http://i58.tinypic.com/29zt1yt.jpg
Printable View
நண்பர் டிஏசினிமா அவர்களுக்கு, தங்கள் வருகைக்கு நன்றி.
தங்கள் நோக்கம்தான் என்ன? எம்எஸ்விக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற நோக்கமா? அல்லது மக்கள் திலகத்தை குறை கூறுவது நோக்கமா? மக்கள் திலகத்தின் படங்களின் வெற்றி பற்றியும் அரசியல் வெற்றி பற்றியும் நீங்கள் விமர்சிப்பது போல, உங்கள் அபிமானத்துக்குரியவரின் படங்களின் வெற்றி பற்றியும் அரசியல் பற்றியும் நாங்களும் விமர்சிக்க முடியும். பதிலுக்கு கேள்வியும் கேட்க முடியும்.
ஆனால், கடந்த 10ம் தேதியன்று திரு.ராகவேந்திரா சார், தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறியதுடன்...
//இந்நேரத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் திரி நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன். நாம் அனைவரும் அவரவர் தலைவரின் புகழ் பாடுவதில் ஈடுபடுவதில் எந்தவித மனக்கசப்பிற்கும் இடம் தராமல் கருத்துக்களைக் கூறி நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்பதே என் அவா.//
...என்று மேற்கண்ட வேண்டுகோளையும் விடுத்திருந்தார். (எங்கள் திரியில் பதிவு எண்.414). அதற்கு நான் நன்றி தெரிவித்து, தங்கள் அவா நிறைவேற எங்கள் ஒத்துழைப்பு எப்போதும் உண்டு என்று கூறியிருந்தேன். (பதிவு எண்.423)
அதற்கிணங்க, ராகவேந்திரா சார் கூறியபடி, மனக்கசப்பிற்கு இடம் தராமல் சுமூக சூழ்நிலை நிலவவும், ஒத்துழைப்பு அளிக்கவும் விரும்புவதால் நான் இப்போதும் கூட பதிலளிக்க விரும்பவில்லை. இதோடு விட்டுவிடாமல் தொடர்ந்து நீங்கள் இந்தக் கேள்வியை வலியுறுத்தினால், நான் பதிலளிக்கத் தயார்.
அந்த சூழ்நிலை ஏற்பட்டு, மனக்கசப்பு உருவானால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு.
மனக்கசப்பு ஏற்படாமல் நல்லிணக்கத்தை பேணுவதில் ஒத்துழைப்பு அந்தப் பக்கம் இருந்துதான் கிடைப்பதில்லை என்பதை நடுநிலையான நண்பர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் குறித்து மாடரேட்டர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கோருகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்