-
கிளாஸிக் ஃப்ளாஷ் பேக்
http://i67.tinypic.com/1qgymr.jpg
புலவர் புலமைப் பித்தன் மிகவும் அருமையான புலமை பெற்ற கவிஞர். முறைப்படி தமிழ் கற்றறிந்து புலவர் பட்டம் பெற்றவர். அவரது பாடல்கள் இலக்கியத் தரம் வாய்ந்தவை. சில பாடல்கள் அவர் எழுதி மக்கள் திலகம் படத்தில் இடம் பெறாமல் போனவை. அந்தப் பாடல்களை இப்போது கேட்டாலும் மயக்கம் தருவதோடு, மக்கள் திலகம் படத்தில் இடம் பெறவில்லையே என்று பொறாமைப்பட வைக்கும்.
‘நல்லதை நாடு கேட்கும்’ படத்துக்காக
‘உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இருவிழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை...’
என்ற பாடலை எழுதினார். தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் திலகம் முதல்வர் ஆகிவிட்டதால் படம் நின்று போனது. (புரட்சித் தலைவர் மறைந்த பிறகு, அவர் வெறும் 6 நிமிடங்களே தோன்றும் காட்சிகளை இணைத்து ஜேப்பியார் அதே பெயரில் படத்தை வெளியிட்டார்)
‘உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை...’ பாடல் நீயா? படத்தில் இடம் பெற்றது. அருமையான பாடல். மக்கள் திலகத்தை மனதில் நினைத்துக் கொண்டே இந்த பாடலை புலமைப் பித்தன் இயற்றியிருப்பது வரிகளை கவனித்தால் தெரியும். மற்ற கவிஞர்களுக்கும் புலமைப் பித்தனுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. மக்கள் திலகத்தை தலைவராக ஏற்றுக் கொண்டு பணியாற்றியவர் அவர். புரட்சித் தலைவரில் தோய்ந்து ரசிகனின் பார்வையில் இருந்து பாடல்களை எழுதியவர். அதனால்தான், ‘உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை.. என் இரு விழியே ஒரு கணமும் இமைப்பதில்லை..’ என்ற நமது மனதில் இருக்கும் உண்மையை தனது பாடல் வரிகளில் கொண்டு வந்தார்.
அதேபோல, மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்துக்காக,
‘இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்...’
என்ன ஒரு அற்புதமான இலக்கிய நயத்தோடு அதே நேரம் விரசம் இல்லாமல் அமைந்த பாடல். இந்த பாடல்கள் மக்கள் திலகம் படத்தில் இடம் பெற்றிருந்தால், கற்பனை செய்தாலே மனம் சிறகடிக்கிறதே. இனங்களிலே .... பாடல் நல்ல பெண்மணி படத்தில் இடம் பெற்றது.
அது போலவே, ‘எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது...’ பாடல் நினைத்ததை முடிப்பவன் படத்துக்காக புலமைப்பித்தன் எழுதியது. இதற்கு பதிலாக வேறு பாடல் தேர்வு செய்யப்பட்டதால், அந்தப் படத்தில் இடம் பெறவில்லை. படத் தயாரிப்பாளர் கனகசபையிடம் அவரது படத்தின் பாடல் பற்றி எம்.எஸ்.வி. பேசிக் கொண்டிருக்கும்போது இந்த பாடலை பாடிக் காண்பித்திருக்கிறார். கனகசபைக்கும் பிடித்துப் போக, புலமைப்பித்தனிடம் எம்.எஸ்.வி. சொல்லியுள்ளார்.
‘சிவகாமியின் செல்வன் ’படத்தில் நாம் பாட்டு எழுதினால் மக்கள் திலகம் மகிழ்ச்சியடைவார் என்றாலும், எதற்கும் ஒருவார்த்தை அவரிடம் சொல்லி விடலாம் என்று தலைவரை சந்தித்திருக்கிறார் புலமைப் பித்தன். விஷயம் முன்கூட்டியே மக்கள் திலகத்துக்கு தெரிந்திருக்கிறது. எங்கு என்ன நடந்தாலும் மக்கள் திலகத்துக்கு தெரிந்து விடும்.
புலமைப் பித்தன் சொன்னதும் ‘நீங்கள் எல்லா படங்களுக்கும் பாடல் எழுதி புகழ் பெற வேண்டும். என்னைச் சேர்ந்தவர்கள் உயர்வு பெறுவது எனக்கு பெருமை’ என்று வாழ்த்தியிருக்கிறார் தலைவர். அதுதான் பொன்மனச் செம்மல்.
‘எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது’ பாடலை எழுதியவர் புலவர் புலமைப் பித்தன்.
புதுமைப் பித்தன் இல்லை.
ஊருக்கு உழைப்பவன் படத்தில் ‘உயிரோவியம் நடக்கின்றதோ..’ பாடல் எழுதப்பட்டு கடைசியில் அந்த பாடல் வேறொரு பாடலின் இசை சாயலில் இருப்பதாக மக்கள் திலகம் கருதியதால் அதற்கு பதிலாக எழுதப்பட்டதுதான்.
‘அழகெனும் ஓவியம் இங்கே
காலத்தால் அழியாத ரசனை மிக்க பாடல்.
நாயகி பாடுவது போலவும் இருக்கும். புலமைப் பித்தன் மட்டுமல்ல. நாமே தலைவரைப் பார்த்து சொல்வது போல அமைந்த வரிகள்...
‘என்றும் இளைமை மாறாமல்
வாழும் சரித்திரமே
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும்
எண்ணம் இனித்திடுமே..’
மக்கள் திலகம் அழகோவியமாக ஜொலிக்கும் அந்த இலக்கிய நயம் மிக்க பாடல் இதோ.....
https://youtu.be/GiK19sow_wM
உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே?’
-
விளக்குமாத்துக்கட்டைக்கு எதுக்கு
பட்டு குஞ்சம் ....
இந்த பழமொழி தென் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். ...
அதாவது விளக்குமாறு. ..துடைப்பம். ..
வீட்டை பெருக்கும் இதுக்கு பட்டு குஞ்சம்
தேவையா என்பது பொருள் .....
இதைப்பற்றி பிறகு பார்க்கலாம். .........
17 / 01 / 2016... ஞாயிற்றுக்கிழமை
தங்க தலைவர் பிறந்த நாள். ....
ஜிம்கானா கிளப் 100 ஆண்டுகள் பழமையான
சென்னையில் உள்ள முதன்மையான கிளப். ..
புரட்சித் தலைவர் இந்த கிளப்பில் 1983 இல் முதலமைச்சராக இருந்த போது
வாலிபால் வீரர்களுக்கு பரிசளிக்க வந்த போது வேட்டி அணிந்திருந்த காரணமாக
உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறி வெளியில் இருந்தே வீரர்களுக்கு பரிசு அளித்து சென்றார். ....
இந்த நிகழ்வு என்னை மிகவும் பாதித்தது. ..
இந்த கிளப்பில் தடைகளை தாண்டி
புரட்சித் தலைவருக்கு ஒரு சிறப்பு செய்ய
வேண்டும் என்று நினைத்தேன். ...
சரியான நேரத்தில் தலைவர் பிறந்த நாளை சிறப்பாக இங்கு நடத்த முடிவு செய்தேன். ....
நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து விழா
நடைபெற்றது. ..
விழாவில் நடந்ததை பார்போம் ......
திரு ஆதம்பாக்கம் முருகன் அவர்கள்
தன்னால் பேச முடியாது ..பேசினால்
அழுதுவிடுவேன் என்று கூறி உணர்ச்சிகளை
கட்டுப்படுத்தி உரையாற்றினார். ......
திரு ராம் வினாயக மூர்த்தி அவர்கள்
தலைவர் சமாதிக்கு அடிக்கடி சென்று
தியானம் செய்கிறேன் ...தலைவர் ஆன்மாவோடு பேசுகிறேன் என்ற
மிகப்பெரிய செய்தியை கூறினார். .....
திரு கனகராஜா அவர்கள் படகோட்டி படத்தில்
நடிகர் ராமதாஸ் அவர்களுக்கு தலைவர் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி கொடுத்ததை உணர்ச்சிவசப்பட்டு விளக்கினார். ...
திரு விஸ்வநாதன். .
திரு செல்வகுமார். ..
திரு மனோகர் ரஞ்சித். ...
திருத்தணி ஜெயசாரதி.....
திரு விஜயகுமார். ....
திரு சடையாண்டி. ...
திரு ஹூசேன். ..
திரு குருநாதன். ...
திரு ராமகிருஷ்ணன்....
திரு எம்ஜிஆர் சண்முகம்....
திரு ரமேஷ். .....
திரு சுதர்சன் கிருஷ்ணமூர்த்தி.....
திரு விமல் ராஜ் .......
ஏனைய அனைவரும் தலைவரை அவரவர்
பார்வையில் மிகவும் அருமையாக புகழ் பாடினார்கள். ....
திரு காவிரி மைந்தன் அவர்கள்
அழகு தமிழில் தலைவரை புகழ் பாடினார். ...
திரு மேஜர் தாசன் அவர்கள்
நாம் வருங்காலத்தில் தலைவர் வழியில்
எவ்வாறு நடக்க வேண்டும் என்று அழகாக
கூறினார். .....
மலேசியாவில் இருந்து அண்ணன்
திரு கமல் ராஜ் அவர்கள் தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தார். ...
விழாவில் முத்தாய்ப்பாக அண்ணன்
திரு ரோசய்யா அவர்கள்.....
இவர் தென்னக இரயில்வேயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் சுத்தம் செய்யும் பணியில் இருந்துள்ளார். ...
விழாவில் இவர் கூறியதாவது...
ஒரு முறை தலைவர் ரயிலில் அரக்கோணம் வந்த போது முக்கிய பிரமுகர்கள் முன்னாடி நின்று அவரை வரவேற்க காத்திருக்கும் நேரத்தில். ..அண்ணன் ரோசய்யா அவர்கள் தனது கையில் இருந்த விளக்கமாறை தனது சட்டையின் பின்னால் செருகி தலைவரை
காண எல்லாருக்கும் பின்னால் நின்று கொண்டுஇருந்திருக்கிறார்...
ரயில் வந்தது ...தலைவரும் வந்தார். ..
கட்டுக்கடங்காத கூட்டத்தில் விளக்கமாறை
பின்னால் செருகி கையசைத்த ரோசய்யா
அவர்களை பார்த்ததும் கூட்டத்தை விலக்கி
ரோசய்யா அவர்களை முன்னால் வர சொல்லி அவர் கையை பிடித்திருக்கிறார்...
இந்த நிகழ்வை கூறும் போது அண்ணன் திரு ரோசய்யா
அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ...
அரக்கோணம் ரயில் நிலையத்தில்
விளக்கமாறுக்கு தங்க தலைவரால்
இந்த பூமியில்
முதல் முறையாக
பட்டு குஞ்சம் அணிவிக்கப்பட்டு
இருக்கிறது ........
நண்பர்களே நீங்களும் உங்கள் கருத்துக்களை
கண்டிப்பாக பகிரவும் .......
வணக்கம்.......
thalaivar facebook friends
-
திரை உலகம் பத்திரிகை 1-12-1975. திகதியன்று இதயக்கனி திரைப்படம் பற்றி வெளியிட்ட தகவல்
http://i1170.photobucket.com/albums/...ps1prbxhmw.jpg
-
புரட்சித்தலைவர் ஒருமுறை கோவையில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்றவர் சென்னை செல்லும் விமானத்தை தவறவிட்டார்...
மறுநாள் காலையில் சென்னையில் இருக்கவேண்டிய சூழ்நிலை...
உடன் வந்த அமைச்சர் ஒருவரின் காரில் சென்னைக்கு புறப்பட்டார்...!
கார் சென்று கொண்டிருக்கும்போதுதான் தலைவர் கவனித்தார்...முன் சீட்டில் அமர்ந்திருந்த அமைச்சர் தூங்கி ட்ரைவர் மீது விழுந்து கொண்டிருப்பதையும் ட்ரைவர் சங்கடத்துடன் சகித்துக்கொண்டிருப்பதையும்...!
உடனே காரை நிறுத்தச் சொல்லி ட்ரைவரை அனுப்பி மூன்று பாக்கெட் நிலக்கடலை வாங்கிவரும்படி கூறினார் .
வந்ததும் ஒன்றை ட்ரைவருக்கும்
இரண்டு பாக்கெட்டுகளை அமைச்சரிடமும் கொடுத்தார்.
ஒன்றை சாப்பிடச்சொல்லியும் மற்றொன்றை தான் கேட்கும்போது தரும்படியும் கூறிவிட்டார்.
அமைச்சரும் ஒரு பாக்கெட் கடலையை சாப்பிட்டுவிட்டு,
மற்றொன்றை கையில் வைத்துக் கொண்டு காத்திருந்தார். தலைவர் எந்தநேரமும் கடலையைக் கேட்பார் என்பதால்
கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டிருந்தார்...!
ட்ரைவருக்கு நிம்மதி...
கடைசிவரை தலைவர் கடலையை கேட்கவேயில்லை....!
தோட்டத்திற்குள் நுழைந்த பிறகுதான் தலைவர் கடலையை வாங்கிக்கொண்டு அமைச்சரைப் பார்த்து புன்னகை புரிந்தபோதுதான் அமைச்சருக்கு தலைவரின் புன்னகையின் பொருள் புரிந்தது...! தன்னை தூங்காமல் இருக்கச்செய்ய தலைவர் செய்த தந்திரம்தான் அது என்று...!
ஆஹா ....! இதுவல்லவா சமயோசித அறிவு...!
courtesy net
-
இறைவன் எம்.ஜி.ஆர். திருவடியை சென்றடைந்த , திரு. எஸ்.ராஜ்குமார் அவர்களுக்கு 16 ஆம் நாள் நினைவஞ்சலி இன்று அவரது குடும்பத்தினரால்
அச்சரப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பெரும் சோகத்துடன் அனுசரிக்கப்பட்டது .
சென்னையில் இருந்து, இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு ,அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் , கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைப்புகளை
சார்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி
செலுத்தினர்.
நிகழ்ச்சி குறித்து அமைக்கப்பட்ட பேனர்கள் /சுவரொட்டிகள் ஆகியன நண்பர்களின்
பார்வைக்கு
http://i68.tinypic.com/zx1v6p.jpg
-
-
மறைந்த திரு. எஸ். ராஜ்குமார் அவர்களின் கடை அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்
http://i63.tinypic.com/nf2v5t.jpg
-
-
-
அச்சரப்பாக்கத்தில் அவரது இல்லத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்.
http://i68.tinypic.com/vdo0nl.jpg