-
நடிப்புலகச் சக்கரவர்த்தி பற்றி பல்துறை விற்பன்னர் 'சோ'
வரலாற்று ஆவணம் : துக்ளக் : 12.11.1997
http://i1094.photobucket.com/albums/...EDC4639a-1.jpg
தனித்தனிப் பக்கங்களாக...
http://i1094.photobucket.com/albums/...EDC4640a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4641a-1.jpg
[தனது 'துக்ளக்' வார இதழில் திரு.சோ அவர்கள் எழுதிய இந்த 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' கட்டுரைத் தொடர் இதே பெயரில் சென்னையில் உள்ள 'அல்லயன்ஸ் பப்ளிகேஷன்ஸ்' வெளியீட்டில் புத்தகமாகவும் வெளிவந்துள்ளது].
அன்புடன்,
பம்மலார்.
-
வாழ்வியல் திலகத்தின் "வசந்த மாளிகை"
Countdown : 7
வரலாற்று ஆவணம் : பொம்மை : 1972
http://i1094.photobucket.com/albums/...EDC4642a-1.jpg
பக்திப்பெருக்கில்,
பம்மலார்.
-
-
வசந்த மாளிகை அணிவகுப்பு ஆரம்பமாகி விட்டது... பம்மலாரின் கருணையினால்....
கோடானு கோடி நன்றிகள் சார்... துக்ளக் பக்கங்களுக்காக.....
செப்டம்பர் இறுதியில் வெளியான வசந்த மாளிகை திரைக்காவியம், சென்னையில் 1973 பொங்கல் சமயத்தில் சென்னையில் கிரிக்கெட் டெஸ்ட் பந்தயம் நடந்து கொண்டிருக்கும் போதும் தன்னுடைய வெற்றி நடையினைத் தொய்வின்றித் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் சென்னையில் 100வது நாளை அப்போது தான் கடந்திருந்த சமயம். டெஸ்ட் மாட்ச் நடக்கும் ஸ்டேடியமாகட்டும், பெட்ரோல் பங்குகளாகட்டும் எங்கும் வசந்த மாளிகை விளம்பரம் கொடி கட்டிப் பறந்தது. பல விதமான டிசைன்களில் துண்டுப் பிரசுரங்களில் வசந்த மாளிகை விளம்பரம் வெளியிடப் பட்டது. அந்த விளம்பரங்களில் ஒரு சிலவற்றை ஓடிச் சென்று வாங்கி இன்று வரை பத்திரப் படுத்தி வைத்திருக்கிறேன். அவற்றில் ஒன்று...
http://i872.photobucket.com/albums/a...pamphlet01.jpg
மற்றவை தொடரும்...
-
இந்த வசந்த மாளிகை திரைக்காவியத்தையும் பம்மலாரையும் பிரிக்க முடியாது. வசந்த மாளிகை வெளியான வாரத்திற்கு முந்தைய வாரம்தான் பம்மல் சுவாமிநாதன் என்ற நடிகர் திலகத்தின் உயரிய சீடர் இப்புவியில் அவதரி்த்தார். 21.09.1972 ....எனவே இவரை வசந்த பம்மலார் என்றும் அழைக்கலாம்...
(உங்கள் பிறந்த தேதியை வெளியி்ட்டு விட்டேன் என்று நீங்கள் உங்கள் பற்களை நறநற வெனக் கடிப்பது எங்கள் காதில் விழுகிறது. இன்னும் கொஞ்சம் கடியுங்கள்.) இருந்தாலும் அந்த வசந்த மாளிகை போலவே நீங்கள் என்றும் இளமையாக பசுமையாக திகழ்வீர்கள் என்பதற்காகவே இந்த பதிவு.
அன்புடன்
-
-
எங்கள் வசந்த பம்மலாரே! countdown கலக்கல் களேபரங்கள் தொடங்கியாச்சா?... ஜமாய்க்க வாழ்த்துக்கள். ஜமாய்க்க ஆரம்பித்திருப்பதற்கும் வாழ்த்துக்கள்.
உங்கள்
வசந்த மாளிகையில் நுழையக் காத்திருக்கும்,
அன்பு வாசுதேவன்.
-
திரு.பம்மலார் அவர்களே,
இதைத் துக்ளக்கில் வந்தபோதே படித்து ரசித்தவன் நான், அதே புத்தகமும் என்னிடம் உள்ளது.அடிக்கடி படித்து ரசிப்பேன். 'சோ' அவர்கள், நடிகர் திலகத்தை எத்தனையோ ஆங்கில திரை உலக ஜாம்பவான்களை விட உயர்வாக எழுதி இருப்பார்; அஹ்தே உண்மையுங்கூட.அதனாலே, அவர் ஒரு உலகில் உள்ள எல்லா நடிகர்களிலும் ஒரு திலகம்தான்.
'யாமறிந்த நடிகரிலே, நடிகர் திலகத்தைப் போல் இனி ஒரு நடிகரைக் கண்டதில்லை;"
என்னுடைய பத்து வயது முதல் நடிக திலகத்தின் படங்களைக் கண்டு வருபவன், இன்று வரை அவரது தாக்கத்திலிருந்து விடுபடமுடியவில்லை.
அங்கள் ஊரில் எனது ஒரு நண்பர், அவருக்கு அப்போது ஒரு 25 வயது இருக்கும், அதிக ஆங்கில மோகம் உள்ளவர், ஹிந்தி, ஆங்கில சினிமாவைத்தான் அதிகம் விரும்புவார்.ஆங்கில அறிவு ஜீவி. எனக்கு வயது அப்போது ஒரு 13 இருக்கும்;அதிகமாக வெளி உலகம் தெரியாத வயது;என்னை ஹிந்தி, இங்கிலீஷ் படங்களுக்கு கூடி செல்வார்; 'ராஜா' படம் வந்த சமயம்;எனக்கு சிவாஜி படம் பார்க்கத்தான் பிரியம்;நம்மிடம் காசில்லாத வயது.எனது நண்பர் என்னைக் கூட்டி சென்றார்.நமக்கோ 'ராஜாவை'ப் பார்த்து நடிகர் திலகத்தின் புதிய ஸ்டைலைப் பார்த்து பிரமிப்பு;என் நண்பரின் விமரிசனமோ, 'தேவ் ஆனந்த்தைப் போல் இல்லை; தேவ் ஆனந்தின் ஸ்டைல்வேறு, என்றார்.எனக்கு அப்போது அது புரியாத வயது; அவரிடம் வாக்குவாதம் செய்யும் அளவுக்கு;
என் பாம்பே வாசம் 1979 இல் தொடங்கியது;அப்போதுதான் தேவ் ஆனந்த் முதல் சஞ்சீவ் குமார் வரை எல்லா ஹிந்தி நடிகர்களின் படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
'தேவ் ஆனந்த்' க்கு என்று ஒரே ஒரு ஸ்டைல்தான் உண்டு; அதைத்தவிர அவருக்கு வேறு ஒன்றும் தெரியாது;
திலீப் குமாரிடமும் ஒரே ஒரு வகையான நடுப்புத்திறன்தான் உண்டு;
புகழ் பெற்ற 'ராஜ்குமார்' ஒரு திறமையானவர் வசன உச்சரிப்பில் மட்டுமே;அதுவும் ஒரே ஸ்டைல்தான்.
இப்படி எண்ணற்ற நடிகர்களைக் கண்டும் இது வரை இந்த மாமேதையைபோல் ஒருவரை இன்று வரைக் காணவில்லை!!!!
அன்புடன்,
anm
-
ஆனந்த் அவர்களே உங்களுடைய அனுபவம் மிகச் சரியானதே! இதே மாதிரியான அனுபவங்களை நான் உட்பட பல ரசிகர்களும் அனுபவித்திருக்கிறோம்.
-
நடிகர்திலகத்தைப் பற்றி சோ அவர்களின் கட்டுரை அருமை. திரையுலகில் பலரது ஏற்றத்திற்கு சிவாஜி உதவியிருந்தாலும் சோ போன்ற மிகச் சிலரே இந்த உண்மையை வெளியுலகிற்கு சொல்லும் நன்றி உணர்வுமிக்கவர்களாக இருக்கிறார்கள். பம்மலார் அவர்களே, பதிவிற்கு நன்றி.