Another fine song that went unnoticed...
From Anbin Mugavari (1985)
https://youtu.be/ZaSQ64P7JjU
Printable View
Another fine song that went unnoticed...
From Anbin Mugavari (1985)
https://youtu.be/ZaSQ64P7JjU
அன்று அடித்த புயலில் மறைக்கப்பட்ட மற்றொரு பொக்கிஷம் அன்பே வா ... ....
வித்யாசமாக இருக்கட்டுமே என பேத்தோஸ் ஒன்று தருகிறேன். மின்மினியின் குரலில் ஒலிக்கும் இந்த பாடல் ஏழை ஜாதி (1993) திரைபடத்தில் இடம்பெற்றது. நாயகனுக்காக ஏங்கி அவள் பாடினாலும், அடுத்து நடக்க போகும் பயங்கரத்துக்கு நம்மை தயார் செய்யும் விதமாய் வாத்தியங்களையம் தாள அமைப்புகளையும் ராஜா சார் அமைத்திருப்பது உங்களை நிச்சயம் கவரும். படமாக்கப்பட்ட நேரத்தில் ஜெயப்ரதாவுக்கு 30 வயதுக்கு மேல் இருக்கும். தாண்டவ ஆட்டத்தை அதகளப்படுத்தி இருக்கிறார்.
சமீப காலத்தில் நான் அதிகம் கேட்டு என்னை கவர்ந்த இந்த பாடலுக்கான உங்கள் விமர்சனத்தை காண காத்திருக்கிறேன். பாடல் பதிவு மற்றும் படமாக்க பட்ட விதம், ராஜா சாரின் கற்பனை என்று யாருக்கேனும் தோன்றியதை எழுதுங்களேன்.
கல்லூரி முடித்து சென்னைக்கு வேலை தேடி வந்து இறங்கிய சமயத்தில் அசோக் பில்லரில் இந்த படத்துக்கான ஒரு கார் சேசிங் காட்சி எடுத்து கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்த நினைவில் மூழ்கி விட்டேன். நோட்: ஏழை ஜாதியின் மற்றொரு பொக்கிஷமான அதோ அந்த நதியோரம் உங்களுக்கு நினைவிருக்கும்.
better quality MP3 link here.
https://www.youtube.com/watch?v=2pXumyxZXEI
ராஜா சார் அவர்கள் இசை அமைத்த பாடல்களில் ஒரு 500 பாடல்களை அவராலேயே ரிப்ரொடியூஸ் பண்ண முடியாது என்று சொல்வதில் எனக்கொன்றும் அச்சமில்லை. ஏதோ ஒரு அசுர வேகத்தில் எக்கச்சக்க வேலைப்பாடுகளுடன் எல்லா அம்சங்களும் பொருத்தி அளித்த எத்தனையோ பாடல்களில் அறுவடை நாள் எனக்கு எப்போதும் ஸ்பெஷல் தான். அறுவடை நாள் வந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் அதன் பாடல்கள் மீது சற்றும் எனக்கு மோகம் குறையவில்லை.
தேவனின் கோயில் மூடிய வேளையில்: எவ்வளவு விஷயங்களை உள்ளடக்கி இருக்கிறது இந்த பாடல்? ஒரு முழு படத்தின் சோகத்தை ஒரு பாடலில் சொல்லிவிட முடியுமா? சந்தோஷ நிகழ்வுகளும் இருக்கிறது தம்பி என்று சொல்லிவிட அதே பாடலில் ரொமான்டிக்கான ஹாப்பி பீட்ஸ் வைத்து விட முடியுமா? எந்த சோக பாடலுக்கான இலக்கணத்தையும் ரெபெரென்ஸ் செய்யாமல் தொடக்கத்திலேயே சர்ச் ஆர்கன் பின்னணியில் நாலைந்து டிராக்குகளில் சுலோகம் சொல்லி சிக்ஸர் அடித்து விடுகிறார் ராஜா சார்.. பிறகு பல்லவியை தொடர்ந்து வரும் முதல் இடை இசையில் சுகமாய் அடிக்கும் சர்ச் மணியோசை ஸ்ட்ரிங்ஸ்க்கும் குழலோசைக்கும் இசையில் இழைந்து வருவது டிவைன் அல்லவா? இரண்டாவது இடை இசையோ சொர்கம்.அதில் ராஜா சார் ஓங்கி உயர்ந்து ஹே தந்தன தந்தன தந்தனா சொல்வதை எதனுடன் ஒப்பிடுவது? கிட்டாரும், புல்லாங்குழலும், கிட்டாரும், தாள அமைப்புகளும் போட்டி போடுகிறதே? கங்கை அமரனையும், சித்ராவையும் நினைத்து பெருமை பட இந்த ஒரு பாடல் போதும்.
இந்த பாடல் என்னை அழ செய்திருக்கிறது.. துள்ளி இருக்கிறேன். இது தான் முடிவு என தெரியாமல் துவண்டு போயிருந்த வேளைகளில் இந்த பாடல் மூலம் தேவனிடம் புலம்பி இருக்கிறேன். தேவாலய மணிகள் ஒலிக்கும் போதெல்லாம் இந்த பாடலும் ரீங்காரம் இடுவதை இன்றளவும் தவிர்க்க முடிவதில்லை.
ராஜா சார், நீங்க இல்லாமல் போயிருந்தால், நான் இன்று இருந்திருக்க மாட்டேன்.
click here for the MP3 version
https://www.youtube.com/watch?v=mReUJ80KifA
எ பியூர் டிலைட்....
வாசுகி படம் 1997 வெளியாகி இருக்கிறது. ராஜா சார் இசை அமைத்த படங்களும், பாடல்களும் எனக்கு பெரும்பாலும் தெரியும். ஆனால் வாசுகி படம் எனக்கு தெரிந்திருக்கவில்லை. கஸ்தூரி ராஜா படமாம். எதேச்சையாக இந்த பாடலை கேட்க நேரிட, அசந்து விட்டேன். ஜனகராஜ் ஒரு அண்ணனாக தன்னுடைய தங்கை ஊர்வசிக்கு பாடுவது போல் அமைக்க பட்டிருக்கிறது. கிளாசிக்.
Clich here to listen to the MP3 version
with good quality sound but only stills:
https://www.youtube.com/watch?v=GQogornS5SA
Actual movie (this is the title song for the movie)
https://www.youtube.com/watch?v=697WOp1ySBE
இங்கு யாருமே வருவதில்லையா? போவதற்கு எனக்கு சமூக வலைத்தளங்கள் பல இருந்தாலும், இருபதாண்டுகளாக இந்த TFMPAGE வந்து சென்ற என் கால்கள், பழக்கத்தின் காரணமாய் வராமல் இருக்க மறுக்கின்றன, அதனாலேயே நாளொன்றுக்கு இரு முறை வந்து தினம் தினம் ஏமாற்றத்துடன் செல்ல வேண்டி இருக்கிறது.
ஒரு ஆயுள் தண்டனைக்கு மேலான காலத்தை இந்த பகுதில் நான் செலவு செய்திருக்கிறேன். அது தண்டனையாக அல்ல, மகிழ்ச்சியாக! யாரும் இந்த பக்கம் வராத காரணத்தால் இந்த பகுதிகள் எல்லாம் இழுத்து மூடப்பட்டன என்று என்றேனும் என் பார்வையில் பட்டால் நான் மிகவும் வருந்த கூடும். எவரும் இங்கு வருவதற்கான எந்த தடயமும் இங்கு இல்லை.
ராஜா சார் அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களை, மேன்மை தாங்கிய மக்கள் இங்கு எழுதியதை எல்லாம் மறக்க முடியவில்லை. இந்த இடத்தில் தெரிந்து கொண்ட விஷயங்களும் பாடல்களும் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இங்கு எழுதிய, வந்து போன மக்களுக்கு என் நன்றி. இப்போது விடை பெறுகிறேன். நான் புண்ணியம் செய்தவனாய் இருப்பின் எங்கேனும் நீங்கள் எழுதிதை படிக்க நேரிடும். உங்களை பார்க்க நேரிடும். அது வரை.................................... இப்போதைக்கு பை!
வாழ்க ராஜா சார்! வளர்க அவர் புகழ் !
https://www.youtube.com/watch?v=7pWe7L6qBYE
உயிரே உறவில் கலந்து:
மனசு கேட்கவில்லை.. அதனால் இங்கு மீண்டும் மீண்டும் வந்து நான் கேட்டு லயித்ததை சொல்ல வேண்டியிருக்கிறது.
மெல்ல பேசுங்கள் திரைப்படத்தில் மிகவும் பிரபலமான பாடல் செவ்வந்தி பூக்களில்.. ஆனால் அதே படத்தில் அதிகம் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பாடல் தான் 'உயிரே உறவில்'.. இது சோக பாடல் அல்ல, அதை ஒட்டிய ஏதோ ஒரு உணர்வை ஜானகியின் குரலில் கேட்க முடிகிறது. இந்த ஜானரில் வாலிபமே வா வா படத்தில் அழகே உன்னை என்கிற பாடலிலும் அமைத்திருப்பார் ராஜா சார். கேளுங்க!
https://www.youtube.com/watch?v=YpPKJnc4Xr0
நன்றி மாப்பி, ஜெய்கணேஷ் அண்ட் பன்னையபுரத்தார் அவர்களே. ஏதோ நான் மட்டும் இங்கே தனியே உலாவி கொண்டிருக்கின்றேன் என்று நினைத்தேன். உங்கள் மூவரின் ப்ரெசென்சை இங்கே காட்டியதற்கு நன்றி சொல்ல ஒரு பழைய பாடலை உங்களுக்கு நினைவு படுத்த போகிறேன், நீங்களும் ரசிப்பீர்கள். GN ரங்கராஜன் இயக்கத்தில் 1982ல் வெளிவந்த ராணி தேனீ படத்திலிருந்து ஒரு பாடல். GNR இயக்கிய 9 படங்களுக்கும் ராஜா சார் சம்பளமே வாங்கவில்லையாம், இது கொசுறு செய்தி.
இங்கே நம்ம ஜோடிக்கு நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு ஒரு டூயட் போட வேண்டும். பாடலுக்கான சூழ்நிலை என்னவோ ஸ்ட்ரெய்ட் பார்வர்ட் தான். ஆனால் ராஜா சார் இந்த பாடலை அமைத்தற்கான உந்துதல் அந்த கதாபாத்திரங்களாக தான் இருந்திருக்க வேண்டுமே தவிர பாடலுக்கான சூழ்நிலை இல்லை. அழகாய் சேலை கட்டி, சீதையாகவே தெய்வீகமாய் காட்சி தரும் அந்த பெண், தான் மணமுடிக்க போகிறவரை ராமனாகவே பார்க்க கூடியவள். . ஹீரோ மெத்த படித்த ஜென்டில்மேன், இது தான் பாத்திரங்கள். ராஜா சாருக்கு இது மட்டுமே போதாதா? அருமை அருமை.
https://www.youtube.com/watch?v=YLr-AD3-ih4
Don't know if this song has been discussed in this thread before.
The movie Panchami was never released, however the 4 songs were nothing short of masterpieces, which used to be featured in Ilangai Oliparappuk Koottuthaabanam Tamizhchevai 2 (Radio Ceylon), under the programme, 'Maranthum Malaraathavai'.
The relatively well-known song from this movie is the P Susheela solo, 'Udhaya Kalame Nanaintha Meghame'.
The song I am talking about today is a rare duet by S Janaki and TV Gopalakrsihan (the veteran music maestro, violinst, mridangist and guru, who taught Carnatic music to Ilaiyaraja).
S. Janaki once again takes a masterclass to today's so-called playback singers on how to expressively sing, with the right feel and clarity of diction.
Here's the Youtube link (audio quality is not good though).
https://www.youtube.com/watch?v=15VGgjhW-zY
The same user has uploaded a better quality track on soundcloud here (thanks Narayanan)
https://soundcloud.com/narayanan-1/m...iyile-panchami
Enjoy!
The song is set to Raga 'Karnataka Kamas' (remember 'Ponnil Vaanam POttathu kOlangaLe' from Villuppaattukkaaran, 'Brochevarevarura' from Shankarabharanam)
நன்றி SVN. பஞ்சமி பிரமாதம், இந்த படத்தின் மற்ற பாடல்களும் கிடைத்தால் தேவலாம்.
நானும் தருகிறேன். இது றேர் இல்லை, பாப்புலர் தான். புலமைப்பித்தனின் வரிகளில் வெள்ள மனம் உள்ள மச்சான் (சின்ன வீடு)
குற்ற உணர்ச்சியில் மன்னிப்பு கேட்கும் வாசுதேவனும், மன்னிக்கும் சுனந்தாவும் கம்பீரத்துடன் உச்சியில் ஜொலிக்கிறார்கள். இன்று காலை மட்டும் 25 முறை கேட்க...
இதயம் கனத்தது., கண்ணீர் வந்தது..
எண்பதுகளிலேயே என் உலகம் சுற்றுவது நின்றிருக்கக்கூடாதா?
1985ல் தஞ்சை சாந்தி கமலாவில் என் அப்பாவுடன் நான் பார்த்த முதல் படம். சின்ன வீடு. இரண்டாவதாக அவருடன் நான் பார்த்தது சென்னை தேவி பேரடைஸில் தேவர் மகன், வேறு படங்கள் அவருடன் இனைந்து பார்த்ததில்லை.
https://www.youtube.com/watch?v=1tqMdyIB-a4
Rathiri Unakkena Aadatuma from Vasanthame Varuga (1983)
https://www.youtube.com/watch?v=K7Xfou6--pQ
Punnagai Poo Thuvuthe from Vasanthame Varuga (1983)
https://www.youtube.com/watch?v=1avMceSzVVI
Rajaramsgi,
Nee Kannil Vaazhum from Agal Vilakku (1979)
https://www.youtube.com/watch?v=WQ8fKzTa57E
SVN,
Sangeethame En Deivame from Koil Pura (1981)
https://www.youtube.com/watch?v=Acp2xiVjLKk
நன்றி mappi. தாங்கள் அளித்த நான்கு பாடல்களில் என் மனதை கவர்ந்தது கோயில் புறா.. படத்தின் அனைத்து பாடல்களும் பிரமாதமாக இருக்கும். இந்த பாடல்களை ரி-மாஸ்டர் செய்ய வேண்டும், நம் சந்ததியினருக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொக்கிஷங்கள் இவை.
கொசுறு: சரிதா நமக்கு தெரிந்தவர் தான், இவருக்காக மௌன கீதங்களை எண்ணெற்ற முறை பார்த்திருக்கிறேன். இந்த படத்தின் நாயகனும், இந்த பாடலில் நாதஸ்வரம் வாசிப்பவருமான ராஜ்பகதூர், பழைய பிரபலம் pu சின்னப்பாவின் மகன். மிகவும் வறுமை நிலையில் இருந்தவர் சில படங்களில் வில்லனாக நடித்தாலும் பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை. பாவம்.
Yaar Mamano from Vetrikku Oruvan (1979)
https://www.youtube.com/watch?v=mPTe5GAUXQQ
சபாஷ்.... யார் மாமன் நச்சென்று என் மனதில் ஒட்டிக்கொண்டது.. காபரே என்று எதையோ போட்டு தாளித்து கொடுத்து விடாமல், நேர்த்தியான கோர்வையில் 1979லேயே ஒரு சிறப்பான மெலோடியை கொடுத்திருக்கிறார் ராஜா சார். . கண்ணை மூடி கேட்க, வாத்தியங்கள் ஒவ்வொன்றும் போட்டி போட்டுகொண்டு, ஜானகியின் குரலோடு ரேஸிங் போவது போல் இருக்கிறது. பாடலோ இரண்டே முக்கால் நிமிஷம் தான்.. இன்னும் கொஞ்சம் நீடித்திருக்க கூடாதா?
பாதம் காட்டுங்கள் mappi, இந்த பாடலை கை காட்டிய உங்களை நமஸ்கரித்து கொள்கிறேன்..
ஊரெல்லாம் உன் பாட்டு தான்.. துல்லியமான ரி மாஸ்டர்ட் பதிவில் யேசுதாஸின் குரல் உங்களை வச படுத்தும். இதே பாடல் வெவ்வேறு வெர்ஷனில் சித்ரா மற்றும் ராஜா சாரி குரலிலும் காசெட்டில் இருக்கிறது. ஆனால் எனக்கென்னவோ யேசுதாஸின் வெர்ஷன் தான் பிடிக்கும்.
https://www.youtube.com/watch?v=opgarAM0Pw0
யார் மாமனுக்கு சற்றும் குறைவில்லாத 1 அண்ட் 2 chachacha.... நல்லதொரு குடும்பம் படத்தை 1ம் வகுப்பு படிக்கும் பொது தஞ்சை யாகப்பாவில் பார்த்தது கூட எனக்கு நினைவிருப்பதை பீற்றி கொள்ளாமல் இருக்க முடியவில்லை :-)
இந்த பாடலை கம்போஸ்/கண்டக்ட் செய்யும் பொது ராஜா சார் ஹிப்பி தலையுடன், பெரிய காலர் வைத்த ஷர்ட் டக்கின் செய்து, பெல் பாட்டம்ஸ் ட்ரொவுசரோடு முரட்டு பெல்ட் அணிந்து பக்காவாக இருந்திருக்க வேண்டும்..
லைவ் ரிகார்டிங், பெரிய படம், வி ஐ பி சிங்கர்ஸ் -- அன்றைய தினம் எப்படி இருந்திருக்கும்?
https://www.youtube.com/watch?v=Nxga0FxCI10
Prathi Dinam Nee Dharshanam from Anumanaspadam (Telugu, 2007)
After Tabla, enjoy miruthangam.
https://www.youtube.com/watch?v=Q7mqoUasGgI
My favourite from the album:
Raa Raa Raa Gumma Raa Thulle Komma from Anumanaspadam (Telugu, 2007)
https://www.youtube.com/watch?v=FV1d0X9QguQ
Bonus:
Swalpa Soundu from Suryakanthi (Kanada, 2010)
https://www.youtube.com/watch?v=HN2qDcVkYdo
Ilamai Rathathil from Ninaikka Therintha Maname (1987)
https://www.youtube.com/watch?v=QDxbxo2GkIU
Maalai Mudhal Kaalai Manmathanin Leelai from Unnai Thedi Varuven (1985)
(Single not available on YouTube; the song starts at 12m30s in the below album)
https://youtu.be/_0a7y6IWSCA
நன்றி MAPPI ..
இளமை ரதத்தை முதல் முறை கேட்கிறேன்.. தெளிவான இசை.
உன்னை தேடி வருவேன் : ஒரு நாளில் வளர்ந்தேனே மற்றும் என் அன்பே அன்பே அப்போதே பாப்புலர்..
ஏண்டி அம்மா, ஒரிய ஒரிய ஒரியா, மாலை முதல் பாடல்கள் பிரமாதம். இப்போது தான் முதல் முறை கேட்கிறேன், , பிடித்து போய் விட்டது :-)
இந்த படத்தின் சூப்பர் டைட்டில் ஸ்கோர்: https://soundcloud.com/navin-mozart/...ck-title-score
Puzhayorathil from Adhavaram (1989)
https://www.youtube.com/watch?v=DL1N60bPkrA
Kanpaarum Devi from Kokkarakko (1983)
https://www.youtube.com/watch?v=udS8vK9IeJY
Alaigale Vaa from Kavithai Malar (1982)
https://www.youtube.com/watch?v=VTa9zEenWlU
Got to find that violin and exhibit it in the museum inside the gallery named Sultan of Strings.
https://www.youtube.com/watch?v=5pWIoNwpLcA
Vaali/Ilaiyaraja/Charukesi raagam/Jayachandran/Sushila/Vijayakanth/Radhika
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வு தான் ஏனோ...
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வு தான் ஏனோ
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே...
உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்
வாடைக் காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம்
கொதித்திருக்கும் கோடைக் காலமும்
நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வு தான் ஏனோ
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே...
ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ
மணவறையில் நீயும் நானும் தான் பூச் சூடும் நாளும் தோன்றுமோ
ஒன்றாகும் பொழுது தான் இனிய பொழுது தான்
உந்தன் உறவு தான் உறவு
அந்த நாளை எண்ணி நானும்
அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வு தான் ஏனோ
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே...
நண்பர்களே.. எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? இங்கு ராகதேவன் அருள் புரிந்து இரண்டரை வருடமாகி விட்டது. யாரும் இங்கு வருகிறார்களா என தெரியவில்லை. இருந்தாலும் ஒரு குசலம் விசாரித்து விட்டு, நேற்று நான் கிழித்ததை பீத்தி கொள்ளலாமென வந்தேன்.
நேற்று ஞாயிற்று கிழமை.. கொரோனா கொடுமையால், உடற்பயிற்சிக்காக ஒரு முறை செல்லலாம் என்கிற சலுகையை காலையிலேயே 15 மைல் சைக்கிள் ஒட்டி கழித்து விட்டேன். கார்டனில் புல் வெட்டியாகி விட்டது. மதியம் மீன் குழம்பு சாப்பாட்டில் அதிகம் நாட்டமில்லை, வேண்டா வெறுப்பாக மாலையில் தான் அதை சாப்பிட்டேன். காலை முதல் கை அரிக்கிறது என்று தலையை சொரிந்து கொண்டே இருக்கும் குடிமகன் போல நானும் அங்கும் இங்குமாக இருந்தேன். மனம் ஒருநிலை படவில்லை.
நான் கேட்டிராத ராஜா சாரின் ஒரு பாடலை தேடி கண்டு பிடிக்கலாமே என எழுந்தேன். பாடல் எண்பதுகளில் வந்திருக்க வேண்டும். வழக்கமான டூயட்டாக இருக்க கூடாது. அதில் ஜானகியும், பாலுவும், ராஜா சாரும் மாறி மாறி உரையாடி கொண்டிருக்க வேண்டும். நான் இது வரை இந்த பாடலை கேட்டிருக்க கூடாது. கேட்டதும் என் மனதில் நச்சென்று பதிய வேண்டும். பின்னணியில் வாத்தியங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு கொண்டு வேகமெடுக்க வேண்டும். கேட்க கேட்க . ஹாப்பி ஹார்மோன்ஸ் ததும்ப வேண்டும். -- இது தான் கண்டிஷன்ஸ்.
3 மணி நேர தேடலுக்கு பின்என் கையில் சிக்கிய இந்த செம தெலுகு பாடல், 24 மணி நேரமாய் என் காதில் ஒலித்து கொண்டிருக்கிறது.
படம்: வம்சியின் ஸ்ரீ கனக மஹாலக்ஷ்மி ரிக்கார்டிங் டான்ஸ் ட்ரூப். வெளியான வருடம்: 1988
https://www.youtube.com/watch?v=2fvrWBi9VE4