Oru Vishvaasamum illai...
ellam ... "BAYAM"
Printable View
Oru Vishvaasamum illai...
ellam ... "BAYAM"
kolaikku thaan baya padanum. sari neenga solrathum niyaayam thaan
Though I dont like Seeman ... 'கத்தி' அப்படினு ஒரு படம் எடுப்பார்... அப்போ போராட்டம் நடத்தலாம் என்று காத்திருந்தீர்களா? line made my day.
INSANE music getting ready for Kaththi
Now is the time to get regular musical updates on Vijay's Kaththi. Hit machine Anirudh is leaving no stone unturned for the A.R.Murugadoss - Ilayathalapathy project. Everybody is eagerly awaiting the new combo Vijay - Anirudh, for their inclination with music.
Noted gospel musician Keba Jeremiah is one of the sought-after acoustic guitarists in the trade, who propelled to fame through songs like Oh crazy penne (NKPK) and Nenjukulla (Kadal).
Anirudh has roped in Keba to record for a song that could be a soul stirring melody. The guitarist is also raving about the quality of the music referring it to be 'insane' through his tweet. Vijay fans are up for a musical treat.
-Behindwoods
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'கத்தி' படத்தின் பிரச்சனையை முடிக்க இளையதளபதி தானே நேரடியாக களமிறங்கிவிட்டதாக கோலிவுட் செய்திகள் கூறுகின்றன. 'கத்தி' படத்தின் உரிமையை விஜய்யே வாங்க முடிவெடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
'கத்தி' படத்தின் பிரச்சனையை முதலில் தமிழ் அமைப்புகளுடன் சுமூகமாக பேசி முடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் தூது சென்றார். அவர் சீமான், நெடுமாறன் போன்ற அமைப்பு தலைவர்களை சந்தித்து படம் குறித்தும், தயாரிப்பாளர் குறித்தும் விளக்கம் அளித்தார். ஆனால் அது எதிர்மறை விளைவைத்தான் தோற்றுவித்தது. மாணவர் அமைப்பு என்ற பெயரில் சில பெரிய சக்திகள் படத்தை தடை செய்யும் சதிச்செயலில் இறங்கியுள்ளதை அறிந்த விஜய், இதற்கு மேல் இந்த பிரச்சனையை பெரிதாக்க விரும்பாமல், தயாரிப்பாளர்களிடம் பேசி தானே அந்த படத்தின் உரிமை முழுவதையும் பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளாராம்.
'கத்தி' படத்தில் தயாரிப்பாளர் பிரச்சனையை தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லாததால், தயாரிப்பாளரை மாற்றிவிட்டால் உடனடியாக அந்த படத்தை எதிர்க்கும் கும்பல் அடங்கிவிடுவார்கள். அதுவும் சொந்தப்படமாக்கிவிட்டால், எந்த பிரச்சனையும் வராது என்ற எண்ணத்தில் களமிறங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களும் ஒத்துழைப்பதாகவும், விஜய் படத்தின் உரிமையை வாங்க முன்வந்தால், தனது நிறுவனமும் அந்த படத்தில் முதலீடு செய்யத்தயார் என்றும் கூறிவிட்டதாக தெரிகிறது.
எனவே லைக்கா நிறுவனத்தினடம் படத்தின் உரிமையை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று விஜய் தனது ரசிகர் மன்ற முக்கிய பொறுப்பாளர்களிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் படு உற்சாகத்துடன் உள்ளனர். விஜய் நடிக்கும் படம் என்றாலே உற்சாகமாக இருக்கும் ரசிகர்கள் அந்த படத்திற்கு விஜய்யே தயாரிப்பாளர் என்றால் கேட்கவும் வேண்டுமா? இந்த படத்தை தமிழ்த்திரையுலகில் இதுவரை பெறாத வெற்றியை இளையதளபதிக்கு பெற்றுக்கொடுப்போம் என்று சபதம் எடுத்துள்ளனர். விஜய்யின் அதிரடி முடிவை கண்டு இந்த பிரச்சனையை பெரிதாக்கலாம் என மனப்பால் குடித்தவர்கள் தற்போது கடும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
http://www.thedipaar.com/cinema/kath...ducer-changed/
http://cinema.maalaimalar.com/2014/0...out-vijay.html
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘கத்தி’. இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாறாக இப்படத்திற்கு பல எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது.
இப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானது என்றும் எனவே படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்றும் சிலர் எதிர்த்து வருகின்றனர். மேலும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். லைக்கா நிறுவனம் இலங்கை தமிழருக்கு சொந்தமானது என்றும் ராஜபக்சேவுடன் எந்த தொடர்பும் கிடையாது என்றும் படக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் எதிர்ப்புகள் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கிறது.
இதனால் இப்படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டு வரும் நிலையில் படத்தின் உரிமையை லைக்கா நிறுவனத்திடம் இருந்து பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் கைபற்றியுள்ளது. இதன் புதிய போஸ்டர்கள் இன்று 6 மணியளவில் வெளியிடுவதாக தகவல்
Kaththi New poster.. https://pbs.twimg.com/media/BvpL3aHCQAEq7Zh.jpg