கலைஞர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று நாம் கர்வத்தோடு மார் தட்டிக்கொண்டாலும், அவருக்குத் தேசிய விருது கிடைக்காததற்குக் காரணம், அவரின் மிகைப்பட்ட நடிப்புதானே?''
''இல்லை, அன்று நிலவிய அரசியல்!''
[QUOTE=vasudevan31355;1266259]//சற்றே விரும்பித் தனது படப்பட்டியலை வாசித்து, அதில் ஒவ்வொன்றைப் பற்றியும் தன் எண்ணங்களை வரைந்தார்.//
அதைத்தான் அருமைத்தம்பி செந்தில்வேல் இப்போது ஆவணமாக 'சிவாஜி ரசிகன்' இதழ் மூலம் நமக்கெல்லாம் அளித்துக் கொண்டிருக்கிறார். முன்பு நானும், பம்மலாரும் கொஞ்சம் தந்தோம். இப்போது செந்திவேல் மூலம் முழுமை பெறும் என்று நினைக்கிறன்.
வாசு சார்
நிச்சயமாக
150படங்களையும்
பதிவிடுவேன்.
நினைப்போம்.மகிழ்வோம்-66
"பலே பாண்டியா."
"அத்திக்காய்" பாடல்.
தேவிகா பாடப் பாட, கட்டில்
விளிம்பில் தலை சாய்த்துப்
படுத்துக் கொண்டு, வாய் கோண, லயித்து, கட்டிலில் தாளம் போடும் அழகு.
நினைப்போம்.மகிழ்வோம்-67
"வீரபாண்டிய கட்டபொம்மன்".
போருக்குக் கிளம்புகையில்
மனைவியிடம் விடைபெறும்
போது, பல பக்க வசனங்கள்
விளக்க வேண்டிய வீரத்தை,
"சர்ர்ர்...ட்ட்" என்று தனது
குறுவாளை உறைக்குள்
செலுத்துவதில் காட்டி விடுவது.
நினைப்போம்.மகிழ்வோம்-68
"பாகப் பிரிவினை."
"தாழையாம் பூ முடிச்சு" பாடல்.
"தன்னன்னா"வுக்குப் பிறகு
வரும் துவக்க இசைக்கு, ஊனம்
மறந்து துள்ளும் சந்தோஷத்
துள்ளல்.
நினைப்போம்.மகிழ்வோம்-69
"ராமன் எத்தனை ராமனடி."
தன்னைப் பார்த்துக் கண்ணடித்த கே.ஆர்.விஜயாவுக்குப் பதிலுக்குக்
கண்ணடிக்க அவர் வீட்டுக்குப்
போய், குழாய் வழியே மேலேறி,
கே.ஆர்.விஜயாவின் அறை
என்று நினைத்து அவர் அண்ணன் நம்பியாரின்
அறைக்குள் குதித்து விட,
அங்கே உறங்கும் நம்பியாரைப்
பார்த்து வெலவெலத்துப் போய்
நடுங்குவது.
(இதை சமீபமாக எங்கோ
பார்த்தோமே என்று யோசித்தால்... "சந்திரமுகி"
பேய் வீட்டில் மாட்டிக் கொண்டு
வடிவேலு நடுங்குகிறார்... அதே மாதிரி)
நினைப்போம்.மகிழ்வோம்-70
"சுமதி என் சுந்தரி".
"ஓராயிரம் " பாடல்.
காதலில் மகிழ்ந்து கலைச் செல்வி பாடி, ஓடி வர...
தேயிலைத் தோட்டத்தில்,
கடுமையான வெறுப்பில்,
நமக்குப் பக்கவாட்டில் முகம்
காட்டி, ஏதேதோ புலம்பிக்
கொண்டு நடப்பது.
நினைப்போம்.மகிழ்வோம்-71
"திருவிளையாடல்".
மீனவனாய் வந்திருப்பது ஈசன்தான் என்பதை அறியாமல், "அந்த ஈசனருள்
உங்களுக்குப் பரிபூரணமாக
கிடைக்கட்டும்" என்று ஈசனிடமே சாவித்திரி சொல்ல..
வெகு கிண்டலாக, "ஈசனருள்..
எனக்கா..? கிடைக்கட்டும்.
கிடைக்கட்டும்.." என சிரித்துக்
கொண்டே சொல்வது.
நினைப்போம்.மகிழ்வோம்-72
"கலாட்டா கல்யாணம்."
"மெல்ல வரும் காற்று" பாடல்.
பாடலின் இடையிசைக்கு,
கீழிருந்து எடுக்கப்பட்ட அந்த
காட்சியில், அழகாகப் புன்னகை
சிந்தி, தலையசைத்தபடியே
நடந்து வருதல்.
நினைப்போம்.மகிழ்வோம்-73
"படித்தால் மட்டும் போதுமா?"
மனைவியால் வெறுக்கப்பட்ட
வேதனையுடன் தான் மட்டும்
வீடு திரும்புவார்.
மகனுடன்,மருமகளைக் காணாத வியப்போடு தாய்
"மீனா வரலையாப்பா?" என்று
கேட்பாள்.
விரக்தியில், ஏதோ சிந்தனையில்.. தாய் கேட்டதை
கவனிக்காதவர்.. "ம்ம்? "எனும்
ஒலியையே பதில் கேள்வியாக்குவாரே?
நினைப்போம்.மகிழ்வோம்-74
" டாக்டர் சிவா".
"மலரே குறிஞ்சி மலரே" பாடல்.
சின்னஞ்சிறிய கோயிலின் முன் மனைவியுடன் அமர்ந்திருக்கையில், அந்த
முகத்தில் நாமுணரும்
தெய்வீகமான சாந்தம்.
நினைப்போம்.மகிழ்வோம்-75
"ராமன் எத்தனை ராமனடி".
கே.ஆர்.விஜயாவிடம், "உங்களுக்காக நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க. இந்த கையை வெட்டிக்கணுமா?"
என்று தனது வலது கையைக்
காட்டுகிறவர், வேகமாய்ச்
சுதாரித்துக் கொண்டு இடது
கையைக் காட்டுவார்.
வலது கை இல்லையென்றால்
சாப்பிட முடியாதே?
நினைப்போம்.மகிழ்வோம்-76
"வசந்த மாளிகை".
"மயக்கமென்ன" பாடல்.
"வள்ளி மலைத்தேன்"என்பது
பாடி முடிக்கப்பட்ட பின், மீண்டும் "மயக்கமென்ன"
எனப் பாடப்படுகையில், கைகள் இரண்டையும் உயரத்
தூக்கிக் கொண்டு, கொஞ்சம்
உடல் சாய்த்து, சின்னதாய்
ஒரு குதி குதிப்பாரே?
நினைப்போம்.மகிழ்வோம்-77
"திரிசூலம்".
தன் உடம்பில் விழும் ஒவ்வொரு சாட்டையடிக்கும்
ஒவ்வொரு விதமாய் தன்
தலைமுடியின் முன் கற்றை
வந்து விழுமாறு அழகாய்ச்
சிலுப்புவது.
நினைப்போம்.மகிழ்வோம்-78
"ஆலயமணி."
"கல்லெல்லாம்" பாடல்.
பாடிக் கொண்டே ஓவியம்
வரைந்து முடித்த பிற்பாடு,
ஓவியர்களுக்கே உரித்தான
பாணியில்.. சற்றே பின் தள்ளி
ஓவியத்தை மேற்பார்வையிடல்.
நினைப்போம்.மகிழ்வோம்-79
"சரஸ்வதி சபதம்".
நாரதராக எத்தனையோ சிறந்த
நடிகர்கள் நடித்துள்ளனர். அந்த
நாரதரின் குணாதிசயங்களை
உடல் மொழியாலும், குரல்
ஏற்ற, இறக்கத்தாலுமே
காட்டியிருப்பார்.
ஒரு வம்புக்காரரின், கலகம்
விளைவிக்கத்தக்க, கிண்டலான
பேச்சுத் தொனிக்கு உதாரணம்: "ஆம் தேவி ".
நினைப்போம்.மகிழ்வோம்-80
"பலே பாண்டியா".
"வாழ நினைத்தால் வாழலாம்"
பாடல்.
"துடித்து நிற்கும் இளமை சாட்சி" எனும் வரி வரும் போது, பக்கவாட்டில் நமக்கு
முகம் காட்டி, சற்றே உடலை
நேராய் நிமிர்த்தி, கழுத்தை
எக்கிப் பாடி வாயசைப்பது.
நினைப்போம்.மகிழ்வோம்-81
"எங்கிருந்தோ வந்தாள்".
தலைசிறந்த கவிஞர்கள்
போல அவர் ஒருவரே நடித்துக்
காட்டும் காட்சி.
அதில், பாவேந்தராய் நடிக்கும்
போது, அவர் காட்டும் இயல்பு.
அந்த கம்பீரம். அந்த வேகம்.
அந்த அடி வயிற்றிலிருந்து
வரும் "ஆங்...ஆங்."
நினைப்போம்.மகிழ்வோம்-82
"படித்தால் மட்டும் போதுமா?"
"பொன் ஒன்று கண்டேன்"
பாடல்.
விரிந்தும்,சுருங்கியும், சிமிட்டியும் திரை முழுதும்
மிகப் பெரிதாய் வியாபிக்கும்
அவரது அற்புத விழிகள்.
அவரது உதடுகள் சிரிப்பதை
நமக்கு உதாரணம் காட்டும்
அவற்றின் சிரிப்பு.
நினைப்போம்.மகிழ்வோம்-83
"பாபு".
"வரதப்பா" பாடல்.
"மேரியம்மா கேரியரில் எறா
இருக்குது"-என்று பாடும் போது
"எறா"வுக்கு அவர் கை பிடிக்கும் வளைவான அபிநயம்.
நினைப்போம்.மகிழ்வோம்-84
"தில்லானா மோகனாம்பாள்."
தானும்,மோகனாவும் கலந்து
கொள்ளும் போட்டியில் தான்
வெற்றி பெற ஆசி வேண்டி
தனது ஆசான் வீட்டுக்குச்
செல்வார்.
அங்கே, தனது ஆசான் மெய்
மறந்து நாதஸ்வரம் வாசித்துக்
கொண்டிருக்க...
பணிவுடன் தனது துண்டை
இடுப்பில் கட்டிக் கொண்டு,
ஆசானுக்குப் பின்னே நிற்கிற
பவ்யம்.
நினைப்போம்.மகிழ்வோம்-85
"தாவணிக் கனவுகள்."
தேசியக் கொடி ஏற்றி வைத்த
பிறகு, கம்பீரமாய் "ஜெய்ஹிந்த்" சொல்லி..
விரைப்பாய் நின்று அடிக்கும்
'சல்யூட்.'
( 'ரத்தத் திலகம்', 'தங்கப் பதக்கம்'... "தாவணிக் கனவுகள்"...
கம்பீரம், கூடிக்கொண்டேதான்
போகிறது. )
முத்தையன்
தங்களுடைய ஒவ்வொரு நிழற்படமும் முந்தையதை விட சிறப்பாக மிளிருகின்றன. சிவந்த மண் பட ஸ்டில்களும் அப்படியே.. அதுவும் தங்களின் பார்வையில் நடிகர் திலகத்தின் ஸ்டில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் எந்தெந்த கோணத்திலெல்லாம் அவரை ரசிப்பரோ அதை அப்படியே பிரதிபலிக்கின்றன. தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...a3&oe=56F871C5
சிவந்த மண் நிழற்படம் நன்றி முத்தையன்
முத்தையன் அம்மு சார்!
சிவந்த மண் நிழற்படங்களுக்கு நன்றி!